Jump to content

ஐ ஓ எஸ் 12-இல் தமிழ் விசைமுகங்களின் பெயர்கள் திருத்தப்பட்டன!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ ஓ எஸ் 12-இல் தமிழ் விசைமுகங்களின் பெயர்கள் திருத்தப்பட்டன!

September 22, 2018

apple-iOS12-.jpgகோலாலம்பூர் – ஆப்பிள் நிறுவனத்தின் கையடக்கக் கருவிகளுக்கான இயங்குதள மென்பொருள், ஐ.ஓ.எஸ். என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த மென்பொருள் மேம்படுத்தப்பட்டுப் புதிய பதிகையாக வெளியிடப்படுவது வழக்கம். ஐபோன், ஐபேட் ஆகிய ஆப்பிள் கையடக்கக் கருவிகளைப் பயன்படுத்துபவர்கள், இந்த ஐ.ஓ.எஸ். மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்வதன் வழி தங்களின் கருவிகளின் செயல்பாடுகளை மேலும் செம்மைப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புதிய பதிகையாக ஐ.ஓ.எஸ். 12 மென்பொருளை, ஆப்பிள் கடந்தத் திங்கட்கிழமை, செப்டம்பர் 17-ஆம் நாள், பொதுப் பயனீட்டிற்காக வெளியிட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஐபோன் 5எஸ் போன்ற பழைய ஐபோன்களின் செயல்பாட்டையும் இந்த மென்பொருள் மேம்படுத்தும். செயல்திறன் மேம்பாட்டைக் கருவாகக் கொண்ட வெளியீடு என்றாலும், பல புதிய வசதிகளையும் ஐ.ஓ.எஸ். 12 தன்னகத்தே கொண்டிருக்கின்றது.

anjal-keyboard-apple.jpg அஞ்சல் விசைமுகம் – ஆப்பிள் கருவிகளில்…

அதன்படி, புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் ஒரு முக்கியக் கூறு, இரண்டுக்கும் மேற்பட்டப் பயனர்கள் ஒரு குழுவாக, காணொளி வழி உரையாடும் வசதியாகும். ஐ.ஓ.எசின் 12.0 பதிகையில் இது விடுபட்டிருந்தாலும், அடுத்து வரும் 12.1 பதிகையில் இந்த வசதி இணைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் மொழி பயனர்களுக்கு மகிழ்ச்சி தரும் மாறுதல்

ஐந்து ஆண்டுகளுக்குமுன் வெளிவந்த ஐ.ஓ.எசின் 7ஆம் பதிகை முதல், ஐபோன்களிலும் ஐபேட்களிலும் தமிழில் உள்ளிடுவதற்கான வசதியை ஆப்பிள் சேர்த்திருந்தது. அஞ்சல், தமிழ்99 என இரு விசைமுகங்கள் தமிழுக்காகச் சேர்க்கப்பட்டன. அதற்கும் முன்பாக, 2004ஆம் ஆண்டு முதல், மெக் கணினிகளிலும் இதே இரு விசைமுகங்கள் தமிழுக்காகச் சேர்க்கப்பட்டிருந்தன. தமிழில் உள்ளிடுவதற்குப் பலவகையான விசைமுக அமைப்புகள் இருந்த போதிலும், அதிகப் பயன்பாட்டினைக் கொண்டிருந்த காரணத்தினால், இந்த இரண்டு விசைமுகங்கள் மட்டுமே ஆப்பிள் இயங்குதளங்களில் சேர்க்கப்பட்டன.

Tamil-99-key-board-.png தமிழ் 99-விசைமுகம் – ஆப்பிள் கருவிகளில்…

ஆனால், கடந்த ஆண்டு வெளிவந்த ஐ.ஓ.எசின் 11ஆம் பதிகையில் இவற்றிற்கான பெயர்கள், வேறு பெயர்களாக மாற்றப்பட்டன. இந்தப் பெயர்மாற்றம் பல பயனர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. தாங்கள் விரும்பும் விசைமுகங்கள் அகற்றப்பட்டன எனவும், தமிழில் உள்ளிட ஆப்பிள் கையடக்கக் கருவிகளில் இனி வாய்ப்பில்லை எனவும், பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த விசைமுகங்களுக்கானப் பெயர்கள் ஐ.ஓ.எசின் 12ஆம் பதிகையில் சரிசெய்யப்பட்டுள்ளன. இதே மாற்றம், இன்னும் சில நாட்களில் வெளிவர இருக்கும் மெக் கணினிகளுக்கான மெக்.ஓ.எசின் புதிய பதிகையிலும் தென்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

apple-keyboard-layout.jpg ஆப்பிள் கருவிகளில் தமிழ் விசைமுகங்கள்

தமிழ் 99 தமிழ் நாட்டிலும் சிங்கப்பூரிலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் விசைமுக அமைப்பாகும். அஞ்சல் விசைமுகம் மலேசியா உள்ளிட்ட மற்ற பல நாடுகளில் புகழ்பெற்று விளங்கி வருகின்றது.

மலேசியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் முத்து நெடுமாறன் (படம்), அஞ்சல் விசைமுகத்தை 1993-ஆம் ஆண்டில் உருவாக்கி, அதனை இணையம் வழி பயனர்களுக்கு இலவசமாகவே வழங்கினார். இந்த விசைமுகம் குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே பரவியது. கணினியிலும் இணையத்திலும் தமிழை எழுதவும், பதிவேற்றம் செய்யவும் பயனர்களுக்குப் பேருதவியாக அமைந்தது.

 

1999-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாட்டிற்குப் பின் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் 99 விசைமுகம், நேரடியாகவே தமிழில் தட்டச்சு செய்ய விரும்புபவர்களும், ஆங்கிலப் புழக்கம் அதிகம் இல்லாதவர்களும் வேகமாகத் தட்டெழுத உதவும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்த இரண்டு விசைமுகங்களும் நாளடைவில் கணினி மற்றும் இணையம் வழியான தமிழ் பயன்பாட்டுக்கானத் தர நிர்ணயமாக உருவெடுத்தன. இவற்றின் பெயர்களும் தமிழ் பயனர்களிடையே நிலைபெற்றும் வருகின்றன. ஒரு மில்லியன் பயனர்களுக்கு மேல் கொண்டிருக்கும் செல்லினம் உள்ளீட்டுச் செயலியிலும், இவ்விரண்டு விசைமுகங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

இந்தச் சூழல் காரணமாகத்தான், கடந்த ஆண்டு ஆப்பிள் இயங்கு தள மென்பொருளில் பெயர்மாறிச் சென்றத் தமிழ் விசைமுகங்கள் மிண்டும் அவற்றின் அசல் பெயர்களுக்கு மாறி வந்துள்ளன!

 

https://selliyal.com/archives/172691

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.