Jump to content

இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

FOR THE ATTENTION OF THE SRI LANKAN MUSLIM BROTHERS AND SISTERS - V.I.S.JAYAPALAN
.
இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன்
.
மேற்குலகில் இஸ்லாம் பற்றிய கவிஞர் வாசுதேவனின் முகநூல் பதிவு முக்கியமானது. இன்றய சூழலில் இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபாண்மையினராக வாழும் நாடுகளில் இஸ்லாமிய எதிர்ப்பு 1915ம் ஆண்டு இனக்கலவர பின்னணியைப்போல வர்த்தகம் சமயம் சார்ந்த போட்டிகளால் மட்டும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை என்பதை உணர்வது முக்கியம். 
.
மேற்குலகில் மையபட்டு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களால் பிரபலப்படுத்தும் கருத்துக்கள் இன்று உலகெங்கும் பரவும் இஸ்லாமிய எதிர்ப்பு வைரஸின் ஊற்றாக உள்ளது. மேற்குலகின் பிரசாரங்களின் முக்கிய அம்சங்கள் சில...
1. முஸ்லிம்கள் குடும்ப கட்டுப்பாடை அனுசரிப்பதில்லை. அத்னால் உயரும் முஸ்லிம்களின் பிறப்புவிகிதமும் அதிகரிக்கும் குடி வரவுடன் சேர்ந்து முஸ்லிம்களை ஒருநாள் ஐரோப்பாவில் பெரும்பாண்மை நிலக்குக் கொண்டுபோய்விடும். 
2. இஸ்லாமிய மதரசாக்கள் பயங்கர வாதத்தை தூண்டி நாற்றாங்கால்களாகி வளர்க்கின்றன.
3.ஐரோப்பாவில் நாங்கள் போராடிப் பெற்ற பெண்விடுதலைக்கு எங்கள் நாட்டிலேயே இஸ்லாமியர்கள் சவக்குழி தோண்டுகிறார்கள்.
4. அரசுக்குள் அரசுபோல எங்கள் அரசியல் யாப்புக்கும் மனித மற்றும் பெண்கள் உரிமைக்கும் எதிரான சட்ட திட்டங்களை அமூலாக்குகிறார்கள்.

.
மேற்கத்தைய இஸ்லாமிய எதிர்ப்பு மேற்படி அம்சங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. இந்தகைய கருத்துக்கள் முஸ்லிம்கள் சிறுபாண்மையினராக வாழும் நாடுகளில் வேகமாகப் பரவி நிலவும் இஸ்லாமியர் பற்றிய கொள்கைகளை வெகுவாகப் பாதித்து வருகிறது.இதனை முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்வது அவசியமாகும்.
இந்த புதிய பிரச்சாரத்தின் ஆபத்துக்கள் பற்றிய விவாதங்கள் முஸ்லிம் மக்கள் மத்தில் பெரும்பாலும் இடம்பெற இல்லை. இச்சூழல் கவலை தருகிறது. 
.
பல முஸ்லிம் நாடுகள் பல புதிய நிலமைக்கு முகம்கொடுக்கும் செம்மைப் படுத்தல்களை முன்னெடுத்துள்ளனர். முஸ்லிம்கள் சிறுபாண்மையாகவுள்ள நாடுகளின் பெரும்பாண்மைச் சமூகங்களும் அரசும் முஸ்லிம்கள் பற்றிய ஐரோப்பிய கருத்துக்களை மேல் புள்ளியாகவும் முஸ்லிம் நாடுகளில் இடம்பெறும் சீர்திருத்தங்களை கீழ் புள்ளியாகவும் வைத்தே சிந்தித்து இயங்குகின்றன. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். .
.
முஸ்லிம் நாடுகளில் கைவிடபடுகிற நடைமுறைகளை முஸ்லிம்கள் சிறுபாண்மையாக வாழும் நாடுகளில் வலியுறுத்துவது நெடுநாளுக்கு சாத்தியமானதா எதிர்கால சந்ததிகளின் அமைத்திக்க்கு உகந்ததா என்பதுபற்றி முஸ்லிம்கள் சிந்திகவேண்டும். முஸ்லிம் நாடுகள் கைவிடும் விடயங்களை நாம் கைவிடமட்டோம் என பிடிவாதமாக பழமை வாதம் பேசுவது முஸ்லிம் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செய்யும் நன்மையா தீமையா என்பதுபற்றி விவாதித்து முடிவெடுப்பது காலத்தின் கட்டாயமாகும். .********

 

 
கவிஞர் வாசுதேவனின் (Vasu Devan)  கட்டுரை.
மேற்குலகில் இஸ்லாம்.
Vasu Devan
 
12 hrs · 
 

பிரான்சிலும் ஐரோப்பாவிலும் சனத்தொகை மற்றும் சனப்பெருக்கம் பற்றிய கோட்பாட்டை மையப்படுத்தி பாரிய விவாதங்கள் மீடியாக்களிலும் சமூக வலைத்தளங்களிலும் முன்னெடுக்கப்படுவது அண்ணளவாக நாளாந்த விடயமாகிவிட்டது.

