Jump to content

திருமண அமைப்பில் ஆண் ஒரு பலிகடா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருமண அமைப்பில் ஆண் ஒரு பலிகடா

 
 

திருமண அமைப்பு பல ஆண்டுகளாய் ஆண்களுக்கு சாதகமாய் இருந்து வருகிறது என்பதை மறுக்க மாட்டேன். ஆனால் இன்று நிலைமை பெருமளவு மாறி விட்டது. அபிராமியைப் போன்று கொடூர குற்றங்களை இழைக்கும் பெண்கள், சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் விவாகரத்து பெற்றும் ஆணை தெருவில் விடும் பெண்கள் இன்னொரு பக்கம். இந்த அமைப்பினால் இன்று பெருமளவு வஞ்சிக்கபட்டவர்களாய் ஆண்களை மாற்றி உள்ளது. இன்று ஆண்கள் திருமணத்தைக் கண்டு அஞ்சி ஓடும் நிலை மெல்ல மெல்ல ஏற்பட்டு வருகிறது. லிவ்-இன் மட்டுமே பாதுகாப்பானது என ஆண்கள் நினைக்க துவங்கி உள்ளார்கள். ஏன் இந்த நிலை? பெண்களை விட சற்று குறைவாகவோ அல்லது அவர்களுக்கு இணையாகவோ ஆண்களும் இன்று இந்த அமைப்பினால் கடுமையாய் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. சில உதாரணங்கள் தருகிறேன்.

என்னுடன் பணிபுரியும் ஒரு பேராசிரியர் கேரளாவில் தன் உறவினருக்கு நிகழ்ந்த ஒரு விசித்திர சம்பவத்தை குறிப்பிட்டார். ஒரு பெண்ணை அவரது பெற்றோர்கள் அவளது விருப்பத்தை மீறி திருமணம் செய்து வைக்கிறார்கள். மணமான ஒரே மாதத்தில் அப்பெண் பெற்றோரிடம் திரும்பி வந்து “இனிமேல அந்தாளுடன் வாழ முடியாது” என்கிறார். என்ன காரணம்?

“அவர் ஒருநாள் மூன்று முறை செக்ஸ் வைத்துக் கொள்ள கேட்கிறார். அவர் ஒரு செக்ஸ் மேனியாக்”

பெற்றோரும் இதை ஏற்றுக் கொண்டு அப்பெண்ணை பிரித்து அழைத்து வந்து விட்டார்கள். இப்போது அப்பெண் படித்து வேலை பார்க்கிறார். அந்த ஆண் மற்றொரு திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகள் பெற்று திருப்தியாய் இருக்கிறார். ஆனால் முதல் திருமணம் முறிந்த பின் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு, அவமானத்துக்கு ஆளாகி இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு வருடம் அவர் எந்த நிகழ்ச்சிக்கும், ஊர் திருவிழாக்களுக்கும் போக மாட்டாராம். அவர் வக்கிரம் பிடித்தவர் எனும் பேச்சு பரவி பெண்கள் அவரைக் கண்டாலே ஒதுங்கி செல்வார்களாம். உறவினர், நண்பர்கள் என எங்கும் அவரைப் பற்றி கேலி, பரிகாசம். அதன் பிறகு உளவியல் ஆலோசனை பெற்று தேறி மறுதிருமணம் செய்து கொண்டாராம். தான் ஒரு செக்ஸ் மேனியாக் இல்லை என அவர் உறுதியாக அந்த பேராசிரியரிடம் கூறி இருக்கிறார். 

எனக்கு இதைக் கேட்ட போது ஒரு விசயம் மிகவும் வியப்பேற்படுத்தியது. திருமணமான முதல் மாதத்தில் ஒருநாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை செக்ஸ் வைத்துக் கொள்வது இயல்புதானே, அதாவது நான் அறிந்த வரையில். எனக்குத் தெரிந்த சிலர் தம் மனைவியர் தொடர்ந்து ஐந்து முறை ஆர்கஸம் அடைவதாய் சொன்னார்கள். ஆனால் ஆரம்பத்தில் frequency அதிகமாய் இல்லையென்றாலே கவலையடைய வேண்டும். மூன்று என்பது கொஞ்சம் அதிகம் தான் என நினைத்தால் ஒரு ஆலோகரிடமும் அவரை அழைத்து சென்று பேச வைக்கலாமே! மனைவியிடம் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வது எப்படி என பயிற்சி அளிக்கலாமே! ஆனால் எந்த வாய்ப்பையும் அளிக்காமல் இப்படி ஒரே மாதத்தில் ஒரு பந்தத்தை முறிப்பது அநியாயம் அல்லவா?

