Jump to content

உப்பு நாய்கள்: என் பார்வை- நிழலி


Recommended Posts

முக்கிய குறிப்பு: நான் நூல் விமர்சகனோ அல்லது திறனாய்வாளனோ அல்ல. உப்பு நாய்கள் மீதான என் பார்வையை மட்டும் கீழே தருகின்றேன்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அண்மைக் காலங்களில் ஒரு நாவலை இந்தளவுக்கு மனம் அதிரவும், சற்று அருவருப்பு உணர்வு மேலிடவும், ஆத்திரம், இரக்கம், கோபம், அதிர்ச்சி போன்ற கலவையான உணர்வு பெருக்கு எழவும்  வாசித்திருக்கவில்லை. வாசிக்க கூடாத நாவலாகவும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு நாவலாகவும் இருக்க கூடிய நாவல்களில் ஒன்றாக உப்பு நாய்கள் அமைந்திருக்கின்றது எனக்கு.

சென்னையின் பணச் செழிப்பு மிக்க பகுதிகளிலும், செழிப்பும் வறுமையும் பக்கம் பக்கமாக இருக்கும்  சிந்தாரிப்பேட்டை, பல்லாவாரம்,கிண்டி போன்ற இடங்களையும் அண்மையில் தான் சென்று பார்து விட்டு வந்திருக்கின்றேன். நான் பார்த்த சென்னையில் என்னால் எக்காலத்திலும் நெருங்க முடியாத ஒரு வாழ்க்கை சூழலுக்குள் அள்ளுப்பட்டு தவிக்கும் விளிம்பு மக்களை நான் அணுக கூடிய ஒரு சந்தர்ப்பம் அனேகமாக எனக்கு எழாமலே போய்விடும்.
இவ்வாறு வாழ்வாதாரத்துக்கான வழிகள் அனேகமானவை அடைக்கப்பட்டு தெரிவுகள் அதிகம் இல்லாத விளிம்பு நிலை மக்களை அணுக வாய்ப்பில்லாத என்னைப் போன்ற பல இலட்சக்கணக்கான தமிழ் வாசகர்களுக்கு லக்ஷ்மி சரவணகுமார் தன் உப்பு நாய்கள் மூலம் அறிமுகப்படுத்துகின்றார்.

ஆனால் அவர் அறிமுகப்படுத்தும் விதம் தான் கேள்விக்குரியதாக, ஏற்றுக்கொள்ள முடியாததாக தெரிகின்றது.

பொட்டலம் (போதைப் பொருள்) விற்க தொடங்கி சிறுமிகளை கடத்தி விற்பனை செய்ய கொடுத்து சம்பாதிக்கும் சம்பத், பிக்பாக்கெட் அடிப்பதில் தொடங்கி பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தும் பெண்ணுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் செல்வி, தாயுடன் உடலுறவு கொள்ளும் நண்பன்,  நாய் இறைச்சியை விற்கும் கோபால், மகள் முன்னே ஆண் குறியை கடித்து துப்பும் ஆதம்மாவின் அம்மா, அருட் சகோதரிகளை கர்ப்பமாக்கும் பாதிரி, பொட்டலம் விற்பவனுடனும் திருடர்களுடனும் சல்லாபிக்கும் கன்னியாஸ்திரிகள், மனைவியை மகள் அருகில் இருக்கும் போது பாலியல் வல்லுறவு செய்ய நண்பனை அனுப்பும் ராஜி, பிச்சைக்காரிகளுடன் மட்டுமே உடலுறவு கொள்ளும் பாஸ்கர், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கும் தன் பிட்டத்தை புணரக் கொடுக்கும் மூர்த்தி,  கணவனின் சுகம் கிடைக்காமையால் தியேட்டர் ஒன்றில் அறிமுகமான மகேஷ் உடன் கடற்கரையில் பொது இடத்தில் நிர்வாணமாக இருக்க சம்மதிக்கும் ஷிவானி, பெண்களுடன் உடலுறவு கொண்டு அதை வீடியோவாக விற்கும் மகேஷ், தாயை தெருவில் அம்மணமாக்கி விட்டு தாயை புணர்ந்தவனின் ஆண் குறையை வெட்டி எறியும் மகன்..... என தொடர்ச்சியாக விளிம்பு நிலை மக்கள் அனைவரும் குற்றங்களையும் முறையற்ற பாலியல் உறவுகளையும் கொண்டவர்களாகவே காட்டுகின்றார் லக்ஷ்மி சரவணகுமார்

