Jump to content

தமிழ் கவியின் 'இனி ஒருபோதும்'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கவியின் 'இனி ஒருபோதும்'

மகாலத்தில் எழுதுகின்ற ஈழத்தவர்களில் இருவர், எதேனும் கருத்துக்கள்  கூறினால் தூரத்துக்குப் போய்விடுவேன்.  புனைவுக்கு வெளியில் இவர்கள் இப்படி அபத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தாலும் இந்த இருவரும் புனைவில் என்னைத் தொடர்ந்து தேடி வாசிக்கச் செய்பவர்கள்.  அதில் ஒருவர் தமிழ் கவி (நல்லவேளையாக நான் அவரோடு முகநூலில் நண்பராக இல்லை).
 

2.jpg

அவருடைய நாவல்களில் 'இருள் இனி விலகும்' தவிர்த்து, 'இனி வானம் வெளிச்சிரும்', 'ஊழிக்காலம்' என்பவற்றை ஏற்கனவே வாசித்திருக்கின்றேன்.  'இனி ஒருபோதும்' அவரது நான்காவது நாவல். 1990களின் நடுப்பகுதியில் தொடங்கி, 2009ல் பெரும்போர் நிகழ்ந்தகாலப்பகுதி வரை நீளும் கதை. 'ஊழிக்காலத்தை' ஏற்கனவே வாசித்தவர்க்கு அதில் வரும் பாத்திரங்கள் இதில் வருவதையும், அந்த நாவலின் சம்பவங்கள் பல இதற்குள்ளும் இடைவெட்டுவதையும் எளிதாகக் கண்டுபிடிக்கமுடியும்.

தமிழ் கவியின் எழுத்தின் பலமும், பலவீனமும் நேரடியாகச் சம்பவங்களால் அவரது நாவல்கள் அனைத்தையும் நகர்த்திக்கொண்டு செல்வது. எல்லாவற்றையும் உரையாடல்களால் கொண்டு செல்லுதல் சரியான உத்தியா என நான்கு நாவல்களை எழுதிவிட்ட அவர் இனியாவது தீவிரமாகப் பரிசோதிக்கவேண்டும்.

தனது இரு மகன்களையும் போராட்டத்துக்குப் பலிகொடுத்து, புலிகளின் கலை பண்பாட்டு நிகழ்வுகளில் இணைந்து பணியாற்றும் பார்வதி, வறுமையின் கொடுமையிலிருக்கும் தனது பேரப்பிள்ளையான மீனாவைத் தன்னோடு கொண்டுவந்து வளர்க்கத் தொடங்குகின்றார். நாவல், பார்வதி, மீனா, மற்றும் மீனா மையல் கொள்ளும் மது என்கின்ற மூன்றுபேரின் பார்வைகளில் கொண்டு செல்லப்படுகின்றது.

கிளிநொச்சியை இலங்கை இராணுவம் கைப்பற்ற அகதியாக இடம்பெயரும் பார்வதியும் அவரது குடும்பவும், பின்னார் புலிகளால் கிளிநொச்சி மீளவும் கைப்பற்றப்படும்போது அங்கே வாழச் செல்வதும், பின்னர் இறுதியுத்தத்தில் இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றும்போது, உயிரைத் தப்பவைக்க ஓடத்தொடங்கி 'வெள்ளைமுள்ளிவாய்க்காலில்' வந்து நிற்கும்வரை கதை நீள்கின்றது.

தனது பேத்தியின் 'வெறித்தனமான' காதலைப் புரிந்துகொள்வது, அதன் நிமித்தமும், கட்டாய ஆட்சேர்ப்பின் அழுத்தத்தாலும், மீனா தானாகவே புலிகளில் சென்று சேர்வதையும் ஏதோ ஒருவகையில் பார்வதி -மனதுக்கு உவப்பில்லையெனினும்- ஏற்றுக்கொள்கின்றார்.

