Jump to content

விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் - என்ன நடக்கிறது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பூமியில் கிட்டத்தட்ட 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அதில் ஒவ்வொருவரும் பல வகைகளில் வேறுபட்டிருந்தாலும், ஒருசில விடயங்களில் ஒன்றுபட்டுள்ளனர்.

காலையில் தூக்கத்திலிருந்து எழுந்துகொள்ளுவதிலிருந்து, உண்ணும் உணவு, பயண முறைகள், படிப்பு அல்லது வேலை என பல்வேறு நடைமுறைகளில் எவரோ ஒருவரையோ, பலரையோ ஒன்றுபட்டு செயல்படுகிறோம்.

ஆனால், 700 கோடி பேரில் இந்த ஆறு பேரின் வாழ்க்கைமுறை மட்டும் தலைகீழாக உள்ளது. ஆம், நமது தலைக்கு மேலே சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும் ஆறு விண்வெளி வீரர்களின் தினசரி செயல்பாடுகள் முற்றிலும் வேறுபட்டவை. அவர்களது தினசரி செயல்பாட்டை இந்த கட்டுரையில் காண்போம்.

தூக்கத்திலிருந்து விழித்தல்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தூங்குவதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பைக்குள் விண்வெளி வீரர்கள் இரவு முழுவதும் மிதந்துக்கொண்டே தூங்குகிறார்கள். காலை ஆறு மணிக்கு தானாக எரியும் விளக்குகளை சமிக்ஞையாக கொண்டு வீரர்கள் தூக்கத்திலிருந்து எழுகிறார்கள்.

விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் - என்ன நடக்கிறது?படத்தின் காப்புரிமை Georgethefourth

தூங்கி எழுந்தவுடன் கழிவறைக்கு செல்வது, பல் தேய்ப்பது என வீரர்களின் வாழ்கைப்போக்கு பூமியிலுள்ளவர்களை ஒத்துக் காணப்படுகிறது. வீரர்கள் பற்பசை மற்றும் பல் துலக்கியை பயன்படுத்திவிட்டு அப்படியே விட்டுவிடுவார்கள் - அவை ஓடத்தில் மிதந்துகொண்டே இருக்கும்.

அதற்கடுத்து, சிறிது காலையுணவை சாப்பிட்டுவிட்டு, ஓடத்தின் கீழுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் நடக்கும் தினசரி நிகழ்வுகள் குறித்து திட்டமிடும் கூட்டத்திற்காக ஆறு வீரர்களும் கூடுவார்கள்.

பராமரிப்பு

தங்களது பெரும்பாலான நேரத்தை சர்வதேச விண்வெளி ஓடத்தின் பராமரிப்பு மற்றும் இயக்கத்தை நிர்வகிப்பதிலேயே விண்வெளி வீரர்கள் செலவிடுகிறார்கள். அதைவிடுத்து ஓடத்தை சுத்தம் செய்வதற்கு, பொருட்களை இடமாற்றம் செய்வதற்கு ஒருநாளும், ஓடத்தின் காற்று சுத்திகரிப்பு கருவி உள்ளிட்ட முக்கிய கருவிகளில் ஏற்படும் பழுதுகளை நீக்குவதற்கு மற்றொரு நாளையும் செலவிடுகிறார்கள்.

விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் - என்ன நடக்கிறது?படத்தின் காப்புரிமை NASA

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், அதை சரிசெய்வது குறித்தும் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள குறிப்பை முதலாக கொண்டே விண்வெளி வீரர்களின் முழு செயல்பாடும் அமைந்துள்ளது.

வீரர்கள் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே விண்வெளியில் மிதந்துக்கொண்டே இருக்குமென்பதால், புதியதாக இங்கு வரும் வீரர்கள் தாங்கள் வைத்த பொருட்களை கண்டுபிடிப்பதிலேயே தொடக்க நாட்களை செலவிடுவார்கள்.

மிதக்கும் உடற்பயிற்சி கூடம்

விண்வெளி வீரர்கள் எப்போதும் மிதந்துகொண்டே இருப்பார்கள் என்பதை நினைத்து அவர்கள் மகிழ்ச்சியாகவும், வேடிக்கையாகவும் உள்ளார்கள் என்று நீங்கள் நினைப்பீர்களேயானால் அது முற்றிலும் தவறு. விண்வெளி வீரர்களுக்கு நீண்டகாலத்தில் பல்வேறுவிதமான உடல்நல கோளாறுகள் ஏற்படும்.

விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் - என்ன நடக்கிறது?படத்தின் காப்புரிமை NASA

பூஜ்ய ஈர்ப்பு விசையில் மனிதர்கள் குறிப்பிட்ட காலத்தை செலவிடும்போது ஏற்படும் உடல்ரீதியான பிரச்சனைகள் குறித்து ஆராய்வது சர்வதேச விண்வெளி நிலையத்தின் முக்கியமான நோக்கங்களில் ஒன்றாக உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு இதன் மூலம் கிடைக்கும் அனுபவங்கள் பயன்படுத்தப்படும்.

