Jump to content

கனடாவுக்குள் நுழையும் அகதிகள்…!


Recommended Posts

கனடாவுக்குள் நுழையும் அகதிகள்…!

கனடா உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு! கடல் வளம், கனி வளம், நீர் வளம், நில வளம் எனத் தொடரும் பெரும் செல்வத்தைத் தன்னகத்தே கொண்ட நாடு! குடித்தொகை வெறும் 37 மில்லியன்கள்தான்! ஆயினும் அல்லலுறும் மக்கள், துன்பத்தால் துடிக்கும் மக்கள், உள்நாட்டுப் போரினால் அவதியுறும் மக்கள் கனடாவுக்குள் நுழைந்து தஞ்சம் கோரும் போது அண்மைக் காலங்களாக விரும்பத்தகாதவர்களாக நோக்கப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இனத்தால், மதத்தால், நிறத்தால் வெள்ளையினத்தவர்களாக அல்லாத வேளைகளில் இதன் உக்கிரம் பல்வேறு வடிவங்களை எடுக்கிறது. இந்த நாட்டுக்கு அகதிகளாக வந்த தமிழர்களாகிய நாங்களும் இவ்வாறு மற்றவர்களை வெறுக்கும் மனோநிலை கொண்டவர்களாக மாறி வருகின்றோமா ?

கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கனடாவில் அகதிகளின் தஞ்சக் கோரிக்கைக்கான காத்திருப்பு நேரம் அதிகரித்துள்ளது. கடந்த பத்தொன்பது மாதங்களுக்குள் முப்பதினாயிரத்துக்கும் அதிகமான புகலிடம் கோருவோர் அமெரிக்க கனடிய எல்லை வழியாகக் கனடாவுக்குள் நுழைந்துள்ளமை கனடிய ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பழமைவாதிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.

குடிவரவு மற்றும் அகதிகளுக்கான திணைக்களத்தால் (IRB) கியூபெக்கிற்குள் நுழைந்த 27,674 புகலிடக் கோரிக்கையாளர்களில் பதினைந்து சதவிகிதத்தையே இதுவரை கையாள முடிந்துள்ளது. இதில் பெரும்பான்மையான அகதிக் கோரிக்கையாளர்கள் St. Bernard-de-Lacolle என்ற இடத்தில் உள்ள எல்லை வழியாக 2017 ம் ஆண்டு பெப்ரவரிக்கும் யூனுக்கும் இடையில் வந்தவர்களாவார்கள். கனடிய உச்சநீதி மன்றத்தில் 1985ம் ஆண்டில் நடைபெற்ற பிரபலமான ‘’ சிங்’’ வழக்கு குறித்த தீர்ப்பின் கீழ் கனடிய நாட்டில் தஞ்சம் கோரும் அகதிகள் அனைவரும் வாய் வழி மூல விசாரணைக்குத் தகமை உடையவர்கள்..

அமெரிக்க-கனடிய எல்லை வழியாக நுழையும் புகலிடம் கோருவோர் பிற அகதிக் கோரிக்கையாளர்கள் போலவே பல்வேறு கேள்விகளை எதிர்கொள்கிறார்கள்: அவர்கள் மெய்யான அகதிகள் தானா ... தங்களது நாடுகளில் துன்புறுத்தலை எதிர்கொண்டு அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்களா என்ற கேள்விகளே அவற்றில் அதிமுக்கியமானவை.! அகதிகள் திணைக்களத்திடம் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி இவ்வாறு நுழைந்தவர்களில் 1,885 அகதிகளே கியூபெக்கில் முறையான அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். இது கனடாவில் நடைபெற்ற முழு அகதிகள் வழக்குகளோடும் ஒப்பிடும் பொழுது கணிசமான அளவு குறைவாக உள்ளது.

