Jump to content

இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

FOR THE ATTENTION OF THE SRI LANKAN MUSLIM BROTHERS AND SISTERS - V.I.S.JAYAPALAN
.
இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன்
.
மேற்குலகில் இஸ்லாம் பற்றிய கவிஞர் வாசுதேவனின் முகநூல் பதிவு முக்கியமானது. இன்றய சூழலில் இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபாண்மையினராக வாழும் நாடுகளில் இஸ்லாமிய எதிர்ப்பு 1915ம் ஆண்டு இனக்கலவர பின்னணியைப்போல வர்த்தகம் சமயம் சார்ந்த போட்டிகளால் மட்டும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை என்பதை உணர்வது முக்கியம். 
.
மேற்குலகில் மையபட்டு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களால் பிரபலப்படுத்தும் கருத்துக்கள் இன்று உலகெங்கும் பரவும் இஸ்லாமிய எதிர்ப்பு வைரஸின் ஊற்றாக உள்ளது. மேற்குலகின் பிரசாரங்களின் முக்கிய அம்சங்கள் சில...
1. முஸ்லிம்கள் குடும்ப கட்டுப்பாடை அனுசரிப்பதில்லை. அத்னால் உயரும் முஸ்லிம்களின் பிறப்புவிகிதமும் அதிகரிக்கும் குடி வரவுடன் சேர்ந்து முஸ்லிம்களை ஒருநாள் ஐரோப்பாவில் பெரும்பாண்மை நிலக்குக் கொண்டுபோய்விடும். 
2. இஸ்லாமிய மதரசாக்கள் பயங்கர வாதத்தை தூண்டி நாற்றாங்கால்களாகி வளர்க்கின்றன.
3.ஐரோப்பாவில் நாங்கள் போராடிப் பெற்ற பெண்விடுதலைக்கு எங்கள் நாட்டிலேயே இஸ்லாமியர்கள் சவக்குழி தோண்டுகிறார்கள்.
4. அரசுக்குள் அரசுபோல எங்கள் அரசியல் யாப்புக்கும் மனித மற்றும் பெண்கள் உரிமைக்கும் எதிரான சட்ட திட்டங்களை அமூலாக்குகிறார்கள்.

.
மேற்கத்தைய இஸ்லாமிய எதிர்ப்பு மேற்படி அம்சங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. இந்தகைய கருத்துக்கள் முஸ்லிம்கள் சிறுபாண்மையினராக வாழும் நாடுகளில் வேகமாகப் பரவி நிலவும் இஸ்லாமியர் பற்றிய கொள்கைகளை வெகுவாகப் பாதித்து வருகிறது.இதனை முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்வது அவசியமாகும்.
இந்த புதிய பிரச்சாரத்தின் ஆபத்துக்கள் பற்றிய விவாதங்கள் முஸ்லிம் மக்கள் மத்தில் பெரும்பாலும் இடம்பெற இல்லை. இச்சூழல் கவலை தருகிறது. 
.
பல முஸ்லிம் நாடுகள் பல புதிய நிலமைக்கு முகம்கொடுக்கும் செம்மைப் படுத்தல்களை முன்னெடுத்துள்ளனர். முஸ்லிம்கள் சிறுபாண்மையாகவுள்ள நாடுகளின் பெரும்பாண்மைச் சமூகங்களும் அரசும் முஸ்லிம்கள் பற்றிய ஐரோப்பிய கருத்துக்களை மேல் புள்ளியாகவும் முஸ்லிம் நாடுகளில் இடம்பெறும் சீர்திருத்தங்களை கீழ் புள்ளியாகவும் வைத்தே சிந்தித்து இயங்குகின்றன. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். .
.
முஸ்லிம் நாடுகளில் கைவிடபடுகிற நடைமுறைகளை முஸ்லிம்கள் சிறுபாண்மையாக வாழும் நாடுகளில் வலியுறுத்துவது நெடுநாளுக்கு சாத்தியமானதா எதிர்கால சந்ததிகளின் அமைத்திக்க்கு உகந்ததா என்பதுபற்றி முஸ்லிம்கள் சிந்திகவேண்டும். முஸ்லிம் நாடுகள் கைவிடும் விடயங்களை நாம் கைவிடமட்டோம் என பிடிவாதமாக பழமை வாதம் பேசுவது முஸ்லிம் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செய்யும் நன்மையா தீமையா என்பதுபற்றி விவாதித்து முடிவெடுப்பது காலத்தின் கட்டாயமாகும். .********

 

 
கவிஞர் வாசுதேவனின் (Vasu Devan)  கட்டுரை.
மேற்குலகில் இஸ்லாம்.
Vasu Devan
 
12 hrs · 
 

பிரான்சிலும் ஐரோப்பாவிலும் சனத்தொகை மற்றும் சனப்பெருக்கம் பற்றிய கோட்பாட்டை மையப்படுத்தி பாரிய விவாதங்கள் மீடியாக்களிலும் சமூக வலைத்தளங்களிலும் முன்னெடுக்கப்படுவது அண்ணளவாக நாளாந்த விடயமாகிவிட்டது.

