Jump to content

ராஜசுந்தரராஜனின் 'நாடோடித்தடம்'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜசுந்தரராஜனின் 'நாடோடித்தடம்'

இளங்கோ-டிசே

டந்த நான்கு நாட்களாக ராஜசுந்தரராஜனின் 'நாடோடித்தடத்தை' வாசித்துக்கொண்டிருந்தேன். இவ்வாசிப்பிற்கிடையில் வேறு ஒரு படைப்பை வாசித்து தலையில் முட்டி, எதையாவது அதுகுறித்து எழுதித்தொலைத்துவிடுவேனோ என்ற பதற்றத்தை விலத்தி, தன் தடத்தில் சுவாரசியமாகத் தொடர்ந்து கொண்டு சென்றதற்கு ராஜசுந்தரராஜனுக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும்.

நமது முன்னோடிகளிடம், ஒரு நல்ல படைப்பை எப்படி எழுதுவது என்பது கற்றுக்கொள்வதற்கு மட்டுமின்றி, ஒரு மோசமான படைப்பை எவ்வாறு எழுதாமல் தவிர்ப்பது என்பதற்கும் அவர்களிடமே செல்லவேண்டியிருக்கின்றது. அவ்வாறு சமகாலத்தில் எழுதுபவர்களுக்கு பரவலாக வாசிக்கும் ஒரு அரியபழக்கம் இருக்குமாயின்,, எத்தனையோ ஆக்கங்களை வாசித்து நாமும் மன அழுத்ததிற்குள் போகாது தப்பியிருக்கலாம் தப்பியிருந்திருக்கலாம்.
 

11.jpg

இந்தத் தொகுப்பிலிருக்கும் 21 ஆக்கங்களிலும் எடுத்துக்கொள்ளும் விடயங்கள் -முக்கியமாய் தமிழ்ச்சூழலில்- சிக்கலானதும், அதேசமயம் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு தமக்கான தீர்ப்புக்களைச் சொல்லக்கூடியதுமான விடயங்கள்தான்.  எனினும், எவ்வளவு நளினமாகவும், தன்னையொரு புனிதமானவனாகவும் இதில் இட்டுக்கட்டாததுமாதிரி, மற்றவர்களையும் எந்த ஒருபொழுதிலும் இழித்துக்காட்டாததுமாக ராஜசுந்தரராஜன் எழுதியிருப்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் 'பெண்கள்' (Women) நாவலை வாசிக்கும்போது ஏற்பட்ட உணர்வைப் போன்றே நாடோடித்தடத்திலும் பெண்களே எல்லாப் பதிவுகளிலும் (சிலவேளைகளில் போதும் போதுமென்ற அளவுக்கும்) வருகின்றனர். ப்யூகோவ்ஸ்கி,  தனது alter  egoவாய்,  ஒரு ஹென்றி சின்னாஸ்கியை உருவாக்கியதைப் போல எல்லாம் கஷ்டப்படாது, ராஜசுந்தரராஜன்  நான் என்கின்ற தன்னிலையாலே எல்லாக் கதைகளையும் எவ்வித ஒளித்தல் மறைத்தலின்றிச் சொல்லிப்போகின்றார்.

ராஜசுந்தரராஜனின் 'நான்', தான் காதலித்த பெண்களிலிருந்து, தேடித்தேடிப்போன பாலியல் தொழிலாளர்களை வரை எவ்வித ஏற்றந்தாழ்வுகளின்றி  அப்படியே காட்சிப்படுத்துகின்றனர். இவையெல்லாம் ராஜசுந்தரராஜனின் வேலை நிமித்தம் ஏற்படுகின்ற இடமாற்றங்களால் அன்றி, அவருக்குள்ளே இருக்கும் ஒரு விட்டேந்தியான  ஒரு நாடோடியினாலே சாத்தியமாகியிருக்கின்றது என்பதை வாசிக்கும் எவரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

தேசாந்திரிகளாகவும், இந்திய மரபை அறிந்துகொள்வதற்காகவும் பயணப்பட்டோம் என்று சொல்லி தமிழில் எழுதப்பட்டவற்றை வாசித்தவர்க்கு, இந்த நாடோடித்தனம் ஒருவகையில் அதிர்ச்சியையே கொடுக்கும். இது இந்தியாவில் என்றில்லை, எந்த ஒரு நாட்டின் மக்களோடும் அவர்களின் கலாசாரத்திற்குள் 'அந்நியராக' இல்லாது ஒன்றாகக் கலக்கத்துடிக்கும் எந்த மானிடர்க்கும் வாய்க்கக்கூடியதே.

