Jump to content

குரு பெயர்ச்சி எனும் சோதிட முட்டாள்தனங்கள்


Recommended Posts


இந்த பத்திரிக்கைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் அரசியல் பிரச்சினைகளையும் பிற நாட்டுப் பிரச்சினைகளையும் முடிபிளந்து எழுதும் இந்த ஏடுகள் மதம் சார்ந்தவை என்று வரும்பொழுது முழுவதுமாக தங்களைத் தொலைத்துவிட, அல்லது மலிவாக மூடநம்பிக்கையை விலைக்கு விற்றுவிடுவதில் சற்றும் தயக்கமோ, வெட்கமோ படுவதில்லை _ கூச்சப்படுவதும் இல்லை.
குரு, ராகு_கேது, சனிப்பெயர்ச்சிகள் நடைபெறும்போது கோயில்களில் சிறப்புப் பூஜைகள் மற்றும் பாதிப்பு உள்ள ராசிகளுக்கு பரிகாரங்கள் என்று அல்லோகலபடுகின்றன.

இந்த நவக்கிரகப் பட்டியலில் சூரியன் இடம் பிடித்தது எப்படி? அது ஒரு நட்சத்திரம். உண்மையான கிரகமான பூமிக்கு இந்த நவக்கிரகப் பட்டியலில் ‘கல்தா’ கொடுக்கப்பட்டு விட்டது; ஆனால், பூமியின் துணைக் கிரகமான சந்திரனுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இவற்றை எல்லாம்விட குமட்டிக் கொண்டுவரும் ஒரு சேதி உண்டு. ராகு, கேது என்கிற கிரகங்களே கிடையாது. அப்படி இருக்கும்போது இவை எப்படி நவக்கிரகப் பட்டியல் என்னும் பந்தியில் ‘சப்பனம்’ போட்டு உட்கார வைக்கப்பட்டுள்ளன.

தேவகுருவாகிய வியாழன் என்பவனின் மனைவியை குருவின் சீடனான சந்திரன் கற்பழித்து விட்டான் என்றும், குருவின் சாபத்தால் ராகு, கேது என்ற பாம்புகள் சந்திரனை விழுங்குவதால்தான் சந்திரன் அழகு குறைந்து தேய்பிறை ஏற்பட்டது என்றும் இந்துப் புராணம் கூறுவது எல்லாம் எவ்வளவு ஆபாசமும், அறியாமையும் ஆகும்!

1781ஆம் ஆண்டில் யுரேனஸ், 1846ஆம் ஆண்டில் நெப்டியூன், 1930ஆம் ஆண்டில் புளூட்டோவும் கண்டுபிடிக்கப்பட்டன. விண்ணியல் விஞ்ஞானத்தின் அடிப்படையில் இதில் புளுட்டோ என்பது கோளின் அம்சத்துக்குக் கீழ் வரவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டு கிரகங்களின் பட்டியலி லிருந்து நீக்கப்பட்டுவிட்டது.

புதிய இரு கிரகங்களுக்கு சோதிடத்தில் பலன் இல்லையே _ எங்கே போய் முட்டிக்கொள்ளப் போகிறார்கள் _ இந்த சோதிட சிகாமணிகள்? கிரகங்களில்கூட வருணங்கள் உண்டு; வியாழன், வெள்ளி இரண்டும் பிராமணர்கள், ஞாயிறும், செவ்வாயும் சத்திரியர்கள், சந்திரனும், புதனும் வைசியர்கள், ராகு, கேது சூத்திரர்களாம். சோதிட மூடத்தனத்தில்கூட வருண பேதங்கள். இவையெல்லாம் பார்ப்பனீய இட்டுக்கட்டும் கற்பிதங்கள் என்று விளங்க வில்லையா?
ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள் என்பதற்கு இன்னும் என்ன வேண்டும்? 
-கலிபூங்குன்றன்

https://www.newsdogapp.com/ta/article/5bb71d2112313a54b131da4e/?d=false

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ...  ருல்பன், 🔨
ராசி, நட்சத்திரம் பார்ப்பவர்கள்....  அவர்களது,  தனி உரிமை. 
அதில்... நீங்கள், தலையிடுவது... உங்களுக்கு தேவையில்லாத வேலை. 
உங்களுக்கு... அது பிடிக்கவில்லை என்றால், ஒதுங்கி இருப்பதே அழகு.   :)

Link to comment
Share on other sites

ஐரோப்பியாவில்  வாழும் Santos Bonacci. இந்த தமிழரல்லாத  வல்லுனரின் விளக்கம் 🙂 

பல நூறு ஒளிப்பதிவுகளை தரவேற்றம் செய்தும் உள்ளார்  

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/2/2019 at 11:48 PM, ampanai said:

ஐரோப்பியாவில்  வாழும் Santos Bonacci. இந்த தமிழரல்லாத  வல்லுனரின் விளக்கம் 🙂 

பல நூறு ஒளிப்பதிவுகளை தரவேற்றம் செய்தும் உள்ளார்  

 

 

 

வல்லுனர்😂. சும்மா கிச்சு கிச்சு மூட்ட வேணாம் அம்பனை.