பொதுவாக மேற்கு ஐரோப்பாவில் குறிப்பாகப் பிரான்சில் "இஸ்லாமிய ஆக்கிரமிப்பு" எனும் விடயம் புத்தி ஜீவிகளால் மூர்க்கமான முறையில் வெளிப்படுத்தப்படுகிறது. இவ்வியடம் தொடர்பாக பல நூல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. விவாதங்களின் வன்முறையானது ஒரு இனக்கலவரத்திற்கு முன்னிட்டுச் செல்லுமோ என்ற அச்சமும் ஏற்படாமலில்லை.

மேற்கு ஐரோப்பாவில் எழுந்து நிற்கும் தீவிர இஸ்லாமிய எதிர்ப்பு நிலையும், தீவிர வலதுசாரிக்கட்சிகளின் செல்வாக்கு அதிகரிப்பும் சமாந்தரமாகப் பயணிக்கின்றன.

ஐரோப்பாவில் 2016 ம் ஆண்டு செய்யப்பட்ட (மூலம்: மேடியாபாட்) கருத்துக்கணிப்பின் பிரகாரம் 25.78 மில்லியன் இஸ்லாமியர்கள் வாழ்ந்தார்கள் (முக்கிய நாடுகள்: பிரான்ஸ், சேர்மனி, அவுஸ்திரியா, சுவீடன் மற்றும் சுவிஸ் - கிழக்கில் குறிப்பாக பல்கேரியா).

2050 ம் ஆண்டில் ஐரோப்பாவில் வாழக்கூடிய முஸ்லீம்களின் எண்ணிக்கை தொடர்பான ஒரு கணக்கெடுப்பு மூன்று அடிப்படைகளில் மேற்கொள்ளப்பட்டது.

1) இறுக்கமான குடிவரவுக்கட்டுப்பாடு.
2) மத்திமமான குடிவரவுக்கட்டுப்பாடு.
3) இளகிய கட்டுப்பாடும், தாராள அகதிகள் வருகையும்.

முதலாவது நிபந்தனையில் 2050 ல் 35 மில்லியன் இஸ்லாமியர்கள் ஐரோப்பாவில் வாழ்வார்கள்- ஐரோப்பிய சனத்தொகையில் இது 7.4 விழுக்காடாகும்.

இரண்டாவது நிபந்தனையில் 2050 ல் 58 மில்லியன் இஸ்லாமியர்கள் ஐரோப்பாவில் வாழ்வார்கள்- ஐரோப்பிய சனத்தொகையில் இது 11.2 விழுக்காடாகும்.

மூன்றாவது நிபந்தனையில் 2050 ல் 75.5 மில்லியன் இஸ்லாமியர்கள் ஐரோப்பாவில் வாழ்வார்கள்- ஐரோப்பிய சனத்தொகையில் இது 14.0 விழுக்காடாகும்.

அண்ணளவாக 30 ஆண்டுகளின் வரவிருக்கும் இச்சனத்தொகை மாற்றமானது பாரிய கலாச்சார மாற்றங்களையும், அரசியல் திருப்பங்களையும் ஏற்படுத்தும் என்பதும் வெளிப்படையான உண்மையே. இம்மூன்று சூழ்நிலைகளிலும் எவற்றை ஆட்சியாளர்கள் நடைமுறைக்குக் கொண்டு செல்லவிருக்கிறார்கள் என்பதைப்பொறுத்து விளைவுகளும் மாறுபடலாம்.

இஸ்லாம் வெனுமனே ஒரு ஆத்மீக நிலைப்பாடக இல்லாது அது ஒரு சட்டக்கோவை என்ற அடிப்படையிலேயே இஸ்லாமியர்களால் கருதப்படுகிறது என்றும் ஆகவே இஸ்லாமியரின் வாழ்வுமுறை மற்றும் காலச்சாரம் போன்றவை ஐரோப்பியச் சனநாகயத்துடன் ஒருபோதும் ஒத்துப்போகதவை என்பதும் மேற்குலகப் புத்திஜீவிகளின் எண்ணமாக உள்ளது. பலர் அதை வெளிப்படையாகவும் விளம்ப ஆரம்பித்துள்ளார்கள்.

