Jump to content

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரை விழுந்து பெண் பயணி காயம்


Recommended Posts

1538195379-1378.jpg

சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை மற்றும் கண்ணாடி விழுந்து நொறுங்குவது என்பது ஒரு வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது. கண்ணாடி விழுந்து நொறுங்குவதில் சதம் அடிக்க சென்னை விமான நிலையம் காத்திருக்கும் நிலையில் தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திலும் இதே அவலம் ஏற்பட்டுள்ளது.

சென்னை ஷெனாய்நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் ஒன்று பயணி மீது விழுந்ததில் கைக்குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் காயம் அடைந்தார். காயமடைந்த பெண் பயணி உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல்முறையாக மெட்ரோ ரயில் நிலையத்தில் இதுமாதிரியான விபத்து நடந்துள்ளது. இதனால் சென்னை விமானம் நிலையம் போல் தொடர்கதை ஆகாமல் உடனடியாக இதுமாதிரி இன்னொரு விபத்து நடக்காவண்ணம் மெட்ரோ ரயில் நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

http://tamil.webdunia.com/article/regional-tamil-news/roof-tiles-broken-at-chennai-metro-rail-station-one-injured-118092900008_1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für chennai lic 

அட... சென்னை  விமான நிலையத்தில் தான்,  கூரை  கண்ணாடி   99  தரம், உடைந்து விழுந்தது என்றால்....
மெட்ரொ  ரயிலுமா...?  ஒரு பாடம்.. போதாதா?  இந்த, மக்களுக்கு?  ?
 

தமிழ் நாட்டு...  எஞ்ஜினியர்   எல்லாரையும்,   "கிடுகு"  பின்னுகிற வேலைக்கு...அனுப்பி விடுங்கள்.  ?
அத்துடன்..   அந்த அரசியல் வாதிகளை,   L I C  கட்டிடத்தின்  உச் சியில்,  இருந்து... கீழே தள்ளி விடுங்கள்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில்  ஊழல் மட்டும் இல்லையெண்டால்  இந்தியாவை நடத்தும் வல்லமை அதற்குத்தான் ஆரியம் செய்த திருட்டு வேலை எல்லாபக்கமும் ஊழல் இப்ப கூட தமிழ்நாட்டில் கொலை கொள்ளை சாமி சிலை கடத்தல் எல்லாம் வடமாநிலத்தவர் தொடர்பு இருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für chennai lic 

அட... சென்னை  விமான நிலையத்தில் தான்,  கூரை  கண்ணாடி   99  தரம், உடைந்து விழுந்தது என்றால்....
மெட்ரொ  ரயிலுமா...?  ஒரு பாடம்.. போதாதா?  இந்த, மக்களுக்கு?  ?
 

தமிழ் நாட்டு...  எஞ்ஜினியர்   எல்லாரையும்,   "கிடுகு"  பின்னுகிற வேலைக்கு...அனுப்பி விடுங்கள்.  ?
அத்துடன்..   அந்த அரசியல் வாதிகளை,   L I C  கட்டிடத்தின்  உச் சியில்,  இருந்து... கீழே தள்ளி விடுங்கள்.?

ஒழுங்காய் படிச்சு தராதரம் பெற்ற எஞ்சினியரெல்லாம் துபாய் அமெரிக்கா லண்டனிலை வேலை செய்யினம்.. :cool:
லஞ்சம் குடுத்து படிச்ச எஞ்சினியர் முகட்டுக்கு பிளான் போட்டால் இடிஞ்சு விழாமல் வேறை என்ன செய்யும்?

நல்லாய் வருது வாயிலை :grin:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் சர்ச்சையில் சிக்கிய சென்னை விமான நிலைய மேற்கூரை.. இடிஞ்சு விழலை.. ஆனா...!

chennai-airport455-1521174932-1543033027

சென்னை: சென்னை விமான நிலையம் மழை காரணமாக பல இடங்களில் ஒழுகியதால் பயணிகள் அசௌகரியம் அடைந்தனர்.சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாடு என உலகின் அனைத்து பகுதிகளுக்கும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

எனவே, பயணிகளின் நலன் கருதி இந்த விமான நிலையம் 2013-ம் ஆண்டு ரூ. 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உலக தரத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் பல்வேறு வசதிகளுடன் சென்னை விமான நிலையம் பார்ப்பதற்கு பிரமாண்டமாக உருவானது.

ஆனால் ஒய்யாரமா தாழம்பூ என பழமொழிக்கேற்ப, அவ்வப்போது அங்கு மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.இதனால் விமான நிலையத்திற்குள் செல்பவர்கள் பாதுகாப்பிற்கு தலையில் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என மீம்ஸ் போட்டு கலாய்க்கும் அளவிற்கு ஆனது.

இரண்டு நாள் மழைக்கே:

இந்நிலையில், சென்னை விமான நிலைய மேற்கூரை இரண்டு நாள் மழைக்கே தாக்குப் பிடிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாள் பெய்த மழையில் விமான நிலையத்துக்கு பயணிகள் வந்து போகும் இடங்களில் கூரையில், பல இடங்களில் தண்ணீர் ஒழுகியதால்  அதிர்ச்சி அடைந்தனர்.

ஒழுகிய மழைநீர்:

வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக செல்லும் 2-வது மாடியின் மேற்கூரை மற்றும் முதல் தளத்தில் காலியாக உள்ள இடத்திலும் மழைநீர் கொட்டியது. இதேபோல், பயணிகளை பரிசோதனை செய்யும் இடத்தில் பக்கவாட்டு சுவர் வழியாக மழைநீர் பயணிகள் நிற்கும் பகுதிக்குள் புகுந்தது. இதனால் பயணிகள் அசௌகரியம் அடைந்தனர்.