*****

#வெள்ளைகாரன் பொய்சொல்ல மாட்டான்

Link to comment
Share on other sites

22 hours ago, தமிழ் சிறி said:

ஹலோ...  ருல்பன், 🔨
ராசி, நட்சத்திரம் பார்ப்பவர்கள்....  அவர்களது,  தனி உரிமை. 
அதில்... நீங்கள், தலையிடுவது... உங்களுக்கு தேவையில்லாத வேலை. 
உங்களுக்கு... அது பிடிக்கவில்லை என்றால், ஒதுங்கி இருப்பதே அழகு.   :)

தமிழ சிறீ   மூடப்பழக்களுக்கு எதிராக பொது வெளியில் கருத்து வைப்பது அந்த மூடப்பழக்களை கடைப்பிடிப்போரின் தனி உரிமையை எப்படி பாதிக்கிறது என்பதை நீங்கள் தெரிவிக்கவில்லை.  நான் இங்கு தெரிவிக்கும் கருத்துக்கள்  மூடப்பழக்கங்களுக்கு  addicted ஆகி உள்ளவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே. 

ஆரிய பிராமணர்களின் மூடக்கொள்கைகளை எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்று தற்போதைய நூற்றாண்டிலும் வாழ்ந்து கொண்டு  கீழடியில்  கி. மு வில்  வாழ்ந்த மக்களின் அறிவு திறனை வியந்து பாராட்டுவதில் அர்த்தம் இல்லை. 

Link to comment
Share on other sites

22 hours ago, ampanai said:

ஐரோப்பியாவில்  வாழும் Santos Bonacci. இந்த தமிழரல்லாத  வல்லுனரின் விளக்கம் 🙂 

பல நூறு ஒளிப்பதிவுகளை தரவேற்றம் செய்தும் உள்ளார்  

 

 

 

எப்போதெல்லாம் எமது இல‍ங்கை இந்திய  நாடுகளில்  சாதாரணமாக நடைமுறையில் இருக்கும் அர்த்தமற்ற மூடப்பழக்கங்கள்  ஆதாரங்களுடன் சுட்டிக்காட்ட படுகிறதோ அப்போதல்லாம் அதற்கு  பதில் கூற முடியாமல் தவிப்போர்  அவற்றை நியாயப்படுத்துவற்காக  மேற்கு நாடுகளின் வாழும் சில விதிவில‍க்குகள் (Exceptions) வலிந்து இழுக்கபடுவது வழமையாகி விட்டது. அந்த வழமையான செயலை தான் நீங்களும் செய்துள்ளீர்கள் அம்பனை.

Link to comment
Share on other sites

19 minutes ago, tulpen said:

எப்போதெல்லாம் எமது இல‍ங்கை இந்திய  நாடுகளில்  சாதாரணமாக நடைமுறையில் இருக்கும் அர்த்தமற்ற மூடப்பழக்கங்கள்  ஆதாரங்களுடன் சுட்டிக்காட்ட படுகிறதோ அப்போதல்லாம் அதற்கு  பதில் கூற முடியாமல் தவிப்போர்  அவற்றை நியாயப்படுத்துவற்காக  மேற்கு நாடுகளின் வாழும் சில விதிவில‍க்குகள் (Exceptions) வலிந்து இழுக்கபடுவது வழமையாகி விட்டது. அந்த வழமையான செயலை தான் நீங்களும் செய்துள்ளீர்கள் அம்பனை.

எல்லா சமூகத்திலும் "மூட நம்பிக்கைகளை" நம்புவார்கள் உள்ளார்கள் என்பதை கள உறவுகளுக்கு கூறுவதே எனது பதிவின் நோக்கம். 

ஏனெனில் எங்கள் மக்கள் மத்தியில் மட்டும் தான் இது உள்ளது என்ற பரப்புரை தவறானது.  

உலகம் எல்லாமிடமும் சாதாரண வாழ்க்கையில் மூட நம்பிக்கைகள் உண்டு. மேற்குலக நாடுகளில் அவர்கள் அவற்றை வியாபாரமும் ஆக்கி உள்ளார்கள். சில இடங்களில் அதை  தொழில்நுட்பமாயும் காட்டி வருகிறார்கள். 

அதில் இந்த ஐரோப்பியரும் ஒருவர். அவரை தொடரும் மேற்குலக மக்களும் உள்ளார்கள். அது அவர்கள் சுதந்திரம். அதில் யாரும் தலையிட முடியாது.  

