Jump to content

பெற்றோர் ஆகும் ஆசையில் பென்குயின் குஞ்சை கடத்திய ஒருபாலுறவு பென்குயின்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பென்குயின் பறவைகள் சில நேரங்களில் சாமர்த்தியமாக நடந்துகொள்கின்றன.

டென்மார்க்கில் உள்ள ஓடென்ஸ் மிருகக்காட்சி சாலையில் உள்ள, ஒருபாலுறவில் வாழும் இரு ஆண் பென்குயின்கள் தாங்களும் ஒரு பென்குயின் குஞ்சை வளர்க்க வேண்டும் எனும் விருப்பத்தில் இருந்தன.

பூங்காவைச் சுற்றி வரும் சமயங்களில் பிற பென்குயின்களின் முட்டைகள் மற்றும் குஞ்சுகள் மீது அவை ஆர்வம் காட்டி வந்தன. சமீபத்தில் தந்தை பென்குயின் ஒன்று தன் அருகில் இருந்த தனது குஞ்சைக் கவனிக்காமல் இருந்ததைக் கண்டது இந்த ஒருபால் தம்பதி.

அப்போது அந்தப் பென்குயின் குஞ்சின் தாய் நீரில் ஆசுவாசமாக குளித்துக்கொண்டிருந்தது.

பெற்றோர் இருவருமே கண்டுகொள்ளவில்லை என்று நினைத்தனவோ என்னவோ தெரியவில்லை, இதுதான் வாய்ப்பு என்று நினைத்த இந்த ஆண் பென்குயின்கள் அந்தக் குஞ்சைக் கடத்திக்கொண்டு தங்கள் பகுதிக்கு வந்துவிட்டன.

இதை அந்த மிருகக்காட்சி சாலை ஊழியர் சாண்டி ஹெட்கார்ட் கவனித்துக்கொண்டிருந்தார்.

"பெற்றோருக்குத் தெரியாமல் அந்த இளம் குஞ்சை இந்த ஆண் பென்குயின் ஜோடி தூக்கி வந்துவிட்டது," என்கிறார் அவர்.

தாயின் தேடல்

காணாமல் போன பின்னும் தந்தை பென்குயின், குஞ்சைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. குளித்து முடித்ததுவிட்டுத் திரும்பிய தாய்தான் சோகத்துடன் தேட ஆரம்பித்தது.

அடுத்த நாள் காலை வரை தங்கள் குழந்தை கிடைக்காததால் அந்தப் பெற்றோர் தங்கள் தேடலைத் தீவிரப்படுத்தினார்கள்.

இரு தம்பதிகளும் நேருக்கு நேர் சந்தித்ததும் மோதல் முற்றியது. ஒருவரை ஒருவர் நோக்கி கூச்சலிட்டத் தொடங்கினர், சிறகுகளை வேகமாக அசைத்தும், வாலை ஆக்ரோஷமாக தரையில் உரசியும் தங்கள் அச்சுறுத்தலைத் தொடங்கினர்.

கடத்தி வந்த பென்குயின்கள் பென்குயின் குஞ்சை மறைத்து வைக்க முயன்றன.

சமரச முயற்சி

மோதலைத் தடுக்க ஊழியர் சாண்டி ஹெட்கார்ட் உடனே தலையிட்டார். மறைத்து வைக்கப்பட்டிருந்த குஞ்சை எடுத்து பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

இந்த நடவடிக்கை மூலம் தாங்கள் ஒரு குழந்தையை வளர்க்கத் தயாராக உள்ளதை அந்த ஒருபாலுறவு பென்குயின்கள் வெளிப்படுத்தியுள்ளதை உணர்ந்துள்ள பூங்கா ஊழியர்கள், அவர்களுக்கு இதுவரை பொறிக்கப்படாத முட்டை ஒன்றை வழங்கியுள்ளனர்.

அந்த முட்டைக்கு கருவாகும் திறன் உள்ளதா என்பது தெரியவில்லை. அப்படி அதில் கரு உண்டானால் நிச்சயமாக அதை ஆண் பென்குயின்களே அடைகாத்து குஞ்சு பொறிக்க முடியும்.

இரு தம்பதிக்குமே சுமூகமான தீர்வு கிடைத்துள்ளதால் இப்போது அந்த மிருகக்காட்சி சாலையில் அமைதி நிலவுகிறது.

https://www.bbc.com/tamil/global-45698672

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

-------

காணாமல் போன பின்னும் தந்தை பென்குயின், குஞ்சைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. குளித்து முடித்ததுவிட்டுத் திரும்பிய தாய்தான் சோகத்துடன் தேட ஆரம்பித்தது.

