Jump to content

முதல் பார்வை: 96


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
IMG0299jpgjpg
Published : 04 Oct 2018 19:08 IST
Updated : 04 Oct 2018 19:31 IST

 

1994-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் 22 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தால், அதில் நாயகன் தன் காதலியைத் தேடினால் அதுவே '96'.

டிராவல் போட்டோகிராபர் கே.ராமச்சந்திரன் (விஜய் சேதுபதி) இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புகைப்படக் கலையைக் கற்றுத் தருகிறார். தன் மாணவியுடன் காரில் பயணிக்கும்போது பிறந்து, வளர்ந்து, படித்த ஊரைக் கடந்து செல்ல முடியாமல் நினைவுகளில் மூழ்குகிறார். 10-ம் வகுப்பு படித்த ஞாபகங்கள் அவரைக் கிளற, தன் நண்பன் பகவதி பெருமாளிடம் போனில் பேசுகிறார். வாட்ஸ் அப் மூலம் தன்னுடன் படித்த அனைத்து மாணவர்களுடனும் சாட் செய்ய ஒரு நன்னாளில் சந்தித்து மகிழ்கிறார்கள். சிரிக்கிறார்கள். விஜய் சேதுபதி மட்டும் தன் காதலி ஜானு (த்ரிஷா) வருகையை எதிர்பார்க்கிறார். அவரும் கொஞ்சம் தாமதமாக வருகிறார். 22 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சந்திக்கும் காதலர்கள் ஓர் இரவு முழுக்க எங்கெல்லாம் செல்கிறார்கள், எதுவெல்லாம் பேசிப் பகிர்கிறார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிரேம் குமார்.

தவறவிடாதீர்

காவியக் காதல், கமர்ஷியல் காதல், யதார்த்த காதல், உன்னதக் காதல், ஒருதலைக் காதல், சேர்ந்த காதல், சேராத காதல், பார்க்காமலேயே காதல், பேசாமலேயே காதல் என்று காதலை மையமாகக் கொண்ட படங்கள் தமிழ் சினிமாவில் அதிகம். 'தேவதாஸ்' காலத்திலிருந்து 'பிரேமம்' வரை காதல் படங்களுக்கான மரியாதை தொடர்ந்து கொடுக்கப்பட்டே வருகிறது. அதன் தொடர்ச்சியாக '96' படத்தைச் சொல்லலாம்.

விஜய் சேதுபதியின் டீன் ஏஜ் கேரக்டரில் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யன் அழகாய்ப் பொருந்துகிறார். பார்வை, உடல் மொழியில் அப்படியே விஜய் சேதுபதியைப் பிரதி எடுத்திருக்கிறார்.

த்ரிஷாவின் டீன் ஏஜ் கேரக்டரில் கவுரி அற்புதமான புதுவரவு. கள்ளம் கபடமில்லாத அன்பின் ஊற்றை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

விஜய் சேதுபதி தீராக் காதலனாய் படம் முழுக்க வசீகரிக்கிறார். அவரின் மென்மையான நுண்ணிய உணர்வுகள் ரசிக்க வைக்கின்றன. ரவுடி, போலீஸ், பயந்து பின் வாங்கும் கதாபாத்திரங்களிலேயே விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றும், எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் விஜய் சேதுபதியே தெரிகிறார் என்றும் சொல்லப்படுவதுண்டு. அந்த விமர்சனத்தை இதில் சேது தகர்த்தெறிந்திருக்கிறார். படபடப்பு, தவிப்பு, காத்திருப்பு, ஏக்கம் என எல்லாவற்றையும் சுமந்து திரியும் பெருங்காதலனைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். வெட்கப்படும் தருணங்களிலும், காதலியின் பாராட்டில் பெருமிதம் மிளிரப் பார்க்கும் போதும் விஜய் சேதுபதி திரை முழுக்க ஆக்கிரமித்துக் கொள்கிறார்.

'கொடி', 'மோகினி' போன்ற படங்களில் நடித்த த்ரிஷாவா இது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு நடிப்பில் ஆளுமை செலுத்தி இருக்கிறார் த்ரிஷா. விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸியை விட இதில் நடிப்பில் தன்னை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு த்ரிஷாவுக்குக் கிட்டி இருக்கிறது. அதை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு ஜானு கதாபாத்திரத்தின் ஆழ அகலத்துக்குள் சென்று அழுகையும், ஆற்றாமையும், இயலாமையுமாக கரைந்து போகிறார். அத்தகைய தருணங்களில் த்ரிஷாவுக்கு மட்டுமல்ல, நமக்கும் கண்களில் நீர் திரள்கிறது. விஜய் சேதுபதியைத் தேடும் அந்த ஒற்றைப் பார்வையில் காதல் மொழியை உணர்த்திவிடுகிறார்.

தேவதர்ஷினி, பகவதி பெருமாள், முருகதாஸ் ஆகியோர் நகைச்சுவைக்குப் பலம் சேர்க்கிறார்கள். கவிதாலயா கிருஷ்ணன் ஒரே காட்சியில் வந்தாலும் ஸ்கோர் செய்கிறார். ஜனகராஜின் மறுவருகை புன்னகையை மலர வைக்கிறது.

மகேந்திரன் ஜெயராஜு, சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு படத்தின் ஒவ்வொரு காட்சியையும் கவிதை ஆக்கியிருக்கிறது. கோவிந்த் மேனன் அக்கவிதைகளுக்கு தன் இசையால் உயிரூட்டி இருக்கிறார். அதுவும் காதலே காதலே பாடல் மிகப் பொருத்தமான காட்சியில் வந்து பார்வையாளர்கள பரவசப்படுத்துகிறது.

சொல்லில் தீராத காதலை காட்சியில் தீரும் அளவுக்கு மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பிரேம் குமார். பள்ளிப் பருவக் காதலின் நினைவுகளை ப் பசுமையாக நினைவு கூர்கிறார். சேர முடியாத காதலின் கனத்தை, பிரிவை அழுகையின் ஊடே பதிவு செய்த விதம் பாராட்டுக்குரியது. கொஞ்சமும் கதையிலிருந்து விலகாமல் கதாபாத்திரங்களின் இயல்பு மீறாமல் நெறியாள்கை செய்திருக்கிறார். இரண்டாம் பாதி முழுக்க விஜய் சேதுபதி, த்ரிஷா என்ற இருவரை மட்டுமே நம்பி திரைக்கதையை நகர்த்தி இருக்கும் விதம் வியக்க வைக்கிறது. சின்னச்சின்ன சினிமாத்தனங்கள் ஆங்காங்கே எட்டிப்பார்த்தாலும் அது நெருடலாகவோ, தவறாகவோ, துருத்திக்கொண்டோ தெரியவில்லை.

