Jump to content

உத்தியோகம்: லண்டனுக்குப்போக ட்ரை பண்ணுகிறார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு 17 வயதுப்பெண் கர்ப்பமாக வந்திருந்தார்.

கணவனுக்கு இருபது வயது என்றார்.

கணவன் என்ன செய்கிறார் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதிலைக்கேட்டு அதிர்ந்து விட்டேன்.

அவர் சொன்ன பதில், ` லண்டன் போக ட்ரை பண்ணிக்கொண்டிருக்கார்`

லண்டன் மாப்பிள்ளை என்ற காலம் போய், லண்டனுக்குப்போக ட்ரை பண்ணுகிறார் என்பதே ஒரு வேலையாக உருவெடுத்துவிட்டது.

இப்போதைக்கு செலவுக்கு என்ன செய்கிறீர்கள் என்றேன்,
` அவருக்கு வெளிநாட்டில நிறையப்பேர் இருக்காங்க, அவங்க அனுப்புவாங்க`

அவர் வெளிநாட்டுக்குப்போகத் தேவையான பல மில்லியன்களையும் அவர்களே கொடுக்க இருக்கிறார்களாம் என்றும் சொன்னார்.

கிட்டத்தட்ட இதை ஒத்த பல சம்பவங்களைக் அடிக்கடி காணக்கிடைக்கிறது.

ஒரு இருபது வயது ஆண் வாழ்க்கை பற்றி எந்தக் கவலையுமில்லாமல், ஒரு 17 வயதுப்பெண்ணைக் கர்ப்பமாக்கிவிட்டு , வீட்டிலே சும்மா இருந்துகொண்டு வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தில் குடும்பம் நடத்துமளவுக்கு நம் இளைஞர் சமூகம் வந்துள்ளது.

இதற்கான மிகமுக்கிய காரணம் நம் புலம்பெயர் சொந்தங்கள் விடுகின்ற தவறுதான்.

நீங்கள் விடுகின்ற முதல் தவறு, வெளிநாட்டிலே நீங்கள் எவ்வளவு சிரமப்பட்டு அந்தப் பணத்தை உழைக்கிறீர்கள் என்பதைச் சொல்லாமல் விடுவதுதான்.

வெளிநாட்டுக்குப்போனா ஈசியா உழைக்கலாம் அல்லது அகதிக்காசே சும்மா இருக்க பல லட்சம் வரும் என்ற மாயையிலே நம்முடைய இளம் சமூதாயம் உழைப்பின் வலிமை தெரியாமல் உருவாகிவிட்டது. 

நீங்களும் சொந்தங்கள் பாவம் என்று கேட்டதும் அனுப்புகின்ற பணம் அவர்களின் சோம்பேறித்தனத்தை இன்னும் அதிகரித்து விடுகின்றது.

இங்கே உழைப்பதற்கு வழிகளில்லாமல் இல்லை.
நான் அடிக்கடி செல்லும் ஒரு ஆட்டோக்கார ஐயா இருக்கிறார். 60 வயதுக்கும்மேல் இருக்கும்.அவரிடம் ஒருநாள் உங்கள் வருமானம் எவ்வளவு என்றேன்.

மாதம் 60 ஆயிரம் வரும் பெற்றோல் செலவு போக 45 ஆயிரம் மிஞ்சும் என்றார். 45 ஆயிரம் குடும்பம் நடத்தப்போதுமா ஐயா என்றேன். இது சும்மா பார்ட் டைம் வேலைதான் ஐயா, மெயினா நான் விவசாயம்தான் செய்கிறனான் என்றார்.

ஒரு 60 வயது தாண்டியவர் பார்ட் டைம் ஆட்டோ ஓட்டியே மாதம் 45 ஆயிரம் ( ஒரு பட்டதாரி ஆசிரியரைவிட அதிகமான சம்பளம்) உழைக்கும்போது, ஒரு 20 வயது அப்பாவாகப்போகும் இளைஞன் முழுநேரமாக ஆட்டோ ஓட்டினால் எவ்வளவு உழைக்கலாம்?