இதை இந்த நாட்டு சட்டங்களும் தடுப்பதில்லை.  எது மூட நம்பிக்கை என இன்னொருவருக்கு சொல்ல தனி மனித சுதந்திரமும் இல்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

எல்லா சமூகத்திலும் "மூட நம்பிக்கைகளை" நம்புவார்கள் உள்ளார்கள் என்பதை கள உறவுகளுக்கு கூறுவதே எனது பதிவின் நோக்கம். 

ஏனெனில் எங்கள் மக்கள் மத்தியில் மட்டும் தான் இது உள்ளது என்ற பரப்புரை தவறானது.  

உலகம் எல்லாமிடமும் சாதாரண வாழ்க்கையில் மூட நம்பிக்கைகள் உண்டு. மேற்குலக நாடுகளில் அவர்கள் அவற்றை வியாபாரமும் ஆக்கி உள்ளார்கள். சில இடங்களில் அதை  தொழில்நுட்பமாயும் காட்டி வருகிறார்கள். 

அதில் இந்த ஐரோப்பியரும் ஒருவர். அவரை தொடரும் மேற்குலக மக்களும் உள்ளார்கள். அது அவர்கள் சுதந்திரம். அதில் யாரும் தலையிட முடியாது.  

இதை இந்த நாட்டு சட்டங்களும் தடுப்பதில்லை.  எது மூட நம்பிக்கை என இன்னொருவருக்கு சொல்ல தனி மனித சுதந்திரமும் இல்லை.  

இப்படி மூடநம்பிக்கைகளை தடுக்காமல் விட்டதால் அவை ஏனைய மனிதர்களுக்கு துன்பம் தரும் சம்பிரதாயங்களாகவும் (பெண்கள் கோயிலுக்குள் போவது தீட்டு என்பது போல!) சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் விஞ்ஞான எதிர்ப்பாகவும் வளர்ந்திருக்கிறது. இதை சாதாரணமாகக் காவித்திரிவதற்கும் பிரபலமாக்குவதற்கும் உங்களுக்கு இருக்கும் அதே உரிமை அதை மறுத்து பலவீனப் படுத்த ஏனையவர்களுக்கும் இருக்கிறது! இது தனி மனித சுதந்திர மறுப்பாக அமையாது!  

Link to comment
Share on other sites

2 minutes ago, Justin said:

இப்படி மூடநம்பிக்கைகளை தடுக்காமல் விட்டதால் அவை ஏனைய மனிதர்களுக்கு துன்பம் தரும் சம்பிரதாயங்களாகவும் (பெண்கள் கோயிலுக்குள் போவது தீட்டு என்பது போல!) சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் விஞ்ஞான எதிர்ப்பாகவும் வளர்ந்திருக்கிறது. இதை சாதாரணமாகக் காவித்திரிவதற்கும் பிரபலமாக்குவதற்கும் உங்களுக்கு இருக்கும் அதே உரிமை அதை மறுத்து பலவீனப் படுத்த ஏனையவர்களுக்கும் இருக்கிறது! இது தனி மனித சுதந்திர மறுப்பாக அமையாது!  

சகல நாடுகளிலும், இலங்கை உட்பட, பாடசாலைகளில் அடிப்படை கல்வியும், சிந்திக்கும் ஆற்றலையும் கற்றுத்தருகிறார்கள். ( எல்லாருக்கும் அந்த வசதிகள் இல்லை என்பது வேறு). 

அவ்வாறு கற்றவர்களும், உயர் கல்வி கற்று பெரும் உயர் பதவிகளில் இருப்பவர்களும் கூட சிலவற்றை பின்பற்றுகிறார்கள். அவை சட்டத்தை மீறாத வரையில் யாரும் அது முட்டாள்தனம் என கூறுவதால் அதையும் சாதிப்பதில்லை, சாதிக்கவும் முடியாது, சாதிக்கவும் முனைவதில்லை. 

Link to comment
Share on other sites

30 minutes ago, ampanai said:

எல்லா சமூகத்திலும் "மூட நம்பிக்கைகளை" நம்புவார்கள் உள்ளார்கள் என்பதை கள உறவுகளுக்கு கூறுவதே எனது பதிவின் நோக்கம். 

ஏனெனில் எங்கள் மக்கள் மத்தியில் மட்டும் தான் இது உள்ளது என்ற பரப்புரை தவறானது.  

உலகம் எல்லாமிடமும் சாதாரண வாழ்க்கையில் மூட நம்பிக்கைகள் உண்டு. மேற்குலக நாடுகளில் அவர்கள் அவற்றை வியாபாரமும் ஆக்கி உள்ளார்கள். சில இடங்களில் அதை  தொழில்நுட்பமாயும் காட்டி வருகிறார்கள். 