இறுதிக்கட்டபோரின்போது தப்பி தங்களோடு வரக்கேட்கின்றபோது தனக்குக் கீழே இருக்கும் போராளிப் பிள்ளைகளை பாதுகாப்பாக அனுப்பியபின் வருகிறேன்  எனச் சொல்லும் மீனா இறுதியில் 'காணாமற்போகின்ற' ஒருவராக கதையில் ஆவதுகூட, இன்று ஏறக்குறைய போர் முடிந்து 10 ஆண்டுகளாகியபின்னும், வலிந்து காணாமற்போனவர்களைத் தேடி நமது அன்னையர்கள் நடத்தும் போராட்டங்களுக்கான பின்னணியை நம்மைப் புரிந்துகொள்ளக் கோருகின்றது.


போர், அவ்வப்போது வரும் சமாதானக் காலங்களில் கொஞ்சம் அமைதி, பின்னர் மீண்டும் போர், தனிப்பட்ட இழப்பு, வறுமை, வெளிச்சூழல் அழுத்தங்கள் என இன்னபிறவற்றுக்களுக்கும் இடையில் வாழ்வின் மீதான பிடிப்பைக் கைவிடாத  பார்வதி பாத்திரத்தில் நாம் எண்ணற்ற நம் அன்னைமார்களின் 'வைராக்கியத்தை'க் கண்டுகொள்ள முடியும். அதேவேளை பார்வதி பாத்திரம், பிற பாத்திரங்கள் தன்னைப் பற்றி -உதாரணத்திற்கு தொலைக்காட்சி/வானொலிகளில் பங்குபற்றி நிறைய இரசிகர்கள் இருக்கின்றார்கள் என- புகழ்வதற்கும் கொஞ்சம் கடிவாளம் போட்டிருக்கலாம்.
 

1.jpg

மீனாவின் காதலை சீதனத்தை மறைமுகமாய் காரணங்காட்டி உதாசீனம் செய்கின்ற மதுவின் குடும்பத்தினரை, மதுவின் தாய் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியினராக இருப்பதைக் காட்டிக் குத்திக்காட்டுவதையும், தாங்கள் ஏதோ மாப்பாணர் சாதி எனவும், திருமண சம்பந்தங்களை வெள்ளாளர்களோடோ வைத்துக்கொள்பவர் என ஆற்றாமையில் எனினும் அவ்வாறு சொல்வதை நாவலில் கட்டாயம் தவிர்த்திருக்கவேண்டும். பார்வதி என்கின்ற பாத்திரம் தன்னை சீதன மறுப்பாளராகவும், சாதி மறுப்பாளராகவும் காட்டிக்கொள்கின்றபோது தன் பேத்திக்கு ஒரு துர்ச்செயலாக  இது நிகழும்போது வேறு விதத்தில் அதை எதிர்கொண்டிருக்கமுடியும். ஆனால் சுய சாதிப்பெருமை எங்கோ இருந்து இங்கே வரும்போது தன் சுயசாதி அடையாளத்தை அழிக்கமுடியாத ஒரு அவலமாகவே பார்வதியின் பாத்திரம் நமக்குள் வந்துசேர்கின்ற அபாயமும் நிகழ்ந்துவிடுகின்றது. அதிலும் மதுவின் தாயார் ஒரு சின்னமேளக்காரி என்றும், மதுவின் தகப்பனோடு அவர் ஓடிப்போய் மணம் செய்தவர் எனத் தூற்றவும் இங்கே செய்யப்படுகின்றார்.

அதேவேளை மீனாவின் தகப்பன் அவரது இரண்டாவது மனைவியாக கவிதாவை (மீனாவின் தாயார்) கடத்திக்கொண்டு மணம் செய்வதை பிடிக்காதுபோயினும் பார்வதி அதை பிறகான காலத்தில் ஏற்றுக்கொள்கின்றார். அந்த மனிதரை மதுவின் தாயாரை சாதியின் பெயரில் நிமித்தம் இழிவு செய்வதுபோல, எவ்வகையிலும் கீழிறக்குவதில்லை. ஆக பார்வதி என்கின்ற பாத்திரத்திற்குள்ளே தனது மகள்கள் ஒருவனுக்கு இரண்டாம் மனைவியாகப் பலவந்தமாகப் போய்விடுவதை விட,  தனது பேத்தியின் திருமணத்தை ஏதோ ஒருகாரணத்தால் மறுப்பதுதான் பெரிதாக விடயமாகப் போய்விடுகின்றது.