பொதுவாக மேற்கு ஐரோப்பாவில் குறிப்பாகப் பிரான்சில் "இஸ்லாமிய ஆக்கிரமிப்பு" எனும் விடயம் புத்தி ஜீவிகளால் மூர்க்கமான முறையில் வெளிப்படுத்தப்படுகிறது. இவ்வியடம் தொடர்பாக பல நூல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. விவாதங்களின் வன்முறையானது ஒரு இனக்கலவரத்திற்கு முன்னிட்டுச் செல்லுமோ என்ற அச்சமும் ஏற்படாமலில்லை.

மேற்கு ஐரோப்பாவில் எழுந்து நிற்கும் தீவிர இஸ்லாமிய எதிர்ப்பு நிலையும், தீவிர வலதுசாரிக்கட்சிகளின் செல்வாக்கு அதிகரிப்பும் சமாந்தரமாகப் பயணிக்கின்றன.

ஐரோப்பாவில் 2016 ம் ஆண்டு செய்யப்பட்ட (மூலம்: மேடியாபாட்) கருத்துக்கணிப்பின் பிரகாரம் 25.78 மில்லியன் இஸ்லாமியர்கள் வாழ்ந்தார்கள் (முக்கிய நாடுகள்: பிரான்ஸ், சேர்மனி, அவுஸ்திரியா, சுவீடன் மற்றும் சுவிஸ் - கிழக்கில் குறிப்பாக பல்கேரியா).

2050 ம் ஆண்டில் ஐரோப்பாவில் வாழக்கூடிய முஸ்லீம்களின் எண்ணிக்கை தொடர்பான ஒரு கணக்கெடுப்பு மூன்று அடிப்படைகளில் மேற்கொள்ளப்பட்டது.

1) இறுக்கமான குடிவரவுக்கட்டுப்பாடு.
2) மத்திமமான குடிவரவுக்கட்டுப்பாடு.
3) இளகிய கட்டுப்பாடும், தாராள அகதிகள் வருகையும்.

முதலாவது நிபந்தனையில் 2050 ல் 35 மில்லியன் இஸ்லாமியர்கள் ஐரோப்பாவில் வாழ்வார்கள்- ஐரோப்பிய சனத்தொகையில் இது 7.4 விழுக்காடாகும்.

இரண்டாவது நிபந்தனையில் 2050 ல் 58 மில்லியன் இஸ்லாமியர்கள் ஐரோப்பாவில் வாழ்வார்கள்- ஐரோப்பிய சனத்தொகையில் இது 11.2 விழுக்காடாகும்.

மூன்றாவது நிபந்தனையில் 2050 ல் 75.5 மில்லியன் இஸ்லாமியர்கள் ஐரோப்பாவில் வாழ்வார்கள்- ஐரோப்பிய சனத்தொகையில் இது 14.0 விழுக்காடாகும்.

அண்ணளவாக 30 ஆண்டுகளின் வரவிருக்கும் இச்சனத்தொகை மாற்றமானது பாரிய கலாச்சார மாற்றங்களையும், அரசியல் திருப்பங்களையும் ஏற்படுத்தும் என்பதும் வெளிப்படையான உண்மையே. இம்மூன்று சூழ்நிலைகளிலும் எவற்றை ஆட்சியாளர்கள் நடைமுறைக்குக் கொண்டு செல்லவிருக்கிறார்கள் என்பதைப்பொறுத்து விளைவுகளும் மாறுபடலாம்.

இஸ்லாம் வெனுமனே ஒரு ஆத்மீக நிலைப்பாடக இல்லாது அது ஒரு சட்டக்கோவை என்ற அடிப்படையிலேயே இஸ்லாமியர்களால் கருதப்படுகிறது என்றும் ஆகவே இஸ்லாமியரின் வாழ்வுமுறை மற்றும் காலச்சாரம் போன்றவை ஐரோப்பியச் சனநாகயத்துடன் ஒருபோதும் ஒத்துப்போகதவை என்பதும் மேற்குலகப் புத்திஜீவிகளின் எண்ணமாக உள்ளது. பலர் அதை வெளிப்படையாகவும் விளம்ப ஆரம்பித்துள்ளார்கள்.

