Jump to content

திருமண அமைப்பில் ஆண் ஒரு பலிகடா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருமண அமைப்பில் ஆண் ஒரு பலிகடா

 
 

திருமண அமைப்பு பல ஆண்டுகளாய் ஆண்களுக்கு சாதகமாய் இருந்து வருகிறது என்பதை மறுக்க மாட்டேன். ஆனால் இன்று நிலைமை பெருமளவு மாறி விட்டது. அபிராமியைப் போன்று கொடூர குற்றங்களை இழைக்கும் பெண்கள், சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் விவாகரத்து பெற்றும் ஆணை தெருவில் விடும் பெண்கள் இன்னொரு பக்கம். இந்த அமைப்பினால் இன்று பெருமளவு வஞ்சிக்கபட்டவர்களாய் ஆண்களை மாற்றி உள்ளது. இன்று ஆண்கள் திருமணத்தைக் கண்டு அஞ்சி ஓடும் நிலை மெல்ல மெல்ல ஏற்பட்டு வருகிறது. லிவ்-இன் மட்டுமே பாதுகாப்பானது என ஆண்கள் நினைக்க துவங்கி உள்ளார்கள். ஏன் இந்த நிலை? பெண்களை விட சற்று குறைவாகவோ அல்லது அவர்களுக்கு இணையாகவோ ஆண்களும் இன்று இந்த அமைப்பினால் கடுமையாய் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. சில உதாரணங்கள் தருகிறேன்.

என்னுடன் பணிபுரியும் ஒரு பேராசிரியர் கேரளாவில் தன் உறவினருக்கு நிகழ்ந்த ஒரு விசித்திர சம்பவத்தை குறிப்பிட்டார். ஒரு பெண்ணை அவரது பெற்றோர்கள் அவளது விருப்பத்தை மீறி திருமணம் செய்து வைக்கிறார்கள். மணமான ஒரே மாதத்தில் அப்பெண் பெற்றோரிடம் திரும்பி வந்து “இனிமேல அந்தாளுடன் வாழ முடியாது” என்கிறார். என்ன காரணம்?

“அவர் ஒருநாள் மூன்று முறை செக்ஸ் வைத்துக் கொள்ள கேட்கிறார். அவர் ஒரு செக்ஸ் மேனியாக்”

பெற்றோரும் இதை ஏற்றுக் கொண்டு அப்பெண்ணை பிரித்து அழைத்து வந்து விட்டார்கள். இப்போது அப்பெண் படித்து வேலை பார்க்கிறார். அந்த ஆண் மற்றொரு திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகள் பெற்று திருப்தியாய் இருக்கிறார். ஆனால் முதல் திருமணம் முறிந்த பின் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு, அவமானத்துக்கு ஆளாகி இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு வருடம் அவர் எந்த நிகழ்ச்சிக்கும், ஊர் திருவிழாக்களுக்கும் போக மாட்டாராம். அவர் வக்கிரம் பிடித்தவர் எனும் பேச்சு பரவி பெண்கள் அவரைக் கண்டாலே ஒதுங்கி செல்வார்களாம். உறவினர், நண்பர்கள் என எங்கும் அவரைப் பற்றி கேலி, பரிகாசம். அதன் பிறகு உளவியல் ஆலோசனை பெற்று தேறி மறுதிருமணம் செய்து கொண்டாராம். தான் ஒரு செக்ஸ் மேனியாக் இல்லை என அவர் உறுதியாக அந்த பேராசிரியரிடம் கூறி இருக்கிறார். 

எனக்கு இதைக் கேட்ட போது ஒரு விசயம் மிகவும் வியப்பேற்படுத்தியது. திருமணமான முதல் மாதத்தில் ஒருநாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை செக்ஸ் வைத்துக் கொள்வது இயல்புதானே, அதாவது நான் அறிந்த வரையில். எனக்குத் தெரிந்த சிலர் தம் மனைவியர் தொடர்ந்து ஐந்து முறை ஆர்கஸம் அடைவதாய் சொன்னார்கள். ஆனால் ஆரம்பத்தில் frequency அதிகமாய் இல்லையென்றாலே கவலையடைய வேண்டும். மூன்று என்பது கொஞ்சம் அதிகம் தான் என நினைத்தால் ஒரு ஆலோகரிடமும் அவரை அழைத்து சென்று பேச வைக்கலாமே! மனைவியிடம் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வது எப்படி என பயிற்சி அளிக்கலாமே! ஆனால் எந்த வாய்ப்பையும் அளிக்காமல் இப்படி ஒரே மாதத்தில் ஒரு பந்தத்தை முறிப்பது அநியாயம் அல்லவா?

