Jump to content

‘எமக்காக இந்தியா தொடரந்தும் குரல் கொடுக்க வேண்டும்’ -மாவை சேனாதிராஜா


Recommended Posts

image_b3aebe4e78.jpg

இலங்கைத் தமிழர் பிரச்சினையில், இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில், நேற்று (28) மாலை நடைபெற்ற சிநேகபூர்வக் கலந்துரையாடலில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடல், தமிழகப் பத்திரிகையாளர்கள், சட்டத்தரணி மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிகள் குழாமுக்கும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஆகியோருக்கும் இடையே நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய மாவை சேனாதிராஜா எம்.பி,

“நாங்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றோம். எமது மக்களுடைய விடயங்களில் அரசாங்க நடவடிக்கைகள் மிகவும் தாமதமாகவே நகர்கின்றன.

“அன்று எம்மிடம் இரண்டு போராட்ட சக்திகள் இருந்தன. ஒன்று விடுதலைப் புலிகளின் ஆயுதபலம். மற்றையது எமது மக்களின் வாக்குப்பலம். அவற்றில் ஒன்றை நாம் இப்போது இழந்துள்ளோம்.

“எனவே, தற்போது எம்மிடம் உள்ள மக்களின் ஜனநாயக பலத்தை மட்டுமே நம்பியுள்ளோம்.

“எமது தேசத்தை இரண்டு காலகட்டங்களாகப் பிரித்தால் யுத்தத்துக்கு பின், யுத்தத்துக்கு முன் என இரண்டு காலகட்டங்களில் நோக்க முடியும். அவை இரண்டிலும் பிரிக்க முடியாதது. எம்மக்களின் கண்ணீர் நீடித்துக் கொண்டே உள்ளது.

“அவற்றைத் தீர்க்க எமது தமிழகத்தின் மூலமாக கொடுக்கப்படும் செய்தி மத்திய அரசாங்கத்துக்குச் சென்று, அது இலங்கை அரசாங்கத்துக்கு தமிழரின் தீர்வு தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவையுள்ளது” என்றார்.

http://www.tamilmirror.lk/திருகோணமலை/எமக்காக-இந்தியா-தொடரந்தும்-குரல்-கொடுக்க-வேண்டும்/75-222755

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்... மாவை,  குரல் கொடுக்க மாட்டாரோ....  ⛑️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் இன்டியா குரல் கொடுத்து வடகிழக்கில் பாலும் தேனும் ஓடுது தொடர்ந்து குரல் கொடுக்கணுமாம் தலையிலை மூளையா இல்லை களிமண்ணா இந்தாளுக்கு ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலவு காக்க வேண்டியான் இந்தக் கிளிகள். ?

1 minute ago, பெருமாள் said:

இவ்வளவு நாளும் இன்டியா குரல் கொடுத்து வடகிழக்கில் பாலும் தேனும் ஓடுது தொடர்ந்து குரல் கொடுக்கணுமாம் தலையிலை மூளையா இல்லை களிமண்ணா இந்தாளுக்கு ?

அது ஒன்றுமில்லை.. இவர்களின் கையாலாகாத்தனம் தெட்டத் தெளிவாக தெரிய ஆரம்பித்துவிட்டதன் தாக்கமே இந்தக் கூப்பாடு. அது ஹிந்தியன் காதில் எனி விழவே விழாது. இவர்களின் குரலை இவர்களே புலிகளை அழிக்கப் போய் அழித்துக் கொண்டார்கள். முட்டாள் தனமான இவர்களின் அரசியல் தான்.. இந்த நிலைக்கு முக்கிய காரணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

இவ்வளவு நாளும் இன்டியா குரல் கொடுத்து வடகிழக்கில் பாலும் தேனும் ஓடுது தொடர்ந்து குரல் கொடுக்கணுமாம் தலையிலை மூளையா இல்லை களிமண்ணா இந்தாளுக்கு ?

 

23 minutes ago, nedukkalapoovan said:

இலவு காக்க வேண்டியான் இந்தக் கிளிகள். ?

அது ஒன்றுமில்லை.. இவர்களின் கையாலாகாத்தனம் தெட்டத் தெளிவாக தெரிய ஆரம்பித்துவிட்டதன் தாக்கமே இந்தக் கூப்பாடு. அது ஹிந்தியன் காதில் எனி விழவே விழாது. இவர்களின் குரலை இவர்களே புலிகளை அழிக்கப் போய் அழித்துக் கொண்டார்கள். முட்டாள் தனமான இவர்களின் அரசியல் தான்.. இந்த நிலைக்கு முக்கிய காரணம். 

