Jump to content

புரதச்சத்து அதிகம் கொண்ட 'கரப்பான் பூச்சி' ரொட்டி சாப்பிட விருப்பமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
 
பூச்சிபடத்தின் காப்புரிமை FURG

இந்த புகைப்படத்தைப் பார்த்தால் சாதாரண ரொட்டியைப் போலவே தோன்றும். ஆனால் இது அதிக புரதச்சத்து கொண்ட கரப்பான் பூச்சி ரொட்டி. இந்த ரொட்டியைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் மாவில், உலர்த்தி தூளாக்கப்பட்ட கரப்பான் பூச்சி மாவு கலக்கப்படும்.

அதிர்ச்சியாக இருக்கிறதா? அச்சம் வேண்டாம்… எல்லா ரொட்டிகளும் இந்த வகையைச் சேர்ந்ததில்லை. இந்த 'ஸ்பெஷல்' ரொட்டியின் விலையும் கொஞ்சம் அதிகம்தான். பொதுவாக சாமன்கள் வைத்திருக்கும் அறையிலும், அசுத்தமான இடங்களிலும் சுற்றும் கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே அருவருப்பாகத் தோன்றும் நிலையில், எப்படி அதை சாப்பிடுவது என்று தோன்றுகிறதா? சரி இந்த சிந்தனை எப்படி தோன்றியது?

ஊட்டச்சத்து குறைபாடு, உலகில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டால் என்ன செய்வது? அதற்கான தீர்வாக விலங்குகளின் புரதம் இருக்குமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்ட பிரேசில் நாட்டு ஆராய்ச்சியாளர்களின் குழு இதை கண்டுபிடித்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2050ஆம் ஆண்டுவாக்கில், உலக மக்கள் தொகை 9.7 பில்லியனாக (970 கோடி) இருக்கும்

நமது அன்றாட உணவில் பூச்சிகளை சேர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மக்களின் புரதச்சத்து தேவைக்கு பூச்சிகளின் புரதங்கள், சுலபமான மாற்றாக இருக்கும் என்பதோடு அவை கட்டுபடியாகக்கூடிய விலையில் கிடைக்கும்.

தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் மக்களின் உணவின் ஒரு பகுதியாக பூச்சிகள் இடம்பெறத் தொடங்கிவிட்டன.

 

ஆனால் புகைப்படத்தில் காணப்படும் ரொட்டியில் நமது சமையலறையில் வழக்கமாக காணப்படும் கரப்பான் பூச்சியால் செய்யப்பட்டதில்லை. இது வேறொரு வகை கரப்பான் பூச்சிகளால் செய்யப்பட்டது. வட ஆஃப்பிரிக்காவில் காணப்படும், வெட்டுக்கிளி கரப்பான் (Locust Cockroach, Nophita cinera) வகையைச் சேர்ந்த பூச்சியால் செய்யப்பட்ட ரொட்டி இது.

எளிதாக வளரக்கூடியவை என்பதோடு, இனப்பெருக்கமும் துரிதகதியில் நடைபெறும் என்பதும் வெட்டுக்கிளி கரப்பான் பூச்சியின் சிறப்பம்சம்.

பூச்சிபடத்தின் காப்புரிமை FURG

ஆனால் உலகில் ஆயிரக்கணக்கான பூச்சி வகைகள் இருக்கும் நிலையில், கரப்பான் பூச்சியை மட்டும் சாப்பிடுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

கேள்வி எழுந்தால் அதற்கான பதிலும் உண்டல்லவா? கரப்பானில் இருக்கும் புரதம், சிவப்பு இறைச்சி எனப்படும் மாட்டு இறைச்சியில் இருக்கும் புரதத்தைவிட சிறந்தது. சிவப்பு இறைச்சியில் 50 சதவிகித புரதம் இருக்கிறது. ஆனால், கரப்பானில் 70 சதவிகிதம் புரதம் இருக்கிறது.

லட்சக்கணக்கான ஆண்டுகளாக உலகில் இருக்கும் கரப்பான்கள், முழு பரிணாம வளர்ச்சியையும் கடந்து தற்போதைய நிலையை அடைந்துள்ளது.

தெற்கு பிரேசிலில் உள்ள ஃபெடரல் யுனிவர்சிடி ஆஃப் ரியோ கிராண்டே (Federal University of Rio Grande) பல்கழைகத்தில் உணவுத்துறை பொறியாளராக பணிபுரியும் ஆந்த்ரீசா ஜெந்த்ஜென் இவ்வாறு கூறுகிறார்: "வளிமண்டலத்தில் பொருந்துவதற்கும், லட்சக்கணக்கான ஆண்டுகள் நீடித்து பூமியில் இருப்பதற்கும் தேவையான சில சிறப்பு குணங்களைப் பெற்றுள்ளவை கரப்பான்கள்."

பூச்சிபடத்தின் காப்புரிமை FURG

புரதம் நிரம்பிய ரொட்டி

லாரென் மெனேகன் என்ற உணவு பொறியியலாளருடன் இணைந்து பணியாற்றிய ஜெந்த்ஜென், கரப்பான் பூச்சிகளை உலர்த்தி, அதை மாவாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றார். புரதச்சத்து மிகுந்த இந்த மாவின் விலை கிலோ ஒன்றுக்கு 51 அமெரிக்க டாலர்கள் (அதாவது, 3,700 ரூபாய்).

ஆனால் ரொட்டி தயாரிப்பதற்கு கரப்பன் பூச்சி மாவின் 10% மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மீதி உள்ள மாவு வழக்கமாக நாம் பயன்படுத்தும் கோதுமை மாவுதான்.