முக்கியமான இன்னொரு விடயத்தையும் இங்கு உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது. இஸ்ரேல் உருவாக்கத்திற்கு பின்னரான இஸ்லாமிய-யூத உறவுகளின் சீர்குலைவு அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கும் பகையுணர்வைக் கூர்மைப்படுத்தியிருக்கிறது. மேற்கைரோப்பாவில் இஸ்லாமிய-யூதப் பகையுணர்வு பல இடங்களில் வன்முறையாகக் கூட வெளிப்பாடடைந்துள்ளது. பலஸ்தீனம் பாதிக்கப்படும் போதெல்லாம் மேற்கு நாடுகளில் இஸ்லாமிய-யூத உறவு கொதிநிலைக்குச் செல்வது வழமையாகிவிட்டது.

இவ்விடயம் தொடரபாகச் சர்வசன ஊடகங்களில் விவாதங்கள் நடைபெறும் வேளைகளில் அவை இஸ்ரேலியர்களுக்கும பலஸ்தீனர்களுக்குமான விவாதம் போல் கொதி நிலைக்குச் செல்வதும் வழமையான விடயமே.

இப்பின்ணணியில், யூதப் புத்திஜீவிகள் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கைப் பிரான்சில் பிரச்சாரம் செய்கிறார்கள் என இஸ்லாமியர்களும், இஸ்லாமியர்கள் தம்மை அச்சுறுத்துகிறார்கள் என யூதர்களும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

இஸ்லாமிய அச்சுறுத்தல் காரணமாக பிரஞ்சு யூதர்கள் இஸ்ரேலுக்குச் சென்று குடியேறுகிறார்கள் என்ற ஒரு கருத்து நிலைப்பாடு இருப்பினும் இது தொடர்பான எண்ணிக்கை அடிப்படையிலான ஆவணங்கள் காணக்கிடைக்கவில்லை.

எவையெப்படி இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளின் ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்சில் இஸ்லாமிய எதிர்ப்புப்போக்கு தீவிரமடைந்துள்ளது வெளிப்படை உண்மையாகும். இஸ்லாம் தொடர்பான பாசிச உரையாடல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

ஐரோப்பியப் பொருளாதார நெருக்கடி மற்றும் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் வன்முறைச் சம்பவங்கள் போன்றவை இந்நிலப்பாடுகளுக்குப் பசளையிடுகின்றன என்பதையும் கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டும்.

வரவிருக்கும் கால்நூற்றாண்டுக்குள் பிரான்சில் ஒரு உள்நாட்டுப்போர் உருவாகும் என்று நம்புபவர்களின் எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் அதிகரித்துக்கொண்டு செல்கிறது. இது தொடர்பாக மற்றைய ஐரோப்பிய நாடுகளின் உள்ளார்ந்த நிலையை அந்த அந்த நாடுகளில் வாழ்பவர்கள் பகிரவேண்டுகிறேன். 
11.10.2018.

 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் முதலில் தமிழர் தாயகத்தில் இஸ்லாம் மதத்துக்கு மறு அல்லது ஊரைவிட்டு ஓடிப்பொ என வீட்டை எரிக்கும் உங்களது சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுங்கோ. 

அதைவிட்டு அகதியாகவும் அண்டிப்பிழைக்கவும் வந்ததுகளுக்கு அட்வைஸ் பண்ணுறியள் ஜேர்மன் ஜேர்மனியர்களுக்கும் பிரான்ஸ் பிரஞ்சு இனத்தவர்க்கும் இங்கிலாந்து ஆங்கிலேயருக்கும் அதுபோல் ஏனைய பிறநாடுகள் அங்கு வழிவழியாக வாழும் சந்ததிகளுக்கும் உரிய நாடுகள் அவர்கள் எங்களை வெளியேறு எனக்கூறினால் வெளியேறவேண்டும்.

Link to comment
Share on other sites

நண்பர் Elugnajiru

கட்டுரை மேல்நாடுகளில் வாழும்  முஸ்லிம் அகதிகள் பற்றியதல்ல. தலைப்பை வாசியுங்கள். “இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு” 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்   ?   தான் போற... வழியை காணவில்லை. ?
அதற்குள்... முஸ்லீம்  சகோதர, சகோதரிகளுக்கும்  ✍️  "அட்வைஸ்"  ✍️ பண்ணுகிறார்கள்.  
இதெல்லாம்... காலத்தின் கொடுமையப்பா..... :grin:

Link to comment
Share on other sites

மேற்கு நாடுகளில் முஸ்லிம்களின் இனப்பெருக்க வேகத்துக்கு கண்டிப்பாக  வேகத் தடை போட வேண்டும். மேற்கு நாடுகள் தரும் அனைத்து தாராள வசதிகளையும் பயன்படுத்தி கொண்டு ஒன்றுக்கு ஐந்து என்று பிள்ளைகளை பெற்றுக் கொண்டு இறுதியில் அதே நாடுகளை கைப்பற்ற நினைக்கின்றனர்.