இந்தக் காதல் ஏன் சேரக்கூடாது, சேர்ந்தால் நன்றாக இருக்குமே போன்ற கேள்விகள் எழலாம். எல்லாவற்றையும் தாண்டி சினிமாவுக்கே உரிய கிளைமாக்ஸ் வைக்காமல் யதார்த்தமாய் அமைத்திருந்த விதம் உண்மையின் பக்கம் நின்று பேசுவதாக உள்ளது. காதலித்தவர்களும், காதலிப்பவர்களும், காதலை ஆராதிப்பவர்களும் '96' படத்தை ரசிக்கலாம்.

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25123931.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

முகநூலில் நிரம்பி வழியும் 96 விமர்சனங்களை  கண்கள் கலங்க பார்த்துகொண்டிருக்கிறேன் ஒவ்வொருதருக்கும் ஒரு காதல் ❤️ இருந்து இருக்கும் அதனை 96 ன் வழி மீட்டிபார்க்கிறார்கள்..

 

ஒரு ஆணின் வெட்கம் அத்தனை அழகா? அழகாய் தானிருக்கிறது விஜய் சேதுபதி வெட்கப்படும் தருணங்களில் எல்லாம்.
பள்ளிக்கூடத்தில் அரும்பும் காதல் ,சொல்லிக்கொள்வதற்குள் சந்தர்ப்ப சூழ்நிலையால்   பிரிந்த காதலர் இருபது வருடம்கழித்து சந்தித்தால் எப்படி எதிர் கொள்வர்   என்ன செய்வர் ..? எவ்வளவோ செய்யலாமே

..ஒரு சொட்டு விரசமின்றி முழுக்க முழுக்க அழகியலால் அத்தருணங்களை நிரப்பினால் வருவது தான் "96" 
தாடியும் மீசையுமாக திரிபவனை  சலூனுக்கு அழைத்து சென்று பள்ளிக்கூட பையனை போல முடி வெட்டி அழகு பார்க்கிறாள்..
ஒரு மழை நேரத்தில் பல்கனியில் மனசுக்கு பிடித்தவனுடன் ஒரு தேநீர்.
 அவன் பசிக்குது எனும்போது அவனுக்காக சமையல்செய்கிறாள்.
 சாப்பிட்டுகொண்டிருக்கும் போது சாப்பாடு எப்படி இருக்கிறது என கேட்பவளிடம் அம்மாவின் சமையல் போல் என்கிறான்..
திடீரென கரண்ட் கட் லைட் தேடி அவன் ஓடுகிறான்..அப்போது பாடசாலைக்காலங்களில் அவன் மற்றவர்கள்மூலம் கேட்டும் தான் பாடாத அவனுக்கு பிடித்த பாடலை அவள் பாடுகிறாள்.

நீ சந்தோசமாக இருக்கிறாயா ஜானு? சந்தோசம் என்டு சொல்ல முடியா ,நிம்மதியாக இருக்கிறேன்  என்று வேண்டுமானால் சொல்லலாம் ராம் என்பாள் 

 பொக்கிஷமாக அவன் சேர்த்து வைத்தருக்கும் அவளின் துப்பட்டா,இறுதி விடுமுறையில் அவள் மை தெளித்து மறந்துவிடாதே என்று சொன்ன வெள்ளை சேட் எல்லாவற்றையும் காட்டுகிறான்,அவளுக்காக தான் எழுதிய கவிதையை அவன் வாசிக்கிறான் அவள்அப்படியே உறங்கிபோகிறாள்.இப்படி
இன்னும் பல கவிதை தருணங்கள்  .பிரியும் நேரம் கண்ணீருடன் அவள் அவன் முகத்தை கைகளால் தழுவிவிட்டு  நடந்து செல்வாள்..சில காதல்களை தான் பிரியக்கூடாது என நினைப்போம்.. ஜானுவும் ராமும் இன்னும் கொஞ்சநாள்களிற்கு என்கூடவே நினைவுகளால் நிரம்பி இருப்பார்கள்...

 

#96Movie

#########################

ஒரு ஆணோட வெக்கம் எவ்வளவு அழகானது ❤️  உருகி உருகி ஒரு பொண்ண ரசிக்கும்போதும் அவ பக்கத்துல இல்லன்னாலும் நல்லா இருக்கனும்னு நினைக்கும்போதும் ஆண் இன்னும் அழகு!  தான் காதலிச்ச பையன் எப்படி போனா எனக்கென்னனு இருக்குற பெண்கள் மத்தியில, அவன் சந்தோஷமா இருக்கனும்னு ஒரு பெண் நினைச்சிட்டாலே போதும். அந்த நினைப்பே போதும்.. That very thought from ur girl gives u Infinite peace & solace. மீதி வாழ்க்கைய வாழ்ந்துடலாம் :)

ராம் & ஜானு இரண்டு பேரும் நமக்கு ரொம்ப பழக்கபட்டவங்களா தெரியலாம். இல்ல நீங்களே ராம் அல்லது ஜானுவா உங்கள உணரலாம் ❤️ மனசு விட்டு அழ தயாரா இருந்தா மட்டும் படத்துக்கு போங்க.. கண் கலங்காம பாக்குறது கொஞ்சம் கஷ்டம்தான்! Personally, அந்த முதல் பாடல் காட்சியில இயற்கையோட சேர்ந்து ராம் வாழுறத பாக்குறப்போ என்னையே அறியாம கண் கலங்கிருச்சு.. Bcoz, something i miss right now is Travel & Nature!! ஜானு, ஒரு கற்பனை கதைய ராமோட மாணவர்கள் கிட்ட சொல்லி முடிக்கிற அந்த நொடி... அது த்ரிஷாவே இல்ல ஜானு தான் ❤️ :( சேதுபதி வாழ்ந்துருக்காப்ல.. வேற என்ன சொல்ல? அவரோட வழக்கமான தெனாவட்டு Body Language  & Attitude-அ எல்லாம் மாத்தி ஜானு முன்னால ராம்-ஆ வெக்கப்பட்டு நிக்கிறதெல்லாம் அருமையான ChangeOver ☺ சிறு வயது ராம் & ஜானு அட்டகாசம் ❤️  Watchman ஜனகராஜ்.. Saloon கவிதாலயா கிருஷ்ணன்.. ஆரம்ப காட்சிகள்ல வரும் Alumni Meet... அந்த நண்பர்கள் கூட்டம்னு ஒவ்வொரு கதாபாத்திரமும் காட்சிகளும் வசனங்களும் அவ்வளவு அழகு அவ்வளவு யதார்த்தம் ! இயக்குனர் ப்ரேம் அனுபவிச்சு செதுக்கிருக்காரு :) கோவிந்த் வசந்தாவின் இசை படத்தோட உயிர்நாடி ❤️

