Jump to content

தன்னார்வ மொழி உரிமை கண்காணிப்பாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தன்னார்வ மொழி உரிமை கண்காணிப்பாளர்

.............................................................
கிளிநொச்சிக்குச் செல்லும் போதெல்லாம் அதிகமாகக் கவலை கொள்வது கடைகளின் பெயர்ப் பலகைகளைப் பார்த்துத்தான். எத்தனை அழகழகான தமிழ்ப் பெயர்களால் அலங்காரமாகி நின்ற இடங்கள் இப்படி ஆகிவிட்டனவே என்று.; மொழி இனத்தின் அடையாளங்களில் மிகமிக முக்கியமானதல்லவா!

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து எழுத்துப் பிழைகளுடன் காணப்பட்ட பெயர்ப் பலகைகளை எங்கெல்லாம் கண்டேனோ அவற்றை எல்லாம் சேகரித்தேன். அவற்றில் முகநூல் பதிவுகளில் இருந்தே அதிகமான படங்களை தரவிறக்கி சேகரித்து வைத்திருந்தேன்.

பெரிய பெரிய பெயர்ப் பலகைகளில்
முக்கியமான பெயர்ப் பலகைகளில்
தமிழர்களின் இடங்களிலேயே உள்ள பெயர்ப் பலகைகளில்
விளம்பரங்களில்
பொதுத் தளங்களில்
பேருந்துகளில்
என எங்கும் எதிலும் காணப்பட்ட எழுத்துப் பிழைகளை தொடர்ந்து படங்களாக பார்த்த போது
மொழி மீது 
நாங்கள் 
காட்டாத அக்கறை பற்றிய
கவலை வந்தது.

முகநூலில் மிக அதிகமாக எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டும் சில நண்பர்களுடன் உரையாடினேன். அவர்களின் ஊடாக தேடித்தான் அரசகரும மொழிகள் அமைச்சின் செயற்பாடுகளை அறிந்தேன்.

காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாக எனக்கொரு அழைப்பு. 
2018 யூன் 04. காலை 6.00 மணி. மன்னார் கச்சேரியில் பணிபுரியும், ஒருவர் தொலைபேசியில் அழைத்தார்.

'அக்கா, இண்டைக்கு 9.00 மணிக்கு மன்னார் கச்சேரிக்கு அமைச்சர் மனோ கணேசன் வாறார். அவர் உரையாற்றுவார் நீங்களும் அவருடன் ஏதும் கேட்க இடமிருக்கிறது. வருகிறீர்களா?'

அதுவரை மனோகணேசன் என்றவரை ஒரு அமைச்சர் என்று பெயரளவில் மட்டுமே தெரிந்து வைத்திருந்தேன். முதல் முறையாக நேரில் காணவும் அவரது உரையை கேட்கவும் ஒரு கேள்வியுடனும் வென்றேன். சென்று முதல் வரிசையில் அமர்ந்தும் கொண்டேன்.

முகமன் கூறல்களுக்குப்பின் அமைச்சர் உரையாற்றினார்.

அவரது முதலாவது கருத்தே 'நான் மனோ கணேசன். ஷன் இல்லை. சன். என் பெயர் எழுத்துப் பிழையாக எழுதப்பட்டிருக்கிறது' 
ஆஹா. அழகு. இந்தத் துணிச்சல்மிக்க மனிதர்களே அதிகம் வேண்டும். மேடையில் நின்றே தவறை தவறு எனச் சுட்டிக்காட்டும் தைரியம்தான் வேண்டும்.

கனணித்திரையை சுவரில் பார்த்துக் கொண்டிருந்தபோதே அவரது பெயர் திருத்தப்பட்டது.

யாரோ நீட்டிய காகிதத் விரித்துப் பார்த்தார். 'இங்கே சிங்களவர்களும் வந்திருப்பதால் சிங்களத்தில் பேசவும்' அட விடுங்கப்பா இங்கே தமிழில்தான் பேசுவேன் என்று கூறி ஆரம்பித்த அவருடைய உரை உண்மையில் நன்றாக இருந்தது.

