Jump to content

பிரிந்து சென்ற மனைவி: மறுமணம் செய்யாமல் மகளுக்கு தாயாக வாழும் தந்தை #HisChoice


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு பின்னிரவு. எங்கள் அறையில் என் மனைவியின் செல்போன் மணி அடித்துக் கொண்டே இருந்தது. போனை எடுத்துப் பேசாமல் அவர் தவிர்த்துக்கொண்டே இருந்தார்.

எங்கள் மகள் தூங்கிக்கொண்டிருந்தாள். போனை எடுத்துப் பேசும்படி பலமுறை கூறியும் மனைவி அதைத் தவிர்த்துவிட்டார். மீண்டும் போன் மணியடித்தது. எனவே நானே கையில் எடுத்துப்பேசப் போனேன்.

திடுக்கிட்ட என் மனைவி, திடு திடுவென குளியலறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டார். நான் கதவைத் தட்டினேன். அவர் திறக்கவில்லை.

பயந்துபோன நான் கதவை மோதித் திறந்தேன். அங்கே அவர் வேறொரு போனில் மெசேஜ் டைப் செய்து அனுப்பிக் கொண்டிருந்தார்.

அதைப் பிடுங்கிப் பார்த்தபோது, "எனக்கு போன் செய்யவேண்டாம். என் போன் என் அண்ணனிடம் இருக்கிறது" என்ற குறுந்தகவல் திரும்பத் திரும்ப அழைத்துக்கொண்டிருந்த அந்த நபருக்கு சென்றிருந்தது.

நான் அதிர்ந்துபோனேன். ஆனால், நான் வாய் திறக்கவில்லை. நான் ஏதாவது பேசப் போய் அவள் மீண்டும் தாழிட்டுக்கொண்டாலோ, வேறு ஏதாவது செய்துகொண்டாலோ என்ன செய்வது என்று சும்மா இருந்துவிட்டேன்.

மறுநாள் காலை என்னுடைய இரண்டு நண்பர்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களில் ஒருவர் என்னுடைய அண்ணன் போன்றவர். முன்பே எங்களுக்குள் சண்டை வந்து பிரிந்திருந்தபோது பேசி எங்களை மீண்டும் சேர்த்து வைத்தவர்.

என்னோடு நல்லவிதமாக சேர்ந்து வாழும்படியும், சிறிது நாள் சென்றால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் என் மனைவியிடம் இருவரும் பேசினர்.

ஆனால், இந்த முறை என் மனைவி பிடிவாதமாக இருந்தார். "இந்த" வாழ்க்கையை இனி வாழ முடியாது என்று சொல்லிவிட்டார்.

ஆனால் முன்பு போல அல்லாமல், இந்த முறை எங்கள் மூன்று வயது மகளை என்னிடமே விட்டுவிட்டுச் சென்றார். பிறகு விவாகரத்து விண்ணப்பித்து விவாகரத்தும் பெற்றார்.

நீதிமன்றத்தில்கூட "குழந்தையை அவரது தந்தை நன்கு கவனித்துக் கொள்வார். எனவே அவரிடமே அவள் இருக்கட்டும்," என்று நீதிபதி முன்பு கூறினார்.

என் மனம் உடைந்துபோனது. ஆனால், ஒரே மகிழ்ச்சி எங்கள் மகள் என்னோடு.

பிரிந்து செல்லுதல் - சித்தரிப்பு படம்

எங்களுடையது காதல் திருமணம். கல்லூரியில் ஒன்றாகப் படித்துக் கொண்டிருந்தபோது காதலித்தோம். அலை பாயுதே படத்தில் வருவதைப் போல, யாருக்கும் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்துகொண்டு அமைதியாக இருந்தோம். கடைசியாக இருவரின் வீட்டிலும் சொன்னபோது பூகம்பம் வெடித்தது.

ஏராளமான பிரச்சனைகள். கடைசியாக இரு வீட்டிலும் ஒப்புக்கொண்டு அவர்கள் முறைப்படி கோயிலில் திருமணம் செய்துவைத்தனர்.

சிறிது காலம் என் பெற்றோருடன் சொந்த வீட்டில் வாழ்ந்தோம். எனக்கும் அப்பாவுக்கும் சிறிது கருத்து வேறுபாடு ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியே வந்து தனியாக வாடகை வீட்டில் நானும் மனைவியும் மட்டும் வாழ்ந்தோம்.