இப்போ இந்த Generation இளைஞர்கள் தவறவிட்ட பல அழகிய நினைவுகளின் தொகுப்புதான் 96 ? ராம் நெஞ்சுல ஜானு கைய வெக்குறப்போ அந்த Heart Beat Rise... அந்த காதல எல்லாம் இப்போ நாம தவறவிட்டுட்டோமோ !? என்பதுகளில் பிறந்தவர்களோட இந்த கதைய பாக்குறப்போதான் 90s Kids -ல ஒரு பகுதியும் 2K kids-ல ஒரு பெரும் பகுதியும் காதலையே தவற விட்டுட்டாங்களோனு தோனுது!? பள்ளி பருவத்துல கூட நம்ம நல்லாதான் இருந்தோம் ஆனா After the entry of social media நிறைய மாறிடுச்சு!! "My Lyf My Rulezz".. "Single Rockzzz".. "Relationship ruined me" னு எல்லாம் சும்மா வாய்ல சொல்லுறதுக்கும் வெளிய சீன் போடுறதுக்கு வேணும்னா நல்லா இருக்கலாம்.. ஆனா இன்னொரு உயிர் மேல எந்த எதிர்பார்ப்பும் இல்லாம வெக்குற அன்புக்கு இதெல்லாம் ஈடகுமா?  சில உணர்ச்சிகள் ரொம்ப தனிப்பட்டவை..! சாகுற வரைக்கும் உன்ன வாழ வைக்க போறது அந்த நினைவுகளும் காதலும்தான் ❤️

Celebrate Love _/\_  Celebrate 96

-  Sathya Kumaran G முகநூல் 

######################

••••••••••••••••   96   •••••••••••••••••••
(No Spoilers)

முதலில் இந்த படம் , ஒரு personal movie.. ஒரு கவிஞரின் வலி சொல்லும் கவிதை போல... கூட்டத்தில்  நம்மை பார்த்து சிரிக்கும் ஒரு குழந்தை போல..தூரத்தில் ஒளிக்கும் ஒரு  பாடல் நமக்கு தரும் புன்னகை போல...கண்ணை மூடி மனமுருகி வேண்டும் ஒரு  பிராத்தனை போல....
Very very personal movie..touching personal emotions..

கதையில் twist turns U-turn இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள்...புரியாத வரிகளில் இருக்கும் டான்ஸ் பாடல் , சீட் முனையில் உட்கார வைக்கும் ஆக்ஷன் ப்ளாக் வேண்டும் என்று நினைப்பவர்கள்...அவசர அவசரமாக எப்போதும் ஓடி கொண்டு இருப்பவர்கள்... கடந்த காலம் எனக்கு ஒரு மண்ணும் நினைவில் இல்லை, இன்னோருவரின் உணர்வு எனக்கு ஏன் புரிய வேண்டும்.. அதை பற்றி நான் ஏன் நினைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்... you are right to your own..But  இப்படியாக நினைப்பவர்கள் இப்படிப்பட்ட யாருமே தயவு செய்து இந்த படத்துக்கு போகாதீர்கள்.... உங்களுக்கும் சிரமம், உடன் உட்கார்ந்து இருப்பவர்களுக்கும் கடுப்பு...and yes, இந்த விமர்சனமும் இதுக்கு மேல் படிக்க வேண்டாம்.

இந்த படத்தை ரசிக்க முதலில் அழகான நேரம் ஒதுக்க வேண்டும்... ஒரு ஓவியம் வரையும் கலைஞனின் ரசனை பொறுமை வேண்டும்.. சீட்டில் உட்கார்ந்தவுடன் அது time machineல் உங்களை உங்களின் கடந்த காலத்துக்கு கொண்டு செல்லும்..உங்களை அசை போட வைக்கும், மெலிதாக புன்னகைக்க வைக்கும், லேசாக அழ வைக்கும்.... கொஞ்சம் வருத்த பட வைக்கும், கொஞ்சம் சந்தோஷ பட வைக்கும் , கொஞ்சம் ஏக்கம் கொள்ள வைக்கும்... வெளியே வரும்போது மனதில் ஏதோ பெரிய கல் ஒன்று கட்டப்பட்டுள்ளதாக உணர்வீர்கள்... இளையராஜா பாடல் ஒன்றை ஒளிக்கவிட்டு எண்ண ஓட்டங்கள் தாவி தாவி பறக்க, அப்படியே வீடு வந்து சேருவீர்கள்.

இதான், 96!

கிரேசி மோகன் , ஒரு படத்தில் எழுதிய வசனம்..."வெட்டியானுக்கு தெரியுமா, சுடுகாட்டில் அழுபவன் வலி"... இந்த படமும் அது சொல்லும் உணர்வும் வலியும் அனைவருக்கும் புரிய வாய்ப்பில்லை... புரிபவர்கள் க்கு இந்த 96 , மிகவும் முக்கியமான ஒரு காதல் படம்.

இயக்குனர் ப்ரேம், முதல் படமாக எதை வேண்டுமானாலும் எடுத்து இருக்கலாம்... ஆனால் இந்த படத்தை இயக்குவதற்கே பெரும் துணிவு இருக்க வேண்டும் ..அதுக்கே ஸ்பெஷல் பாராட்டு.. இப்படிப்பட்ட வெறும் உணர்வு குவியல்கள் வைத்து  தமிழ் சினிமா வில் படங்கள் அரிது.. ப்ரேம் மிக முக்கியமான படைப்பாளி.

விஜய் சேதுபதி நன்றாக நடித்துள்ளார் என்பது விராட் கோலி செஞ்சுரி போல.. பெரிய ஆச்சரியம் இல்லை, ஆனாலும் நடிப்பு ராட்சசன் க்கு இது செம தீனி..

படத்தில் ஒரு மிக முக்கிய அங்கம் 'யமுனை ஆற்றிலே' பாடல்..அது வரும் ஒரு இடத்தில், இந்த மனிதரின் நடிப்பை பார்க்க வேண்டும்... என்ன மனுசன் ய்யா நீ...

த்ரிஷா...தமிழ் சினிமா இவரை இப்படி இவ்வளவு நாள் உபயோகிக்கிகாமல் இருந்ததற்கே வெட்க பட வேண்டும்.. it's her life time role.. அந்த பாத்ரூம் காட்சியில் மனதை வருடி எடுக்கிறார்...do more such roles madam.