முக்கியமான இன்னொரு விடயத்தையும் இங்கு உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது. இஸ்ரேல் உருவாக்கத்திற்கு பின்னரான இஸ்லாமிய-யூத உறவுகளின் சீர்குலைவு அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கும் பகையுணர்வைக் கூர்மைப்படுத்தியிருக்கிறது. மேற்கைரோப்பாவில் இஸ்லாமிய-யூதப் பகையுணர்வு பல இடங்களில் வன்முறையாகக் கூட வெளிப்பாடடைந்துள்ளது. பலஸ்தீனம் பாதிக்கப்படும் போதெல்லாம் மேற்கு நாடுகளில் இஸ்லாமிய-யூத உறவு கொதிநிலைக்குச் செல்வது வழமையாகிவிட்டது.

இவ்விடயம் தொடரபாகச் சர்வசன ஊடகங்களில் விவாதங்கள் நடைபெறும் வேளைகளில் அவை இஸ்ரேலியர்களுக்கும பலஸ்தீனர்களுக்குமான விவாதம் போல் கொதி நிலைக்குச் செல்வதும் வழமையான விடயமே.

இப்பின்ணணியில், யூதப் புத்திஜீவிகள் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கைப் பிரான்சில் பிரச்சாரம் செய்கிறார்கள் என இஸ்லாமியர்களும், இஸ்லாமியர்கள் தம்மை அச்சுறுத்துகிறார்கள் என யூதர்களும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

இஸ்லாமிய அச்சுறுத்தல் காரணமாக பிரஞ்சு யூதர்கள் இஸ்ரேலுக்குச் சென்று குடியேறுகிறார்கள் என்ற ஒரு கருத்து நிலைப்பாடு இருப்பினும் இது தொடர்பான எண்ணிக்கை அடிப்படையிலான ஆவணங்கள் காணக்கிடைக்கவில்லை.

எவையெப்படி இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளின் ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்சில் இஸ்லாமிய எதிர்ப்புப்போக்கு தீவிரமடைந்துள்ளது வெளிப்படை உண்மையாகும். இஸ்லாம் தொடர்பான பாசிச உரையாடல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

ஐரோப்பியப் பொருளாதார நெருக்கடி மற்றும் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் வன்முறைச் சம்பவங்கள் போன்றவை இந்நிலப்பாடுகளுக்குப் பசளையிடுகின்றன என்பதையும் கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டும்.

வரவிருக்கும் கால்நூற்றாண்டுக்குள் பிரான்சில் ஒரு உள்நாட்டுப்போர் உருவாகும் என்று நம்புபவர்களின் எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் அதிகரித்துக்கொண்டு செல்கிறது. இது தொடர்பாக மற்றைய ஐரோப்பிய நாடுகளின் உள்ளார்ந்த நிலையை அந்த அந்த நாடுகளில் வாழ்பவர்கள் பகிரவேண்டுகிறேன். 
11.10.2018.

 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் முதலில் தமிழர் தாயகத்தில் இஸ்லாம் மதத்துக்கு மறு அல்லது ஊரைவிட்டு ஓடிப்பொ என வீட்டை எரிக்கும் உங்களது சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுங்கோ. 

அதைவிட்டு அகதியாகவும் அண்டிப்பிழைக்கவும் வந்ததுகளுக்கு அட்வைஸ் பண்ணுறியள் ஜேர்மன் ஜேர்மனியர்களுக்கும் பிரான்ஸ் பிரஞ்சு இனத்தவர்க்கும் இங்கிலாந்து ஆங்கிலேயருக்கும் அதுபோல் ஏனைய பிறநாடுகள் அங்கு வழிவழியாக வாழும் சந்ததிகளுக்கும் உரிய நாடுகள் அவர்கள் எங்களை வெளியேறு எனக்கூறினால் வெளியேறவேண்டும்.

Link to comment
Share on other sites

நண்பர் Elugnajiru

கட்டுரை மேல்நாடுகளில் வாழும்  முஸ்லிம் அகதிகள் பற்றியதல்ல. தலைப்பை வாசியுங்கள். “இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு” 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்   ?   தான் போற... வழியை காணவில்லை. ?
அதற்குள்... முஸ்லீம்  சகோதர, சகோதரிகளுக்கும்  ✍️  "அட்வைஸ்"  ✍️ பண்ணுகிறார்கள்.  
இதெல்லாம்... காலத்தின் கொடுமையப்பா..... :grin:

Link to comment
Share on other sites

மேற்கு நாடுகளில் முஸ்லிம்களின் இனப்பெருக்க வேகத்துக்கு கண்டிப்பாக  வேகத் தடை போட வேண்டும். மேற்கு நாடுகள் தரும் அனைத்து தாராள வசதிகளையும் பயன்படுத்தி கொண்டு ஒன்றுக்கு ஐந்து என்று பிள்ளைகளை பெற்றுக் கொண்டு இறுதியில் அதே நாடுகளை கைப்பற்ற நினைக்கின்றனர்.