அதில் இந்த ஐரோப்பியரும் ஒருவர். அவரை தொடரும் மேற்குலக மக்களும் உள்ளார்கள். அது அவர்கள் சுதந்திரம். அதில் யாரும் தலையிட முடியாது.  

இதை இந்த நாட்டு சட்டங்களும் தடுப்பதில்லை.  எது மூட நம்பிக்கை என இன்னொருவருக்கு சொல்ல தனி மனித சுதந்திரமும் இல்லை.  

மீண்டும் மீண்டும் ஐரோப்பிய நாடுகளில் வழக்கொழிந்து போன விதிவிலக்குகளோடு தொங்கி கொண்டு எமது மூடப்பழக்கங்களுக்கு விழுந்து விழுந்து வக்காலத்து வாங்ககும் உங்களால் கூட மூடப்பபழக்கங்கள் சரியானவை அவற்றை கடைப்பிடிப்பது அறிவு பூர்வமானது என்று வெளிப்படையாக கூற முடிவதில்லை. 

Link to comment
Share on other sites

1 minute ago, tulpen said:

மீண்டும் மீண்டும் ஐரோப்பிய நாடுகளில் வழக்கொழிந்து போன விதிவிலக்குகளோடு தொங்கி கொண்டு எமது மூடப்பழக்கங்களுக்கு விழுந்து விழுந்து வக்காலத்து வாங்ககும் உங்களால் கூட மூடப்பபழக்கங்கள் சரியானவை அவற்றை கடைப்பிடிப்பது அறிவு பூர்வமானது என்று வெளிப்படையாக கூற முடிவதில்லை. 

மீண்டும் மீண்டும் உங்களுக்கு கூறுவது எது மூடப்பழக்கம் என இறுதியில் முடிவு செய்வதை யாரும் தடுக்க முடியாது.  அது தனி மனித சுதந்திரம் என்பதையே. 

ஒன்றை நான் மூட நம்பிக்கை என எண்ணுவதால் அதை எல்லோரும் மூட நம்பிக்கையாக ஏற்க வேண்டும் என எண்ணுவதும் மூட நம்பிக்கைதான். 

Link to comment
Share on other sites

5 minutes ago, ampanai said:

மீண்டும் மீண்டும் உங்களுக்கு கூறுவது எது மூடப்பழக்கம் என இறுதியில் முடிவு செய்வதை யாரும் தடுக்க முடியாது.  அது தனி மனித சுதந்திரம் என்பதையே. 

ஒன்றை நான் மூட நம்பிக்கை என எண்ணுவதால் அதை எல்லோரும் மூட நம்பிக்கையாக ஏற்க வேண்டும் என எண்ணுவதும் மூட நம்பிக்கைதான். 

மூட நம்பிக்கைகளை கடைப்பிடிக்கும் உரிமை உங்களுக்கும் எல்லோருக்கும் உண்டு. அதில் நான் தலையிட வில்லை. ஆனால் இவை எல்லாம் மூட நம்பிக்ககைகள் என்று ஆதாரங்ளுடன் பொது வெளியில் சொல்லுவது தனிமனித உரிமையை மீறிய செயல் இல்லை. அப்பிடி கூறுவதே தனிமனித உரிமை மீறல் என்று நீங்கள் சொல்லுவது தவறு. 

37 minutes ago, ampanai said:

சகல நாடுகளிலும், இலங்கை உட்பட, பாடசாலைகளில் அடிப்படை கல்வியும், சிந்திக்கும் ஆற்றலையும் கற்றுத்தருகிறார்கள். ( எல்லாருக்கும் அந்த வசதிகள் இல்லை என்பது வேறு). 

அவ்வாறு கற்றவர்களும், உயர் கல்வி கற்று பெரும் உயர் பதவிகளில் இருப்பவர்களும் கூட சிலவற்றை பின்பற்றுகிறார்கள். அவை சட்டத்தை மீறாத வரையில் யாரும் அது முட்டாள்தனம் என கூறுவதால் அதையும் சாதிப்பதில்லை, சாதிக்கவும் முடியாது, சாதிக்கவும் முனைவதில்லை. 

தேவகுருவாகிய வியாழன் என்பவனின் மனைவியை குருவின் சீடனான சந்திரன் கற்பழித்து விட்டான் என்றும், குருவின் சாபத்தால் ராகு, கேது என்ற பாம்புகள் சந்திரனை விழுங்குவதால்தான் சந்திரன் அழகு குறைந்து தேய்பிறை ஏற்பட்டது என்றும் இந்துப் புராணம் கூறுவது எல்லாம் எவ்வளவு ஆபாசமும், அறியாமையும் ஆகும்!