பக்ஸ், தேவதர்ஷினி , ஆடுகளம் முருகதாஸ் கச்சிதம்

படத்தின் பெரிய ப்ளஸ், பள்ளி மாணவர்களாக வரும் நடிகர் நடிகைகள்.. 
ஆதித்யா - கௌரி.. what a casting...உடம்பு முடியாமல் அந்த பெண் பள்ளி க்கு வரும் அந்த காட்சி.. நான் வாசித்த கவிதைகளில் சிறந்தது..
மற்ற மாணவர்கள் தேர்வும் அட ரகம்.

ஜனகராஜ் க்கு அழகிய கம் பேக்.

படத்தில் இன்னோரு முக்கிய கதாப்பாத்திரத்தில் இசைஞானி இளையராஜா.. படத்தை பார்க்கும்போது புரியும்.

இசை- கோவிந்த் வசந்தா... எங்க சார் இருந்தீங்க இத்தனை நாள்... One of the most beautiful score of late.

கேமரா,  ஷண்முக சுந்தரம், இயக்குனர் புதிய நினைத்த உணர்வுகளுக்கு உயிரூட்டி இருக்கிறார்

படத்தின் சிறப்பம்சே அது சொல்லும் காட்சிகள் உணர்வுகள் நம்மில் பார்க்காதவர்கள் குறைவு...அதை அழகான சிற்பங்களாக செதுக்கி இருக்கிறார், துளி விரசமோ முக சுழிவோ ஏற்படுத்தாமல் ‌.

படம் ஒரு பதினைந்து நிமிடம் குறைவாக இருந்து இருந்தால் இன்னும் மின்னி இருக்கும்.. nevertheless, it's a poetry on screen.

இரட்டை பின்னல் பூ , மிதமான சைக்கிள் பயணம், விலாசம் தேடி அலைவது, விடுமுறை தினங்களில் காண முடியாத பேச முடியாத தவிப்புகள்.. சைக்கிள் நிறுத்தும் இட நினைவுகள்...நாம் நினைத்த நேரத்தில் கேட்க முடியாத பாடல்கள் , கேட்கும் போது ஏற்படுத்தும் உணர்வுகள்‌.., இனி பார்க்க முடியாத ஏக்கங்கள்.... இதெல்லாம் anytime in touch எந்நேர வாட்சப் முகநூல் காலத்துக்கு புரிவது சிரமம்..

படத்தில் முதல் முறையாக,
" காதலே காதலே தனிப்பெரும் துணையே " பாடல் வரி, வயலின் வருடிய பின்பு , ஒரு இடத்தில் வரும்..
அந்த இடத்தில் வார்த்தைகளில் சொல்ல முடியா உணர்வு உங்களுக்கு ஏற்ப்பட்டால், நீங்களும் அதிர்ஷ்டசாலி... உங்களுக்குள்ளும் ஒரு மிக அழகான அழியாத கவிதை இருக்கிறது..

சமீபகாலமாக தமிழ் சினிமா வில் நிறைய கொலை, வன்மம், வன்முறை, பார்த்தாயிற்று..
அவற்றுக்கு மத்தியில், இந்த ரோஜா மாலை யும் இருந்துட்டு போகட்டும்... actually இப்படியான பூ மாலைகள் அவ்வப்போது வர வேண்டும்...

#96 - கவிதை

4.25 /5.0

#96TheMovie

- இரா. இராஜகோபாலன்

#######################

96 - என்னா படம்யா!

தமிழ்சினிமா பொதுவாகவே புறநோக்கு தன்மை கொண்டது. மனதில் நிகழும் நுண்ணுணர்வுகளைப் பதியும் அகநோக்கு சில காட்சிகளில் மட்டும் அரிதாக நிகழும். எதையும் செயல்களாகக் காட்டினால் தான் திருப்தி. மலையாளப் படங்கள் நம்மை முந்துவது இந்த விஷயத்தில் தான். அந்தவகையில்  96 படம், தமிழ் சினிமாவில் முக்கியமானதாக ஆகிறது.

படத்தில் வரும் முக்கிய சம்பவங்கள் எல்லாம் சினிமாத்தனம் இல்லாமல் இயல்பாக இருப்பதாலேயே நம்மால் படத்துடன் ஒட்டிக்கொள்ள முடிகிறது. காதல் மலர்வதற்கு சாகச காட்சிகள் ஏதுமில்லை.நான்குநாட்கள் பார்க்க முடியாத ஜானு, காய்ச்சலுடன் ஸ்கூலுக்குத் திரும்பி வருகிறாள். பின்னால் அமர்ந்திருக்கும் ராமை மெதுவாகத் திரும்பிப் பார்க்கிறாள். பூ மலர்வதை படம் பிடிக்கமுடியாது என்பார்கள். இந்தக் காட்சியில் அதை இயக்குநர் செய்துகாட்டியிருக்கிறார். 

வாழ்க்கையில் நம்மைப் புரட்டிப் போட்ட விஷயங்களுக்கு காரணம் தேடினால், சாதாரணமாக இருக்கும். படத்தில் ராம் ஊரைவிட்டுப் போவது, ஜானுவைப் பார்க்க காலேஜிற்கு வருவது, ஜானுவின் கல்யாணத்தன்று ராம் என மிக இயல்பான விஷயங்களே அவர்களின் வாழ்க்கையை தலைகீழாக ஆக்கியிருக்கின்றன.

படத்தின் இரண்டாம்பாதி பெரும்பாலும் ராம்-ஜானு இருவர் மட்டும் பேசிக்கொள்ளும் காட்சிகள் தான். வலுவான கதையும் வசனங்களும் மட்டும் இதற்குப் போதாது. அதைவிட வலுவான நடிகர்கள் இதற்கு வேண்டும். விஜய் சேதுபதி - த்ரிஷா ஜோடி அதை சாத்தியமாக்கியிருக்கிறார்கள். 

விஜய் சேதுபதி நடிப்பில் 96 உச்சம் என்பேன். மிக மெல்லிய உணர்வுகளைக்கூட மனிதர் எளிதாக கொண்டுவந்துவிடுகிறார். அவரது எல்லாப் படங்களைப் போல இதிலும் படத்தை தாங்கும் தூணாக நிற்கிறார். பல வருடங்கள் கழித்து ஜானுவை சந்திக்கும் பதட்டம், ஜானுவின் கல்யாணநாள் பற்றிப் பேசும் சீன், வெர்ஜின் வெட்கம் என்று கிடைக்கிற வாய்ப்பில் எல்லாம் சிக்ஸர் அடிக்கிறார்.

