Jump to content

ஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா? - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொருட்களை திருடிக்கொண்டு செல்வது, சாலையிலோ, வேறெங்கோ செல்லும்போது பொருட்களை, பணத்தை பறித்துக்கொண்டு செல்வதைவிட உங்களது கணினியில், சமூக இணையதளங்களில் நீங்களோ, குறிப்பிட்ட இணையதளமோ பதிவு செய்து வைத்துள்ள தரவுகள் திருடப்பட்டால் ஏற்படும் பாதிப்பின் வீரியத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் செயல்பட்டால் 50 மில்லியன் பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பறிபோனது; பேஸ்புக்கின் அலட்சியமான செயல்பட்டால் சமீபத்தில் இன்னொரு 50 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன; உங்களுக்கே தெரியாமல் உங்களது ஃபேஸ்புக் கணக்கிலிருந்து உங்களது நண்பர்களுக்கு ஆபாச காணொளிகள் செல்வது, நேர மேலாண்மையில் ஏற்படும் பிரச்சனை - அழுத்தம் என ஃபேஸ்புக்கிலிருந்து நிரந்தரமாக வெளியேறுவதற்கு ஒவ்வொருவராலும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஃபேஸ்புக் கணக்கை நீக்குவதற்கும், தற்காலிகமாக முடக்குவதற்கும் என்ன வித்தியாசம்? அதை எப்படி செய்வது? அதனால் ஏற்படும் விளைவுகளை விளக்குகிறது இந்த கட்டுரை.

"நான் ஒரு வாரத்திற்கு/ ஒரு மாதத்திற்கு/ சிறிது காலத்திற்கு ஃபேஸ்புக்கிலிருந்து ஒதுங்கி இருக்க முடிவெடுத்துள்ளேன்" என்று உங்களது ஃபேஸ்புக் நண்பர்கள் அடிக்கடி பதிவிடுவதையும், ஓரிரு நாட்களில் சம்பந்தமே இல்லாத காரணத்தை கூறிவிட்டு மீண்டும் திரும்ப வருவதையும் நீங்கள் பலமுறை பார்த்திருக்கலாம்.

எனவே, மேற்குறிப்பிட்ட பல்வேறு காரணங்களினாலோ அல்லது தனிப்பட்ட வேறு காரணங்களினாலோ, உங்களுக்கும் ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேற வேண்டுமென்ற எண்ணமிருந்தால், அதற்கு இரண்டு தெரிவுகள் உள்ளன.

முதலாவது, உங்களது ஃபேஸ்புக் கணக்கை தற்காலிகமாக முடக்குவது (Deactivate) செய்வது குறித்து காண்போம். நீங்கள் உங்களது கணக்கை தற்காலிகமாக முடக்கினால்,

  • மீண்டும் எப்போது வேண்டுமானாலும் திரும்ப பயன்படுத்த தொடங்கலாம்.
  • ஆனால், உங்களது கணக்கை/ பதிவை பார்க்கவோ, தேடவோ முடியாது.
  • நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்திகள் அப்படியே இருக்கும்.
  • உங்களது நண்பர்கள் பட்டியல் உள்ளிட்ட கணக்கு சார்ந்த விவரங்கள் அப்படியே இருக்கும்.

உங்களது கணக்கை தற்காலிகமாக நீக்குவதற்கு,

  • உங்களது ஃபேஸ்புக் கணக்கில் நுழைந்தவுடன், வலது மேல் மூலையிலுள்ள கடைசி தெரிவை தேர்ந்தெடுத்து அதில் 'செட்டிங்ஸ்' (Settings) என்பதை கிளிக் செய்யவும்.
  • அதனுள்ளே சென்றவுடன், ஜெனரல் (General) என்ற தெரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள "மேனேஜ் அக்கௌன்ட்" (Manage Account) என்பதை தேர்வு செய்யுங்கள்.
  • அதில் "டீஆக்டிவேட் யுவர் அக்கௌன்ட்" (Deactivate your account) என்ற தெரிவை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்களது கணக்கை தற்காலிகமாக முடக்கி விடலாம்.
  • உங்களது ஃபேஸ்புக் கணக்கை தற்காலிகமாக முடக்கினாலும், உங்களால் ஃபேஸ்புக் மெசஞ்சரை தொடர்ந்து பயன்படுத்த முடியும்; உங்களது நண்பர்களாலும் உங்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும்.