ஈர்ப்பு விசையற்ற சூழலில் வாழ்வதால் விண்வெளி வீரர்களின் எலும்புகள் உடையக்கூடிய தன்மையை அடைவதாகவும், தொடர்ந்து உடலை நகர்த்திக்கொண்டே இருக்கும்போது தசைகள் வலிமையற்று போவதாகவும் தெரியவந்துள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள உடல்ரீதியான பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு விண்வெளி வீரரும் அங்கேயே அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் உடற்பயிற்சி கூடத்தில் ஒருநாளைக்கு குறைந்தது இரண்டு மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார்கள்.

மதிய உணவு

பூமியில் இருப்பவர்களை போன்றே விண்வெளி வீரர்களின் வாழ்க்கையும் வார நாட்கள், வார இறுதி நாட்கள் என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் விண்வெளி வீரர்கள் தங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி இரண்டு பேர் சேர்ந்தோ, சிறு குழுவாகவோ பணியாற்றுகிறார்கள்.

வார நாட்களில் எப்போதாவது ஒருமுறைதான் அனைத்து வீரர்களும் ஒன்றாக மதிய உணவு உண்ணுகிறார்கள். வார இறுதிகளில் அனைத்து வீரர்களும் ஒன்றாக சேர்ந்து பேசிக்கொண்டு உண்ணுகின்றனர்.

 

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் பணிபுரிகிறார்கள் என்பதால், அவர்களுக்கான உணவிலும் பெரும் வேறுபாடு நிலவுகிறது. உதாரணத்துக்கு, ரஷ்ய விண்வெளி வீரர்கள் டின்களில் அடைக்கப்பட்ட உணவை சாப்பிடுவதற்கு முன்பு சூடுபடுத்திவிட்டு உண்ணுகின்றனர்.

பூமியில் இருப்பதைப்போன்றே தக்காளி சாஸ், கடுகு, மிளகாய் போன்றவை இங்கும் உள்ளது. ஆனால், உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றின் துகள்கள் ஓடத்தில் மிதக்கும் என்பதால் நீர்மநிலையில் அடைக்கப்பட்டு கொடுக்கப்படுகின்றன.

ஒவ்வொரு முறை சர்வதேச விண்வெளியத்திற்கு பூமியிலிருந்து பொருட்கள் கொண்டுசெல்லப்படும்போது வீரர்களுக்கு பழங்களும் எடுத்துச்செல்லப்படுகின்றன. பூமியை விட விண்வெளியில் பொருட்கள் விரைவில் கெட்டுவிடும் என்பதால் வீரர்கள் பழங்களை உடனடியாக உண்டு விடுகின்றனர்.

வீரர்களும் ஒன்றாக சேர்ந்து பேசிக்கொண்டு உண்ணுகின்றனர்.

விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் - என்ன நடக்கிறது?படத்தின் காப்புரிமை NASA

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் பணிபுரிகிறார்கள் என்பதால், அவர்களுக்கான உணவிலும் பெரும் வேறுபாடு நிலவுகிறது. உதாரணத்துக்கு, ரஷ்ய விண்வெளி வீரர்கள் டின்களில் அடைக்கப்பட்ட உணவை சாப்பிடுவதற்கு முன்பு சூடுபடுத்திவிட்டு உண்ணுகின்றனர்.

பூமியில் இருப்பதைப்போன்றே தக்காளி சாஸ், கடுகு, மிளகாய் போன்றவை இங்கும் உள்ளது. ஆனால், உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றின் துகள்கள் ஓடத்தில் மிதக்கும் என்பதால் நீர்மநிலையில் அடைக்கப்பட்டு கொடுக்கப்படுகின்றன.

ஒவ்வொரு முறை சர்வதேச விண்வெளியத்திற்கு பூமியிலிருந்து பொருட்கள் கொண்டுசெல்லப்படும்போது வீரர்களுக்கு பழங்களும் எடுத்துச்செல்லப்படுகின்றன. பூமியை விட விண்வெளியில் பொருட்கள் விரைவில் கெட்டுவிடும் என்பதால் வீரர்கள் பழங்களை உடனடியாக உண்டு விடுகின்றனர்.

ஒரே வேலையை தொடர்ந்து முற்றிலும் வேறுபட்ட சுற்றுசூழலில் மேற்கொள்வது வீரர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும் என்பதால், பழங்களை அனுப்புவதும், குழுவாக சாப்பிடுவதும், சிறப்பு தினங்களை கொண்டாடுவதும் வீரர்களின் மனவுறுதியை பேணும் முக்கியமான விடயங்களாக கருதப்படுகின்றன.

