Jump to content

இலங்கைக்கு வந்த இந்திய ராணுவம் அமைதிப்படையா? ஆக்கிரமிப்பு படையா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு வந்த இந்திய ராணுவம்
அமைதிப்படையா? ஆக்கிரமிப்பு படையா?

மறப்பது மக்கள் இயல்பு. நினைவு படுத்த வேண்டியது எமது கடமை.

2009ல் என்ன நடந்தது என்பதே பலருக்கு மறந்துவிட்ட நிலையில் 1987ல் நடந்தது எப்படி நினைவு இருக்கும்?

அதுவும் இன்று முகநூலில் பதிவு எழுதும் சிலர் 1987;ல் பிறந்தே இருக்க மாட்டார்கள்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி “ இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு” என்றும் “அமைதிப்படையை எதிர்த்து போரிட்டது ஒரு முட்டாள்தனம்” என்றும் சுமந்திரன் போன்றவர்கள் ரீல் சுத்த முனைகின்றனர்.

•முதலில் இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றி பார்ப்போம்.

(A)ஒப்பந்தம் மூலம் இந்தியா அடைந்த அரசியல் இராணுவ நலன்கள்

(அ) இலங்கையின் வெளியுறவுகளில் கட்டுப்பாடு செலுத்தும் உரிமை

(ஆ)ஒலி ஒளி பரப்புகளை கட்டுப்படுத்தும் உரிமை

(இ)திருகோணமலை தளத்தின் மீதான கட்டுப்பாடு உரிமை

(ஈ)இலங்கை ராணவத்திற்கு பயிற்சி அளிக்கும் உரிமை,இலங்கை ராணுவம் மீதும் இதர நாடுகளுடனான உறவுகள் மீதும் கட்டுப்பாடு

(B)ஒப்பந்தம் மூலம் இந்தியா அடைந்த பொருளாதார நலன்கள்

(அ)இந்திய கொருட்களின் ஏற்றுமதிக்கான தடைகள் நீக்கப்படும்

(ஆ)திரிகோணமலை எண்ணெய் குதங்கள் புத்துயிர்ப்பு செய்யப்படும். அதன் செயற்பாட்டிலும் லாபத்திலும் இந்தியாவுக்கு உரிமை அளிக்கப்படும்

(இ)சுமார் 400 கோடி ரூபா பெறுமதியான கட்டுமான பணிகள் இந்தியாவுக்கு வழங்கப்படும்

(ஈ)பெற்றோல் மற்றும் எண்ணெய் கிணறுகள் இந்தியாவுக்கு அளிக்கப்படும்

(உ)இலங்கை வங்கி மற்றும் திட்டக்குழு அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் உரிமை மூலம் இலங்கை பொருளாதார திட்ட வகுப்பில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு

 (ஊ)இந்திய ரயில் மற்றும் பேரூந்துகளை விற்பனை செய்யும் வாய்ப்பு

இவ்வாறு தமிழர் நலனைவிட இந்திய நலனை கொண்ட ஒப்பந்தத்தை ஈழத் தமிழர்கள் எதிர்த்தது தவறு என்று கூறுகின்றனர்.

•அடுத்து இந்திய ராணுவம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்

பெரும்பாலானோர் 1987ல்தான் இந்திய ராணுவம் இலங்கை வந்ததாக நினைக்கிறார்கள். ஆனால் 1971இலும் இந்திய ராணுவம் இலங்கை வந்தது என்பதை இவர்கள் அறியவில்லை.

1971ல் இந்திராகாந்தியின் ஆட்சி காலத்தில் 2000 இந்திய ராணுவத்தினர் இலங்கை வந்தனர். ஜே.வி.பி கிளர்சியை அடக்குவதாக கூறி அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் சுட்டதில் 6000 சிங்கள இளைஞர்கள் இறந்தார்கள்.

அடுத்து 1987ல் அமைதிப்படை என்று ஒரு லட்சத்து இருபதாயிரும் இந்திய ராணுவ வீரர்கள் இலங்கைக்கு வந்தார்கள்.

அமைதிப்படை வந்தபோது தென்னிலங்கைதான் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. தென்னிலங்கையில்தான் பிரதமர் ராஜீவ் காந்தி துப்பாக்கியால் தாக்கப்பட்டார்.

வந்தது அமைதிப்படை என்றால் தென்னிலங்கையில்தான் அவை நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு லட்சத்து இருபதாயிரம் இராணுவத்தில் ஒரு வீரர் கூட தென்னிலங்கையில் நிறுத்தப்படவில்லை.

அதேவேளை எதிர்ப்பே தெரிவிக்காத வடக்கு கிழக்கு தமிழ் பகுதிகளில்தான் 10 தமிழருக்கு ஒரு ராணுவ வீரர் என்ற விகிதத்தில் நிறுத்தப்பட்டார்.