என் ஊகம் இது: மூன்று முறை என்பது பிரச்சனை அல்ல. கணவரைப் பிடிக்கவில்லை என்பதால் செக்ஸே அப்பெண்ணுக்கு ஒரு வதையாக மாறி இருக்கும். மூன்று முறை என்பது தாங்கவொண்ணா கொடுமை. ஆனால் அதற்கு அந்த ஆண் என்ன செய்வான்? அவனை ஏன் பழிக்க வேண்டும்?

அடுத்த சம்பவம் தமிழகத்தில் நடந்தது. என் தோழி ஒருவர் குறிப்பிட்ட விசயம் இது. தோழிக்கு தெரிந்த ஒரு பெண் அவர். அவர் தான் ஒரு லெஸ்பியன் என பெற்றோரிடம் தெரிவித்து, தான் நேசிக்கும் பெண்ணுடனே வாழ விருப்பம் என்கிறார். பெற்றோர்களோ அப்பெண்ணை அடித்து உதைத்து மிரட்டி விருப்பமற்ற ஒரு திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள வைக்கிறார்கள். ஒத்துக்கொள்ளும் போதே அப்பெண் சொல்லி இருக்கிறாள், “என்ன ஆனாலும் அவன் கூட மூன்று மாதம் கூட இருக்க மாட்டேன் பார்”. அப்படியே அவள் மூன்று மாதங்களில் திரும்பி வந்து விடுகிறாள். பெற்றோரும் அவளை மறுப்பின்றி ஏற்றுக் கொள்கிறார்கள். இப்போது அவள் பிரிவுக்கு சொன்ன காரணம் என்ன தெரியுமா? “அவன் ஆம்பிளையே இல்ல. அவன் என் கூட செக்ஸ் வச்சிக்கிறதே இல்ல தெரியுமா?” தான் ஒரு லெஸ்பியன் எனக் கோரும் பெண் எப்படி ஆண் தன்னை செக்ஸில் திருப்திப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்க முடியும்? எந்த ஆணாலும் அதை செய்ய முடியாது? இந்த பெண் லெஸ்பியன் எனும் பழி தன் மீது வரக்கூடாது என்பதற்காக கணவர் ஆண்மையற்றவர் என பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி வெளியேறி விட்டார். அவள் இப்போது தனியாக புல்லட் ஓட்டிக் கொண்டு தன் காதலியுடன் நேரம் செலவிட்டுக் கொண்டு ஜாலியாக சுதந்திரமாக இருக்கிறார். 

இந்த இரு சம்பவங்களிலும் ஆண் இயல்பை மீறிய எதையும் செய்யவில்லை. இரண்டு பெண்களையும் விருப்பமின்றி மணமுடித்துக் கொடுத்த பெற்றோர்களே முதல் குற்றவாளிகள். ஆனால் இரண்டு பிரச்சனைகளிலும் அதிகம் பாதிக்கப்பட்டது ஆண்களே, பெண்கள் அல்ல. இரு பெண்களும் தமக்கு விருப்பமில்லாத திருமணத்தில் இருந்து தப்பித்து சுதந்திரமாய் இருக்கிறார்கள். ஆனால் எந்த தவறும் செய்யாத ஆண்களோ ஒன்று செக்ஸ் மேனியாக் / ஆண்மையற்ற பேடி எனும் கெட்டப் பெயர் வாங்கி அவமானப்பட்டு, கடும் உளைச்ச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இது போன்ற சம்பவங்களில் பெற்றோர்கள் நடந்து கொள்ளும் விதம் தான் இன்னும் விசித்திரமானது. ஒரு திருமணம் நிலைக்காது என தெரிந்தும் வற்புறுத்தி செய்து வைக்கிறார்கள். அதன் பிறகு ஒரு அற்ப விசயத்துக்கு பெண் கோபித்து வந்து விட்டால் “இனிமேல் நீ அந்தாளு கூட வாழ வேணாம்மா” என அப்படியே பல்டி அடித்து தம் மகளை ஆதரிக்கிறார்கள். ஏன் இந்த ஆதரவை அப்பெண்ணுக்கு அவள் திருமணத்துக்கு முன் முரண்டு பிடித்த போதே தெரிவிக்க வேண்டியது தானே. பெண்ணை மணமுடித்துக் கொடுக்க வேண்டும் என்பதில் உள்ள முனைப்பு பெற்றோருக்கு அப்பெண் தொடர்ந்து கணவனுடன் வாழ வேண்டும் என்பதில் இருப்பதில்லை. பெண் திருமணமாகாமல் இருப்பது அவர்களைப் பொறுத்தமட்டில் ஒரு சமூக இழிவு – யாராவது விசாரித்துக் கொண்டே இருப்பார்கள் “இன்னும் பொண்ணுக்கு பண்ணி வைக்கலியா?” என. திருமணம் ஆவது தாமதமாக ஆக பெண் மீது கூடுதலாக களங்கம் சுமத்துவார்கள். ஆனால் ஒரே மாதத்தில் கணவனை அவள் பிரிந்து வந்து விட்டாள் “நாங்கள் எங்கள் கடமையை சரிவர நிறைவேற்றி விட்டோம். ஆனால் அவளை கட்டிக்கிட்ட ஆண் தான் சரியில்ல. அவன் ஒரு பேடி / செக்ஸ் வெறியன். எங்கள் பெண்ணை கொடுமைப்படுத்தி விட்டான்” எனச் சொல்லி எல்லா பழியில் இருந்தும் தப்பித்து விடுவார்கள்.