கேள்வி நேரத்தில் இரண்டாவது ஆளாக எழுந்தேன்.

'வணக்கம். நிகழ்வின் ஆரம்பத்தில் உங்களது பெயரில் இருந்த எழுத்துப் பிழையைச் சுட்டிக் காட்டினீர்கள். அது உடனடியாகத் திருத்தப்பட்டது. பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அதைப்போலவே நீங்கள் நினைத்தால் நாடு முழுவதிலும் உள்ள எழுத்துப் பிழைகளை ஒரு மாதத்திற்குள் சீர்செய்து விடலாம் என்று நம்புகிறேன். இதற்கு ஏதும் வழியை ஏற்படுத்துவீர்களா?' என்றேன்.

'1956. இந்த இலக்கத்துடன் தொடர்பு வைத்திருங்கள். வட்ஸப், வைபர், ஐஎம்ஒ மூன்றிருலுமாக நீங்கள் படங்களை அனுப்பலாம். அநேகமானவர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறீர்கள். தவறுகளை கண்டால் உடனே அதனை தெளிவாக படம் எடுத்து 1956 இற்கு உடனடியாக அனுப்புங்கள். மிகுதியை நாங்கள் கவனித்துக் கொள்வோம் உங்கள் கேள்விக்கு நன்றி'

அட! இவ்வாறெல்லாம் வழி இருப்பதை இத்தனை நாட்களாக அறியாமல் இருந்திருக்கிறேனே என்று தோன்றியது.

மாற்றுத்திறனாளிகளுக்கான அரச பாராட்டுச் சான்றிதழ்களில் சிங்களம் மட்டும் காணப்படுகிறது. தமிழிலும் ஒப்பமிட்டு வழங்கப்படுதல் வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தேன்.

சான்றிதழின் பிரதியை கொண்டு வந்தீர்களா என்றார். அனுப்பிவைக்கிறேன் என்றேன். அரச ஆவணங்கள் இருமொழியில் தரப்படுவதில் கூடிய கவனம் எடுத்து வருவதாகக் கூறினார்.

வெறும் வாக்குறுதியாக இருக்குமோ? என்று நானும் மனதுக்குள் நினைக்காமல் இல்லை. எனினும் வரும்போதே நெற்காட் போட்டுக்கொண்டேன்.

எழுத்துப் பிழைகளுடன் சேகரித்த படங்களில் தெளிவாகவும் எந்த இடம் அல்லது எந்தப் பேருந்து என்று இனங்காணும் வகையிலும் இருந்த படங்கள் அனைத்தையும் வைபரில் அனுப்பினேன். அடுத்தநாளே எனக்கு பதில் எழுதியிருந்தார்கள். 
கவனத்தில் எடுப்பதாக.

பின்பு முகவரி கேட்டு எழுதினார்கள்.

பின்பு கடிதமும் ஒரு படிவமும் வந்தது. நிரப்பி அனுப்பினேன்.

பின்னர் அழைப்பு வந்தது.

(இதற்குள் ஆங்காங்கே கண்ட எழுத்துப்பிழைகளுடன் கூடிய பெயர்ப் பலகை படங்களை அனுப்பவும் செய்தேன்.)

12.10.2018, கொழும்பு 7, 
கமநல ஆராய்ச்சி நிலையத்தில் நிகழ்வு. 
தன்னார்வத் தொண்டராக எனது செலவிலேயே சென்றேன். தொண்டர்கள் மட்டுமே வந்திருந்தார்கள். யாரையும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒரு முகம் கூட அறிமுகமில்லாத இடத்தில் நானே என்னை கவனித்துக் கொண்டேன். 
இலங்கை முழுவதிலும் இருந்து வந்திருந்த தொண்டர்களில் யார் முஸ்லிம் யார் சிங்களவர் யார் தமிழர் என்று தெரியவில்லை. வந்திருந்தவர்களிலும் பெரும்பான்மையானவர்கள் ஆண்கள். மிகச்சிலரே பெண்கள். அதிலும் தமிழ் முகங்கள் குறைவு. அமைதியாகச் சென்று இரண்டாவது வரிசையில் தனியாக அமர்ந்து கொண்டேன்.