பிபிசி செய்தியாளரிடம் பேசிய ஜெந்த்ஜென், "ஓரளவு கரப்பன் பூச்சி மாவை கோதுமை மாவில் கலந்ததும், அந்த மாவில் 133% புரதம் அதிகரித்திருந்தது" என்று சொன்னார்.

வீட்டில் வழக்கமாக 100 கிராம் மாவில் தயாரிக்கும் ரொட்டியில் 9.7 கிராம் புரதம் இருக்கும். அத்துடன் ஒப்பிடும்போது, சிறிதளவு கரப்பான் மாவு கலந்த அதே அளவு மாவில் புரதம் 22.6 கிராமாக அதிகரித்துவிட்டது.

பூச்சிபடத்தின் காப்புரிமை FURG

"இந்த கலவையில் உணவு தயாரிக்கும்போது, கொழுப்புச் சத்து அல்லது எண்ணெய் சத்து 68% குறைகிறது" என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

புரதம் அதிகம், கொழுப்பு குறைவு என்பதெல்லாம் சரி, சுவை எப்படி இருக்கும்?

சாதாரண மாவில் தயாரிக்கப்பட்ட உணவைப் போன்ற சுவையே இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் பதிலளிக்கிறார்கள்.

"சுவை, மணம், நிறம், தரம் என நன்றாக பரிசோதித்தோம். சாதாரண ரொட்டிக்கும் இதற்கும் எந்தவித வித்தியாசமுமே இல்லை. சிலர், இதில் வேர்க்கடலை வாசனை இருப்பதாக தோன்றுவதாக கருத்துத் தெரிவித்தனர்" என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பூச்சிபடத்தின் காப்புரிமை SPL

மனிதர்கள் தங்கள் உணவில் புழு-பூச்சிகளை பயன்படுத்துவது ஆரோக்கியமானதா என்பது தொடர்பான தகவல்களை பற்றி ஊட்டச்சத்துத் துறை பேராசிரியர் இனோ வியிராவிடம் கேட்டறிந்தோம். "வெட்டுக்கிளி, குளவி, அந்துப்பூட்டிகள், நாவல் பூச்சிகள், எறும்புகள், பட்டாம்பூச்சி, பட்டு புழுக்கள், தேள்கள் என பல வகை புழு பூச்சிகளை நாம் உட்கொள்ளலாம், அவற்றை நமது உணவின் ஒரு பகுதியாக மாற்றலாம். அதில் தவறேதும் இல்லை" என்று அவர் சொல்கிறார்.

"புழு-பூச்சிகளை உணவாக ஏற்க நமக்கு தயக்கம் இருப்பதற்கு காரணம் நமது கலாசார சிக்கல்கள் தான்" என்கிறார் அவர்.

"ஒரு கிலோ மாமிசத்தை தயாரிக்க 250 சதுர கிலோ மீட்டர் நிலம் தேவை. இதுவே ஒரு கிலோ பூச்சி மாமிசம் வேண்டுமானால் அதற்கு 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு போதுமானது. அது மட்டுமல்ல, நீரின் தேவையும் குறைகிறது. ஏனெனில் ஒரு கிலோ பூச்சி மாமிசத்திற்கு தோராயமாக ஆயிரம் லிட்டர் நீர் தேவை என்று சொன்னால், அதுவே ஒரு கிலோ இறைச்சிக்கு 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவை" என்று சொல்கிறார் பேராசிரியர் இனோ.

மேலும், சுற்றுச்சூழலுக்கு எந்தவித மாசுக்களையும் ஏற்படுத்தாதவை பூச்சி உணவுகள். உணவாக பயன்படுத்தப்படும் பூச்சிகள் (95 இனங்கள்), பிரேசிலில் காணப்படுவதாக பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பூச்சிபடத்தின் காப்புரிமை टSPL

புழு-பூச்சி கொண்ட உணவு விரும்பி உண்ணப்படுகிறது

உணவில் பூச்சி வகைகளை சேர்த்துக் கொள்ளும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வருகிரது. உலகின் இரண்டு கோடி மக்களின் உணவில் பூச்சியும் ஒரு பகுதியாகி இருப்பதாக ஐ.நாவின் தரவுகள் கூறுகின்றன.

பூச்சிகளை சேர்த்து செய்யும் கேக், ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் எண்ணெய் தயாரிக்கும் பணியில் லாரன் மெனெகன் மற்றும் ஜெந்த்ஜென் ஈடுபட்டுள்ளனர்.

இருந்தாலும், கரப்பான் பூச்சி மாவு கலந்த ரொட்டி வகைகள் இன்னும் பிரேசிலில் சில்லறை விற்பனைக்கு வரவில்லை. பூச்சிகளை உண்பதற்கு இதுவரை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதியளிக்கவில்லை, ஆனால் விலங்குகளுக்கு பூச்சி கலக்கப்பட்ட உணவுகளை கொடுக்கலாம்.

ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகள் பூச்சிகளை உண்பதற்கு ஊக்கமளிக்கின்றன. ஸ்பெயினின் கரேஃபோர் சூப்பர்மார்கெட்டில் வெட்டுக்கிளி மற்றும் லார்வா பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பிரிட்டனில் வறுக்கப்பட்ட மற்றும் பொடியாக்கப்பட்ட பூச்சிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

குளோபல் மார்கெடிங் இன்சைட்ஸ் என்ற அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான அடுத்த ஐந்து ஆண்டுகளில் பூச்சிகளின் வியாபாரம் சுமார் 70 கோடி அமெரிக்க டாலர்களை எட்டிவிடும் என்று கூறுகிறது.

சரி, கரப்பான் பூச்சி மாவு சேர்த்து செய்யப்பட்ட கேக் வேண்டுமா? அல்லது திண்பண்டம் வேண்டுமா? சொல்லுங்கள்…https://www.bbc.com/tamil/science-45787762

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.