சொந்தமாக வீடுகட்டிய பிறகே குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றார் என் மனைவி.

திருமணத்துக்குப் பின் மனைவி ஐ.டி. துறையில் பட்டமேற்படிப்பு படித்திருந்தார். எனவே நாங்கள் இருவரும் சென்னையில் குடியேறவேண்டும் என்று வற்புறுத்தினார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. வேண்டாம் என்றேன். இதனால் கோபித்துக்கொண்டு அம்மாவீட்டுக்குச் சென்று சிறிதுகாலம் இருந்தார். பிறகு பிரச்சனையை பேசித் தீர்த்தோம். அவர் மீண்டும் வீட்டுக்கு வந்தார்.

குழந்தை இல்லாததால் எங்களுக்குள் பிரச்சனை வருவதாக நினைத்தோம். எனவே குழந்தை பெற்றுக்கொண்டோம்.

குழந்தை பிறந்து மூன்று மாதமானபோது, என் மனைவிக்கு சென்னைக்கு குடி பெயரவேண்டும் என்ற ஆசை மீண்டும் வந்தது. அதையே வலியுறுத்தினார். நான் மறுத்தேன். இந்த முறை அவர் தனியாக குழந்தையை தூக்கிக்கொண்டு சென்னை சென்றுவிட்டார். நான் பார்க்கச் சென்றதையும் அவர் விரும்பவில்லை. தம் விருப்பதை மீறி பார்க்க வருவதாக போலீசில் புகார் கொடுத்தார்.

நானும் அவரோடு சென்னைக்கு வரவில்லை என்று கோபம் என நினைத்தேன். பார்க்கப் போவதையும் தவிர்த்தேன்.

செல்போனை பறித்தல் - சித்தரிப்பு படம்

மனைவிக்கு சென்னையில் அவர் நினைத்ததைப் போல வேலை கிடைக்கவில்லை. திரும்பி ஊருக்கு வந்தும் தனியாகவே இருந்தார். ஒரு கம்ப்யூட்டர் சென்டர் வைத்திருந்தார். குழந்தை ஊரிலேயே ஒரு பள்ளியில் படித்தாள். ஆனால், குழந்தையை பார்க்கப் போவது, மனைவியை கோப்படுத்தி மீண்டும் ஒன்று சேரும் வாய்ப்பை கெடுத்துவிடும் என்று பயந்து நான் குழந்தையைக்கூட போய் பார்க்கவில்லை. இப்படி ஒன்றரை ஆண்டுகள் பிரிந்திருந்தோம். இந்நிலையில், அண்ணனைப் போன்ற என் நண்பர் மனைவியிடம் தூது சென்று எங்களை சேர்த்துவைத்தார்.

மீண்டும் வாழ்க்கை நன்றாகப் போவதாகவே தெரிந்தது. அப்போது என் மனைவிக்கு வேறொரு ஆணிடம் இருந்து அழைப்பு வந்தது. என்ன என்று விசாரித்தேன். பிரிந்திருந்த காலத்தில் அவரது அறிமுகம் ஏற்பட்டது என்றும். சட்டென துண்டித்தால் பிரச்சனை ஆகும் எனவே, மெதுவாக துண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு மாலைப் பொழுதில் கடற்கரை மணலில் அமர்ந்தபடி பேசினோம். "கடந்த காலத்தில் எது நடந்திருந்தாலும் பரவாயில்லை. பிரிந்திருந்த காலத்தில் ஏற்பட்ட சம்பவங்களால் எந்த பிரச்சனை என்றாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ அதைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அத்தொடர்பை துண்டி" என்று சொன்னேன். அவர் ஏற்றுக் கொண்டார்.

ஆனால், அதன் பிறகும் ஒரு நாள் அதே நபரிடம் இருந்து அழைப்பு வந்தது. ஆத்திரத்தில் நான் மனைவியின் போனை பறித்து வீசி உடைத்துவிட்டேன்.

அதன் பிறகும், இரவில் போன் வந்துகொண்டே இருந்தது. அவரையே பல முறை பேசச் சொன்னேன். பேசாததால் நான் எடுத்து பேசப்போனேன். பிறகு என்னென்னவோ நடந்துவிட்டது.

இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. அவர் பிரிந்து சென்று விவாகரத்து பெற்று வேறொருவரை திருமணமும் செய்துகொண்டார்.