ஒவ்வொரு மூன்று பக்கங்களுக்கும் ஒரு முறையற்ற பாலியல் சேர்க்கை, ஒரு குற்றம், ஒரு தவறு என அந்த மக்களின் முழு வாழ்க்கையுமே முறையற்ற போக்கில் கட்டமைத்து செல்கின்றது நாவல்.இவற்றுக்கும் அப்பால் சேட்டு என்று அழைக்கப்படும் மார்வாடி இனத்தை சேர்ந்த அனைவரையும் கூட குற்றவாளிகளாக சித்திகரிக்கின்றது நாவல்.

சட்டத்துக்கு புறம்பான தொழில்களை செய்கின்றவர்களின் வாழ்க்கையை நாவலாக எழுதுவது தவறு அல்ல. அது தேவையும் கூட. ஆனால் அப்படி செய்கின்றவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்துக்கு புறம்பானவை என்று காட்டுவதும், அவர்களின் பாலியல் சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தும் முறையற்ற பாலியல் முறைகள் என்று காட்டுவதும் வேண்டும் என்றே விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை மீது சேறு பூசுவதற்காக எழுதப்பட்டவையாகவே தோன்றுகின்றது. இம் மக்களை இவ்வாறு முறையற்ற சட்டத்துக்கு புறம்பான தொழில்களை செய்ய தூண்டிய வர்க்க அரசியலை பற்றியோ அல்லது அதன் சூழலை பற்றியோ எந்த ஒரு சிறு குறிப்பு கூட இல்லை.

இவ் நாவலில் வரும் ஆதம்மா எனும் கட்டிடத் தொழிலாளியின் மகளுக்கும் செல்வ செழிப்பு மிக்க சூழலில் வாழ்ந்து வரும் ஆர்த்திக்குமான பாசமிக்க உறவு கூட செயற்கையானதாகவே இருக்கின்றது. விளிம்பு நிலை மக்களை குற்றவாளிகளாகவும் செல்வ செழிப்பில் வளர்கின்ற வர்க்கத்தை அன்பும் பாசமும் கொண்டவர்களாகவும் இதன் மூலம் லக்ஷ்மி சரவணன் காட்டுகின்றார்.

அண்மைக் காலங்களில் தமிழ் சினிமாவில் வட சென்னையை ஒரளவுக்கேனும் நல்லவிதமாக காட்ட முற்படும் வேளையில் அதை மறுத்து அவர்கள அனைவரையும் குற்றாவாளிகளாகவும் முறையற்ற அருவருப்பான பாலியல் உறவில் ஈடுபடுகின்றவர்களாகவும் காட்டும் இவ் நாவலை 'இருண்ட மக்களின் வாழ்வின் மீது வெளிச்சத்தை பாச்சும் காவியம்' என்ற ரீதியில் தலையில் வைச்சு போற்றவும் ஒரு குறூப் தமிழ் சூழலுக்குள் இருக்கு என்பதையும் குறிப்பிட வேண்டும்.

மும்பாயில் இருந்து டொரன்டோ வரும் 16 மணித்தியால விமானப் பயணத்தில் உப்பு நாய்களை வாசிக்க தொடங்கினேன். இடையிடை நித்திரை கொண்டு வாசித்து முக்கால்வாசி முடித்த பின் ரொரன்டோ வந்து இறுதி 10 பக்கங்களையும் வாசித்து முடித்தேன். வாசித்து முடித்த பின் ஒரு நல்ல நாவலை வாசித்த திருப்தி வரவில்லை, மாறாக உப்பு நாய்கள் மீது வெறுப்பும் அருவருப்புமே மேலிட்டது.

உப்பு நாய்களை எவருக்கும் பரிந்துரைக்கவும் மாட்டேன், வாசிக்க வேண்டாம் என்று சொல்லவும் மாட்டேன்.