அவர்கள் நடத்தும் இஸ்லாமிய பள்ளிகளில் இதனை ஒரு ஜிகாத்தாகவே அவர்கள் முழக்கமிட்டு வலியுறுத்துகின்றனர். அண்மையில் பிரிட்டனை சேர்ந்த ஒரு முஸ்லிம் எம் பி யின் வீடியோவை பார்க்க கிடைத்தது. அதில் அவர் சொல்கின்றார் ஒவ்வொரு தொகுதியிலும் முஸ்லிம் எம் பிக்கள் வெல்ல கூடிய நிலை மெல்ல மெல்ல உருவாகி வருகின்றது என்றும் முஸ்லிம் மேயரை பெற்றுக் கொண்டது போல ஒரு நாள் கண்டிப்பாக முஸ்லிம் பிரதமரை தாம் தெரிவு செய்வர் என்றும் சொல்கின்றார்.

இஸ்லாமியர்கள் எங்கெங்கு அதிகளவானவர்களாக மாறுகின்றனரோ அங்கங்கு வாழும் பிற மக்களின் வழிபாட்டுரிமை தொடக்கம் அனைத்தையும் அவர்கள் பறித்துக் கொள்வதே வரலாறு

இதை அறிந்தும் அவர்களுக்காக ஜிஞ் ஜிஞ்சா அடிக்க ஜெயபாலன் போன்றோர்களால் தான் முடியும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

மேற்கு நாடுகளில் முஸ்லிம்களின் இனப்பெருக்க வேகத்துக்கு கண்டிப்பாக  வேகத் தடை போட வேண்டும். மேற்கு நாடுகள் தரும் அனைத்து தாராள வசதிகளையும் பயன்படுத்தி கொண்டு ஒன்றுக்கு ஐந்து என்று பிள்ளைகளை பெற்றுக் கொண்டு இறுதியில் அதே நாடுகளை கைப்பற்ற நினைக்கின்றனர்.

அவர்கள் நடத்தும் இஸ்லாமிய பள்ளிகளில் இதனை ஒரு ஜிகாத்தாகவே அவர்கள் முழக்கமிட்டு வலியுறுத்துகின்றனர். அண்மையில் பிரிட்டனை சேர்ந்த ஒரு முஸ்லிம் எம் பி யின் வீடியோவை பார்க்க கிடைத்தது. அதில் அவர் சொல்கின்றார் ஒவ்வொரு தொகுதியிலும் முஸ்லிம் எம் பிக்கள் வெல்ல கூடிய நிலை மெல்ல மெல்ல உருவாகி வருகின்றது என்றும் முஸ்லிம் மேயரை பெற்றுக் கொண்டது போல ஒரு நாள் கண்டிப்பாக முஸ்லிம் பிரதமரை தாம் தெரிவு செய்வர் என்றும் சொல்கின்றார்.

இஸ்லாமியர்கள் எங்கெங்கு அதிகளவானவர்களாக மாறுகின்றனரோ அங்கங்கு வாழும் பிற மக்களின் வழிபாட்டுரிமை தொடக்கம் அனைத்தையும் அவர்கள் பறித்துக் கொள்வதே வரலாறு

இதை அறிந்தும் அவர்களுக்காக ஜிஞ் ஜிஞ்சா அடிக்க ஜெயபாலன் போன்றோர்களால் தான் முடியும்.

 

லண்டனில் வல்வெட்டித்துறை சேர்ந்த ஒருவர் லெட்டிங் ஏஜெண்சி வைத்து இருந்தார். 

இவருக்கு சில சோமாலி முஸ்லீம் வாடிக்கையாளர்கள் இருந்தனர். அதில் ஒரு பெண்ணுக்கு 4  அறை வீடு கொடுத்து இருந்தார். 

சில நாட்களின் பின்னர் 5 அறை வீடு ஒன்று அவர் நிறுவன கைக்கு வந்தது. கிளீன் பண்ணி அடுத்த மாதம் முதல் கொடுக்க வேண்டும்.