ஆனால் இவர்களின் சமூகக் கடமையை நிறைவேற்றுவதற்கு, பெண்ணுக்கு அருகதையில்லாதவள் எனும் அவப்பெயர் வராமல் இருப்பதற்கு யார் பலிகடா ஆக வேண்டும்? அந்த கணவன் தான். 

பெண்களுக்கு திருமண அமைப்பு மென்னியை நெரிக்கும் உணர்வை அளிக்கிறது; எதற்குமே சுதந்திரம் இல்லையே என மருகுகிறார்கள். கணவன் கூடமாட உதவி, சமையல் செய்து, அனுசரணையாய் இருந்தாலும் ஒரு கட்டத்தில் “சுதந்திரமின்மை” உணர்வை அவர்களை பெரும் நெருக்கடிக்குள்ளாக்குகிறது. அற்ப காரணம் ஒன்றை சொல்லி விவாகரத்து கோரி வெளியேறி விடுகிறார்கள். அப்போதும் உண்மையை சொல்ல மாட்டார்கள். ஆண் மீது மொத்த பழியையும் சுமத்தி விடுவார்கள்.

இந்த திருமண அமைப்பு ஆண் – பெண் இரு சாராரையும் நசுக்குகிறது என்பதே உண்மை. பெண்கள் கூடுதலாய் நிச்சயம் பாதிக்கப்படுகிறார்கள். ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அதற்கு ஆண்களை பலிகடா ஆக்குவது நியாயமா? “என்னை திருமண செய்து கொள், செய்து கொள்” என ஆண்களா ஊரூராய் அலறித் தவிக்கிறார்கள்? நீங்களாகவே தான் முன்வந்து (அல்லது பெற்றோர்கள் வற்புறுத்தினார்கள் என்று) மாலை சூடிக் கொள்கிறீர்கள்? ஆனால் தாங்கவொண்ணாத உளவியல் நெருக்கடி வரும் போது இந்த சமூகத்தின் மீது, உங்கள் பெற்றோர் மீது காட்ட வேண்டிய கோபத்தை கணவன் மீது காட்டி விட்டு தப்பித்துப் போகிறீர்கள். இது என்ன விதமான நியாயம்?

 

இந்த விசயத்தில் அப்பெண்ணும் கடும் நெருக்கடியை சந்திக்கிறாள் எனப் புரிகிறது. ஆனால் அதற்கு அவள் பெற்றோர்களையே கடிந்து கொள்ள வேண்டும். ஆனால் எந்த பெண்ணும் தன் பெற்றோரை கோபிக்கவோ காயப்படுத்த மாட்டார்கள். மாறாக ஒரு ஆணை, சம்மந்தமில்லாத ஆணை காயப்படுத்தி விட்டு தப்பித்துக் கொள்கிறார்கள். பெற்றோரை திருப்திப் படுத்தியும் ஆயிற்று, தம் சுதந்திரத்தை பெற்றும் ஆயிற்று என புன்னகைத்துக் கொள்கிறார்கள். நான் இந்த பெண்களிடம் கேட்க விரும்புவது இரண்டே கேள்விகளைத் தான் – 1) உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் உள்ள ஒரு பிரச்சனைக்கு நடுவே ரோட்டில் சிவனே என்று போகிற ஒருவனை ஏன் இழுத்து விடுகிறீர்கள்? 