அண்மையில் ஒருவர் இங்கிலாந்திற்கு 'பப்'ற்குள் போக எனக்கு விருப்பமில்லை என்று தன் பயண அனுபவங்களில் எழுதியதை வாசித்தபோது, இவர்கள் ஏற்கனவே தீர்மானித்துவிட்ட தம் பயணங்களைச் செய்கின்றார்களே தவிர ஒரு உண்மையான பயணத்திற்குள் ஒருபோதும் உள்நுழைந்துவிடமுடியாது என்றே நினைத்தேன். ஒரு சமூகத்தின் கலாசாரத்தின்/பண்பாட்டுப்பின்புலத்திற்கு நம்மை நெருக்கமாக்கவேண்டுமென்றால் அந்தச் சமூகத்தில் கப் 'காபி' குடிப்பது ஒரு பண்பாடாக இருந்தால் என்ன, கஞ்சா அடிப்பது கூட அவர்களின் பண்பாடு என்றால் அதற்குள் நுழையாமல்விடின் நீங்கள் ஒரு கலாசாரத்தின் சிறுதுளியையும் தீண்டமுடியாது. ஆனால் நம் பலரின் பயணங்கள் அவ்வாறிருப்பதில்லை என்பதுதான் துயரமானது.


நாடோடித்தடத்தில் பெண்களைப் பற்றி இல்லாத எந்தப் பதிவும் இல்லையெனவே சொல்லலாம்,  இருப்பினும், ராஜசுந்தரராஜன் அதற்கூடாக அவரது பயணங்கள் நடக்கும் நிலப்பரப்பு,  அம் மக்களின் வாழ்க்கைமுறை, மொழிகளின் சிக்கல்கள் போன்றவற்றின் குறுக்குவெட்டுமுகங்களை நமக்கு  முன்வைக்கின்றார் (வெவ்வேறு புதிய மொழிகளை எப்படிக் கற்றார் என ஒரு பதிவில் சொல்லும் இடம் மிகுந்த சுவையானது, அவ்வாறே அவர் ஜோதிடம் கற்கும் இடமும்). மேலும் தனது 'நானுக்குள்' அவ்வப்போது அவிழ்ந்துவிடும் தரிசனங்களையும் அதன் பின்னணியோடு முன்வைக்கின்றார். மீனா (என்று உளவியல் சிக்கலுள்ள பெண்), அவருக்கு முன் ஆடைகளை அவிழ்த்து தன்னைக் கொடுக்க முனைவதும், பிறகு அந்தப் பெண் இறந்தபின், ஒரு வேட்டைக்களத்தில் பலநூறு மின்மினிப்பூச்சிகள் பறக்கும்போது அந்த மீனாவின் தரிசனம் கிடைப்பதும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. 
 

22.jpg

அதைவிடச் சுவாரசியமாக அவர் எத்தனையோ வருடங்களின் முன் சந்தித்த பல மனிதர்களைத் திருப்பிச் சந்திக்கின்றார். இடைப்பட்ட காலங்களில் நமக்குத் தெரியாத அவர்களின் வாழ்க்கை நமக்குக் கிறுக்கியகோடுகளாக தெளிவும்/தெளிவுமின்றித் தெரிகின்றன. அதேவேளை மனிதர்களை அரிதாகவே மீண்டும் நம் வாழ்வில் சந்திப்போம், அப்படி அவர்களை மீண்டும் ஏதோ ஒரு வட்டத்தில் வைத்து சந்திக்கின்றோம் என்றால் அவர்களோடு நமக்கு கடந்தகாலத்திலோ, எதிர்காலத்திலோ (சிலவேளைகளில் பிறப்புக்கு முன்/பின் கூட) ஏதோ ஒருவகையில் தொடர்புஇருக்கலாம். ஆகவே அவர்களுக்கு கவனம் கொடுங்கள், அவர்களை மதிக்கக் கற்றுக்கொடுங்கள் என (ஒரு மேடையில்) உரையாற்றுகிறார். இவ்வாறு இரண்டையும் இணைத்துப் பார்த்தல் சுவாரசியமான முடிச்சு.

இந்த நாடோடித்தடத்தில் வரும் தன்னிலையின் வாழ்வு அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாதது. திருமணம் வேண்டாம் என்கின்ற நினைப்போடு பரத்தைகளோடு தனது காமத்தைப் பகிர்ந்துகொள்ளும் இந்த 'நான்' என்கின்ற தன்னிலை, இறுதியில் தனது அக்கா மகளையே மணஞ்செய்கின்றது. தொழிலின் நிமித்தம் நகரங்கள் எங்கும் அலையும்போது, அந்தப் பெண்ணுக்கு வேறொரு ஆணோடு தொடர்பு(?) ஏற்பட்டுக் குழந்தையும் பிறக்கின்றது. அந்தத் துயர் - ஏன் இப்படி எனக்கு ஏற்பட்டது என்பதைத் தேடுவதற்கான தன்னையே கிடத்தி ஒரு மரணப்பரிசோதனை செய்கின்றமாதிரியான ஒரு தொகுப்பாகவே இதைக் கொள்ளலாம்.