இதை நம்புவது தவறு மூடத்தனம்  என்று நான் கூறினால் அது தனிமனித உரிமை மீறல் என்று கூறுகின்றீர்கள் அம்பனை. அப்படியானால் இது சரியானது என்று ஆதரிக்கின்றீர்களா? நிச்சயமாக ஆம் என்று உங்களால் கூற முடியாத‍தால் எங்கோ இருக்கும் உப்பு சப்பில்லாத ஐரோப்பிய விதிவிலக்குகளை இங்கு இழுக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

35 minutes ago, ampanai said:

சகல நாடுகளிலும், இலங்கை உட்பட, பாடசாலைகளில் அடிப்படை கல்வியும், சிந்திக்கும் ஆற்றலையும் கற்றுத்தருகிறார்கள். ( எல்லாருக்கும் அந்த வசதிகள் இல்லை என்பது வேறு). 

அவ்வாறு கற்றவர்களும், உயர் கல்வி கற்று பெரும் உயர் பதவிகளில் இருப்பவர்களும் கூட சிலவற்றை பின்பற்றுகிறார்கள். அவை சட்டத்தை மீறாத வரையில் யாரும் அது முட்டாள்தனம் என கூறுவதால் அதையும் சாதிப்பதில்லை, சாதிக்கவும் முடியாது, சாதிக்கவும் முனைவதில்லை.

இலங்கை போன்ற நாடுகளில் மதம் கல்வியில் உள்ளது. அதில் சித்தியடைவதும் அது மேற்கொண்டு உயர்தர படிப்பிற்கு செல்ல உதவுவதும் உண்டு. 

அதையும் கற்று தாண்டி வந்த பின்னர் எது சரி இல்லை எது பிழை என அறிந்து அங்கும் புலம்பெயர் தேசங்களிலும் வெற்றிகரமாக வாழ்பவர்களே எம்மில் அதிகம். 

இல்லை மதங்கள் மற்றும் மூட நம்பிக்கையை ஒருவர் அகற்ற விரும்பினால் அவரால் செய்யக்கூடிய பல வழிகள் உண்டு. ஒரு தளத்தை திறந்து பரப்புரை செய்யலாம், நாட்டிற்கு சென்று கல்வி திட்டத்தை நவீன உலகிற்கு ஏற்ப மாற்றலாம், இல்லை மக்கள் பொருளாதார பலத்தை உயர்த்தலாம் என பல ஆக்கப்பூர்வமான வழிகள் உண்டு.    

53 minutes ago, ampanai said:

இதை இந்த நாட்டு சட்டங்களும் தடுப்பதில்லை.  எது மூட நம்பிக்கை என இன்னொருவருக்கு சொல்ல தனி மனித சுதந்திரமும் இல்லை.  

இலங்கை போன்ற பல சமூகம் பல மாதங்கள் உள்ள நாட்டில் ஒரு மதம் மட்டும் முதன்மை மதமாக முன்னிறுத்தப்படுகின்றது. இதனால் மற்றைய மதங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது. 

இந்த இலங்கை போன்ற நாட்டில் தனி மனித சுதந்திரமும் இல்லை மத சுதந்திரமும் இல்லை. 

ஒடுக்கப்பட்ட, பொருளாதார வலிமை குன்றிய சமூகங்களில் மூட நம்பிக்கைகள் ஆழமாக இருக்கும். அவை சேலையில் இருந்து பார்க்க தவறாக தெரியலாம். ஆனால், அதற்குள்ளே வாழ்பவர்களுக்கு அது ஒரு மருந்தாக அமையலாம். 

அதனால் சிறுபான்மை மக்களின் மதங்கள் மதம் சார்ந்த சில பழக்கங்களை மூட நம்பிக்கை என முத்திரை குத்துவதும் அந்த பெரும்பான்மை மத திணிப்பிற்கு உதவுகின்ற செயல்பாடு  எனவும் பார்க்கலாம்.   

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

இதை இந்த நாட்டு சட்டங்களும் தடுப்பதில்லை.  எது மூட நம்பிக்கை என இன்னொருவருக்கு சொல்ல தனி மனித சுதந்திரமும் இல்லை.  

ஒரு கோலம் வீட்டின் முற்றத்தில் போடுவது பற்றிய ஒரு விளக்கத்தை இந்த களத்தில் மெய்யானப்படுவது என்ற திரியில் இணைத்தேன். காரணம், அதிலும் ஒரு செய்தி, புரியாத செய்தி உள்ளதாக நான் நம்பினேன்.  ஆனால், என்னால் அறிவுபூர்வமாக அதை விளக்க முடியவில்லை. ஆனால், அதற்காக அதை முழுதாக மூடச்செயல் எனவும் ஏற்க முடியவில்லை. 

ஆனால், நிர்வாகம் அதை எடுத்துவிட்டது.  நான் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டேன். காரணம், நிர்வாக சட்ட நீதிபதிகள் அவர்கள். 