மங்கள விளக்கின் திரிகளை ஏற்றும்போது நானும் அழைக்கப்பட்டேன். தோற்றம் காரணமாக இருந்திருக்கலாம். பெயர்கள் அழைக்காமல் நடந்த நிகழ்வு. தன் புன்னகையாலும் சைகையாலும் அழைத்த அந்தப் பெண்மணியின் பெயரோ பதவியோ எனக்குத் தெரியவில்லை. (படத்தில் பச்சைச் சேலையுடன் நிற்கிறார்.)

நிகழ்வு ஆரம்பமாகியது.
நோக்கம் பற்றிய உரை
அரசகரும மொழிக் கொள்ளை தொடர்பான விளக்கம்
மொழிக்கொள்கை தொடர்பான சட்ட ரீதியான விளக்கம்
தொடர்ந்து மொழி ரீதியான நல்லிணக்கம் பற்றிய குறுந்திரைப்படங்கள் 3 காட்சிப்படுத்தப்பட்டன. 
படங்கள் பார்த்து முடிந்து வெளிச்சம் உயிர்ப்பிக்கப்பட்ட போது என்னை அடுத்து, இரண்டு வெற்று இருக்கைகளைக் கடந்து இருந்தவன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டான். முகம் சிவந்திருந்தது.

'நீங்கள் தமிழா?' என்றேன். 'ம்' என்று புன்னகைத்தான்.

'கடைசியா போட்ட மொழி தரமா இருக்கு என்ன?' என்றேன்.

'முதலாவது படமும் நல்லம்' என்றான்.
'மொழிதான் எனக்கு அதிகமான எளிமையா புரியிது.' என்றேன்.

'ஓம்' என்றான்.

மதிய உணவு வேளையில் கிளிநொச்சியில் இருந்து வந்திருந்த ஒருவர் அறிமுகமாகினார். உணவு பரிமாறிக்கொள்ள அவரே உதவினார். அவர்தான் படங்களையைும் எடுத்து பின்னர் அனுப்பி வைத்தார்.

உணவு முடியும் வேளை எனது வலது புறத்தில் இருந்து ஒரு சிங்களத்தொனி கலந்த குரல் 
'ஆ எப்பிடி சுகமா?'

பார்த்தவுடன் புரிந்தது. 'ஆ நீங்களா? எங்க இங்க?' என்று மரியாதை குறித்து எழுந்தேன்.

'இருங்க நீங்க இருங்க' என்றவர் இதற்குமுன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த தேசப்பிரிய அவர்கள். இவருடன் பலதடவைகள் எதிர்த்துப் பேசியிருக்கிறேன். 'நீங்க செய்ய மாட்டிங்க. நான் செய்திட்டு உங்களுக்கும் பாராட்டுவதற்கு அழைப்பு விடுப்பேன்.' என்று நேரே கூறியிருக்கிறேன்.

'நான்தான் செயலாளர். தெரியுமா?' என்றார்.

'தெரியாதே' என்றேன். உண்மையில் தெரியாது. மன்னாரைவிட்டு மாற்றமாகி எங்கே போனார் என்று தேடும் அளவுக்கு அவர் நான் வேலை செய்த தளங்களில் உறுதுணையாக இருந்திருக்கவில்லை. புன்னகையுடன் விடைபெற்றுக் கொண்டார்.

பிற்பகல் அமைச்சரின் உரை. இரண்டாவது தடைவை அவரது உரையும் பிடித்திருந்தது.