உடனடி நடவடிக்கை:

உடனடியாக இது குறித்து விமான நிலைய உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்காலிகமாக கூரையில் இருந்து மழைநீர் கொட்டிய 3 இடங்களையும் சரி செய்ய முயற்சி நடந்தது. ஆனாலும், அது பலனளிக்கவில்லை. எனவே, மழை நீர் ஒழுகிய இடங்களில் பிளாஸ்டிக் பாத்திரங்கள் வைக்கப்பட்டது.

அதில் நிறையும் நீரை அவ்வப்போது விமான நிலைய ஊழியர்கள் பிடித்து வெளியே ஊற்றினர்.

பயணிகள் அதிர்ச்சி:

சர்வதேச தரம் கொண்ட சென்னை விமான நிலைய மேற்கூரை 2 நாள் மழையைக்கூட தாங்க முடியாத அளவிற்கு ஒழுகுவது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டு நாள் மழைக்கே இப்படியென்றால், தொடர்ச்சியாக மழை பெய்தால் விமான நிலையத்திற்குள் படகில் தான் செல்ல வேண்டும் போலயே என பலர் வெளிப்படையாகவே கமெண்ட் அடித்தபடிச் சென்றனர்.

https://tamil.oneindia.com/news/chennai/roof-of-chennai-airport-turns-leaky-334935.html

டிஸ்கி :

இனி தவறாமல் எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள் . .

images?q=tbn:ANd9GcSvwWd0L28t5DC20boFj5Q87282061-bucket-and-spade-put-together-pumbrella-rain.png

 

?

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை ஏர் போர்ட்டில் 4 கண்ணாடிகள் அடுத்தடுத்து டமார் டமார்.. இது 83 வது முறை !

chennai-airportt-600-1544275304.jpg

சென்னை: சென்னை ஏர்போர்ட்டில் ஒரே நேரத்தில் 4 கண்ணாடிகள் அடுத்தடுத்து டம் டம்மென்று உடைந்து நொறுங்கியதால், பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.

விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையத்தில் கண்ணாடிகள், மேற்கூரைகள் விழும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இப்படியே 6 வருஷம் ஓடிவிட்டது. ஆனாலும் இதற்கு ஒரு முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.

ஆனால் இதில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் நடக்கவில்லை. ஆனால் பயணிகள், வழியனுப்ப வந்தவர்கள் என கிட்டத்தட்ட 16 பேர் காயமடைந்து இருக்கிறார்கள்.

இதுவரை 82 முறை சுவர் கண்ணாடிகள், தானியங்கி கதவு கண்ணாடிகள், என உடைந்து நொறுங்கி வருகின்றன. இப்போது நொறுங்கியது 83-வது முறையாகும். 3-வது நுழைவு வாயில் மேல் பகுதியில் உள்ள 4 கண்ணாடிகளும் ஒரே நேரத்தில் சுக்குநூறாக உடைந்து விழுந்தது. இதை பார்த்த அங்கிருந்த பயணிகள் அலறி ஓடினார்கள்.

உடைந்த கண்ணாடிகள் 8 அடி நீளம், 4 அடி அகலம் கொண்டது. யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் அங்கிருந்த எல்லோரும் பதட்டமாகி விட்டார்கள. இது பற்றி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://tamil.oneindia.com/news/chennai/breaking-glass-continues-chennai-airport-336063.html

டிஸ்கி :

799097_900x768.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

ஆனால் இதில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் நடக்கவில்லை. ஆனால் பயணிகள், வழியனுப்ப வந்தவர்கள் என கிட்டத்தட்ட 16 பேர் காயமடைந்து இருக்கிறார்கள்.

இதுவரை 82 முறை சுவர் கண்ணாடிகள், தானியங்கி கதவு கண்ணாடிகள், என உடைந்து நொறுங்கி வருகின்றன. இப்போது நொறுங்கியது 83-வது முறையாகும். 3-வது நுழைவு வாயில் மேல் பகுதியில் உள்ள 4 கண்ணாடிகளும் ஒரே நேரத்தில் சுக்குநூறாக உடைந்து விழுந்தது. இதை பார்த்த அங்கிருந்த பயணிகள் அலறி ஓடினார்கள்.

உடைந்த கண்ணாடிகள் 8 அடி நீளம், 4 அடி அகலம் கொண்டது. யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் அங்கிருந்த எல்லோரும் பதட்டமாகி விட்டார்கள. இது பற்றி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எத்தனையோ தரம் மேற் கூரைகள், கண்ணாடிகள் உடைந்து விழுந்தும்...
விமானப் பயணம் செய்ய வந்த பயணிகள்.... பாதிக்கப் பட்டிருந்தால்,
அதனால் ஏற்படும் சிரமங்கள் பல என்பதனை இந்த அரசு நினைத்துப் பார்க்கவில்லை எனும் போது கவலையாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எத்தனையோ தரம் மேற் கூரைகள், கண்ணாடிகள் உடைந்து விழுந்தும்...
விமானப் பயணம் செய்ய வந்த பயணிகள்.... பாதிக்கப் பட்டிருந்தால்,
அதனால் ஏற்படும் சிரமங்கள் பல என்பதனை இந்த அரசு நினைத்துப் பார்க்கவில்லை எனும் போது கவலையாக உள்ளது.

NB-M3x12.jpg

எல்லாம் ஊழல் .. யாராவது இறந்தால் "நெட்" வாங்கியது உங்க ஆட்சி "போல்ற்" வாங்கியது எங்க ஆட்சி ..  என்று நாடி நரம்பு புடைக்க ரீவியில் (விவாதம்) கத்துவார்கள் ..😢

டிஸ்கி :

ramasubramani.jpg

"விமான நிலைய மேற்கூரை கண் காணிப்பாளர்"

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.