விஜய் சேதுபதியை இயக்குநர் நம்பியதில் ஆச்சரியம் இல்லை. த்ரிஷாவை நம்பி, இந்த கேரக்டரை கொடுத்தது தான் ஆச்சரியம். விண்ணைத் தாண்டி வருவாயா தவிர்த்து எந்தப் படத்திலும் நடிக்காதவர் அவர். கொடி போன்று கிடைத்த நல்ல வாய்ப்புகளையும் சொதப்பியவர். நுணுக்கமான நடிப்பைக் கோரும் இந்த கேரக்டருக்கு அவரை தேர்ந்தெடுத்ததே பெரிய ரிஸ்க் தான்.

ஆனால் இயக்குநரின் நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறார் த்ரிஷா. இத்தனை வருடங்களுக்கும் சேர்த்து, ஆர்ப்பாட்டமே இல்லாமல் நடித்து, தானும் ஒரு நல்ல நடிகை தான் என்று நிரூபித்திருக்கிறார். கல்யாண நாள் பற்றிப் பேசுவது, ராம் ஒதுங்குவது கண்டு கோபப்படுவது, உரிமையுடன் அவனை கலாய்ப்பது என்று ஜானுவாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். ஆண்களை விட பெண்கள் வாழ்க்கையை (வேறு வழியின்றியும்) எப்படி பிராக்டிகலாக எதிர்கொள்கிறார்கள் என்பதை த்ரிஷா கண்முன் கொண்டுவருகிறார்.

‘நான் உன்னைப் பார்க்கலைடா’ எனும் சீனும் கிளைமாக்ஸ் சீனும் த்ரிஷா நடிப்பில் உச்சம். நம்மை உலுக்கிவிடும் நடிப்பு. எல்லாவற்றுக்கும் மேல் தேவதையாக ஜொலிக்கிறார். இதுவரை கமலா காமேஷாகவே இருந்தவர், இந்த படத்தில் தான் த்ரிஷா ஆகியிருக்கிறார்!

இளம் வயது கேரக்டராக வரும் எல்லோருமே நடிப்பிலும் அசத்துவது ஆச்சரியம். முதல்பாதியில் அவர்களின் காட்சிகள் போடும் அஸ்திவாரம் தான், உணர்வுப்பூர்வமான இரண்டாம்பாதியை வலுவாக தாங்குகின்றன. 

இதுவொரு ஃபீல் குட் மூவி. எனவே பரபரப்பான திருப்பங்கள் என்று ஏதும் கிடையாது. இரண்டாம்பாதி முழுக்க, 22 வருடப் பிரிவை ராம் & ஜானு ஒரு இரவில் பேசித்தீர்க்கிறார்கள். எனவே சற்று நீளமான படமாக தோன்றலாம். ஆனாலும் ஜானு இன்னும் கொஞ்ச நேரம் இருக்கட்டுமே என்று ராமிற்காக நாமும் ஃபீல் பண்ணுவது தான் படத்தின் வெற்றி. 

இயக்குநர் பிரேம்குமார் முக்கியமான படைப்பாளியாக ஆவார் எனும் நம்பிக்கையை படத்தின் பல காட்சிகள் உறுதிசெய்கின்றன. படத்தில் பல அற்புதமான ஷாட்ஸ் இருக்கின்றன. கண்கொட்டாமல் பார்க்க வைக்கிறது சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு. ஜானுவின் கல்யாணம் பற்றி ராம் பேசும் காட்சியில் வரும் பிண்ணனி இசை, அந்த காட்சியின் உணர்வுகளை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்கிறது. ’காதலே..காதலே’பாடல் தவிர மற்ற பாடல்கள் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், பிண்ணனி இசையில் கோவிந்த் பிரமாதப்படுத்தியிருக்கிறார். இளையராஜாவிற்கும் நன்றி சொல்ல வேண்டும்.

’ஒரு பள்ளிப்பருவக் காதல்..பிரிவு..மீண்டும் சந்திப்பு ‘ எனும் அழகி-ஆட்டோகிராஃப் பாணியிலான கதை தான். ஆனால் அந்தப் படங்கள் ஆணின் உணர்வுகளை மட்டுமே பதிவு செய்தவை. அந்த காதலை பெண் எப்படி உணர்ந்தாள், அந்த பிரிவை பெண் எப்படிக் கடந்தாள் என்று சொல்வதில்லை. அதை எதிர்கொள்ளும் அளவிற்கு அன்றைய ஆடியன்ஸிற்கு முதிர்ச்சி இருந்ததா என்பதும் கேள்விக்குறி தான். இந்தப் படம், இருவரின் உணர்வுகளையும் துல்லியமாகப் பதிவு செய்கிறது....அது, இன்றைய ஆடியன்ஸிற்கு இயக்குநர் செய்யும் மரியாதை.

செங்கோவி -முகநூல் 

***********************

'96
===

மிகச் சிறப்பான காதல் கதை. இதற்கு முன் அலைபாயுதே பார்த்த போது இப்படி இருந்தது. அதற்கு முன் எப்போது? மெளனராகம் என முந்தைய தலைமுறை சொல்லக்கூடும். சி. பிரேம் குமார் தான் இத்தலைமுறையின் மணி ரத்னம்.

ஒரு காதல் கதையை இன்றைய தேதி அவசரதி ரசனைக்கு எப்படி இவ்வளவு அழகாய், எங்குமே சமரசமின்றி, கவித்துவம் குன்றாமல் கடத்த முடிந்தது இத்திரைக்கதையால்! நினைத்து நினைத்து வியக்க வேண்டியிருக்கிறது.

ஆட்டோகிராஃப் எனக்குப் பிடித்த காதல் படம். ஆனால் அதற்கும் இதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அது ஓர் ஆணின் வாழ்க்கையில் வெவ்வேறு வயதில் எதிர்ப்படும் வெவ்வேறு காதல்கள் / பெண்கள் பற்றியது; இது ஒரே காதலை, வெவ்வேறு வயதில் அதன் மாற்றங்களை ஆண், பெண் இருவரின் கோணத்திலிருந்தும் சொல்கிறது. இரண்டிலுமே பார்வையாளர் தன் வாழ்வுடன் பொருத்திப் பார்க்கும் சாத்தியமுண்டு என்றாலும் இரண்டாவதில் கூடுதலாய் காதலில் மனோவியல் இருக்கிறது. அதனால் இதை இன்னும் நெருக்கமாய் உணர முடிகிறது.

அவ்வகையில் இது வெறும் காதலைப் பேசும் படமல்ல; காதல் மனதைப் பேசும் படம். 