இவ்வாறான பலவீனங்கள் மற்றும் மிக மோசமாக திருத்தம் செய்யப்படாத வாக்கிய அமைப்புக்கள் ('செய்தனீங்கள்' என்ற போன்ற பேச்சு வழக்கு வருகின்ற இடங்களில் எல்லாம் என்பது 'செய்த நீங்கள்' என்று அனேக இடங்களில் பிரிக்கப்பட்டு வாசிப்பையே திகைக்கச் செய்கின்றன)  மற்றும் சிறுபிள்ளைத்தனமான முன்னட்டை வடிவமைப்பு போன்றவை இருந்தாலும் விலத்திவைக்காது வாசிக்கலாம். ஏனென்றால் போர் நடந்த நிலத்தில் நேரடிச் சாட்சியாக நின்ற தனிப்பட்ட  ஒருவரின் ஒரு காலத்தைய ஆவணமாக இது இருப்பதாலாகும்.

ஏன் இதை அழுத்திச் சொல்கின்றேன் என்றால் இவ்வாறு இன்னொரு புனைவை வாசிக்கத் தொடங்கியபோது,  அது அஷோக ஹந்தமகவின் 'இது எனது நிலவில்' ('This is my moon') சித்திரிக்கப்பட்ட தமிழ்ப்பெண்ணை விட மோசமாக இருந்ததால் தொடகத்திலேயே வாசிப்பதை நிறுத்திவைத்திருந்தேன்.

அந்தவகையில் தமிழ் கவி போன்றவர்கள் நிறைய எழுதவேண்டும்; ஆண்களாகிய நாம் பெண்களை எவ்வாறு விளங்கிக்கொள்வது என்பதைவிட, ஆகக்குறைந்தது போர்சூழலில் இருந்த பெண்களை எப்படி மோசமாகச் சித்தரித்து எழுதக்கூடாது என்பதற்காகவேனும்.

(Sep 16, 2018)

 

http://djthamilan.blogspot.com/2018/10/blog-post_11.html?m=1

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வதுக்கு நன்றி கிருபன்..... ஊழிக்காலம் வாசித்தனான்.இதுவும் கிடைத்தால் வாங்கி வாசிக்க வேண்டும்.....!   tw_blush:

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2018 at 8:07 AM, கிருபன் said:

தமிழ் கவியின் 'இனி ஒருபோதும்'

மகாலத்தில் எழுதுகின்ற ஈழத்தவர்களில் இருவர், எதேனும் கருத்துக்கள்  கூறினால் தூரத்துக்குப் போய்விடுவேன்.  புனைவுக்கு வெளியில் இவர்கள் இப்படி அபத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தாலும் இந்த இருவரும் புனைவில் என்னைத் தொடர்ந்து தேடி வாசிக்கச் செய்பவர்கள்.  அதில் ஒருவர் தமிழ் கவி (நல்லவேளையாக நான் அவரோடு முகநூலில் நண்பராக இல்லை).
 

 

ஏன் கிருபன் முகநூலில் நண்பராக இருந்தால் மட்டும் என்ன நடந்துவிடும். எனக்குப் புரியவில்லை. அதுதான் கேட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏன் கிருபன் முகநூலில் நண்பராக இருந்தால் மட்டும் என்ன நடந்துவிடும். எனக்குப் புரியவில்லை. அதுதான் கேட்டேன்

முகநூலில் நண்பராக இருந்து முதுகு சொறிந்தால் ஒன்றும் நடந்துவிடாது😂

கறாரான விமர்சனம் வைத்தால் நார்நாராகக் கிழித்து உப்புக்கண்டம் போட்டுவிடுவார்கள் அல்லவா!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.