அவர்கள் நடத்தும் இஸ்லாமிய பள்ளிகளில் இதனை ஒரு ஜிகாத்தாகவே அவர்கள் முழக்கமிட்டு வலியுறுத்துகின்றனர். அண்மையில் பிரிட்டனை சேர்ந்த ஒரு முஸ்லிம் எம் பி யின் வீடியோவை பார்க்க கிடைத்தது. அதில் அவர் சொல்கின்றார் ஒவ்வொரு தொகுதியிலும் முஸ்லிம் எம் பிக்கள் வெல்ல கூடிய நிலை மெல்ல மெல்ல உருவாகி வருகின்றது என்றும் முஸ்லிம் மேயரை பெற்றுக் கொண்டது போல ஒரு நாள் கண்டிப்பாக முஸ்லிம் பிரதமரை தாம் தெரிவு செய்வர் என்றும் சொல்கின்றார்.

இஸ்லாமியர்கள் எங்கெங்கு அதிகளவானவர்களாக மாறுகின்றனரோ அங்கங்கு வாழும் பிற மக்களின் வழிபாட்டுரிமை தொடக்கம் அனைத்தையும் அவர்கள் பறித்துக் கொள்வதே வரலாறு

இதை அறிந்தும் அவர்களுக்காக ஜிஞ் ஜிஞ்சா அடிக்க ஜெயபாலன் போன்றோர்களால் தான் முடியும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

மேற்கு நாடுகளில் முஸ்லிம்களின் இனப்பெருக்க வேகத்துக்கு கண்டிப்பாக  வேகத் தடை போட வேண்டும். மேற்கு நாடுகள் தரும் அனைத்து தாராள வசதிகளையும் பயன்படுத்தி கொண்டு ஒன்றுக்கு ஐந்து என்று பிள்ளைகளை பெற்றுக் கொண்டு இறுதியில் அதே நாடுகளை கைப்பற்ற நினைக்கின்றனர்.

அவர்கள் நடத்தும் இஸ்லாமிய பள்ளிகளில் இதனை ஒரு ஜிகாத்தாகவே அவர்கள் முழக்கமிட்டு வலியுறுத்துகின்றனர். அண்மையில் பிரிட்டனை சேர்ந்த ஒரு முஸ்லிம் எம் பி யின் வீடியோவை பார்க்க கிடைத்தது. அதில் அவர் சொல்கின்றார் ஒவ்வொரு தொகுதியிலும் முஸ்லிம் எம் பிக்கள் வெல்ல கூடிய நிலை மெல்ல மெல்ல உருவாகி வருகின்றது என்றும் முஸ்லிம் மேயரை பெற்றுக் கொண்டது போல ஒரு நாள் கண்டிப்பாக முஸ்லிம் பிரதமரை தாம் தெரிவு செய்வர் என்றும் சொல்கின்றார்.

இஸ்லாமியர்கள் எங்கெங்கு அதிகளவானவர்களாக மாறுகின்றனரோ அங்கங்கு வாழும் பிற மக்களின் வழிபாட்டுரிமை தொடக்கம் அனைத்தையும் அவர்கள் பறித்துக் கொள்வதே வரலாறு

இதை அறிந்தும் அவர்களுக்காக ஜிஞ் ஜிஞ்சா அடிக்க ஜெயபாலன் போன்றோர்களால் தான் முடியும்.

 

லண்டனில் வல்வெட்டித்துறை சேர்ந்த ஒருவர் லெட்டிங் ஏஜெண்சி வைத்து இருந்தார். 

இவருக்கு சில சோமாலி முஸ்லீம் வாடிக்கையாளர்கள் இருந்தனர். அதில் ஒரு பெண்ணுக்கு 4  அறை வீடு கொடுத்து இருந்தார். 

சில நாட்களின் பின்னர் 5 அறை வீடு ஒன்று அவர் நிறுவன கைக்கு வந்தது. கிளீன் பண்ணி அடுத்த மாதம் முதல் கொடுக்க வேண்டும்.

