Jump to content

மணல் கடத்தல்காரர்களால் ஆபத்தை எதிர்கொள்ளும் எழுதுமட்டுவாழ்


Recommended Posts

image_54181f8023.jpg

மணல் கடத்திச் செல்கின்ற டிப்பர் வாகனங்கள் எழுதுமட்டுவாழ் கிராமத்தின் உள்வீதிகளில் செல்வதால் தாம் ஆபத்தை எதிர்கொள்வதாக கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் எழுதுமட்டுவாழ் பொது நோக்கு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றபோதே மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

ஏ9 பிரதான வீதியின் எழுதுமட்டுவாழ் சந்தியில் கடத்தல்களை தடுக்க பொலிஸ் காவலரண் ஒன்றை அமைத்துள்ளனர். இதனால் அனுமதியின்றி மணல் கடத்தி வருகின்ற டிப்பர் வாகனங்கள் கிராமத்தின் உள்வீதிகளூடாக வேகமாக செல்கின்றனர். இதன்காரணமாக கால்நடைகள் வாகனங்களில் மோதி இறப்பதோடு மக்களும் நடமாட அச்சப்படுகின்றனர். இது தொடர்பாக டிப்பர் சாரதிகளிடம் கேட்க முற்படுகின்றபோது அச்சுறுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அண்மையில் கூட மணல் கடத்தி வந்த டிப்பர் வாகனம் மின்சாரத் தூண்கள் மீது மோதியதில் 6 மின்கம்பங்கள் முறிந்து வீழ்ந்ததாகவும் குறிப்பிட்டனர். மணல் கடத்தல் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கினால் தமக்கு ஏதாவது அச்சுறுத்தல் நிகழலாம் எனவும் பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயத்தை கேட்டறிந்த வட மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன், உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் ஊடாக பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மணல்-கடத்தல்காரர்களால்-ஆபத்தை-எதிர்கொள்ளும்-எழுதுமட்டுவாழ்/71-222769

Link to comment
Share on other sites

எழுதுமட்டுவாழ் கிராமத்திலுள்ள பிள்ளைகள் 'அ' எழுதிப்படிக்க அவர்கள் மணலைக் கடத்தியிருப்பார்களோ...?? ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு  தட்டி கேட்டால் ரிப்பர் லொறி ஏற்றி கொலையே செய்து விடுவினம்.. எல்லா ஊர்களிலும் இவையள் அட்டகாசம் தாங்க முடியவில்லை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் ஆணிகட்டைகளை வீடுகள் குறைவான இடங்களில் போட்டு விட்டால் காணும் நாலு வாகன டையர் வெடிக்க ஒழுங்குக்கு வருவினம் போலிஸ் கையூட்டு வாங்குவதால் இதைதவிர வேறு வழி இல்லை .

Link to comment
Share on other sites

4 hours ago, பெருமாள் said:

பேசாமல் ஆணிகட்டைகளை வீடுகள் குறைவான இடங்களில் போட்டு விட்டால் காணும் நாலு வாகன டையர் வெடிக்க ஒழுங்குக்கு வருவினம் போலிஸ் கையூட்டு வாங்குவதால் இதைதவிர வேறு வழி இல்லை .

எங்கள் ஊரில் வேற்று ஆட்கள் மணல் ஏற்றமுடியாது எங்கள் ஊரவரே திரண்டு தடுத்து விடுவார்கள் .. எங்கள் ஊரவர் கூட பெமிற் இல்லாமல் மண் ஏற்றும் போது போலிஸ் பிடித்து உழவுஇயந்திரத்தை பறிமுதல் செய்துவிடுவார்கள். 50,000நீதிமன்றில் கட்டி தான் மீட்க முடியும். எல்லா இடமும் கையூட்டு கொடுப்பது நடைபெறவில்லை.அதற்காக கையூட்டு பெறவில்லை சரியாக இயங்குகிறார்கள் என சொல்லவில்லை..எல்லா இடத்திலும் கையூட்டு கொடுத்து அலுவல் பார்ப்பது முடியாத காரியம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, அபராஜிதன் said:

எங்கள் ஊரில் வேற்று ஆட்கள் மணல் ஏற்றமுடியாது எங்கள் ஊரவரே திரண்டு தடுத்து விடுவார்கள் .. எங்கள் ஊரவர் கூட பெமிற் இல்லாமல் மண் ஏற்றும் போது போலிஸ் பிடித்து உழவுஇயந்திரத்தை பறிமுதல் செய்துவிடுவார்கள். 50,000நீதிமன்றில் கட்டி தான் மீட்க முடியும். எல்லா இடமும் கையூட்டு கொடுப்பது நடைபெறவில்லை.அதற்காக கையூட்டு பெறவில்லை சரியாக இயங்குகிறார்கள் என சொல்லவில்லை..எல்லா இடத்திலும் கையூட்டு கொடுத்து அலுவல் பார்ப்பது முடியாத காரியம்  

நீங்கள் அங்குள்ள போலிஸ் நல்லவங்கள் என்று சொல்ல வருகிறீர்களா கெட்டவர்கள் என்று சொல்கிறீர்களா ?

போலிஸ் போலிஸ் வேலையை பார்த்து இருந்தால் இந்த செய்தி வந்திருக்காது  என்பது என்னுடைய அபிப்பிராயம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/30/2018 at 1:43 PM, Paanch said:

எழுதுமட்டுவாழ் கிராமத்திலுள்ள பிள்ளைகள் 'அ' எழுதிப்படிக்க அவர்கள் மணலைக் கடத்தியிருப்பார்களோ...?? ?

எழுதுமட்டும் வாழ் என்பது மருவி எழுதுமட்டுவாழ் வந்தது என எமது முன்னோர்கள் கூறுவார்கள்.
நாகர்கோவில் மண் கடத்தலுக்கு நல்ல பாதை எழுதுமட்டுவாழ் தான். ?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.