விஜய் சேதுபதி, த்ரிஷா இருவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்நாள் படங்களில் ஒன்றாக இது மிளிரும். சிறுவயது ராமாக வரும் ஆதித்யாவும் (எம்எஸ் பாஸ்கர் மகன்) ஓக்கே. ஆனால் அந்தப் பெண் கெளரி கிஷன் - சிறுவயது ஜானு - எவ்வளவு பேராளுமை! முகம், உடல்மொழி எனக் கண்ணிற்குள்ளாகவே நிற்கிறாள். (நட்சத்திரங்களை அள்ளி வானில் தெளித்த கையோடு கடவுள் அவள் முகபாவங்களை வடிவமைத்திருக்க வேண்டும்.)

கேரக்டர் ஸ்கெட்ச் எனப்படும் கதாபாத்திர வார்ப்பு துல்லியம். ராம், ஜானு என்ற முதன்மைப் பாத்திரங்கள் மட்டுமின்றி முரளி, சுபாஷினி, வாட்ச்மேன் வரை அழகான ஓவியங்கள்.

இளையராஜாவின் பாடல்களைச் சூழலுக்கேற்ப ஜானு பாடிக் கொண்டே இருக்கிறாள். ராமுக்கு அது உறைப்பதே இல்லை. அவன் விருப்பப் பாடலை அவள் பாட 22 ஆண்டுகள் பிடிக்கிறது. அது பிரிவுத் துயர் பற்றிய பாடல் என்பதால் அது வேண்டாம் என்று உள்ளுணர்வு சொல்லித்தான் அவள் தவிர்த்து வந்தாளோ! அந்த இழை முழுக்க காவியத்தன்மை பூண்டு நம் நெஞ்சிலுறைகிறது.

நல்ல இசை; அழகான ஒளிப்பதிவு. அதை விட இசையும் ஒளிப்பதிவும் படத்துக்குப் பொருத்தமாய் இயங்குகின்றன. மணி ரத்னம் என்று பிரேமைச் சொல்ல அதுவும் ஒரு காரணம். வாட்ஸாப் உரையாடல் காட்சிகள் அவர் திறனுக்கு இன்னொரு உதாரணம். இரவில் முடி வெட்டப் போகும் காட்சி மற்றொன்று.

குறைகளும் உண்டு தான். அவர்களின் பிரிவுச்சூழலும் பிரிவு தொடர்வதும் வலுவாக இல்லை, (எனக்கு தர்க்கரீதியாய் கன்வின்சிங்காக இல்லை.) சுபாஷினியும், முரளியும் பிற்பாடு கதையில் வந்திணையவில்லை எனச் சிற்சில.

படம் நிச்சய வெற்றி. தமிழ் சினிமா காதல் படங்களில் ஒரு மைல்கல் '96 என க்ளீஷேக்கள் வரும். ஆனால் அது உண்மை தான். (இனி இதை ஒட்டிப் புற்றீசலாய் வரப் போகும் படங்களை நினைத்தால் தான் கலக்கமாய் இருக்கிறது.)

த்ரிஷா அந்த மாணவிகளிடம் ராம் தன்னைக் காண வந்த கல்லூரி நாளை தன் விருப்பத்திற்கேற்ப வேறு மாதிரி மீட்டுருவாக்கம் செய்து சொல்வாள். இந்தப் படமே நம்மில் பலருக்கு அப்படித்தான்!

நீங்கள் முடிவு செய்ய வேண்டியது படத்தைப் பார்ப்பதா இல்லையா என்றல்ல; எத்தனை முறை பார்க்கப் போகிறீர்கள் என்று தான். காதலுக்கும் உங்களுக்கும் வாழ்வில் எங்கேனும் சின்னதாய்த் தொடர்பு இருந்திருந்தாலும் இப்படம் உங்களுக்குப் புரியும்; பிடிக்கும்.

சரவணகார்த்திகேயன் -முகநூல்

Link to comment
Share on other sites

 

###########################

மனித குலத்தின் ஆதார உணர்வுகளில் ஒன்று காதல். அப்படிப்பட்ட ஓர் உணர்வை மனதின் ஆழங்களில் அடைகாத்து, அதன் இளஞ்சூட்டில் தங்களுக்கான கதகதப்பைத் தேடும் அத்தனை ஜீவன்களுக்குமான அழகான இளைப்பாறல்தான் படம்.

படம் துவங்கியதில் இருந்து சில காட்சிகளுக்கான பிண்ணனி இசையும், காட்சிப்படுத்தப்பட்ட விதமும் கண்டிப்பாக ஒரு ஐரோப்பிய நாட்டுத் திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைத்தான் எனக்கு ஏற்படுத்தியது.

மொத்தப் படத்தையும் தாங்குவது த்ரிஷாவும், விஜய் சேதுபதியும்தான். அவர்களிருவரின் அழகான ஹைக்கூ போன்ற ரியாக்‌ஷன்களும் அதற்கான மனதை இளக வைக்கும் கவிதை தருணங்களும் கொள்ளை அழகு.

ஒரு இலக்கிய வாசகனாக கூறுவதென்றால், நல்லதொரு சிறுகதையை, நாவலை அல்லது கவிதையை வாசித்து முடித்தவுடன் உங்களுக்குள் உண்டாகும் ஆத்ம திருப்தியை ஒத்ததொரு படைப்புதான் 96.

இறுதியாக..நான் ருசித்த ஓர் அரிய வகை கொம்புத் தேன் எத்தனை ருசி மிக்கது என்பதை எவ்வளவு முயன்று விளக்கினாலும் எழுதினாலும், அது உங்கள் நாவில் விழும் அந்த முதல் தேன் சொட்டின் ருசிக்கு ஈடாகாது..ஏனெனில் அது உங்கள் ருசி..உங்கள் சுவை..! அருந்துங்கள். 
#மூவி96 #த்ரிஷா #விஜய்சேதுபதி #காண்பதெல்லாம்_காதலடி #தனிப்பெருந்துணை

கார்த்திகேயன் -முகநூல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

################################################################

நேற்றிரவு ஒரு பத்து நிமிடங்கள் இந்தப் படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்..

திடீரென விழித்துப் பார்த்தால் காலை விடிந்துவிட்டிருந்தது.. அருமையான தூக்கம்..!

 

ராசவன்னியன் - படம் பார்த்த அனுபவம்

Link to comment
Share on other sites

 
நீண்ட தூரம் நடந்த பின் சல சலத்து ஓடும் நதியில் இரண்டு கால்களையும் நனைத்துக் கொண்டு இருக்கும் போது வரும் சுகமும் மென்னுணர்வும் அருமையாக இருக்கும்.
 
