Jump to content

மொஹமட் நிஸாம்டீன், பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மொஹமட் நிஸாம்டீன், பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை…

October 19, 2018

Mohamed-Nizamdeen.jpg?resize=800%2C534

அவுஸ்ரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர், மொஹமட் நிஸாம்டீன்,  பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் நிஸாம்டீன், எனும் 25 வயதுடைய இளைஞர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணம் ஒன்று அவரிடம் இருந்துள்ளதாகவும் அந்த இளைஞர் மீது அவுஸ்ரேலிய காவற்துறையினர் குற்றஞ்சாட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/2018/99831/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“இலங்கை இளைஞனை பயங்கரவாத குற்றச்சாட்டில் சிக்க வைத்தது அவுஸ்திரேலிய வீரரின் சகோதரர்”

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர் மொஹமட் நிஸாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.australia.jpgமொஹமட் நிஸாம்தீன் பயங்கரவாத தாக்குதலுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும் அத் திட்டம் தொடர்பான ஆவணம் ஒன்றை வைத்திருந்ததாகவும் கூறி கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குறித்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிஸாம்தீன் தற்போது முழுமையாக பயங்கரவாத குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் அவுஸ்திரேலிய வீரர் ஒருவரின் நெருங்கிய சகோதரர் ஒருவர் குறித்த பயங்கரவாத குற்றச்சாட்டில் மொஹமட் நிஸாம்தீனை சிக்க வைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/42836

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த அவுஸ்ரேலிய வீரர் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் உஷமன் கவாயாவின் சகோதரர்

.......

பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் யார்? வேறு திசையில் செல்லும் நிசாம்தீன் வழக்கு!

e1ccf7129bef764359d960a4d47ea107-102785.jpg

பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இலங்கை மாணவர் நிசாம்தீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அவுஸ்ரேலிய பொலிஸார் மீளப்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வழக்கில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் உஷமன் கவாயாவின் சகோதரருக்கும் தொடர்பு இருப்பதாக நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்நிலையில் அவரது வீடு கடந்த வாரம் தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டது என டெய்லி டெலிகிராப் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த இலங்கை மாணவர் நிசாம்தீனின் பணியிட அலுவலகத்தின் மேசையில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்பேட்டில், முக்கிய இடங்களில் தாக்குதல்கள் மேற்கொள்வது உட்பட அரசியல் புள்ளிகளை படுகொலை செய்வதற்கும் திட்டமிடப்பட்ட தகவல்கள் எழுதப்பட்டிருந்ததாக பொலிஸார் முன்னர் தெரிவித்திருந்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில் நிசாம்தீன் கைது செய்யப்பட்டு சிட்னி Goulburn பகுதியில் உள்ள அதி உச்ச பாதுகாப்பு சிறையில் ஒரு மாத காலம் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

ஆனால், கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டில் புத்தகத்திலுள்ள தகவல்கள் எதுவுமே நிசாம்தீனின் கையெழுத்தில் அமைந்தவை அல்ல என்பதை நிசாம்தீனும் அவரது தரப்பு சட்டத்தரணிகளும் நீதிமன்றில் எடுத்துக் கூறியிருந்தனர்.

இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸார் திருப்பப் பெற்றுக்கொண்டனர். இருப்பினும் அதற்கு முன்னரே நிசாம்தீன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அப்படியெனில் பிரச்சினைக்குரிய தகவல்கள் அடங்கிய அந்த குறிப்பேட்டில் உள்ள அந்த கையெழுத்துக்கு சொந்தமானவர் யார் என்பதை கண்டறிவதில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரமப்பித்ததுடன் பயங்கரவாத தாக்குதல் சூத்திரதாரியை கண்டுபிடித்து கைது செய்வதற்கு சகல விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணைகளின் பிரகாரம், கிரிக்கெட் அணி வீரர் உஷமன் கவாயாவின் மூத்த சகோதரன் அர்சலன் கவாஜா பெற்றோருடன் தங்கியிருந்த Westmead வீட்டில் பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் கடந்த வாரம் தேடுதல் நடத்தப்பட்டது.