இத்தொகுப்பில் குறிப்பிட வேண்டிய இன்னொன்று, பொறியியல் விடயங்கள் அழகாக விபரிக்கப்பட்டுள்ளதோடு, பொறியியல் சொற்களுக்கு உரித்தான தமிழ்ச்சொற்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதேபோன்று திருக்குறள்/சங்கப்பாடல்கள்/நவீன கவிதைகள்/மேற்கத்தைய இலக்கியங்களில் இருந்து, பொருத்தமான பகுதிகள் பாவிக்கப்பட்டிருப்பதை வாசகராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது. ஏதோ ஒரு நேர்காணலில் பேட்டி கேட்பவரை சிவசங்கரி seagullற்கு தமிழில் சொல் இருக்கிறதா எனச் சற்றுத்திமிருடன் கேட்பதைப் பார்க்கும்போது, ஒரு தமிழ்நாட்டுக்கரையில் சிறுவன் ஒருவன் அதே பறவையைச் சுட்டிக்காட்டி 'கடல்புள்ளு' என்று சொன்னதை  ஓரிடத்தில் நினைவுகூர்கிறார்.

அதேமாதிரி ஒரு கவிஞர் நுங்கம்பாக்கம் வந்து பூனைமாதிரி நெடுக்கும் குறுக்குமாய் நடக்கும்போது, அதைக்கண்டு பஸ்ஸிலிருந்து இறங்கும் இந்த 'நான்', விடயத்தை அறிந்தபின், இந்தப்பக்கம் இல்லை மற்றப்பக்கம் பூக்கடைப் பக்கம் நின்றால் நீங்கள் தேடியது கிடைக்கும் என்று  கூறுவது நமது இலக்கியமும்/இலக்கியவாதிகளும் அதேதான், புனிதப்படுத்தல்கள் எல்லாம் போலித்தனமானது  என்பது நமக்குப் புரியும்.


வ்வாறாகப் பற்றியெரியும் பாலியல் வேட்கையை அவ்வளவு எளிதில் தமிழில் எழுதிவிடமுடியாது. வேண்டுமெனில் கலைத்துவம் இல்லாது, எங்களை மன அழுத்ததிற்குள்ளாகும் 'ஆபாசமாக' (நிர்வாணத்தை இங்கே குறிப்பிடவில்லை) எழுதுவதற்கு பலர் இருக்கின்றார்கள். ஆனால் பெண் உடல் மீதான பித்தைக் கைவிடமுடியாதும், அதேவேளை அந்தப்பெண்களை எங்கேயும் கீழிறக்கிவிடாதும் எழுதுதல் எல்லோர்க்கும் வாய்க்காது. கயிற்றைக் கட்டிவிட்டு அதன்மேல் நடந்துபார்க்கும் வித்தைதான் இது. தனது மனைவிதான், ஆனால் அதே மனைவிக்கு இன்னொருவருக்குப் பிறந்த ஒரு குழந்தைக்கு, பிறகு ஒரு 'ஆயனாக' மாறுவதென்பது எல்லோராலும் முடிவதன்று.

ஒருவகையில் பார்த்தால் நாடோடித்தடங்கள்  பலதிசைகளிலும் அலைவுற்றாலும், 'கடவுச்சொல்'லில் ராஜசுந்தரராஜன் கூறும் 'என் காதலி இன்னொருவனுக்கு மனைவியாகிப் போனாள் என்பதைக் காட்டிலும், என் மனைவி இன்னொருவனுக்கு காதலியாகிப் போனாள் என்பதில் மிகுந்த துயரம் எங்கிருந்து வருகிறது' என்பதையே, இந்தத் தொகுப்பின் ஒவ்வொரு ஆக்கங்களும் தம்மளவில் பதில்களைத் தேடுகின்ற நுண்ணிழைகளைக் கொண்டிருப்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

தமிழ்ச் சூழலில் ஒருபக்கத்தில் பயணங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டு,  மறுபுறத்தில் சிக்கலான ஒரு மனிதனின் இருப்பை இந்தளவுக்கு ஆழமாகப் பார்க்கத் துணிந்த இன்னொரு தொகுப்பை அவ்வளவு எளிதில் உதாரணமாகச் சொல்லமுடியாது என்பதே 'நாடோடித்தடத்தின்'  சிறப்பாகும்.

(செப் 04, 2018)

 

 

http://djthamilan.blogspot.com/2018/10/blog-post.html?m=1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.