அந்த மென்னுணர்வையும் சுகத்தையும் பரவசத்தையயும் பருக தீராக் காதலை கொண்டு தருகின்றது 96
 
காதல் காதல் காதல்... எல்லா மொழிகளிலும் அழகானதாயும் எல்லா காலங்களிலும் அற்புதமாயும் இருக்கும் காதலை சொட்ட சொட்ட நனையும் மழையாய் தந்து செல்கின்றது 96
 
படத்தில் ஆரம்பத்தில் இருந்து கவிதையாய் கசியும் அழகியலும் அதை ஆன்மாவுக்குள் கடத்தும் இசையுமாய் ஒரு சிறந்த காதல் படத்தை பார்த்த திருப்தியை கொடுக்கின்றது 96.
 
புல்லாங்குழல் இசையும் மழைச்சாரலின் சத்தமும் மெளனமும் தொடர்ந்து வர விஜய் சேதுபதியும் திரிஷாவும் எமக்குள் எங்கோ தொலைவில் இன்னும் உறங்காது இருக்கும் பழைய நினைவுகளை மீட்டி மீட்டி செல்கின்றனர்.  96 வரும் ஒரு காட்சியாயினும் எம் வாழ்வில் கண்டிப்பாக கடந்து சென்று இருக்கும். அந்த உணர்வு தொற்றல் தான் இறுதிக் கட்டத்திலாயினும் இருவரும் ஒரு முறையாயின் ஆரத் தழுவ மாட்டார்களா, ஒரு முத்தமாயினும் பரிமாற மாட்டார்களா என்ற ஏக்கத்தையும் தவிப்பையும் தருகின்றன.
 
காதலை கொண்டாடுகின்றவர்களும் அழகியலை உணர்வு ரீதியாக உள்வாங்க கூடியவர்களுக்கும் இசையை ஆராதிப்பவர்களுக்கும் மழையை ரசிப்பவர்களுக்கும்  மட்டுமே 96 இனிமையான அனுபவத்தை தரும்.
 
எந்தவொரு விரசமான காட்சியோ அல்லது 3 ஆம் தரமான சொல்லாடல்களோ ஒரு சிறு துளி ஆபாசமோ இல்லாமல் இன்றைய காலத்திலும் காதலை அழகான ஓவியமாக காட்ட முடியும் என்பதை 96 இல் காட்டியுள்ளனர்
 
முடிந்தவர்கள் 96 இனை தியேட்டர் சென்று பாருங்கள். வெறும் டிவிடியோ அல்லது இணையம் மூலமோ பார்க்கும் போது பின்னனி இசையையும் அதையோடிணைந்த அற்புதமாக ஒளித்தொகுப்பையும் தவற விட்டு விடுவீர்கள்
 
-நிழலி
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, அபராஜிதன் said:

இன்று இரண்டாம் முறை செல்கிறேன் நண்பனுடன் 

Résultat de recherche d'images pour "kadupethurar my lord gif"

கடுப்பேத்துறார் மை லார்ட் ........!  tw_blush:

Link to comment
Share on other sites

நண்பன் ஒருவன் "96" பார்ப்பதற்கு அழைத்திருந்தான்..காதலித்து கல்யாணம் செய்த நீ காதலியுடன் பார்ப்பதை விட்டு விட்டு முரட்டு சிங்கிளான என்கூட பார்க்கிறது உனக்கென்ன தலைவிதியோ என நக்கலடித்தவாறே சென்றிருந்தேன்..

படம் முடிய விட்டு உணர்ச்சிகளுடன் விளையாடி இருக்கார்கள் தாங்கமுடியாது இப்படியான படம்கள் நான் யாருக்குமே பார்க்கும்படி சஜெஸ்ட் பண்ணமாட்டன் என்றவாறே விடைபெற்றான்..

"96" ஐ கொண்டாட நீங்கள் காதலித்தோ காதலிக்கப்பட்டோ இருக்கத்தேவை இல்லை காதலை கொண்டாடுபவனாகவும்   வாழ்க்கையை ரசிக்க தெரிந்தவனாகவும் இருந்தால் போதும் 

நன்றி நண்பா இரண்டாம் முறையும் அந்த சாரலில் நனைய வைத்ததற்கு ❤️ ❤️ ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதை மயிலிறகால் வருடிய  96
அங்கும் இங்கும் கண்ணீரால் என்னை நனைத்த 96
சம்பிரதாயங்களை உடைத்து; ராம் , ஜானு இருவரும் ஒரு பொழுது, 
ஒரு கணம் சேர்ந்தால் தான் என்ன என்று ஏங்க வைத்த 96..
திரையில் படத்தை காட்டி ...மனசில் படத்தை ஓட வைத்த 96..

த்ரிஷா , சேதுபதி இருவரின் இயல்பான நடிப்பு... (திரையில் வாழ்ந்திருக்கிறார்கள்)

அதிசயம் ஆனால் உண்மை ...மொத்த படம் முழுவதுமே திரிஷாவுக்கான காஸ்ட்யூம் வெறும் ஒரே ஒரு ப்ளூ ஜீன்ஸ் மஞ்சள் நிற சுடிதார் தான் 
எனக்கு மிகவும் கவர்ந்த பல காட்சிகளில் ஒன்று... ஜானு  ஓங் கல்யாணதிற்கு நானும் வந்திருந்தேன் ஜானு...தூர நின்னு பாத்துட்டு தாலி காட்டும் நேரம் நிக்க முடியாம வேகா வேகமா ஓடி போய்ட்டேன்னு சொல்வார்...அப்போது பின்னணி இசையில் கெட்டிமேளம் பெருத்த சோகத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இசைக்கப்பட்டு இருக்கும்... அப்போது இருவரின் முகங்களிலும் காட்டப்படும் .expressions ...... சொல்ல வார்த்தைகள் இல்லை...

மௌன ராகம், அழகி போல இதுவும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்...


தியேட்டரை விட்டு வரும் பொழுது நான் கவனித்த ஒன்று நிறைய பெண்கள் சற்றே கண்கலங்கித்தான் வெளியே வந்தார்கள்...
ஆகா மொத்தத்தில இந்த படத்துக்கு நூத்துக்கு 96 குடுக்கலாம்.