இருப்பினும் இந்த தேடுதலின்போது அர்சலன் கவாஜா கைது செய்யப்படவோ அல்லது எவ்வித குற்றச்சாட்டுகளோ பதிவுசெய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் வீரர் உஷமன் கவாயாவின் மூத்த சகோதரனான அர்சலன் கவாஜா நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/பயங்கரவாத-தாக்குதல்-பின்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் உஷமன் கவாயாவின் சகோதரர்

.......

பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் யார்? வேறு திசையில் செல்லும் நிசாம்தீன் வழக்கு!

e1ccf7129bef764359d960a4d47ea107-102785.jpg

பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இலங்கை மாணவர் நிசாம்தீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அவுஸ்ரேலிய பொலிஸார் மீளப்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வழக்கில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் உஷமன் கவாயாவின் சகோதரருக்கும் தொடர்பு இருப்பதாக நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்நிலையில் அவரது வீடு கடந்த வாரம் தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டது என டெய்லி டெலிகிராப் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த இலங்கை மாணவர் நிசாம்தீனின் பணியிட அலுவலகத்தின் மேசையில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்பேட்டில், முக்கிய இடங்களில் தாக்குதல்கள் மேற்கொள்வது உட்பட அரசியல் புள்ளிகளை படுகொலை செய்வதற்கும் திட்டமிடப்பட்ட தகவல்கள் எழுதப்பட்டிருந்ததாக பொலிஸார் முன்னர் தெரிவித்திருந்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில் நிசாம்தீன் கைது செய்யப்பட்டு சிட்னி Goulburn பகுதியில் உள்ள அதி உச்ச பாதுகாப்பு சிறையில் ஒரு மாத காலம் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

ஆனால், கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டில் புத்தகத்திலுள்ள தகவல்கள் எதுவுமே நிசாம்தீனின் கையெழுத்தில் அமைந்தவை அல்ல என்பதை நிசாம்தீனும் அவரது தரப்பு சட்டத்தரணிகளும் நீதிமன்றில் எடுத்துக் கூறியிருந்தனர்.

இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸார் திருப்பப் பெற்றுக்கொண்டனர். இருப்பினும் அதற்கு முன்னரே நிசாம்தீன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அப்படியெனில் பிரச்சினைக்குரிய தகவல்கள் அடங்கிய அந்த குறிப்பேட்டில் உள்ள அந்த கையெழுத்துக்கு சொந்தமானவர் யார் என்பதை கண்டறிவதில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரமப்பித்ததுடன் பயங்கரவாத தாக்குதல் சூத்திரதாரியை கண்டுபிடித்து கைது செய்வதற்கு சகல விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணைகளின் பிரகாரம், கிரிக்கெட் அணி வீரர் உஷமன் கவாயாவின் மூத்த சகோதரன் அர்சலன் கவாஜா பெற்றோருடன் தங்கியிருந்த Westmead வீட்டில் பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் கடந்த வாரம் தேடுதல் நடத்தப்பட்டது.

இருப்பினும் இந்த தேடுதலின்போது அர்சலன் கவாஜா கைது செய்யப்படவோ அல்லது எவ்வித குற்றச்சாட்டுகளோ பதிவுசெய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் வீரர் உஷமன் கவாயாவின் மூத்த சகோதரனான அர்சலன் கவாஜா நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/பயங்கரவாத-தாக்குதல்-பின்/

 

அவுஸ் அணியில் இப்படி ஒரு வீரர் இருக்கிறார் என்று இன்று தான் கேள்விப்படுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

 

அவுஸ் அணியில் இப்படி ஒரு வீரர் இருக்கிறார் என்று இன்று தான் கேள்விப்படுகிறேன் 

35 ரெஸ்ற் மட்ச் விளையாடி இருக்கின்றார். ஏழு சென்சுரி அடித்திருக்கின்றார். கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியாமல் இருக்கக்கூடாதே!

 

http://m.espncricinfo.com/australia/content/player/215155.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎21‎/‎2018 at 3:09 AM, கிருபன் said:

35 ரெஸ்ற் மட்ச் விளையாடி இருக்கின்றார். ஏழு சென்சுரி அடித்திருக்கின்றார். கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியாமல் இருக்கக்கூடாதே!

 

http://m.espncricinfo.com/australia/content/player/215155.html

 

இலங்கையணி தோத்துக் கொண்டு போவதால் கிரிக்கெட் மேல் உள்ள ஆர்வம் குறைந்து போயிட்டுது? 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.