Link to comment
Share on other sites

23 minutes ago, ampanai said:

ஒடுக்கப்பட்ட, பொருளாதார வலிமை குன்றிய சமூகங்களில் மூட நம்பிக்கைகள் ஆழமாக இருக்கும். அவை சேலையில் இருந்து பார்க்க தவறாக தெரியலாம். ஆனால், அதற்குள்ளே வாழ்பவர்களுக்கு அது ஒரு மருந்தாக அமையலாம். 

தங்கள் பார்வையே தவறு. ஒடுக்கபட்ட மக்களிடம் மூடநம்பிக்கைகள் தளிர்விட வில்லை. மூட நம்பிக்கைகளே அவர்கள் முன்னேற்றத்திற்கும் மற்றவர்கள் அவர்களை ஒடுக்கவும் காரணம்.

Link to comment
Share on other sites

54 minutes ago, tulpen said:

தங்கள் பார்வையே தவறு. ஒடுக்கபட்ட மக்களிடம் மூடநம்பிக்கைகள் தளிர்விட வில்லை. மூட நம்பிக்கைகளே அவர்கள் முன்னேற்றத்திற்கும் மற்றவர்கள் அவர்களை ஒடுக்கவும் காரணம்.

இருக்கலாம். என் பார்வையில் நான் கனடாவில் இருந்தாலும் ஒடுக்கப்பட்டவன்

நீங்கள் எனது சமூகத்தை சார்ந்தரவர். உங்கள் பார்வையில் நீங்கள் மூடத்தனங்கள் எதுவுமே இல்லாத நிலைக்கு உயர்ந்திருக்கலாம், உங்கள் பார்வையில். 

ஆனால், எனது முன்னேற்றத்திற்கு நீங்கள் தடையாக இருக்க முடியாது என்பதும் எனது பணிவான நம்பிக்கை.  

Link to comment
Share on other sites

மூட நம்பிக்கைகள் என்று கூறப்படுவதை ஆங்கிலத்தில் அல்டெர்னட் ரியாலிட்டி எனவும் கூறலாம் என எண்ணுகின்றேன். காரணம், அவர்கள் வாழுவது வேறு ஒரு உலகில் அதை எம்மால் புரிந்துகொள்ளமுடியாத எமது நிலை. 

The phrase alternate reality often serves as a synonym for a parallel universe. It may also refer to: Alternate universe (fan fiction), fiction by fan authors that deliberately alters facts of the canonical universe they are writing about. ... Virtual reality, simulated reality. A euphemism for "psychedelic experience"

ஒரு உதாரணத்திற்கு அமெரிக்க இன்றைய அதிபர் டிரம்ப் அவ்வாறான ஒரு உலகில் வாழுவதாக பல அமெரிக்கர்கள் கூறுகின்றனர். 

Link to comment
Share on other sites

13 minutes ago, ampanai said:

இருக்கலாம். என் பார்வையில் நான் கனடாவில் இருந்தாலும் ஒடுக்கப்பட்டவன்

நீங்கள் எனது சமூகத்தை சார்ந்தரவர். உங்கள் பார்வையில் நீங்கள் மூடத்தனங்கள் எதுவுமே இல்லாத நிலைக்கு உயர்ந்திருக்கலாம், உங்கள் பார்வையில். 

ஆனால், எனது முன்னேற்றத்திற்கு நீங்கள் தடையாக இருக்க முடியாது என்பதும் எனது பணிவான நம்பிக்கை.  

நீங்கள் கூறியது அனோகமாக உங்களுக்கே புரிந்திருக்காது என்று நினைகிறேன். 

Link to comment
Share on other sites

 

அறிவியல் ரீதியாக எம்மால் எல்லா நிகழ்விற்கு விளக்கம் தர கூடிய வல்லமை இல்லை. இருந்தால் ஆய்வுகூடங்களும் பல்கலைக்கழகங்களும் தேவையற்றைவை ஆகிவிடலாம். 

எம்மால் அறிவியல் ரீதியாக விளக்கம் தர முடியாத விடயங்களை நாம் மூடத்தன்மை நிறைந்ததாக பார்க்கலாம். அவற்றிற்கு காரணம் கற்பிக்க விருப்புவர்களை அவர்கள் ' வெள்ளைப்பூச்சு '  பூசுகிறார்கள் என கூறி தட்டியும் விடலாம்.  

அப்படி எல்லாவற்றையும் ஒரு குட்டைக்குள் போட்டிருந்தால் எம்மால் முன்னேறி இருக்கவும் முடியாது. 

3 minutes ago, tulpen said:

நீங்கள் கூறியது அனோகமாக உங்களுக்கே புரிந்திருக்காது என்று நினைகிறேன். 