பறவைகளிலும்  தாய் தான்....  தந்தையை விட, பிள்ளைகளில் அதிக  அக்கறை  போல் உள்ளது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி, தமிழ் சேவை... எதை வைச்சு இந்த செய்தியை தருகிறது? ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

பிபிசி, தமிழ் சேவை... எதை வைச்சு இந்த செய்தியை தருகிறது? ?

இரண்டு ஆண்  ஒன்றாக இருந்தாலே... ஓரின சேர்க்கையாளர் என்று தான் சொல்வார்கள்.
அது பென்குயின் பறவைக்கும் பொருந்தும் தானே....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை நம்ம மாதிரி விலங்கியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து, குணமா வாயில சொல்லணும்.. :grin:

மிருகக்காட்சி சாலை ஊழியர் சாண்டி ஹெட்கார்ட் தண்ணியைப் போட்டுட்டு சொல்லுற அலம்பறை எல்லாம் பிபிசில வரும் எண்டால்....''எங்கோயோ தப்பு நடந்திருச்சு... நைனா'.. 

என்ன சொல்லுறீங்க? 

ரெண்டு பெங்குவின் பெடியள் நிண்டு விளாடிக் கொண்டிருந்தால்.... அதன் அர்த்தம் ஓரின சேர்க்கையா?

க...கா.. கடுப்பேத்தறார் மை லார்ட்ஸ்...?

 

Link to comment
Share on other sites

35 minutes ago, Nathamuni said:

அதை நம்ம மாதிரி விலங்கியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து, குணமா வாயில சொல்லணும்.. :grin:

மிருகக்காட்சி சாலை ஊழியர் சாண்டி ஹெட்கார்ட் தண்ணியைப் போட்டுட்டு சொல்லுற அலம்பறை எல்லாம் பிபிசில வரும் எண்டால்....''எங்கோயோ தப்பு நடந்திருச்சு... நைனா'.. 

என்ன சொல்லுறீங்க? 

ரெண்டு பெங்குவின் பெடியள் நிண்டு விளாடிக் கொண்டிருந்தால்.... அதன் அர்த்தம் ஓரின சேர்க்கையா?

க...கா.. கடுப்பேத்தறார் மை லார்ட்ஸ்...?

 

https://news.google.com/stories/CAAqSQgKIkNDQklTTERvSmMzUnZjbmt0TXpZd1NoOGFIV1EwTmtwS1Z6TmhaMmREVW1OZlRXZGZUbEp0VTBGRlNHaFVjeTFOS0FBUAE?q=penguin+gay&lr=English&sa=X&ved=0ahUKEwjU2KWZw-XdAhXr5YMKHb_7D3oQqgIIPjAB&hl=en-CA&gl=CA&ceid=CA:en

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அதுதான் தல... பிபிசி நியூஸை ஒவொருத்தணும் கொப்பி பண்ணி போட்டிருக்கிறானுவ....

gay என்று எப்படி தெரியும்..... சும்மா சொல்லக் கூடாது..... 

விலங்கியல் நிபுணர்கள் ஆய்ந்தரிந்து சொன்னார்கள் என்றால் நம்பலாம்.... சும்மா ஊழியர் சொன்னால்..... அவரது தகுதியாவது சொல்ல வேணாமா?

இது எப்படி இருக்குதெண்டால்.... சமீபத்தில்...திருச்சியில்.... டாக்குத்தர் ஆப்பிரேசன் செய்தார்.... வெட்டினதை மீண்டும் தைக்க நேரமில்லை.... வேறு ஒரு ஆப்பிரேசனில்.

முதல் ஆப்பிரேசனை தையல் போட கூப்பிட்ட ஆள் யார் தெரியுமா: பிணவறை ஊழியர்....ஆளை அடையாளம் கண்டு கத்திய உறவினர்களிடம் சாக்கு, போக்கு சொல்லப் பட்டது: உசிரு முக்கியம் எண்டு, அவசரத்துக்கு வந்தாராம்.... பிரேத பரிசோதனைக்கு, தண்ணியைப் போட்டுட்டு, உடல் வெட்டி, பின் அள்ள கொள்ளையா தைக்கும் ஆசாமி....

கொடுமையடா சாமி..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.