அதுமட்டுமல்ல, இந்திய ராணுவம் 1965ல் பாகிஸ்தானுடன் நடந்த போர் 22 நாட்களே நடைபெற்றது. 1971ல் வங்கதேசத்தை உருவாக்கிய போர் 14 நாட்கள் மட்டுமே நடைபெற்றது.

ஆனால் 1987ல் அமைதிப்படை ஈழத்தில் நடத்திய போர் இரண்டரை வருடங்கள் நடைபெற்றது. அதுவும் நாள் ஒன்றுக்கு 6 கோடி ருபா வீதம் 5400 கோடி ரூபா செலவு செய்து நடத்தியது.

இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் வரலாறு காணாத வரட்சியில் விவசாயிகள் செத்துக்கொண்டிருந்த வேளை இலங்கையில் இந்திய அமைதிப்படை 5400 கோடி ரூபா செலவு செய்து போர் நடத்தியது.

இந்த இந்திய அமைதிப்படையினரால் 10000 மேற்பட்ட அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 800 அதிகமான பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். பல கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான தமிழ் மக்களின் சொத்துகள் சேதமாக்கப்பட்டன.

இந்திய ராணுவம் தமிழ் மக்களின் நலனுக்காக இந்த போரை செய்யவில்லை. மாறாக தென்கிழக்காசிய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் மத்தியஸ்தன் என்கிற அரசியல் பாத்திரத்தையும் இப் பிராந்திய வல்லரசு என்கிற இராணுவ பாத்திரத்தையும் அது நிலை நிறுத்திக் கொண்டது.

இலங்கைக்கு வந்தது அமைதிப்படை அல்ல. அது இந்திய ஆக்கிரப்புபடை. அதனை ஈழத் தமிழர்கள் எதிர்த்து போரிட்டது சரியே.

ஒரு தேசிய இனத்தை அதன் சொந்த மண்ணில் எந்த வல்லரசாலும் தோற்கடிக்க முடியாது என்பதையே ஈழத்தில் தமிழ்மக்கள் செய்து காட்டினார்கள்.

 

https://www.facebook.com/1270607221/posts/10217454538896643/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

அதுவும் இன்று முகநூலில் பதிவு எழுதும் சிலர் 1987;ல் பிறந்தே இருக்க மாட்டார்கள்.

இது உண்மைதான் சில முகநூல் குழுக்களில் நடக்கும் சண்டை பொறி பறக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா 1987ல் வந்தது நீண்ட நாள் தங்கி, வடக்கு, கிழக்கினை தனது பிரதேசமாக மடக்கும் நோக்கில் தான்.

இந்த திட்டத்துக்கு ஆப்பு வைத்தவர்கள் புலிகளும் அதன் தலைமை பிரபாகரனும் தான்.

இந்தியர்களின் நோக்கத்தினை முறியடிக்க, எதிரியின் எதிரி நன்பன் ஆக, புலிகளுக்கு ஆயதம் தந்தவர் ஜனாதிபதி பிரேமதாச. இலங்கையின் மாவீரன் என பிரபாகரனை, இந்திய ராணுவம் வெளியேறிய பின்னர் புகழ்ந்தவர் பிரேமதாச.

இன்றும் கூட, பிரபாகரன் பயங்கரவாதியாக சொல்லப் படலாம். ஆனால், இந்தியாவிடம் இருந்து இலங்கைத் தீவினை பாதுகாத்து தந்த ஒரே மாவீரன் பிரபாகரன் என்று டெய்லி மிரர் பத்திரிகையில் பின்னூட்டம் இடடால், சிங்களவர்கள் பம்முவதை (மென்மையாக அங்கீகரிப்பதை) காணலாம்.  நாணயத்தின் மறுபக்கம் என்பதாக, இந்தியாவிடம் போக இருந்த தமிழர் இறைமையை, மீண்டும் சிங்களவரிடமே தக்க வைத்தது புலிகள் போராடடம் என்ற கருத்தியலும் உண்டு.

இந்தியா, கொரில்லா இயக்கமாக, அழிக்க முடியாத நிலையில் இருந்து, புலிகள், அழிக்கக் படக் கூடிய நிரந்தர ராணுவத்துக்கு உரிய அம்சங்களுடன் வளரும் வரை 19 ஆண்டுகள் (1990 - 2009) காத்திருந்து, தருணம் பார்த்து அழித்தது.

சில அரசியல் வாதிகள் சொல்வது போல, சோனியாவோ, மன்மோகன் சிங்கோ அல்ல. இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தான் இந்த போர் ஒருங்கிணைப்புக்கு காரணம்.