நாங்கள் பிரிந்திருந்த காலத்தில் மீண்டும் மனைவியுடனும், குழந்தையுடனும் சேர்ந்து வாழவேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது அதில் ஒன்று மட்டும் நடந்துவிட்டது. குழந்தையோடு மட்டும் வாழ்கிறேன். மற்றொன்று நடக்கவில்லை. மனைவி திரும்ப வந்து சேரவில்லை. எங்கள் வீட்டில் நான், அப்பா, அம்மா, தங்கை, தங்கையின் கணவர் என்று அனைவரும் மகளைப் பார்த்துக் கொள்கிறோம்.

விவாகரத்து பெற்ற காலத்தில் நான் மிகவும் உடைந்து போயிருந்தேன். அதில் இருந்து மீண்டு வர அதிக காலம் பிடித்தது. அந்தக் காலத்தில் என் மகள்தான் எனக்கு ஆறுதல் தந்து தேற்றினாள்.

பிறகு எனக்கு ஒரு பெரிய விபத்து ஏற்பட்டு, உயிர் தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அப்போதும் அருகில் இருந்து பார்த்துக்கொண்டது என் மகள்தான். அம்மாவுக்கு சர்க்கரை நோய். எப்போதும் அவருக்கு மாத்திரை எடுத்துத் தருவதும், இன்சுலின் ஊசி போடுவதும் 13 வயதான என் மகள்தான். அவளுக்கு நான் ஆறுதலாக இருப்பதை விட எங்களுக்கு அவள் ஆறுதலாக இருப்பதுதான் அதிகம்.

யாராவது என்னை விமர்சித்தாலும் எனக்காக பரிந்து பேசுவது மகள்தான்.

என்னை மனைவி விட்டுப் பிரிந்த நாளில் இருந்து ஒரு முறைகூட அம்மாவை அவள் கேட்டதும் இல்லை. அது பற்றிப் பேசியதும் இல்லை.

தாய் கவனித்து கொள்வதைபோல மகளை கவனிககும் தந்தை - சித்தரிப்பு படம்

சிறு வயதில் இருந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு செல்வது பாப்பாவுக்கு பிடிக்கும். எனவே அது போன்ற இடங்களுக்கு நிறைய அழைத்துச் சென்று விளக்குவேன். அது போன்ற பயணங்களின்போது யாராவது அவளிடம் அவள் தாயைப் பற்றி கேட்டால், அமைதியாக இருப்பாள். ஒன்று கேட்டவர் அந்தக் கேள்வியைக் கடந்து செல்லவேண்டும். அல்லது நான் தலையிட்டு சமாளிக்கவேண்டும்.

அம்மாவைப் பற்றி அவள் ஏதும் சொல்லாவிட்டாலும், அந்த மௌனம் புரிந்துகொள்ள முடியாததுதான். என் மனைவி உடன் இருந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்.

என்னை மீண்டும் திருமணம் செய்துகொள்ளும்படி சொல்கிறார்கள். எங்களுடையது காதல் திருமணம் என்பதால், பிரிவு, விவாகரத்து இதையெல்லாம் கடந்துவர எனக்கு நீண்டகாலம் பிடித்தது.

இப்போது என் மகளுக்கு 13 வயது. அவள் என்னோடு தனியாக அடிக்கடி பயணிப்பது எங்கள் பெற்றோருக்கு சங்கடமாக இருக்கிறது. அப்படி பயணிக்கும்போது அவள் பூப்பெய்திவிட்டால், என்னால் சமாளிக்க முடியாது என்று நினைக்கிறார்கள்.

அவளுக்கு கல்பனா சாவ்லா போல ஒரு விண்வெளி வீரராக வேண்டும் என்று ஆசை. நன்றாகவும் படிக்கறாள். நான் மீண்டும் திருமணம் செய்துகொண்டால் இப்போதுபோல என் மகளோடு அதிக நேரம் செலவிட முடியாது என்று அச்சம் எனக்கு.

மீண்டும் திருமணம் செய்வது என்று நான் முடிவெடுத்தால் அதற்கு பாப்பா தடை சொல்லப்போவதில்லை. அது தவிர, இரண்டாவது திருமணம் செய்வதில் பொதுவாக முதல் திருமணத்தின் ஆண் குழந்தைகள்தான் பெரிய பிரச்சனையாக இருப்பார்கள். பெண் குழந்தைகளால் பெரிய பிரச்சனைகள் இருக்காது.