2) உங்கள் பெற்றோர் மேல் பழிசொல்ல துணிவின்றி, விருப்பமின்றி “அவர்கள் என்னை மணமுடித்து வைத்ததால் இப்போது தவிக்கிறேன், துன்புறுகிறேன்” என உண்மையை சொல்ல விருப்பமின்றி, ஏன் அந்த கணவன் மீது தீராப்பழியை சுமத்துகிறீர்கள்?

திருமணத்தைப் பொறுத்தமட்டில், சமூகமும் சரி, சட்டமும் சரி பெண்களுக்கே பாதுகாப்பையும் ஆதரவையும் அளிக்கிறது என்பதே இன்றைய நடைமுறை. உ.தா., இன்று உலகம் முழுக்க மிக அதிகமான எண்ணிக்கையில் விவாகரத்து கோருபவர்கள் பெண்களே, ஆண்கள் அல்ல. அதுவும் துரோகத்தினாலோ வன்முறையின் காரணாகவோ அல்ல. “பிடிக்கவில்லை” என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டு பிரிந்து போய் விடுகிறார்கள்.

 

https://thiruttusavi.blogspot.com/2018/10/blog-post_12.html?m=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவை நெடுக்கர் இன்னும் பார்க்கேல்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

இந்தப் பதிவை நெடுக்கர் இன்னும் பார்க்கேல்லையோ?

இணைக்கும்போது நெடுக்கர் வாசிக்கவேண்டும் என்று நினைத்தேன்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே கருத்தை யாழில் பல தடவைகள் நாம் பிரதிபலித்து விட்டோம். காரணம்.. நாம் சமூகத்தை கவனிக்க கூடிய சமயத்தில் கவனிக்கிறோம். அதற்காக நாம் சமூகத்தின் பிறழ்வுகளுக்கு பலியாகி விட முடியாது. பலியானால்..  அப்படிச் செய்தால்.. நாம் சமூகத்திடம் இருந்து பாடம் படிக்கவில்லை என்று அர்த்தமாகி விடும். சமூகத்துக்கு நாம் சொல்ல வேண்டியதை சொல்லவும் நாதியற்றவர்களாகி விடுவோம். ?

28 minutes ago, கிருபன் said:

இணைக்கும்போது நெடுக்கர் வாசிக்கவேண்டும் என்று நினைத்தேன்??

நானும் வாசித்தேன். மனிசிக்கும் காட்டினேன்.  சமூகத்தில் மனிதர்கள் பலவிதம் என்றுவிட்டு போயிட்டா.  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரை இங்கு இழுக்கவெண்டே பதிவு போட்டால்த்தான் நெடுக்கு எட்டிபார்க்கும் நிலைமயில் இருக்கிறார் ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு பெண்களை பற்றி பாடம் எடுத்த நெடுக்கையா 
வயது வர கொள்கையை விட்டு விட்டு டப்புக்கென்று 
லாவகமாக அமுக்கிக்கொண்டார் 

தலைவர் தவறினாலும் ... 
சிஷ்யர்கள் நாம் தனித்து கட்சி நடத்திக்கொண்டு இருக்கிறோம்.
அப்ப அப்ப காமன் வீட்டு பாட்டு சத்தம் கேட்க்கும்போது மனம் புரண்டாலும் 
இதுகளை வாசிக்கும்போது பெருத்த ஆறுதலாக இருக்கிறது. 

வரவர ஒரு மார்க்கமாகவே வளர்ந்துகொண்டு இருக்கிறார்கள் 

நான் அடிக்கடி சொல்வதுண்டு ... 
பெண்கள் ஆட்சி அரேங்கேறிய நாடுகள் எல்லாம் 
அராஜக ஆடசிதான் நடந்துள்ளது  சிறீமா ... இந்திரா காந்தி ... பூட்டோ .... சந்திரிகா மார்க்ரெட் தச்சர் 
ஜேர்மன் அம்மையார்  மற்றைய கடசிகளுடன் கூடி தொங்கு அரசு அமைப்பதால் 
என்னோவோ அடக்கி வாசிக்கிறா என்று எண்ணுகிறேன் 
பிரிடிஷ் தெரசா மே  அவர் இன்னமும் பதவியில் இருப்பதே மேல். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.