Jump to content

ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை ?

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக 2:30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

england.jpg

இவ் விரு அணிகளுக்கிடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை இங்கிலாந்து அணி 3:0 என்ற கணக்கில் வெற்றயீட்டு கைப்பற்றியுள்ளதுடன், இதில் ஒரு போட்டி மழை காரணமாக இடை நிறுத்தப்பட்டது.

இதில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 31 ஓட்டத்தினால் டக்வெத் லூயிஸ் முறையிலும், மூன்றாவது போட்டியில் 7 விக்கெட்டுக்களினாலும், நான்காவது போட்டியிலும் 18 ஓட்டத்தினால் டக்வெத் லூயிஸ் முறையில் முறையில் வெற்றி பதிவு செய்தது.

இந் நிலையில் மூன்று போட்டிகளையும் வெற்றி கொண்டு பலமிக்கதொரு அணியாக திகழும் இங்கிலாந்து அணியை இன்று இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியிலாவது இலங்கை அணி வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெறுமா என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

இன்று களமிறங்கவுள்ள தினேஷ் சந்திமல் தலைமையிலான இலங்கை அணிக் குழாமில் நிரோஷன் திக்வெல்ல, சண்டீர சமரவிக்ரம, குசல் மெண்டீஸ், தனஞ்சய டிசில்வா, தசூன் சானக்க, திஸர பெரேரா, அகில தனஞ்சய, லசித் மலிங்க, அமில அப்பன்ஷோ, கசூசன் ராஜித, உபுல் தரங்க, துஷ்மந்த சமீர, நுவான் பிரதீப் மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ஈயோன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிக் குழாமில் ஜோஸ் பட்லர், ஜோசன் ரோய், அலெக்ஸ் அலீஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, கிரிஸ் வோக்ஸ், டொம் குரன், அடில் ரஷித், ஒலி ஸ்டோன், ஷெம் குரன், ஜோ டென்லி, மார்க்வூட் மற்றும் லியாம் பிளன்கட் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இங்கிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட்டுக்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஐயாயிரம் ஓட்டங்களை கடப்பதற்கு இன்னும் 64 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன. 

அவர் இன்றைய போட்டியில் 64 ஓட்டங்களை பெறும் பட்சத்தில் வேகமாக ஐயாயிரம் ஓட்டங்களை கடந்த நான்காவது வீரர் என்ற பெருமையையும் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

http://www.virakesari.lk/article/42982

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போட்டியில் அபாரமாக வெற்றியீட்டி, தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்த இலங்கை

 

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி டக்வெத் லூயிஸ் முறையில் 219 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்று, ஆறுதல் வெற்றியீட்டியுள்ளது.

sril2.jpg

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்துள்ள ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3:1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந் நிலையில் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக பிற்பகல் 2:30 மணிக்கு ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமல் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.

அதன்பிரகாரம் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 366 பெற்றது.

இலங்கை அணி சார்பில் அதிகபடியாக நிரோஷன் திக்வெல்ல 95 ஓட்டத்தையும், சந்திமல் 80 ஓட்டத்தையும், குசல் மெண்டீஸ் 56 ஓட்டத்தையும், சண்டீர சமரவிக்ரம 54 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

dickwala.jpg

367 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு இலங்கை அணிப் பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். 

அதன்பிரகாரம் முதல் ஓவரின் இறுதிப் பந்தில் ஜோசன் ரோய் 4 ஓட்டத்துடன் ராஜிதவின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற, அலெக்ஸ் அலீஸும் 1.2 ஆவது ஓவரில் சாமரவின் பந்து வீச்சில் குசல் மெண்டீஸுடம் படிகொடுத்து எதுவித ஓட்டமுமின்றி டக்கவுட்  முறையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜோஸ் பட்லரும் அதே ஓவரில் நான்காவது பந்து வீச்சில் சமரவிக்ரமவின் அற்புதமான பிடியெடுப்பு காரணமாக எதுவித ஓட்டமுமின்றி டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

eng.jpg

இதனால் இங்கிலாந்து அணி 1.4 ஓவரில் 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து நிலை குலைந்தது. இதன் பின்னர் ஜோ ரூட்டும், பென்ஸ்டோக்ஸும் ஜோடி சேர்ந்தாடி ஓரளவு தாக்குப் பிடித்தனர். 

எனினும் 7.2 ஆவது ஓவரில் ரூட் சாமரவின் பந்தில் 10 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரின் வெளியேற்றத்தை தொடர்ந்து களம்புகுந்த மெய்ன் அலியுடன் ஜோடி சேர்ந்தாடிய பென்ஸ்டோக்ஸ் அதிரடியான ஆட்டத்த‍ை வெளிப்படுத்தி 17.4 ஆவது ஓவரில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசி அரை சதம் கடக்க அணியின் ஓட்ட எண்ணிக்கை 100 ஐ கடந்தது.

இருப்பினும் 18.2 ஆவது ஓவரில் ஓரளவு தாக்குப் பிடித்து வந்த மொய்ன் அலி 37 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரியத் தொடங்கின.

அதன்படி ஷெம் குரன் 2 ஓட்டத்துடனும், பென் ஸ்டோக்ஸ் 67 ஓட்டத்துடனும், அடீல் ரஷித் 4 ஓட்டத்துடனும், பிளன்கட் 5 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேற போட்டி மழை காரணமாக இடை நிறுத்தப்பட்டது.

cri1.jpg

இந் நிலையில் இங்கிலாந்து 26.1 ஓவரில் அணி 9 விக்கெட்டினை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்ததுடன், வெற்றிக்காக இன்னும் 235 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 

எனினும் மழை தொடர்ச்சியாக பெய்த காரணத்தினால் இலங்கை அணி டக்வெத் லூயிஸ் முறைப்படு 219 ஓட்த்தினால் அபாரமாக வெற்றியீட்டியது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 4 விக்கெட்டுக்களையும், சமார 3 விக்கெட்டுக்களையும், கசூன் ராஜித மற்றும் தனஞ்சய டிசில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

 

http://www.virakesari.lk/article/43051

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.