20181005_103520.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே கிண்டிலில் தரவிறக்கியுள்ளேன். ஆனால் வாசிக்கவேண்டுமா என்று யோசிக்கின்றேன். வெறும் விகாரமான எழுத்தாகத் தெரிகின்றதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஏற்கனவே கிண்டிலில் தரவிறக்கியுள்ளேன். ஆனால் வாசிக்கவேண்டுமா என்று யோசிக்கின்றேன். வெறும் விகாரமான எழுத்தாகத் தெரிகின்றதே!

அது அவர் தனது பார்வையில் இருந்து விமர்சித்து இருக்கின்றார். அதுக்காக நீங்கள் தரவிறக்கியதை வாசிக்காமல் விட வேண்டும் என்ற கட்டாயமில்லை.அந்தப் புத்தகம் எனக்கு கிடைத்தால் நானும் வாசித்து விட்டுத்தான் அருவருப்பு அடைவேன். காரணம் டிஸ்கவரி பேலஸ்சும், லஷ்மி சரவணகுமாரும் தரம்தாழ்ந்தவர்கள் அல்ல. புத்தக விமர்சனத்துக்கு நன்றி நிழலி ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, suvy said:

அந்தப் புத்தகம் எனக்கு கிடைத்தால் நானும் வாசித்து விட்டுத்தான் அருவருப்பு அடைவேன்.

 வாசிக்க முதலே அருவருப்பு அடையவேண்டாம் என்கின்றீர்கள் சுவி அண்ணா!  வாசித்தால் போச்சு!

இப்ப படிக்கின்ற (கிண்டிலில்தான்) தஞ்சை பிரகாஷின் கள்ளம் அலுப்பைத் தருகின்றது. கொடுத்த காசுக்கு ஊசிப்போன பலகாரம் என்றாலும் உள்ளே தள்ளுவது மாதிரி படிக்கின்றேன். நேரம் கிடைக்கும்போது படிப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில சமூக/குடும்ப வாழ்க்கைகளை படம் பிடித்து புத்தகமாக தந்துள்ளார்கள். 
இதில் என்ன அருவருப்பும் ஓங்காளமும்?
கதை காவியங்கள் படிப்பவர்களுக்கு வேட்டை நாயும், உப்பு நாயும், தாடகை தாரிணியும் கதைகள் தானே! :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி அமைதி கு.சா.....!  நிழலி ஞானமார்க்கத்தில் இன்னும் முன்னேற வேண்டிக் கிடக்கு......!  tw_blush:

Link to comment
Share on other sites

இறக்குவமோ என நினைத்து பின் விட்டு விட்டேன்.. ஜெயமோகனின் ஏழாம் உலகமும் இன்னொருபக்க விளிம்பு நிலை மக்களின் கதையே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்பு நாய்கள், கெட்ட நாய்கள் போல தெரியுதே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

உப்பு நாய்கள், கெட்ட நாய்கள் போல தெரியுதே? 

உப்பு நாய்கள் என்றால் அதன் அர்த்தம் என்ன? 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உப்பு நாய்கள் பெருநகரத்தின் ரகசியங்களை பேசுகின்றது. பெருநகரங்களில் வாழ்கின்ற மனிதர்களின் ரகசியங்களை பேசுகின்றது. கஞ்சா, திருட்டு, விபச்சாரம், தகாத உறவுகள் என்று பெருநகரங்களில் புதைந்துகிடக்கின்ற அனைத்தும் இந்த புத்தகத்தில் கதைப்பொருளாக.வருகின்றது  

இந்த புத்தகத்தினை வெறுக்க வேண்டும், இல்லாவிடின் ரசிக்க வேண்டும். முன்னுரையிலேயே எவ்வளவிற்கு எவ்வளவு பாராட்டுகள் வந்தனவோ, அதே அளவிற்கு மிரட்டல்களும் வந்தன என்று எழுதப்பட்டிருக்கின்றது. 

எழுத்தும், கதைப்பொருளும் நான் மிகவும் ரசித்தவைகளில் ஒன்று. 

கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு கிடக்கின்றது என்போருக்கான புத்தகமல்ல இது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.