Jump to content

'மாதவிடாய் காலத்தில் பெண்களின் வழிபாட்டு உரிமையை பறிக்க முடியுமா?'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்ணின் கையால் உணவு உண்டாலோ நீர் அருந்தினாலோ நீங்கள் இறந்துவிடுவீர்களா? மாதவிடாய் உள்ள பெண்களின் வழிபாட்டு உரிமையை உங்களால் எப்படி பறிக்க முடியும்," என்று கேட்கிறார் அனிகேத் மித்ரா. இவர் பெண்களின் மாதவிடாய் காலத்தை மையமாக வைத்து உண்டாக்கிய கணினி வரைபடங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் பகிரப்பட்டன.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பின்பற்றும் சடங்குகளை இவர் நேரடியாகவே கண்டுள்ளார்.

அவர் வரைந்த படம் ஒன்றில் நேப்கின் மீது ரத்த நிறத்தில் தாமரை மலர்ந்து உள்ளது. அதன் கீழே 'சக்தி ரூபென்' என்று வங்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதன் பொருள் 'பெண்களின் சக்தி'

"என் மனைவி மற்றும் சகோதரிகளை போலவே பல பெண்கள் விழாக்களிலும் பிற நல்ல நிகழ்ச்சிகளிலும் மாதவிடாய் காலங்களில் கலந்துகொள்ள முடிவதில்லை,"என்று கூறும் அனிகேத், அவர்கள் அப்போது மூலையில் முடிங்கிக்கிடக்க வேண்டியுள்ளது என்கிறார்.

"பெண்கள் குடும்ப நிகழ்வுகளிலும் வழிபாட்டிலும் கலந்துகொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அவர்களின் உடல்நிலையை காரணம்காட்டி அது மறுக்கப்படுகிறது. ஏன் இந்தத் தடை, " என்று அவர் வினவுகிறார்.

பெண் கடவுளின் மாதவிடாய்

"பெண்கள் கோயிலுக்குள் நுழைய ஆதரவாக இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் வீடுகளில் இருப்பவர்கள் மாறத் தயாராக இல்லை. சமூகமும் இதை விலக்கியே வைக்கிறது. இதனால் சமூகத்தை பின்னோக்கியே இழுக்கிறார்கள்."

அஸ்ஸாமில் காமக்கியா தேவி கோயிலில் பெண் கடவுளுக்கு மாதவிடாய் உண்டாகும்போது மூன்று - நான்கு நாட்கள் கோயிலின் கதவுகள் மூடப்பட்டு திருவிழா கொண்டாடப்படுவதை சுட்டிக்காட்டும் அவர் கடவுளின் அவதாரமாகக் கருதப்படும் பெண்களை விலக்கி வைப்பது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை என்கிறார்.

சமூக வலைத்தளத்தில் கேலி

மாதவிடாய் குறித்த தனது சமூகவலைத்தளப் பதிவுகளைப் படிப்பவர்கள் தம்மைக் கேலி செய்வதாகவும், மதத்துக்கு எதிரானவன் என்றும் துரோகி என்று அழைப்பதாகவும் கூறும் அனிகேத் தம்மை கடவுள் மீது நம்பிக்கை உள்ள மதத்தை பின்பற்றுபவர் என்று கூறுகிறார்.

"எங்கள் வீட்டில் பூசை செய்கிறோம், நான் மத விழாக்களில் கலந்துகொள்கிறேன். நான் எப்படி இந்து மதத்துக்கு எதிரானவனாக இருக்க முடியும்? என் பதிவுகளை அழிக்கக்கோரி கடுமையான அழுத்தம் கொடுக்கப்படுகிறது."

"என்னைக் கேலி செய்பவர்கள் மோசமானவர்கள் அல்ல. அவர்கள் அறியாமையில் இருப்பவர்கள்," என்று கூறும் அனிகேத் பலரும் தமக்கு ஆதரவாக செய்திகள் அனுப்பி ஊக்கிவித்ததாக கூறுகிறார்.

மனைவியின் ஆதரவு

"பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெகு சில ஆண்களே பேசுகின்றனர். பெண்கள் நான்கு நாட்கள் அனுபவிக்கும் இதை ஆண்கள் ஒரு நாளாவது அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்று உணர்வார்கள்," என்கிறார் அனிகேத்தின் செயல்களை முழுமையாக ஆதரிக்கும் அவரது மனைவி பிரியம்.

"மாதவிடாய் நேரங்களில் வீட்டு வேலை அலுவலக வேலை என அனைத்தையும் செய்தாலும் யாரும் இதற்கு அங்கீகாரம் அளிப்பதில்லை," என்கிறார் பிரியம்.

படத்தில் என்ன தவறு?

பாலியல் மருத்துவத்துறை பேராசிரியர் பிரகாஷ் கோத்தாரி இது குறித்து பிபியிடம் பேசினார்.

"கோயில்கள் உள்ளிட்ட மதம் சார்ந்த இடங்களில் பாலுறவைக் குறிக்கும் சின்னங்கள் இருப்பதைப் பார்க்க முடியும். ஒரு வேளை இது பாலியல் கல்விக்காகக் கூட இருக்கலாம். அந்தக் காலத்தில் பாலியல் என்பது மிகவும் இயல்பானதாகப் பார்க்கப்பட்டது," என்கிறார் கோத்தாரி.

"பழங்கால இலக்கியங்களையும் நூல்களையும் பார்க்கும்போது பாலுறவு மனித வாழ்வின் அடிப்படையாகப் பார்க்கப்பட்டதை உணர முடியும். இந்த படங்களில் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை," என அனிகேத் வரைந்த படம் குறித்து கோத்தாரி கூறுகிறார்.

"முதல்முறை பார்த்தபோது எனக்கும் கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது. தாமரை நம் பண்பாட்டில் மிகவும் மதிக்கத்தக்க ஒன்றாக இருப்பதால் அப்படித் தோன்றியது. ஆனால்,இதன்மூலம் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை உண்டாகவே அவர் முயல்கிறார்," என்கிறார் பெண்கள் பற்றிய சமூக ஆய்வில் ஈடுபடும் பேராசிரியை விபூதி படேல்.

https://www.bbc.com/tamil/india-45777885

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.