உங்களுக்கு மீண்டும் ஒரு விளக்கத்தை தருவதில் மகிழ்ச்சியே !

ஒரு மேற்குலக நாட்டில் நான் வாழ்வதால் நான் முன்னேறியவன் ஆகிவிடமுடியாது. இந்த நாட்டில் நான் ஒரு சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவன். பல விடயங்களில் பின் தங்கியவன். பல விடயங்களில் நிறம், தாய் மொழி, பழக்கவழக்கம் என பலவேறு காரணங்களால்  ஒடுக்கப்பட்டவன். 

அதேவேளை நான் வாழும் நாட்டில் எனது சமூகத்தை சார்ந்தவர் தன்னை முழுமையாக  ஒரு சம அந்தஸ்த்தை உடையவனவாகவும் ஒரு அறிவியல் ரீதியாக என்னை விட உயர்நதவனாகவும் எண்ணலாம். அது அவனின் உரிமை. 

அப்படி எண்ணுபவன் மட்டுமல்ல எவனும் எனது வளர்ச்சிக்கு தடையாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. 

Link to comment
Share on other sites

9 minutes ago, ampanai said:

 

அறிவியல் ரீதியாக எம்மால் எல்லா நிகழ்விற்கு விளக்கம் தர கூடிய வல்லமை இல்லை. இருந்தால் ஆய்வுகூடங்களும் பல்கலைக்கழகங்களும் தேவையற்றைவை ஆகிவிடலாம். 

எம்மால் அறிவியல் ரீதியாக விளக்கம் தர முடியாத விடயங்களை நாம் மூடத்தன்மை நிறைந்ததாக பார்க்கலாம். அவற்றிற்கு காரணம் கற்பிக்க விருப்புவர்களை அவர்கள் ' வெள்ளைப்பூச்சு '  பூசுகிறார்கள் என கூறி தட்டியும் விடலாம்.  

அப்படி எல்லாவற்றையும் ஒரு குட்டைக்குள் போட்டிருந்தால் எம்மால் முன்னேறி இருக்கவும் முடியாது. 

உங்களுக்கு மீண்டும் ஒரு விளக்கத்தை தருவதில் மகிழ்ச்சியே !

ஒரு மேற்குலக நாட்டில் நான் வாழ்வதால் நான் முன்னேறியவன் ஆகிவிடமுடியாது. இந்த நாட்டில் நான் ஒரு சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவன். பல விடயங்களில் பின் தங்கியவன். பல விடயங்களில் நிறம், தாய் மொழி, பழக்கவழக்கம் என பலவேறு காரணங்களால்  ஒடுக்கப்பட்டவன். 

அதேவேளை நான் வாழும் நாட்டில் எனது சமூகத்தை சார்ந்தவர் தன்னை முழுமையாக  ஒரு சம அந்தஸ்த்தை உடையவனவாகவும் ஒரு அறிவியல் ரீதியாக என்னை விட உயர்நதவனாகவும் எண்ணலாம். அது அவனின் உரிமை. 

அப்படி எண்ணுபவன் மட்டுமல்ல எவனும் எனது வளர்ச்சிக்கு தடையாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. 

நீங்கள் கூறியதற்கும் எமது விவாத‍த்திற்கும் என்ன சம்பந்தம். 

Link to comment
Share on other sites

3 minutes ago, tulpen said:

நீங்கள் கூறியதற்கும் எமது விவாத‍த்திற்கும் என்ன சம்பந்தம். 

" தங்கள் பார்வையே தவறு. ஒடுக்கபட்ட மக்களிடம் மூடநம்பிக்கைகள் தளிர்விட வில்லை. மூட நம்பிக்கைகளே அவர்கள் முன்னேற்றத்திற்கும் மற்றவர்கள் அவர்களை ஒடுக்கவும் காரணம்" - tulpen 

Link to comment
Share on other sites

மூடப்பழக்ககள் அனைத்தும் மனித முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவை. அறிவுக்கு ஒவ்வாதன என்பது எனது கருத்து. நீங்கள் அதை மறுக்கவில்லை.  ஆனால் அதற்கு ஆதரவாக வாதாடுகின்றீர்கள்.  நேரடியான விவாத்த‍த்தை தவிர்த்து திசை மாற்றுகின்றீர்கள். மூட நம்பிக்கைகள் அறிவு பூர்வமானவை என்று நீங்கள் கருதிதனால் அதறக்கான விளங்கங்களை தரலாம்.  Jupitar   பூகோளத்தில் வாழும் பில்லியன் கணக்கான மக்களை தவிர்த்து சிறிய புள்ளியாக உள்ள  இலங்கை இந்தியாவில் உள்ள மக்களை மட்டும் பாதிப்பதன் விளக்க‍த்தை தர முடியுமா? இந்த விளக்கத்தையாவது தெளிவாக தந்தால் விவாதம் பயனுள்ளதாக இருக்கும்.  