 

image_b3aebe4e78.jpg

இப்படி, பிச்சை   எடுப்பது மாதிரி  இருப்பது  சரியா... மாவை?
உங்களது... தகுதி என்ன?  உலகத்தின்  ஒரு, மூத்த  குடி மக்களின், 
ஒரு   அரசியல் கட்சியின்  தலைவர் என்பதனை  மறந்து விட்டீர்களா? 

உலகத்தில் .....  எத்தனையோ தலைவர்கள் வாழ்ந்து, மறைந்து  இருக்கின்றார்கள்.
ஆனால்... ஒரு, பிச்சைக்கார  அரசியல்வாதியை, உங்கள் மூலம் கண்டு கொண்டேன்.

உங்களுக்கும்... அரசியலுக்கும், வெகு தூரம். 
எங்களது மானத்தை... இனியும், வாங்காமல்... ஒதுங்கி விடுங்கள்.

மாவை..... பென்ஷன் .  எடுப்பது, ஈழத்து  தமிழனுக்கு, செய்யும் நல்ல சேவை. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவை... இது வரை,  சாதித்தமும்  இல்லை.
இனி... சாதிக்கப் போவதும்...  இல்லவே இல்லை....

வேள்விக்கு.... வளர்த், ஆட்டுக்  கிடாய் மாதிரி ....  இந்த ஆள், முன்னுக்கு வந்து நிற்கிறார். (விதி) 
செருப்படி விழும் என்று...  சம்பந்தன், சுமந்திரனே  பதுங்கி விட்டார்கள்.

மூளையை... பாவிக்கத் தெரியாத,  அகண்ட வாய்... மாவை.
இப்ப... எலிப் ? பொறியில்.... மாட்டிக் கி ட்டார் . ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளிடமிருந்த ஆயுதபலம் இழக்கப்பட்டுவிட்டவுடன் தமிழ் அரசியல் தலைவர்கள் புத்திசாலிகளாயிருந்தால்  என்ன செய்திருக்கவேண்டும்? எஞ்சி இருந்த அரசியல் பலத்தை இழக்கப்பட்ட ஆயுதபலத்திற்கு ஈடாக ஒன்றிணைத்து அதை இரண்டுமடங்காக கட்டியெழுப்பியிருக்க அல்லவா வேண்டும். அதைத்தான் நீங்கள் செய்யவில்லையே. தமிழர்களிடம் இருந்த சிறிய அரசியல் பலத்தையும் உங்கள் சுயநலத்திற்காக சிதறடித்துக்கொண்டல்லவா இருக்கிறீர்கள்.  

இனப்பிரச்சினைக்கு   தீர்வொன்றைப்பெறுவதற்கு தமிழ் அரசியல் கட்சிகள்  தமக்கிடையே ஒரு நேர்கோட்டைப்போட்டு அதில் நின்று  விட்டுக்கொடுப்புடனும் தொலைநோக்குடனும் செயல்பட தயாரில்லை. இந்தியாவின் அழுத்தத்திற்கு வழைந்து கொடுக்காமல் செயற்படும் தமிழ் அரசியல் தலைமை இன்று எவருமில்லை. அனைத்து அரசியல்வாதிகளும் ஏதோ ஒரு விதத்தில் இந்தியாவால் அடக்கியாளப்பட்டு கைப்பொம்மையாகி அவர்களின் தாளத்திற்கு ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தியாவில் குடும்பம் வீடு வாசல் அல்லது பிள்ளைகள் கல்விகற்றல் இன்னும் சிலரின் சேவகத்திற்கு மாதாமாதம்கைக்கூலி இப்படி பட்டியல் நீழும். 

இந்தியா தமிழருக்காக தொடர்ந்து குரல்கொடுக்கவேண்டும் என்கிறார் மாவை. இந்தியா முன்பு எப்போது தமிழருக்காக குரல்கொடுத்தது?. இந்தியா தனது பூகோள அரசியல் நலன்களைத் தக்கவைப்பதற்காகவே குரல்கொடுத்தது. எமது அரசியல்வாதிகளுக்கு வார்த்தை நீளம் காரியம் சிறிது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.