என் ஊகம் இது: மூன்று முறை என்பது பிரச்சனை அல்ல. கணவரைப் பிடிக்கவில்லை என்பதால் செக்ஸே அப்பெண்ணுக்கு ஒரு வதையாக மாறி இருக்கும். மூன்று முறை என்பது தாங்கவொண்ணா கொடுமை. ஆனால் அதற்கு அந்த ஆண் என்ன செய்வான்? அவனை ஏன் பழிக்க வேண்டும்?

அடுத்த சம்பவம் தமிழகத்தில் நடந்தது. என் தோழி ஒருவர் குறிப்பிட்ட விசயம் இது. தோழிக்கு தெரிந்த ஒரு பெண் அவர். அவர் தான் ஒரு லெஸ்பியன் என பெற்றோரிடம் தெரிவித்து, தான் நேசிக்கும் பெண்ணுடனே வாழ விருப்பம் என்கிறார். பெற்றோர்களோ அப்பெண்ணை அடித்து உதைத்து மிரட்டி விருப்பமற்ற ஒரு திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள வைக்கிறார்கள். ஒத்துக்கொள்ளும் போதே அப்பெண் சொல்லி இருக்கிறாள், “என்ன ஆனாலும் அவன் கூட மூன்று மாதம் கூட இருக்க மாட்டேன் பார்”. அப்படியே அவள் மூன்று மாதங்களில் திரும்பி வந்து விடுகிறாள். பெற்றோரும் அவளை மறுப்பின்றி ஏற்றுக் கொள்கிறார்கள். இப்போது அவள் பிரிவுக்கு சொன்ன காரணம் என்ன தெரியுமா? “அவன் ஆம்பிளையே இல்ல. அவன் என் கூட செக்ஸ் வச்சிக்கிறதே இல்ல தெரியுமா?” தான் ஒரு லெஸ்பியன் எனக் கோரும் பெண் எப்படி ஆண் தன்னை செக்ஸில் திருப்திப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்க முடியும்? எந்த ஆணாலும் அதை செய்ய முடியாது? இந்த பெண் லெஸ்பியன் எனும் பழி தன் மீது வரக்கூடாது என்பதற்காக கணவர் ஆண்மையற்றவர் என பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி வெளியேறி விட்டார். அவள் இப்போது தனியாக புல்லட் ஓட்டிக் கொண்டு தன் காதலியுடன் நேரம் செலவிட்டுக் கொண்டு ஜாலியாக சுதந்திரமாக இருக்கிறார். 

இந்த இரு சம்பவங்களிலும் ஆண் இயல்பை மீறிய எதையும் செய்யவில்லை. இரண்டு பெண்களையும் விருப்பமின்றி மணமுடித்துக் கொடுத்த பெற்றோர்களே முதல் குற்றவாளிகள். ஆனால் இரண்டு பிரச்சனைகளிலும் அதிகம் பாதிக்கப்பட்டது ஆண்களே, பெண்கள் அல்ல. இரு பெண்களும் தமக்கு விருப்பமில்லாத திருமணத்தில் இருந்து தப்பித்து சுதந்திரமாய் இருக்கிறார்கள். ஆனால் எந்த தவறும் செய்யாத ஆண்களோ ஒன்று செக்ஸ் மேனியாக் / ஆண்மையற்ற பேடி எனும் கெட்டப் பெயர் வாங்கி அவமானப்பட்டு, கடும் உளைச்ச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இது போன்ற சம்பவங்களில் பெற்றோர்கள் நடந்து கொள்ளும் விதம் தான் இன்னும் விசித்திரமானது. ஒரு திருமணம் நிலைக்காது என தெரிந்தும் வற்புறுத்தி செய்து வைக்கிறார்கள். அதன் பிறகு ஒரு அற்ப விசயத்துக்கு பெண் கோபித்து வந்து விட்டால் “இனிமேல் நீ அந்தாளு கூட வாழ வேணாம்மா” என அப்படியே பல்டி அடித்து தம் மகளை ஆதரிக்கிறார்கள். ஏன் இந்த ஆதரவை அப்பெண்ணுக்கு அவள் திருமணத்துக்கு முன் முரண்டு பிடித்த போதே தெரிவிக்க வேண்டியது தானே. பெண்ணை மணமுடித்துக் கொடுக்க வேண்டும் என்பதில் உள்ள முனைப்பு பெற்றோருக்கு அப்பெண் தொடர்ந்து கணவனுடன் வாழ வேண்டும் என்பதில் இருப்பதில்லை. பெண் திருமணமாகாமல் இருப்பது அவர்களைப் பொறுத்தமட்டில் ஒரு சமூக இழிவு – யாராவது விசாரித்துக் கொண்டே இருப்பார்கள் “இன்னும் பொண்ணுக்கு பண்ணி வைக்கலியா?” என. திருமணம் ஆவது தாமதமாக ஆக பெண் மீது கூடுதலாக களங்கம் சுமத்துவார்கள். ஆனால் ஒரே மாதத்தில் கணவனை அவள் பிரிந்து வந்து விட்டாள் “நாங்கள் எங்கள் கடமையை சரிவர நிறைவேற்றி விட்டோம். ஆனால் அவளை கட்டிக்கிட்ட ஆண் தான் சரியில்ல. அவன் ஒரு பேடி / செக்ஸ் வெறியன். எங்கள் பெண்ணை கொடுமைப்படுத்தி விட்டான்” எனச் சொல்லி எல்லா பழியில் இருந்தும் தப்பித்து விடுவார்கள்.