ஆனால் Canada Border Services Agency இன் தரவு, அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்கள் பலர் நாடு கடத்தப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் எல்லைகளைக் கடந்து கியூபெக்கில் நுழைந்த 157 பேரை CBSA நாடு கடத்தியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

2017 ஏப்ரல் மாதம் முதல் கனடாவுக்கு வந்த 32,173 அகதிகளில் 398 பேர்கள் வரை வெளியேற்றியுள்ளதாக சிபிஎஸ்ஏ தெரிவித்துள்ளது. இவர்களில் 146 பேர் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். மீதமானவர்கள் ஹெய்ட்டி உட்பட கொலம்பியா துருக்கி மற்றும் ஈராக் என 53 நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிரபல சட்டத்தரணி லோரன் வால்ட்மேன் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகடத்தல்கள் அகதிகள் திணைக்கள அமைப்பின் தற்போதைய நடைமுறையினை விளங்கிக்கொள்ளவல்ல ஒரு சுட்டி என்று கூறுகிறார். புகலிடம் கோருவோர் தங்களது தஞ்சக்கோரிக்கை முடிவுக்காகப் பதினாறு மாதங்கள் வரை காத்திருப்பதாகப் புள்ளி விபரங்கள் சுட்டுகிறது..

2010ம் ஆண்டில் ஹெய்ட்டியில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்திற்குப் பின்னர் அமெரிக்காவினால் ஹெய்ட்டியர்களுக்குத் தற்காலிக பாதுகாப்பு வதிவிட அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதியின் கீழ் அமெரிக்காவில் வசித்து வந்த ஹெய்டியர்களே எல்லை கடந்து வந்தவர்கள். டிரம்ப் நிர்வாகம் ஹெய்ட்டியர்களுக்கான வதிவிட உரிமையை முடிவுக்கு கொண்டு வந்ததை அறிவித்தபோது, கனடாவில் அகதி அந்தஸ்தைக் கோருவதற்காக அவர்கள் அமெரிக்க கனடிய எல்லை வழியாக கனடாவுக்குள் உள் நுழைந்தார்கள்.

ஆனால் எல்லையோரத்தில் புகலிடம் கோருவது அவ்வளவு எளிதானது அல்ல. இரு நாடுகளும் அகதிகளுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப்படுவதால், கனடா மற்றும் அமெரிக்கா இடையே உள்ள இருநாட்டு உடன்படிக்கையின்படி இரு நாடுகளும் உத்தியோகபூர்வ எல்லைகளை அடைந்த தஞ்சம் கோருவோருக்கு மறுப்புத் தெரிவிக்க வேண்டும். எவ்வாறாயினும், இந்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமான நுழைவுரிமைக்கு வருகை தரும் நபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், புகலிடம் கோருவோர் உத்தியோகபூர்வ எல்லைக் கடப்புகளுக்கு இடையில் நுழைவதன் மூலம் திருப்பித் தள்ளப்படுவதைத் தவிர்க்கலாம். இதனால் ஆயிரக்கணக்கான அகதி நுழைவாளர்கள் பயனடைந்துள்ளனர்.

நைஜீரியர்கள் கனடாவிற்குப் பதிலாக அமெரிக்க விசாக்களைப் பயணிக்கத் தேர்வு செய்வது ஏன் ? சட்டத்தரணி வால்ட்மேன் அமெரிக்க விசா வழங்கல் முறைமை கனடாவின் விசா வழங்கல் முறைமையை விட மிகவும் தாராளமானதாகக் காணப்படுவதாகச் சொல்லுகிறார். தஞ்சம் கோரும் நைஜீரியர்கள் பலர் பயணிகளுக்கான அமெரிக்க விசாக்களைப் பெறுகின்றனர். அதனை அவர்கள் அமெரிக்கா வருவதற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதன் பின்னர் அவர்கள் கியூபெக் எல்லை வழியாகக் கனடாவிற்குள் நுழைந்து புகலிடம் கோரி வருகிறார்கள்.