வேலை ஆட்கள் யாருக்கு கொடுக்க முடியும், வாடகை கூட, யார் வருவார்கள் என்று மூன்று நாட்களாக யோசித்து கொண்டிருந்தனர்.

வந்தார் ஊருக்கு போயிருந்த நம்மாளு. என்ன விசயம் என்று கேட்டு விட்டு.... இரண்டு நிமிசத்தில் தீர்வு சொன்னார்.

அந்த 4 அறை வீட்டில் இருக்கும் சோமாலி எடுத்து 11 மாதம் ஆகுது. ஆள் 5 ரூம் கேட்டு இந்த கிழமை அல்லது அடுத்த கிழமை வரும்.... வேணுமெண்டா, சும்மா விசாரிக்கிற மாதிரி போனைப் போட்டு பாருங்கள் என்று சொல்லவும்... அந்த பெண் கை குழந்தையுடன் உள்ள வந்தார்.  அந்தளவு நம்பிக்கை அவர்களது இனப்பெருக்கத்தில்... போன பிறகு சொன்னார்.... அடுத்த வருடம் 6 ரூம் கேட்டு ஆள் வரும்.

இந்த இஸ்லாமியரை நம்பி, பலர் லண்டனில் கூடிய அறைகள் கொண்ட வீடுகளில் முதலிட்டிருந்தனர். ஒரு பிள்ளைக்கு தனி ரூம் வேண்டும் என்ற பொது சட்டத்தினை தமக்கு சாதகமாக பயன்படுத்தி 9, அறை வீடு, 10 அறை வீடு என மாத வாடகை £10,000, £12,000 என அரச செலவில் (அகதிகள்) தங்கி இருந்தனர்.

இப்படி வேலைக்கு போகாமல் வீட்டில குந்தி இருந்து கொண்டு... பள்ளிக்கு போவதும்... இஸ்லாமிய தீவிர வாதம் பேசுவதும்.... வத வத என்று பிள்ளைகளை பெறுவதும் தான் அத்தார்மார் வேலை ஆக இருந்தது. தமது பிள்ளைகள் படிக்கும் பாடசாலைகளில் பன்றி இறைச்சியோ, சொசேஜ் மதிய சாப்பாட்டில் யாருக்குமே (வெள்ளை மாணவர் உட்பட) கொடுக்க கூடாது என்று கோரிக்கை வேறு எழுந்தது.

டேவிட் கேமரோன், பார்த்தார். சரி வராது... நீங்கள் எவ்வளவையும் பெறுங்கள். மாதாந்த வாடகை அலவன்ஸ் £500 மட்டுமே என்று சொன்னதுடன்... பணம் தரப்படும்.... நீங்களே வீடு தேடிக் கொள்ளுங்கள் என்று சொல்லிப் போடடார்.

அத்தார்மார் வேலை க்கு போக வேண்டியதாய் போச்சுது நிலைமை.

இப்ப குஞ்சு, குருமான்கள் குறைஞ்சுடுது.

Image result for hook hand muslim

Hook hand hate preacher of Egypt in UK Abu Hamza: இப்போது அமேரிக்க சிறையில்...

Image result for Abu Qatada

ஜோர்டான் காரரான அபு கட்டார் - இப்போது திருப்பி அனுப்பப்பட்டு ஜோர்டான் சிறையில்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் நான் கூறவருவது உங்களது இலங்கை முஸ்லீம் நண்பர்களுடன் எம்மவர்களது வீடுகளை எரிக்கிறது இப்படியான  விடையங்களைக் கைவிடும்படி கேட்டுப்பாருங்கள் என 

சரி இச்செய்தியை நீங்கள் நம்புகிறியளோ இல்லையோ உங்களது இஸ்லாமிய நண்பர்களுடன் ஒரு நட்புரீதியான கலந்துரையாடலாவது செய்திருப்பீர்களா

உங்கள் நெருங்கிய நண்பன் ராவூல் கக்கீமிடம்கூட  இதுபற்றிப்பேசலாம்தானே.

குடாநாட்டிலிருந்து இஸ்லாமியர்கள் வெளியேற்றப்பட்டது அவ்வேளையில் எமக்குச் சரியாகப்பட்டது இப்போது அதைப்பற்றி நினைக்கும்போது நாம் தவறுவிட்டதை ஒப்புக்கொண்டே தீரவேண்டும் எனும் ஒரு எண்ண்ப்பாட்டுக்கு நாம் அனேகர் வந்துள்ளோம்தானே அதுபோல் பேசிப்பாருங்கள் இனிமேலும் தவறுகள் இரு தரப்பிடமிருந்தும் நடக்காதமாதிரி சூழ்நிலையை உருவாக்க முயல்வோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.