ஆனால் இவர்களின் சமூகக் கடமையை நிறைவேற்றுவதற்கு, பெண்ணுக்கு அருகதையில்லாதவள் எனும் அவப்பெயர் வராமல் இருப்பதற்கு யார் பலிகடா ஆக வேண்டும்? அந்த கணவன் தான். 

பெண்களுக்கு திருமண அமைப்பு மென்னியை நெரிக்கும் உணர்வை அளிக்கிறது; எதற்குமே சுதந்திரம் இல்லையே என மருகுகிறார்கள். கணவன் கூடமாட உதவி, சமையல் செய்து, அனுசரணையாய் இருந்தாலும் ஒரு கட்டத்தில் “சுதந்திரமின்மை” உணர்வை அவர்களை பெரும் நெருக்கடிக்குள்ளாக்குகிறது. அற்ப காரணம் ஒன்றை சொல்லி விவாகரத்து கோரி வெளியேறி விடுகிறார்கள். அப்போதும் உண்மையை சொல்ல மாட்டார்கள். ஆண் மீது மொத்த பழியையும் சுமத்தி விடுவார்கள்.

இந்த திருமண அமைப்பு ஆண் – பெண் இரு சாராரையும் நசுக்குகிறது என்பதே உண்மை. பெண்கள் கூடுதலாய் நிச்சயம் பாதிக்கப்படுகிறார்கள். ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அதற்கு ஆண்களை பலிகடா ஆக்குவது நியாயமா? “என்னை திருமண செய்து கொள், செய்து கொள்” என ஆண்களா ஊரூராய் அலறித் தவிக்கிறார்கள்? நீங்களாகவே தான் முன்வந்து (அல்லது பெற்றோர்கள் வற்புறுத்தினார்கள் என்று) மாலை சூடிக் கொள்கிறீர்கள்? ஆனால் தாங்கவொண்ணாத உளவியல் நெருக்கடி வரும் போது இந்த சமூகத்தின் மீது, உங்கள் பெற்றோர் மீது காட்ட வேண்டிய கோபத்தை கணவன் மீது காட்டி விட்டு தப்பித்துப் போகிறீர்கள். இது என்ன விதமான நியாயம்?

 

இந்த விசயத்தில் அப்பெண்ணும் கடும் நெருக்கடியை சந்திக்கிறாள் எனப் புரிகிறது. ஆனால் அதற்கு அவள் பெற்றோர்களையே கடிந்து கொள்ள வேண்டும். ஆனால் எந்த பெண்ணும் தன் பெற்றோரை கோபிக்கவோ காயப்படுத்த மாட்டார்கள். மாறாக ஒரு ஆணை, சம்மந்தமில்லாத ஆணை காயப்படுத்தி விட்டு தப்பித்துக் கொள்கிறார்கள். பெற்றோரை திருப்திப் படுத்தியும் ஆயிற்று, தம் சுதந்திரத்தை பெற்றும் ஆயிற்று என புன்னகைத்துக் கொள்கிறார்கள். நான் இந்த பெண்களிடம் கேட்க விரும்புவது இரண்டே கேள்விகளைத் தான் – 1) உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் உள்ள ஒரு பிரச்சனைக்கு நடுவே ரோட்டில் சிவனே என்று போகிற ஒருவனை ஏன் இழுத்து விடுகிறீர்கள்? 