இப்போது அவர்கள் 1987ல் விரும்பிய களம் அமைந்து உள்ளது. ஆனாலும் விக்கியர் போன்ற அரசியல் வாதிகள் (மண்டைக்குள் விசயம் உள்ள) அகல, மாவை போன்ற ஆமாம் சாமிகள் வரவேண்டும் என எதிர்பார்க்கிறது.

இதில் முக்கியம் என்னவென்றால், முழு இலங்கையும் சிங்களவனிடம் இருந்தால், சீனாவை கண்காணிக்க பல வளங்களை ஒதுக்க வேண்டும். இரண்டாக இருந்தால், அவர்களே ஒருவருடன் ஒருவர் மோதிக் கொண்டிருப்பர். தமக்கு மேலதிக வேலை இல்லை என்பது தான் நோக்கம்.

ஆனால், வடக்கு கிழக்கில் இருந்து மோதுபவர், புலிகள் போலன்றி, தாம் போடும் தாளத்துக்கு அமைய ஆடுபவராக இருக்க வேண்டும். 

ஆக இந்தியா உள்ளே வந்தே தீரும்.

எனினும் இந்தியாவுக்கு உள்ள ஒரு அனு பிரதிகூலம் இலங்கைத் தீவில் யாருமே அதனை நம்ப தயாரில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இணைக்கப்பட்டுள்ள ஆக்கங்களில் இருப்பது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. ஆனால், ஒரு விடயத்தை எழுதும்பொழுது, அதன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகாதவாறு பார்க்கப்படுதல் அவசியம்.

உதாரணத்திற்கு, இங்கு முதலாவதாக இணைக்கப்பட்டுள்ள முகப்புத்தகப் பதிவில், "தென்கிழக்காசியா" என்று குறிப்பிடப்படுகிறது. இந்தியாவின் பூகோள ரீதியான அமைவிடம் பற்றிய புரிதல் சரியாக இல்லமையால், இப்படிக் குறிப்பிடப்படுகிறது என்று நினைக்கிறேன். உண்மையில், தென்னாசியா என்பதே சரியான சொல். இவ்வாறான சிறிய தவறொன்றே போதும், கருத்தின் முற்றான கருவையும் கேள்விக்குறியாக்குவதற்கு.

அடுத்தது "கொரில்லா" எனும் சொல். இங்கே நாதமுனி இணைத்த கருத்தில் இச்சொல் பாவிக்கப்பட்டிருக்கிறது. அவர் இப்படி எழுதியிருக்க வாய்ப்பில்லை, இன்னொருவரது ஆக்கம் மேற்கோள் காட்டப்பட்டதாகத்தான் நான் நினைக்கிறேன். ஆங்கிலச் சொற்களை தமிழில் எழுதும்போது இவ்வாறான தவறுகள் இடம்பெறும் என்பது இயல்புதான். ஆங்கில உச்சரிப்பினை அப்படியே எழுதலாம் அல்லது, சரியான தமிழ்ச் சொற்களைப் பாவிக்கலாம். அநேகமான தமிழ்நாட்டு ஆக்கங்களில் "கெரில்லா (மறைந்திருந்து தாக்கும் போராளி)" எனும் ஆங்கில உச்சரிப்பிலான தமிழ்ச் சொல், "கொரில்லா" அதாவது குரங்கு என்கிற வகையில் பாவிக்கப்படுகிறது. "பாய்ந்து, குரங்கு போன்று தாக்குதல்" என்கிற கருத்தில் பலர் எழுதுவதைக் கூட நான் கண்டிருக்கிறேன். இது மிகவும் தவறான கருதுகோள்.

இவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

மற்றும்படி இங்கே முன்வைக்கப்படும் கருத்தில் எந்தத் தவறும் இல்லை. நூற்றுக்கு நூறுவீதம் உண்மை. இந்திய ராணுவம் அமைதிப்படை இல்லை, அக்கிரமிப்புப்படை என்பதே சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ragunathan said:

அடுத்தது "கொரில்லா" எனும் சொல். இங்கே நாதமுனி இணைத்த கருத்தில் இச்சொல் பாவிக்கப்பட்டிருக்கிறது. அவர் இப்படி எழுதியிருக்க வாய்ப்பில்லை, இன்னொருவரது ஆக்கம் மேற்கோள் காட்டப்பட்டதாகத்தான் நான் நினைக்கிறேன். ஆங்கிலச் சொற்களை தமிழில் எழுதும்போது இவ்வாறான தவறுகள் இடம்பெறும் என்பது இயல்புதான். ஆங்கில உச்சரிப்பினை அப்படியே எழுதலாம் அல்லது, சரியான தமிழ்ச் சொற்களைப் பாவிக்கலாம். அநேகமான தமிழ்நாட்டு ஆக்கங்களில் "கெரில்லா (மறைந்திருந்து தாக்கும் போராளி)" எனும் ஆங்கில உச்சரிப்பிலான தமிழ்ச் சொல், "கொரில்லா" அதாவது குரங்கு என்கிற வகையில் பாவிக்கப்படுகிறது. "பாய்ந்து, குரங்கு போன்று தாக்குதல்" என்கிற கருத்தில் பலர் எழுதுவதைக் கூட நான் கண்டிருக்கிறேன். இது மிகவும் தவறான கருதுகோள்.

இவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

மற்றும்படி இங்கே முன்வைக்கப்படும் கருத்தில் எந்தத் தவறும் இல்லை. நூற்றுக்கு நூறுவீதம் உண்மை. இந்திய ராணுவம் அமைதிப்படை இல்லை, அக்கிரமிப்புப்படை என்பதே சரி.

guerrilla vs gorilla

முன்னையது கெரில்லா, பின்னையது கொரில்லா. நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளும் அதவேளை தமிழ் எழுதும் போது இந்த சொல் உச்சரிப்பில் கவனம் செலுத்துவது கடினம். 

ஏனெனில் நாம் எழுதும் விஷயத்துடன் எது பொருந்துமோ அதை தேடித் பிடித்து பொருத்திக் கொள்ளும் கில்லாடிகள் தான் யாழ் உறவுகள்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

guerrilla vs gorilla

முன்னையது கெரில்லா, பின்னையது கொரில்லா. நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளும் அதவேளை தமிழ் எழுதும் போது இந்த சொல் உச்சரிப்பில் கவனம் செலுத்துவது கடினம். 

ஏனெனில் நாம் எழுதும் விஷயத்துடன் எது பொருந்துமோ அதை தேடித் பிடித்து பொருத்திக் கொள்ளும் கில்லாடிகள் தான் யாழ் உறவுகள்.:grin:

 

நான் நம்பீட்டன் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை சனம் இந்தியா எண்டால் தமிழ்நாட்டை கணிப்பிலை வைச்சுத்தான் நல்லவன் எங்களுக்கு நல்லது செய்வான் எண்டு ஒரு எண்ணத்திலை இருந்தது.

தமிழ் நாடே கிந்தியனுக்கு அடிமையெண்டது  ஊரிலை நடந்த அடிபுடிகளுக்கு பிறகுதான் எங்கடையளுக்கு தெரிய வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

எங்கடை சனம் இந்தியா எண்டால் தமிழ்நாட்டை கணிப்பிலை வைச்சுத்தான் நல்லவன் எங்களுக்கு நல்லது செய்வான் எண்டு ஒரு எண்ணத்திலை இருந்தது.

தமிழ் நாடே கிந்தியனுக்கு அடிமையெண்டது  ஊரிலை நடந்த அடிபுடிகளுக்கு பிறகுதான் எங்கடையளுக்கு தெரிய வந்தது.

புலிகளையும், பிரபாகரனையும் சீமான் தனது அரசியல் நோக்கத்துக்கு பயன் படுத்துகிறார் என்று சொல்லும் ஒரு சிலர் அறியாதது இந்த விடயம் தான். அதாவது தமிழக தமிழனே டெல்லியின் அடிமை என்பதை உணர்த்தவே அந்தாள் கஷடப்படுகுது.

தமிழகம், பிரிட்டிஷ்காரருக்கு முன்னர் ஒரு போதுமே இந்தியாவாக இணைந்திருக்க வில்லை. இறுதியாக தென் இந்தியா தவிர்த்து ஏனைய பகுதிகள் இணைந்து இருந்த காலம், மயூர வம்ச அசோக சக்ரவர்த்தி ஆண்ட கி மு 3ம் நூறாண்டு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

எங்கடை சனம் இந்தியா எண்டால் தமிழ்நாட்டை கணிப்பிலை வைச்சுத்தான் நல்லவன் எங்களுக்கு நல்லது செய்வான் எண்டு ஒரு எண்ணத்திலை இருந்தது.

கிந்தியாவின் நோக்கங்களை 'வங்கம் தந்த பாடம்' மக்களுக்கு  கிந்தியாவின்  வெளிநாட்டு கொள்கை, அரசியல், ராஜதந்திரம் பற்றி அறிவூட்டம் செய்வதத்திற்கு தயாராகிய வேளையில், அதை எழுதியவர்கள் அவர்களின் தலைமையாலேயே கொல்லப்பட்டு,  'வங்கம் தந்த பாடம்' விநியோகம் முற்றுமுழுதாக அந்த தலைமையாலேயே முடக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.