கேள்வி நேரத்தில்,
'மாற்றுத்திறனாளிகள் சார்பாக என்னிடம் ஒரு கேள்வி உண்டு. மொழிகளில் சைகைமொழி பேசுபவர்கள் தகவல் அறியும் உரிமை முழுதாக மறுக்கப்பட்டவர்களாக உள்ளார்கள். மொழி உரிமை என்ற அடிப்படையில் சைகை மொழியில் தகவலறியும் வாய்ப்புகள் தொடர்பாக ஏதும் திட்டங்கள் இருக்கின்றனவா இல்லாவிடில் ஏதாவது வழிமுறையை ஏற்படுத்த இயலுமா என்பதை அறிய விரும்புகிறேன்' என்றேன்.

'நல்ல கேள்வி. அரசகரும மொழிகள் என்ற வகையில் மும்மொழிகள் பிரதானமானவை. ஆனாலும் சைகை மொழியின் நிலைப்பாடு குறித்து திறந்த பேச்சுக்களை நடாத்தி வருகிறோம். அதன் அவசியம் இருக்கிறது என்று தெரியும். விரைவில் சைகை மொழி பேசுவோருக்கான நல்ல வழிமுறைகளை ஏற்படுத்துவதற்கு முயற்சியில் உள்ளோம். உங்கள் கேள்விக்கு நன்றி' என்றார்.

அழைக்கப்பட்ட தொண்டர்கள் 100 பேரில் 25 பேருக்கு மட்டுமே இம்முறை அடையாள அட்டையும் சான்றிதழும் வழங்கப்படுவதாக கூறினார்கள். அதிகமான முறைப்பாடுகளை முன்வைத்தவர்கள் என்ற அடிப்படையில் வழங்குவதாகவும் உரையில் தெரிய வந்தது. ஐந்தாவது ஆளாக எனது பெயர் அழைக்கப்பட்டது.

சான்றிதழும் அடையாள அட்டையும் வாங்கிய பின் 'நானும் எனது நூல்களை உங்களுக்குத் தர விரும்புகிறேன்' என்று கூறி எனது நூல்களை வழங்கினேன்.

மாற்றுத்திறனாளிகளை பாராட்டும் நிகழ்வுகளில் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் சிங்களத்தில் மட்டும் ஒப்பம் வைத்துவிட்டு தமிழில் அச்சடிக்கப்பட்ட பகுதி வெற்றிடமாக இருப்பதையும் சுட்டிக்காட்டிய பிரதிகளையும் அதில் வைத்திருந்தேன்.

அப்பதிவை சுருக்கமாக முகநூலில் பதிவிட்டேன். 24 மணித்தியாலங்களுக்குள் வந்த வாழ்த்துக்கள் உண்மையில் எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்தன.

தன்னார்வ மொழி உரிமை கண்காணிப்பாளர் அடையாள அட்டையானது நான் காணும் எப்பகுதியில் 
மொழிப்பிறழ்வு, 
மொழிப்பிழை, 
மொழியுரிமை மீறப்பட்டாலும், 
அங்கே உரிமையுடன் நின்று 
சரியான மாற்றத்திற்காக தொண்டாற்றுவதற்கே மக்காள்.

நீங்களும் நம் மொழியை பாதுகாக்க தொண்டாற்றலாம்.

இது அறிவுரை அல்ல. 
கடமை.

நம் இனம் வாழ மொழியும் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

இது மனோகணேசன் என்ற அமைச்சரின் கடமையும் பொறுப்பும் மட்டும் அல்ல. நமதுமாகும்.

ஏனெனில் செழுமையாக வாழ வேண்டியது நமது மொழியாகும்.

வெற்றிச்செல்வி
13.10.2018

https://www.facebook.com/vetrichelvi.velu?__tn__=%2CdCH-R-R&eid=ARDCUR7W41Y5Xx5viOrZt7kLM8Fl0HFwH63QsYGdgTrctHm1X3Zrde6Mn0zHn-6Al9JWSnDCM8L2wmXf&hc_ref=ARTrTP1ybxyE9YFlb4vVSlbKPjQd7zLcg9rBnLaLwmt7Kew3VqzKt2LOFd3JCUZRgJI&fref=nf

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.