Link to comment
Share on other sites

1 minute ago, tulpen said:

மூடப்பழக்ககள் அனைத்தும் மனித முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவை. அறிவுக்கு ஒவ்வாதன என்பது எனது கருத்து. நீங்கள் அதை மறுக்கவில்லை.  ஆனால் அதற்கு ஆதரவாக வாதாடுகின்றீர்கள்.  நேரடியான விவாத்த‍த்தை தவிர்த்து திசை மாற்றுகின்றீர்கள். மூட நம்பிக்கைகள் அறிவு பூர்வமானவை என்று நீங்கள் கருதிதனால் அதறக்கான விளங்கங்களை தரலாம்.  Jupitar   பூகோளத்தில் வாழும் பில்லியன் கணக்கான மக்களை தவிர்த்த சிறிய புள்ளயியாக உள்ள  இலங்கை இந்தியாவில் உள்ள மக்களை மட்டும் பாதிப்பதன் விளக்க‍த்தை தர முடியுமா? இந்த விளக்கத்தையாவது தெளிவாக தந்தால் விவாதம் பயனுள்ளதாக இருக்கும்.  

மூடப்பழக்ககள் அனைத்தும் மனித முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவை. அறிவுக்கு ஒவ்வாதன என்பது எனது கருத்து. நீங்கள் அதை மறுக்கவில்லை

எது மூடப்பழக்கம் என்பதை யார் வரையறை செய்வது என்பதில் நான் உங்களுடன் உடன்படவில்லை. இது ஒரு மூடப்பழக்கம் என கூற யாருக்கு எவர் அந்த உரிமையை தந்தது? என்பதே எனது வாதம்.  

 

  Jupitar   பூகோளத்தில் வாழும் பில்லியன் கணக்கான மக்களை தவிர்த்த சிறிய புள்ளயியாக உள்ள  இலங்கை இந்தியாவில் உள்ள மக்களை மட்டும் பாதிப்பதன் விளக்க‍த்தை தர முடியுமா?

அவ்வாறு ஏற்கும் மக்கள் அங்கும் இருக்கிறார்கள். அங்கு மட்டும் தான் இல்லை என்பதை ஐரோப்பியர் ஒருவரின் கருத்தை இணைத்து உங்களுக்கு தெளிவுபடுத்த முயன்றேன். 

இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள எல்லா மக்களும், நூறு வீத மக்களும் இதை ஏற்கவில்லை எனவும் அப்படி அதை ஏற்பவர்களை நீங்கள் மாற்ற விரும்பினால் அதற்கு தேவையான வழிவகைகள் பற்றியும் மேலே கூறி இருந்தேன். 

ஒரே பாடசாலையில் ஒன்றாக படித்தவர்கள் எல்லோரும் ஒரே மாதிரித்தான் சிந்திக்க வேண்டும் என நாம் எண்ணினால் இந்த உலகம் மிகவும் அலுப்பானதாக மாறிவிடும் 🙂 

Link to comment
Share on other sites

கடவுள் இல்லை  கடவுளை நம்பிக்கை மூட நம்பிக்கை என்ற வாதத்திற்காக ஆயிரமாயிரம் வருடம் பழமையான கோயில்களை இடிக்க முடியாது ஏனெனில் அவைகள் வரலாற்று அடயாளமாக நிற்கின்றது. அதேபோல் தேவராம் திருமுறை திருவாசகங்களை அழிக்கவும் முடியாது அவை தமிழையும் இலக்கியங்களையும் தாங்கி நிற்கின்றது. 

வானியல் சோதிடம் பல்லாயிரம் வருடங்களாக மானுடத்துடன் பயணிக்கின்றது.  உண்மை பொய் முட்டாள்த்தனம் என்ற வாதங்களுடன் அது  தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கும். 

இது சரி இது பிழை, இது முட்டாள்தனம் இது புத்திசாலித்தனம் என்ற வரைவிலக்கணங்களுக்குள் நாம் அணுகும் பல விசயங்கள் வராது.  அதில் வானியல் சோதிடமும் அடங்கும். 

 

 

Link to comment
Share on other sites

துல்பன்,

ஒரு வேலையாக வெளியில் போகவேண்டும். நீங்கள் தொடர்ந்து விவாதிக்க விரும்பினால், ஒரு அல்லது இரண்டு விடயத்தை எடுத்துவாருங்கள். இல்லாவிட்டால் திசை மாறி இல்லை தெளிவு குறையும் சாத்தியம் நிறையவே உண்டு, அந்த பெட்டிக்குள் இருந்து ஆரோக்கியமாக மதிப்புடன் விவாதிக்கலாம். 

நன்றி - அம்பனை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.