இந்த வருடம், குடிவரவு அமைச்சர் அஹமது ஹுஸென் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகள் நைஜீரியாவுக்குப் பயணம் செய்தனர். நேரடியாக நைஜீரிய அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விசா தொடர்பாக எழும் அகதி நுழைவுப் பிரச்சினைகளைப் பேசியிருந்தார்கள். கனடிய எல்லைக்குள் நுழைந்து நைஜீரியர்கள் புகலிடக் கோரிக்கை கேட்பதை நைஜீரிய அரசாங்கம் தடுக்கும் வகையில் செயற்பட வேண்டும் என்பதும் கனடிய அமைச்சரின் நைஜீரிய அரசினை நோக்கிய எதிர்பார்ப்பாக இருந்தது.

2018ம் ஆண்டுக்கான கனடிய மத்திய அரச வரவுசெலவுத்திட்டதின் ஒரு பகுதியாக அகதிகள் திணைக்களத்துக்கு 72 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, இது அகதிகளின் தஞ்சக் கோரிக்கை குறித்த முடிவெடுக்கும் முறைகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஒருவர் மேன் முறையீட்டுக்குச் செல்வதன் மூலமோ அல்லது சட்டவாக்க வரைமுறைகளைப் பயன்படுத்துவதன் ஊடாகவோ தான் கனடாவில் வாழும் காலத்தை நீடித்துக்கொண்டு செல்வார். அவ்வாறு போராடிக் கொண்டிருக்கும் வதிவிட உரிமையற்ற அகதிகளை விரைவாக நாட்டை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்று கொதிக்கிறது பழமைவாதக் கட்சி! தற்போதைய நிர்வாக அமைப்பு முறைமைகள் அதற்கு எற்றதாக அமையவில்லை என்பது அவர்களது குற்றச்சாட்டு!

ரொறொன்ரோவிற்கு வரும் அகதிகளுக்கான செலவீனங்கள் அதிகமாக இருப்பதால் நகர நிர்வாகம் ஒன்ராரியோ மாகாண அரசிடம் மேலதிக உதவியைக் கோருகிறது. ஒன்ராரியோ மாகாண அரசு கனடிய மத்திய அரசுக்கு கூடுதல் நிதியுதவி செய்யுமாறு அழுத்தம் கொடுக்கிறது. வரி கொடுக்கும் வசதி படைத்தோர் தங்கள் வரிப்பணத்தை அகதிகளுக்காகச் செலவிடுவதை விரும்புவதில்லை. அகதிக் கோரிக்கையாளர்களது வழக்குகளை மற்றும் அவர்கள் குறித்த பிரச்சினைகளை விரைவாகக் கையாள நிதி ஒதுக்கப்படுவதைப் பழமைவாதிகள் வெறுக்கிறார்கள். ஹார்ப்பரது ஆட்சிக் காலத்தில் இது அனைத்துலக உடன்படிக்கைகளைப் புறந்தள்ளும் வகையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களின் துணையோடு உள்நாட்டுக் கலவரங்கள், போர், இயற்கை அனர்த்தம், அரச அடக்குமுறை போன்றவற்றால் சொல்லொணாத் துன்பங்களைச் சுமக்கும் மக்கள் கனடாவில் தஞ்சம் கோரும் வேளைகளில் கனடிய அரசு அவர்களை நிராகரிக்காது ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதே மனிதநேயவாதிகளின் பெரு விருப்பாகும்.

(இம் மாத 'தேசியம்' சஞ்சிகையில் 

இருந்து..........

எழுதியவர் நடராஜா முரளிதரன்

எழுதியது)

Image may contain: 4 people, people standing, wedding and outdoor
Image may contain: ocean, water and outdoor
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலனவர்கள் பொருளாதர அகதிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

பெரும்பாலனவர்கள் பொருளாதர அகதிகள்

அவர்களை பொருளாதார அகதியாக்கியது யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

அவர்களை பொருளாதார அகதியாக்கியது யார்?

சிங்களவன் ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.