ஆனால், வேறொரு பெண் என் வாழ்க்கையில் வந்தால் பிரச்சனை வரலாம். தவறான புரிதல் வரலாம். வருகிற பெண் சரியாகவே மகளைக் கண்டித்தாலும், எனக்கு அது வேறுவிதமாக தோன்றலாம்.

அதனால், மீண்டும் கணவன் மனைவி பிரச்சனை வரலாம். அது போன்று இன்னுமொரு பிரச்சனையை சந்திக்க நான் தயாரில்லை. அதனால்தான் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருக்க முடிவெடுத்தேன்.

இப்போது என் வாழ்க்கையின் மையப்புள்ளி என் செல்ல மகள் மட்டுமே.

(வட தமிழ்நாட்டில் வசிக்கும் ஒரு நடுத்தர வயது ஆணுடன் நிகழ்த்திய உரையாடலின் அடிப்படையில் இதை எழுதியவர் பிபிசி தமிழ் செய்தியாளர் அ.தா.பாலசுப்ரமணியன். ஆண்கள் சந்திக்கும் பிரத்தியேக சிக்கல்கள் தொடர்பான இந்த #HisChoice சிறப்புத் தொடரைத் தயாரிப்பவர் பிபிசி செய்தியாளர் சுசீலா சிங்.)

https://www.bbc.com/tamil/india-45849592

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ந்த பிள்ளையை வைத்துக்கொண்டு மறுமணம் செய்வது வேலில போற ஓணானை பிடித்து வேட்டிக்குள்ள விட்டது போல் ஆகிவிடும். அதுதான் ஒருமுறை பட்டு தெளிந்தாச்சே பிறகென்ன வேண்டிக்கிடக்கு......!  tw_blush:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய௠à®à®µà®©à®¿à®¤à¯à®¤à¯ à®à¯à®³à¯à®µà®¤à¯à®ªà¯à®² à®®à®à®³à¯ à®à®µà®©à®¿à®à®à¯à®®à¯ தநà¯à®¤à¯ - à®à®¿à®¤à¯à®¤à®°à®¿à®ªà¯à®ªà¯ பà®à®®à¯

 

இதெல்லாம் தகப்பன்களால் மட்டுமே முடியும். :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/17/2018 at 3:58 AM, குமாரசாமி said:

தாய௠à®à®µà®©à®¿à®¤à¯à®¤à¯ à®à¯à®³à¯à®µà®¤à¯à®ªà¯à®² à®®à®à®³à¯ à®à®µà®©à®¿à®à®à¯à®®à¯ தநà¯à®¤à¯ - à®à®¿à®¤à¯à®¤à®°à®¿à®ªà¯à®ªà¯ பà®à®®à¯

 

இதெல்லாம் தகப்பன்களால் மட்டுமே முடியும். :grin:

 

இப்படிச் சொல்லும்போது நம் மனதுக்கு இதமாகத்தான் இருக்கிறது. ஆனால் பொதுவாக அப்படிச் சொல்லிவிட முடியாது என நினைக்கிறேன், தோழர். மேற்கண்ட வாழ்க்கையில் தந்தை நம் மனதைத் தொடுகிறார். தற்காலச் சூழலில் இந்திய - இலங்கைச் சமூகங்களில் தாய்க்குத்தான் பெரும்பாலும் இந்நிலை ஏற்படுகிறது. வருங்காலம் எப்படியோ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/17/2018 at 12:28 AM, குமாரசாமி said:

தாய௠à®à®µà®©à®¿à®¤à¯à®¤à¯ à®à¯à®³à¯à®µà®¤à¯à®ªà¯à®² à®®à®à®³à¯ à®à®µà®©à®¿à®à®à¯à®®à¯ தநà¯à®¤à¯ - à®à®¿à®¤à¯à®¤à®°à®¿à®ªà¯à®ªà¯ பà®à®®à¯

 

இதெல்லாம் தகப்பன்களால் மட்டுமே முடியும். :grin:

இணைத்த காணொலி காணாமல் போனதால் மீள்பதிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகள்கள் அப்பாவின் மீது கொள்ளும் அன்பு அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரிந்த ஒன்று .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.