Jump to content

புலம் பெயர் தமிழர்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடுகின்றார் பிராம்டன் நகர மேயர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தமிழர்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடுகின்றார் பிராம்டன் நகர மேயர்!

Linda-Jeffery.jpg

கனடா – ஒன்ராறியோ மாகாணத்தின் உள்ளூராட்சித் தேர்தல்களின் முன் கூட்டிய வாக்களிப்புக்கள் முடிவடைந்து எதிர்வரும் திங்கட்கிழமை ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழர்கள் அதிகமாக வாழும் ஸ்காபரோ, மார்க்கம், ஒஷாவா மற்றும் பிராம்டன் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், பல வேட்பாளர்கள் தமிழ் மக்களின் ஆதரவைக் கோரிய நிலையில் நடத்தப்படுகின்றன. பிராம்டன் நகரில் மேயராக பதவி வகித்து மீண்டும் அப்பதவிக்காக போட்டியிடும் Linda Jeffery ஏகோபித்த ஆதரவு தொடர்ந்தும் ஏறு முகமாக இருப்பதாகவே கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

சில தினங்களுக்கு முன்னர் இதை உறுதிப்படுத்துவது போல கனடாவின் பிரதான மூன்று கட்சிகளின் பிராம்டன் பகுதி மத்திய பாராளுமன்ற உறுப்பினர்களும், ஒன்ராறியோசட்ட மன்ற உறுப்பினர்களும் Linda Jeffery ‌அவர்களுக்கு தமது ஆதரவை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள்.

கனடிய தமிழர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பிரத்தியேக நேர்காணலில், Linda Jeffery பல்வேறு விடயங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தனது பதவிக்காலத்தில் தமிழ் மக்களுடன் தனக்கிருந்த பிணைப்புக்களை சிறப்புற வெளிப்படுத்திய அவர், எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து பணிபுரியும் வழி வகைகளையும் தெரிவித்துள்ளார்.

கனடிய தமிழர்களின் மரியாதையை பெற்றிருப்பவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுப் பணியாற்றுவதே தனது நோக்கம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, மக்களை ஒன்றாக்குவதில் தனக்கிருக்கும் கடப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதுடன், சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தி, அதில் குளிர்காய்ந்து அரசியல் இலாபம் காண நினைக்கும் சக்திகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, பிராம்டன் பகுதிகளில் அதிக அளவில் வாழும் சீக்கிய, வட இந்தியவம்சாவளியினைச் சே‌ர்ந்தவர்களுடன் ஈழத்தமிழ்க் கனடியர்களின் ஆதரவும் ஏகோபித்துக் கிட்டும்நிலை இருப்பதால் Linda Jefferyயின் வெற்றிவாய்ப்புக்கள் பிரகாசமாக இருப்பது அவதானிக்கப்படுகிறது.

 

http://athavannews.com/புலம்-பெயர்-தமிழர்களின்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரம்டன் மேயர் தேர்தல் – பழமைவாதக் கட்சியின் முன்னாள் தலைவர் வெற்றி

Patrick-Brown-wins_Super_Portrait.jpg

பிரம்டன் மேயர் பதவிக்காக போட்டியிட்ட முற்போக்கு பழமைவாதக் கட்சியின் முன்னாள் தலைவர் பற்றிக் பிரவுன், அதில் வெற்றி பெற்றுள்ளதுடன், தனது அரசியல் மீள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்.

அவருக்கு எதிராக போட்டியிட்ட முன்னாள் மேயர் லின்டா ஜெஃப்ரியை சிறிதளவு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து, பிரம்டனின் அடுத்த மேயராக அவர் தேர்வாகியுள்ளார்.

பற்றிக் பிரவுன் ஏறக்குறைய 44.4 சதவீத வாக்குகளையும், லின்டா ஜெஃப்ரி கிட்டத்தட்ட 40.8 சதவீத வாக்குகைளையும் பெற்றிருந்தனர்.

பற்றிக் பிரவுன் முன்னதாக பீல் பிராந்திய மேயர் பதவிக்கான போட்டியில் குதித்த போதிலும், அந்த நகருக்கான தேர்தலை ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் நிறுத்தியதை அடுத்து, வேட்புமனு பதிவின் இறுதி நாளன்று பற்றிக் பிரவுன் பிரம்டன் மேயர் பதவிக்கான போட்டியில் தனது பதிவினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்த்ககது.

இதேவேளை ஒன்ராறியோவின் பல உள்ளூராட்சி சபைகளிலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்றைய வாக்குப் பதிவுகளில் தடங்கல்கள் ஏற்பட்டிருந்த நிலையில், அவற்றில் இன்றும் வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன.

சில இடங்களில் வாக்குப் பதிவுகள் மேலும் இரண்டு மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்ட போதிலும், மேலும் சில இடங்களுக்கு இன்று நாள் முழுவதற்கும் வாக்குப் பதிவுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

http://athavannews.com/பிரம்டன்-மேயர்-தேர்தல்-ப/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.