சரி...இப்போ ஒரு கேள்வியை வைக்கிறேன்...
இதுவே நீங்கள் கதாநாயகனாக இருந்து, உங்கள் முன்னை நாள் காதலி ஒரு முழு இரவுப் பொழுதையும் தனியாக உங்களுடன் மட்டுமே கழித்தால் ...?
படத்தில் கவிதையாக, தடம் புரளாது ஓடிய காதல் ...
நிஜ வாழ்க்கையில் காதலால் சிக்குண்ட (குறைந்த பட்ச) கலவின்பதில் முடியுமா ? :100_pray:

Link to comment
Share on other sites

. மென் உணர்வுகளின் பரிதவிப்பு ஏக்கம் சோகம் என அனைத்தும் கலந்த ஒரு கவிதை. இசையும் மிக அருமை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ இருக்குப் போல படம் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுகிறேன்

Link to comment
Share on other sites

12 hours ago, Sasi_varnam said:

மனதை மயிலிறகால் வருடிய  96
அங்கும் இங்கும் கண்ணீரால் என்னை நனைத்த 96
சம்பிரதாயங்களை உடைத்து; ராம் , ஜானு இருவரும் ஒரு பொழுது, 
ஒரு கணம் சேர்ந்தால் தான் என்ன என்று ஏங்க வைத்த 96..
திரையில் படத்தை காட்டி ...மனசில் படத்தை ஓட வைத்த 96..

 

லயித்து பார்த்த கட்டங்களில் இதுவும் ஒன்று. கெட்டி மேளம் விஜய் சேதுபதியின் வசன வேகத்துக்கு ஏற்ப நிறுத்தி நிதானித்து நகரும். அது முடிகையில் மனசுக்குள் எங்கோ ஒன்று உடைந்தது போலிருக்கும்.

12 hours ago, Sasi_varnam said:

சரி...இப்போ ஒரு கேள்வியை வைக்கிறேன்...
இதுவே நீங்கள் கதாநாயகனாக இருந்து, உங்கள் முன்னை நாள் காதலி ஒரு முழு இரவுப் பொழுதையும் தனியாக உங்களுடன் மட்டுமே கழித்தால் ...?
படத்தில் கவிதையாக, தடம் புரளாது ஓடிய காதல் ...
நிஜ வாழ்க்கையில் காதலால் சிக்குண்ட (குறைந்த பட்ச) கலவின்பதில் முடியுமா ? :100_pray:

ஊகித்து பதில் சொல்லக் கூடிய வினா அல்ல இது. சில விடயங்களை ஊகிக்காது விடுதலே நல்லம்.
ஆனால் முதல் காதலியை மீண்டும் பார்க்கையில் கண்டிப்பாக காம உணர்வு எழ மாட்டாது. இது நான் அனுபவ வாயிலாக கண்ட உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் படங்கள் பார்த்து நீண்ட காலமாகிவிட்டது. ஏனைய வலைத்தளங்களிலும் இந்த திரைப்படத்தைபடத்தை பிரமாதம் என புகழ்கின்றார்கள். நேரம் ஒதுக்கி பார்க்கத்தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

தமிழ் படங்கள் பார்த்து நீண்ட காலமாகிவிட்டது. ஏனைய வலைத்தளங்களிலும் இந்த திரைப்படத்தைபடத்தை பிரமாதம் என புகழ்கின்றார்கள். நேரம் ஒதுக்கி பார்க்கத்தான் வேண்டும்.

 

அகத்தின் மென் உணர்வை பேசும் இந்த படம் புறத்தில் எவ்வகையான வன்ம உணர்வுள்ள சமூகத்தில் இருந்து வருகின்றது என்பதை பரியேறும் பெருமாள் என்ற படத்தைப்  பார்த்தால் புரியும். இரண்டும் சம காலத்தில் வெளியாகியுள்ளது. இரண்டையும் பார்த்தால் சிறப்பு.. கல்விகற்கும் இடத்தின் வன்மமும் ஆணவக்கொலைக்குள் அகப்படும் காதலும் என்ற யதார்த்தநிலையை பேசும் படம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, சண்டமாருதன் said:

 

அகத்தின் மென் உணர்வை பேசும் இந்த படம் புறத்தில் எவ்வகையான வன்ம உணர்வுள்ள சமூகத்தில் இருந்து வருகின்றது என்பதை பரியேறும் பெருமாள் என்ற படத்தைப்  பார்த்தால் புரியும். இரண்டும் சம காலத்தில் வெளியாகியுள்ளது. இரண்டையும் பார்த்தால் சிறப்பு.. கல்விகற்கும் இடத்தின் வன்மமும் ஆணவக்கொலைக்குள் அகப்படும் காதலும் என்ற யதார்த்தநிலையை பேசும் படம். 

 தகவல்களுக்கு நன்றி. :91_thumbsup:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த படத்தில் அப்படி என்ன இருக்குது என்று புரியவில்லை....காதலில் ஏமாந்த ஆண்கள் யாழிலும் கண பேர் இருக்கினம் போல.?


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இந்த படத்தில் அப்படி என்ன இருக்குது என்று புரியவில்லை....காதலில் ஏமாந்த ஆண்கள் யாழிலும் கண பேர் இருக்கினம் போல.?


 

நீங்கள் வேற .....நாங்களே எரிமலைபோல உள்ளே குமுறிக்கொண்டு வெளியே புகை விட்டுக் கொண்டு இருக்கிறம்......!  ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2018 at 9:35 PM, குமாரசாமி said:

தமிழ் படங்கள் பார்த்து நீண்ட காலமாகிவிட்டது. ஏனைய வலைத்தளங்களிலும் இந்த திரைப்படத்தைபடத்தை பிரமாதம் என புகழ்கின்றார்கள். நேரம் ஒதுக்கி பார்க்கத்தான் வேண்டும்.

விமர்சனத்தை கேட்டு கல்லடி சாந்தி தியட்டரில் போய் குந்தியிருந்து மெனகெட்டதுதான் மிச்சம் கூட்டம் அறவே இல்ல 

 எனக்கு 1999 தான் பத்தாம் வகுப்பு பள்ளிய  எப்ப விடுவாங்க  அந்த சேட்டை கழஞ்சிபோட்டு அந்த கிரவுண்ட்ல புரளலாம் என்ற நினைப்பு மட்டும் தான் காதல் கத்தரிக்காயெல்லாம் வரல 

உங்களுக்கு உங்க பரிமளத்தை விரட்டினது ஞாபகம் வரலாம் 

15 hours ago, ரதி said:

இந்த படத்தில் அப்படி என்ன இருக்குது என்று புரியவில்லை....காதலில் ஏமாந்த ஆண்கள் யாழிலும் கண பேர் இருக்கினம் போல.?

 

ம்ம் இருக்கால் அந்த பெயர் லிஸ்ட்ட தயார் பண்ணுங்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.