"இனி ஃபேஸ்புக்கே எனக்கு வேண்டாம்" என்று முடிவெடுத்துவிட்டீர்களா? உங்களது கணக்கை எப்படி நிரந்தரமாக நீக்குவது என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்னர் அதனால் ஏற்படும் விளைவுகளை புரிந்துகொள்ளுங்கள்.

  • நீங்கள் உங்களது கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கு கோரிக்கை விடுத்தாலும் ஃபேஸ்புக் அதை உடனடியாக நிறைவேற்றுவதில்லை. கோரிக்கை விடுக்கப்பட்ட காலத்திலிருந்து, கோரிக்கை நிறைவேற்றப்படுவதற்கு இடைப்பட்ட காலத்தில் நீங்கள் மீண்டும் உங்களது ஃபேஸ்புக் கணக்கில் உள்நுழைந்தால் உங்களது கோரிக்கையை ரத்துசெய்துவிட்டு கணக்கை மீட்டமைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
  • ஒருமுறை உங்களது ஃபேஸ்புக் கணக்கு நிரந்தரமாக நீக்கப்பட்டால் அதன் பிறகு எப்போதுமே மீண்டும் பயன்படுத்த முடியாது. அதில் பதிவிட்ட தகவல்களை பெறவும் முடியாது.
  • உங்களது கணக்கை சார்ந்த தகவல்கள் முற்றிலுமாக ஃபேஸ்புக்கின் தரவு தளத்திலிருந்து நீக்கப்படுவதற்கு 90 நாட்கள் வரை ஆனாலும் கூட, இடைப்பட்ட காலத்தில் மூன்றாம் நபர்களால் உங்களது தகவல்களை பார்க்க முடியாது
  • நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள், உங்களது பயன்பாட்டு தகவல்கள் ஃபேஸ்புக்கின் தரவுத்தளத்தில் அப்படியே இருப்பதற்கான வாய்ப்புள்ளது. ஆனால், யாராலும் அந்த தகவல்களை பார்க்க முடியாது.  
  • உங்களது ஃபேஸ்புக் கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கு கோரிக்கை விடுத்த நாளிலிருந்து 30 நாட்கள் வரை நீங்கள் மீண்டும் உங்களது கணக்கை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பை ஃபேஸ்புக் வழங்குகிறது.
  • சரி, இனி உங்களது ஃபேஸ்புக் கணக்கை எப்படி நிரந்தரமாக நீக்குவது என்று அறிவோம்.

  • உங்களது ஃபேஸ்புக் கணக்கில் நுழைந்தவுடன், வலது மேல் மூலையிலுள்ள கடைசி தெரிவை தேர்ந்தெடுத்து அதில் 'செட்டிங்ஸ்' (Settings) என்பதை கிளிக் செய்யவும்.
  • அதனுள்ளே சென்றவுடன், ஜெனரல் (General) என்ற தெரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள "மேனேஜ் அக்கௌன்ட்" என்பதை தேர்வு செய்யுங்கள்.
  • அதிலுள்ள "ரிக்வஸ்ட் அக்கௌன்ட் டெலிஷன்" (Request account deletion) என்பதை கிளிக் செய்வதன் மூலம் உங்களது கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கான கோரிக்கையை ஃபேஸ்புக்கிற்கு அளிக்க முடியும்.

https://www.bbc.com/tamil/science-45723256

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.