வேலை ஆட்கள் யாருக்கு கொடுக்க முடியும், வாடகை கூட, யார் வருவார்கள் என்று மூன்று நாட்களாக யோசித்து கொண்டிருந்தனர்.

வந்தார் ஊருக்கு போயிருந்த நம்மாளு. என்ன விசயம் என்று கேட்டு விட்டு.... இரண்டு நிமிசத்தில் தீர்வு சொன்னார்.

அந்த 4 அறை வீட்டில் இருக்கும் சோமாலி எடுத்து 11 மாதம் ஆகுது. ஆள் 5 ரூம் கேட்டு இந்த கிழமை அல்லது அடுத்த கிழமை வரும்.... வேணுமெண்டா, சும்மா விசாரிக்கிற மாதிரி போனைப் போட்டு பாருங்கள் என்று சொல்லவும்... அந்த பெண் கை குழந்தையுடன் உள்ள வந்தார்.  அந்தளவு நம்பிக்கை அவர்களது இனப்பெருக்கத்தில்... போன பிறகு சொன்னார்.... அடுத்த வருடம் 6 ரூம் கேட்டு ஆள் வரும்.

இந்த இஸ்லாமியரை நம்பி, பலர் லண்டனில் கூடிய அறைகள் கொண்ட வீடுகளில் முதலிட்டிருந்தனர். ஒரு பிள்ளைக்கு தனி ரூம் வேண்டும் என்ற பொது சட்டத்தினை தமக்கு சாதகமாக பயன்படுத்தி 9, அறை வீடு, 10 அறை வீடு என மாத வாடகை £10,000, £12,000 என அரச செலவில் (அகதிகள்) தங்கி இருந்தனர்.

இப்படி வேலைக்கு போகாமல் வீட்டில குந்தி இருந்து கொண்டு... பள்ளிக்கு போவதும்... இஸ்லாமிய தீவிர வாதம் பேசுவதும்.... வத வத என்று பிள்ளைகளை பெறுவதும் தான் அத்தார்மார் வேலை ஆக இருந்தது. தமது பிள்ளைகள் படிக்கும் பாடசாலைகளில் பன்றி இறைச்சியோ, சொசேஜ் மதிய சாப்பாட்டில் யாருக்குமே (வெள்ளை மாணவர் உட்பட) கொடுக்க கூடாது என்று கோரிக்கை வேறு எழுந்தது.

டேவிட் கேமரோன், பார்த்தார். சரி வராது... நீங்கள் எவ்வளவையும் பெறுங்கள். மாதாந்த வாடகை அலவன்ஸ் £500 மட்டுமே என்று சொன்னதுடன்... பணம் தரப்படும்.... நீங்களே வீடு தேடிக் கொள்ளுங்கள் என்று சொல்லிப் போடடார்.

அத்தார்மார் வேலை க்கு போக வேண்டியதாய் போச்சுது நிலைமை.

இப்ப குஞ்சு, குருமான்கள் குறைஞ்சுடுது.

Image result for hook hand muslim

Hook hand hate preacher of Egypt in UK Abu Hamza: இப்போது அமேரிக்க சிறையில்...

Image result for Abu Qatada

ஜோர்டான் காரரான அபு கட்டார் - இப்போது திருப்பி அனுப்பப்பட்டு ஜோர்டான் சிறையில்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் நான் கூறவருவது உங்களது இலங்கை முஸ்லீம் நண்பர்களுடன் எம்மவர்களது வீடுகளை எரிக்கிறது இப்படியான  விடையங்களைக் கைவிடும்படி கேட்டுப்பாருங்கள் என 

சரி இச்செய்தியை நீங்கள் நம்புகிறியளோ இல்லையோ உங்களது இஸ்லாமிய நண்பர்களுடன் ஒரு நட்புரீதியான கலந்துரையாடலாவது செய்திருப்பீர்களா

உங்கள் நெருங்கிய நண்பன் ராவூல் கக்கீமிடம்கூட  இதுபற்றிப்பேசலாம்தானே.

குடாநாட்டிலிருந்து இஸ்லாமியர்கள் வெளியேற்றப்பட்டது அவ்வேளையில் எமக்குச் சரியாகப்பட்டது இப்போது அதைப்பற்றி நினைக்கும்போது நாம் தவறுவிட்டதை ஒப்புக்கொண்டே தீரவேண்டும் எனும் ஒரு எண்ண்ப்பாட்டுக்கு நாம் அனேகர் வந்துள்ளோம்தானே அதுபோல் பேசிப்பாருங்கள் இனிமேலும் தவறுகள் இரு தரப்பிடமிருந்தும் நடக்காதமாதிரி சூழ்நிலையை உருவாக்க முயல்வோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.