Jump to content

சங்கர் மகாதேவன் சாரிடமிருந்து பாராட்டு கிடைச்சது செம்ம ஹேப்பி'' - குஷியில் வீணை 'வீணா ஶ்ரீ


Recommended Posts

''சங்கர் மகாதேவன் சாரிடமிருந்து பாராட்டு கிடைச்சது செம்ம ஹேப்பி'' - குஷியில் வீணை 'வீணா ஶ்ரீ'

 

 

 

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர், வீணா ஶ்ரீவாணி. இவருடைய வீணைக்கு மயங்காதவர் எவரும் இல்லை. அவ்வளவு அழகாகப் பாடல்களை வீணையில் வாசித்து ரசிகர்களைச் சுண்டி இழுப்பவர். சமூக வலைதளத்தில், ரசிகர்கள் கமென்ட்டிடும் பாடல்களை உடனுக்குடன் வாசித்துக் காட்டுவார். எனவே, இவருடைய முகநூல் முழுவதும் இசையால் நிரம்பிவழியும். இவர் கடந்த வாரம், பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவனின் 'Breathless' பாடலை, ஒரு நிமிடம் தொடர்ந்து வாசித்துள்ளார். அதற்குப் பல தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகிறது. இது தொடர்பாக, வீணா ஶ்ரீவாணியைத் தொடர்புகொண்டு பேசினோம். குரல் முழுக்க உற்சாக கீதம்.

வீணா ஶ்ரீவாணி

''முதல்ல, கடவுள் வெங்கடேஷ்வராவுக்கு என் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன். ஒரு பாட்டை எடுத்துப் பாடலாம்னு நினைச்சதும், அந்தப் பாட்டு எனக்கு செட் ஆகுமா ஆகாதான்னு முதல் வரி பாடும்போதே கண்டுபிடிச்சுடுவேன். அது, கடவுள் எனக்குக் கொடுத்த வரமா கருதறேன். தினமும் என்னுடைய முகநூலில், பல ரசிகர்கள் அவங்களுக்கு விருப்பமான பாடலை இசைக்கச் சொல்லிக் கேட்பாங்க. அவங்களுக்காகவும் சில சமயம் அந்தப் பாடல்களை வாசிக்கிறேன். எனக்கு ரொம்ப நாளாகவே சங்கர் மகாதேவன் சாரின் ‬Breathless பாடலை வாசிக்கணும்னு ஆசை. போன வாரம் அந்தப் பாடலை வாசிச்சு, முகநூலில் பதிவிட்டேன். அதைப் பார்த்துட்டு, சங்கர் மகாதேவன் சார் என்னை வாழ்த்தினார். நான் வாசிச்சிருந்ததை ஷேர் பண்ணியிருந்தார். அதைப் பார்த்ததும் அவ்வளவு ஹேப்பி ஆகிட்டேன். பலரும் தொடர்ந்து பாராட்டுறாங்க. எல்லோருக்கும் என் நன்றி'' என்கிறார், வீணா ஶ்ரீவாணி.

https://www.vikatan.com/news/miscellaneous/140666-veena-artist-veenashri-talks-about-her-musical-journey.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வாசிப்பு மிக அருமையாக இருக்கு சூப்பர். நன்றி நுணா.....!  ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.