பரிசோதனைகள்

பூமியில் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதைவிட, விண்வெளியில் பூஜ்ய ஈர்ப்பு விசையில் தனித்துவமான முறையில் ஆராய்ச்சி செய்வதற்காகவே சர்வதேச விண்வெளி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரரொருவர் அனுப்பப்படுவதற்கு முன்னர், அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள், பரிசோதனைகள், கருவிகள் செயல்பாடு குறித்து பூமியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி விண்வெளி கூடத்தில் பயிற்சி அளிக்கப்படும்.

விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் - என்ன நடக்கிறது?படத்தின் காப்புரிமை NASA

சர்வதேச விண்வெளி நிலையத்தில் மொத்தம் ஐந்து ஆராய்ச்சி கூடங்கள் உள்ளன. ரஷ்யாவிற்கு சொந்தமாக இரண்டு சிறிய ஆராய்ச்சி கூடங்களும், அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு தலா ஒரு ஆராய்ச்சி கூடங்களும் உள்ளன.

விண்வெளியிருந்து பூமியை படம் பிடிப்பது, தரவுகளை திரட்டுவது உள்ளிட்ட பணிகளோடு, ஒருசெல் உயிரிகள், எலிகள், எறும்புகள், மீன், புழுக்கள் ஆகியவற்றை பூஜ்ய ஈர்ப்பு விசையில் வைத்து பல்வேறு ஆராய்ச்சிகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் - என்ன நடக்கிறது?படத்தின் காப்புரிமை NASA

செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வருங்கால விண்வெளி தேடலுக்கு சோதனை கூடமாகவும் இது விளங்குகிறது.

மறக்கமுடியாத அனுபவம்

சர்வதேச விண்வெளி நிலையத்தை பொறுத்தவரை வீரர்களின் செயல்பாடு பெரும்பாலும் ஓடத்தின் உள்ளேதான் இருக்கும் என்றாலும், தவிர்க்க முடியாத சில சமயங்களில் வீரர்கள் ஓடத்தின் வெளியே சென்று பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்ளும் மறக்கமுடியாத அனுபவத்தை வீரர்கள் பெறுவார்கள்.

விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் - என்ன நடக்கிறது?படத்தின் காப்புரிமை Getty Images

இதுபோன்ற ஆபத்தான பணிகள் குறித்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னதாகவே திட்டமிடப்படுகிறது. ஒரு வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்பகுதியில் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்வதற்காக வெளியே செல்வதற்கு முன்னதாக பிரத்யேக ஆடைகளை உடுத்திக்கொண்டு, கிட்டத்தட்ட 100 பக்கங்களை கொண்ட பாதுகாப்பு வழிமுறைகளை சார்பார்ப்பதற்கு நான்கு மணிநேரங்கள் ஆகும். அதுமட்டுமில்லாமல், பாதுகாப்பு காரணங்களுக்காக இதுபோன்ற பணிகளை இரண்டு வீரர்கள் மேற்கொள்கிறார்கள்.

ஒருமுறை இதுபோன்ற பணிகளுக்காக விண்வெளி வீரர்கள் வெளியே சென்றால் அதிகபட்சமாக எட்டு மணிநேரத்தை செலவிடுவார்கள். இதற்காக வீரர்கள் விண்வெளிக்கு செல்வதற்கு முன்னர் பூமியில் மிகப் பெரிய நீர்த்தொட்டியில் வைக்கப்பட்டுள்ள மாதிரி ஓடத்தில் பயிற்சி எடுக்கிறார்கள்.

ஓய்வு நேரம்

ஒவ்வொரு தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை முடிந்தபின்பு மீதமுள்ள நேரத்தை தங்களது விருப்பம் போல் செலவிட்டுக்கொள்வதற்கு வீரர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்துகொண்டே தங்களது குடும்பத்தினருக்கு போன் செய்யலாம்; மின்னஞ்சல் அனுப்பலாம்; திரைப்படங்களும் பார்க்க முடியும்.

விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் - என்ன நடக்கிறது?படத்தின் காப்புரிமை NASA

சர்வதேச விண்வெளி நிலையத்தின் ட்ராங்குலிட்டி என்னும் பகுதியிலிருந்து கண்ணாடி வழியாக விண்வெளியிலிருந்து பூமியை பார்ப்பது விண்வெளி வீரர்களின் பொதுவான பொழுதுப்போக்காக உள்ளது. அதுமட்டுமின்றி, பூமியின் ஆச்சர்யமளிக்கும் வடிவத்தையும், அதிலுள்ள குறிப்பிட்ட நகரங்கள், காடுகள் குறித்த புகைப்படங்களையும் வீரர்கள் எடுக்கிறார்கள்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கிட்டார் வாசித்ததுடன், இசை காணொளி ஒன்றையும் தயாரித்த கிறிஸ் ஹாட்பீல்டு என்ற விண்வெளி வீரர் இதுநாள் வரை பிரபலமானவராக அறியப்படுகிறார்.

https://www.bbc.com/tamil/science-45841451

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.