2) உங்கள் பெற்றோர் மேல் பழிசொல்ல துணிவின்றி, விருப்பமின்றி “அவர்கள் என்னை மணமுடித்து வைத்ததால் இப்போது தவிக்கிறேன், துன்புறுகிறேன்” என உண்மையை சொல்ல விருப்பமின்றி, ஏன் அந்த கணவன் மீது தீராப்பழியை சுமத்துகிறீர்கள்?

திருமணத்தைப் பொறுத்தமட்டில், சமூகமும் சரி, சட்டமும் சரி பெண்களுக்கே பாதுகாப்பையும் ஆதரவையும் அளிக்கிறது என்பதே இன்றைய நடைமுறை. உ.தா., இன்று உலகம் முழுக்க மிக அதிகமான எண்ணிக்கையில் விவாகரத்து கோருபவர்கள் பெண்களே, ஆண்கள் அல்ல. அதுவும் துரோகத்தினாலோ வன்முறையின் காரணாகவோ அல்ல. “பிடிக்கவில்லை” என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டு பிரிந்து போய் விடுகிறார்கள்.

 

https://thiruttusavi.blogspot.com/2018/10/blog-post_12.html?m=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவை நெடுக்கர் இன்னும் பார்க்கேல்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

இந்தப் பதிவை நெடுக்கர் இன்னும் பார்க்கேல்லையோ?

இணைக்கும்போது நெடுக்கர் வாசிக்கவேண்டும் என்று நினைத்தேன்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே கருத்தை யாழில் பல தடவைகள் நாம் பிரதிபலித்து விட்டோம். காரணம்.. நாம் சமூகத்தை கவனிக்க கூடிய சமயத்தில் கவனிக்கிறோம். அதற்காக நாம் சமூகத்தின் பிறழ்வுகளுக்கு பலியாகி விட முடியாது. பலியானால்..  அப்படிச் செய்தால்.. நாம் சமூகத்திடம் இருந்து பாடம் படிக்கவில்லை என்று அர்த்தமாகி விடும். சமூகத்துக்கு நாம் சொல்ல வேண்டியதை சொல்லவும் நாதியற்றவர்களாகி விடுவோம். ?

28 minutes ago, கிருபன் said:

இணைக்கும்போது நெடுக்கர் வாசிக்கவேண்டும் என்று நினைத்தேன்??

நானும் வாசித்தேன். மனிசிக்கும் காட்டினேன்.  சமூகத்தில் மனிதர்கள் பலவிதம் என்றுவிட்டு போயிட்டா.  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரை இங்கு இழுக்கவெண்டே பதிவு போட்டால்த்தான் நெடுக்கு எட்டிபார்க்கும் நிலைமயில் இருக்கிறார் ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு பெண்களை பற்றி பாடம் எடுத்த நெடுக்கையா 
வயது வர கொள்கையை விட்டு விட்டு டப்புக்கென்று 
லாவகமாக அமுக்கிக்கொண்டார் 

தலைவர் தவறினாலும் ... 
சிஷ்யர்கள் நாம் தனித்து கட்சி நடத்திக்கொண்டு இருக்கிறோம்.
அப்ப அப்ப காமன் வீட்டு பாட்டு சத்தம் கேட்க்கும்போது மனம் புரண்டாலும் 
இதுகளை வாசிக்கும்போது பெருத்த ஆறுதலாக இருக்கிறது. 

வரவர ஒரு மார்க்கமாகவே வளர்ந்துகொண்டு இருக்கிறார்கள் 

நான் அடிக்கடி சொல்வதுண்டு ... 
பெண்கள் ஆட்சி அரேங்கேறிய நாடுகள் எல்லாம் 
அராஜக ஆடசிதான் நடந்துள்ளது  சிறீமா ... இந்திரா காந்தி ... பூட்டோ .... சந்திரிகா மார்க்ரெட் தச்சர் 
ஜேர்மன் அம்மையார்  மற்றைய கடசிகளுடன் கூடி தொங்கு அரசு அமைப்பதால் 
என்னோவோ அடக்கி வாசிக்கிறா என்று எண்ணுகிறேன் 
பிரிடிஷ் தெரசா மே  அவர் இன்னமும் பதவியில் இருப்பதே மேல். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.