Jump to content

இறப்பற்றோர்


Recommended Posts

இறப்பற்றோர் 

வெட்டப்பட்ட கரங்கள் 
வேகமுடன் வளர்கின்றன
முறிக்க முறிக்க 
முளைவிடும் 
மூர்க்கமான செடியைப்போல்
கத்தரிக்கப்பட்ட கரங்கள் 
கணுக்களைப் பிரசவிக்கின்றன 
சிதைக்கப்பட்டவைகள் 
சிவப்பாக வெடிக்கின்றன.

நெரிக்கப்பட்ட குரல்வளைகள் 
நெருப்பு வரிகளில் 
முற்றுகையை எதிர்த்து 
முழக்கமிடுகின்றன..

சூடுபட்ட 
சுவாசப் பைகள் 
ஆக்கிரமிப்பாளனை
அவிப்பதற்கு 
விடுதலை மூச்சை 
வெம்மையாக 
வெளியேற்றுகின்றன..

இறந்து போனான் 
என எதிரியவன் 
எக்காளமிடுகையில் 
பிணங்கள் இங்கே 
பிறவி எடுக்கின்றன..

எதிரிகளே..
துடிக்கப் பதைக்க
வதைத்துக் கொல்லுங்கள்
அதனாலென்ன?
துண்டிக்கத் துண்டிக்கத்
துளிர்ப்பார்கள் வீரர்கள்..

எங்கள் எல்லை நீங்கி 
உங்கள் படைகள் 
ஓடும்வரை 
எங்கள் வீரர்க்கு 
இறப்பே இல்லை.

உரிமைவேண்டி 
உயர்ந்த கரங்கள் 
ஆக்கிரமிப்புகளுக்கு 
அடிபணிந்து போகாது!

- 22 வயதான போராளிக்கவிஞர் கஸ்தூரி, ஆனையிறவுச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொள்ள முன்பு களத்தில் கடும் சமருக்கு மத்தியில் எழுதிய, 'எழுதி முடிக்கப்படாத கவிதை'.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் நின்று சமராடும் வீரர்களின் கவிதைகளும் கதைகளும் விடுதலை விருட்ஷத்தின் விதைகளாகவே மண்ணில் புதைந்து கல்லையும் பிளந்து துளிர்க்கின்றன.....!

அம்மாதிரியான ஒரு விதைதான் இக் கவிதையும்.....!  tw_blush: 

நன்றி நுணா.....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.