பருத்தித்துறையிலே ஒரு கடலை , வடை செய்து விற்கும் தள்ளுவண்டியை பருத்திதுறை பஸ் நிறுத்தத்திற்கு அண்மையில் காணலாம். புத்தளத்தைச் சேர்ந்த ஒரு அப்பாவும் மகனும் இங்கே தங்கியிருந்து இந்தத்தொழிலைச் செய்கிறார்கள். பின்னேரத்தில் எப்போதும் கூட்டம் அலை மோதும். மாதம் எப்படியும் லட்சமாவது உழைப்பார்கள். புத்தளத்தில் இருந்து ஒரு அப்பாவும் மகனும் தங்கியிருந்து இங்கேயே இவ்வளவு உழைக்கும்போது, இங்கே இருக்கும் ஒரு 20 வயது இளைஞனை ஓசிச்சோறு சாப்பிட வைத்தது எது?

எங்கட குடும்பம் ஆட்டோ ஓடுறதா? சுண்டல் விற்கிறதா என்ற வெத்துக் கெளரவம்தான் இதற்குக் காரணமாகிறது. 

20 வயதில வேலை வெட்டி இல்லாமல் ஓசிசோறு சாப்பிட்டுக்கொண்டு கல்யாணம் முடிக்கும் ஒருவன், லண்டன் வந்து எக்கவுன்டன் வேலை பார்க்கப்போறதில்லை. மேலே சொன்ன வேலைகள் போல ஒன்றைத்தான் செய்யப்போகிறான்.
அவன் லண்டன் வரும்வரையாவது( இப்போது திருட்டுத்தனமாக லண்டன் போவது அவ்வளவு ஈசியா என்று தெரியவில்லை) அவனுக்கு சும்மா காசு அனுப்பாமல், ஒரு 3 லட்சம் அனுப்பி , ஆட்டோ ஓடிக் குடும்பம் நடத்து, இனிக்காசு அனுப்பமாட்டோம் என்றால், அவனும் உழைக்கக்கற்றுக்கொள்வான், அவன் லண்டன் வந்தும் உழைத்து நல்ல நிலைக்கு வர உதவும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக் காசில பொடி.... மோட்டர் சைக்கிள், கூலிங் கிளாஸ், அது, இது என்று விலாசம் காட்ட பெட்டை எடுபடுறது சகசமுங்கோ  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு உழைக்க முடியாதவர்கள் இங்கு வந்து பிழைக்க முடியாது இப்படி கனபேர் மச்சான் மாரின் ,உறவினர்களின் காசை கரியாக்கி விட்டு கடைசியில் iom க்கு எழுதிகொடுத்துவிட்டு ஊர் போய் சேர்ந்தவர்கள் பலர் ஒரு சிலர் இங்கு தாக்கு பிடித்தாலும் இப்போதைய சட்ட விதிகளின் படி விசா எடுப்பது குதிரை கொம்பு  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அங்கு உழைக்க முடியாதவர்கள் இங்கு வந்து பிழைக்க முடியாது இப்படி கனபேர் மச்சான் மாரின் ,உறவினர்களின் காசை கரியாக்கி விட்டு கடைசியில் iom க்கு எழுதிகொடுத்துவிட்டு ஊர் போய் சேர்ந்தவர்கள் பலர் ஒரு சிலர் இங்கு தாக்கு பிடித்தாலும் இப்போதைய சட்ட விதிகளின் படி விசா எடுப்பது குதிரை கொம்பு  .

ஆனால் கனபேருக்கு வெளிநாட்டு ஆசை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது ஆண்களை விட தற்போதுள்ள பெண்களுக்கு அதிகம்  எனலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஆனால் கனபேருக்கு வெளிநாட்டு ஆசை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது ஆண்களை விட தற்போதுள்ள பெண்களுக்கு அதிகம்  எனலாம் 

இஞ்சை காலுக்குமேலை கால்போட்டுக்கொண்டு ஜாலியாய் சுகபோக வாழ்க்கை வாழலாம் எண்டு நினைக்கினம் போலை.....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

அவனுக்கு சும்மா காசு அனுப்பாமல், ஒரு 3 லட்சம் அனுப்பி , ஆட்டோ ஓடிக் குடும்பம் நடத்து, இனிக்காசு அனுப்பமாட்டோம் என்றால், அவனும் உழைக்கக்கற்றுக்கொள்வான்,

உண்மைதான் சந்ததியை சோம்பேறி ஆக்காமல் வாழ வழிகாட்டுதலே சிறந்தது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/28/2018 at 12:30 AM, குமாரசாமி said:

இஞ்சை காலுக்குமேலை கால்போட்டுக்கொண்டு ஜாலியாய் சுகபோக வாழ்க்கை வாழலாம் எண்டு நினைக்கினம் போலை.....:cool:

என்ன கஸ்ரப்பட்டாலும் முகநூல்லுக்கு நாலு படம் போடணும் ஸ்டைலா அதுதான் முக்கியம் அமைச்சரே:104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/27/2018 at 4:25 PM, பெருமாள் said:

அங்கு உழைக்க முடியாதவர்கள் இங்கு வந்து பிழைக்க முடியாது இப்படி கனபேர் மச்சான் மாரின் ,உறவினர்களின் காசை கரியாக்கி விட்டு கடைசியில் iom க்கு எழுதிகொடுத்துவிட்டு ஊர் போய் சேர்ந்தவர்கள் பலர் ஒரு சிலர் இங்கு தாக்கு பிடித்தாலும் இப்போதைய சட்ட விதிகளின் படி விசா எடுப்பது குதிரை கொம்பு  .

அதுதான் பழமொழி ஒன்று உள்ளதே; நல்ல மாடானால், உள்ளூரில் விலைப்படும்.

போர்காலத்தில் வருவது வேறு, சமாதான காலத்தில் வருவது வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்ன கஸ்ரப்பட்டாலும் முகநூல்லுக்கு நாலு படம் போடணும் ஸ்டைலா அதுதான் முக்கியம் அமைச்சரே:104_point_left:

இப்பவெல்லாம் இஞ்சை இருக்கிற ஆக்களை விட ஊரிலை இருக்கிறவைதான் அந்தமாதிரி பந்தா படமெல்லாம் போடீனம்......உதாரணத்துக்கு இரண்டு படம் போடவா? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

அதுதான் பழமொழி ஒன்று உள்ளதே; நல்ல மாடானால், உள்ளூரில் விலைப்படும்.

போர்காலத்தில் வருவது வேறு, சமாதான காலத்தில் வருவது வேறு.

இன்னொன்றும்   உள்ளதே

உழுகிற  மாடு  எங்கும்  உழும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இப்பவெல்லாம் இஞ்சை இருக்கிற ஆக்களை விட ஊரிலை இருக்கிறவைதான் அந்தமாதிரி பந்தா படமெல்லாம் போடீனம்......உதாரணத்துக்கு இரண்டு படம் போடவா? :grin:

போடாத்தானே தெரியும் .........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Maruthankerny said:

போடாத்தானே தெரியும் .........

தானியà®à¯à®à¯ மாறà¯à®±à¯ à®à®°à¯ à®à®²à¯à®²à¯.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு போடாமலே இருந்து இருக்கலாம் .........
படம் அப்பிடி இருக்குமோ ... இப்பிடி இருக்குமோ 
என்ற கற்பனை பரவாய் இல்லாமல் இருந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

தானியà®à¯à®à¯ மாறà¯à®±à¯ à®à®°à¯ à®à®²à¯à®²à¯.

இதுக்குப் போடாமலேயே இருந்திருக்கலாம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூகிள் மப்பில் போய் பார்த்தால்.. ஊர் எல்லாம் நல்ல வளர்ச்சி. 3 மாடி வீடு தான்.. இப்ப குறைந்த தகுதி. அதுவும் சும்மா இல்ல.. எல்லா அதி நவீன வசதிகளோட.. பூந்தோட்டம்.. அதுஇதென்னு... நாங்க இங்க இருந்து குளிருக்க.. நடுங்க வேண்டியான். 

இங்கிலாந்தில்.. பல காலம் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த எங்கட தமிழ் ஆக்கள் பலரும்... இப்ப இரட்டைக்குடியுரிமை எடுத்து.. குடும்பமா ஊரில போய் இருக்கினம். அப்பப்ப இங்க வந்து போவினம்.. இங்க குடியுரிமையை பாதுக்காக்க. 

ஒரு சிலது.. ஊரில வித்திட்டு வரகுது. ஆனால்.. இங்கு உருப்படியான தொழிலற்றவர்களும்.. நல்லா உழைத்தவர்களும்.. ஊருக்குப் போவதையே சிந்தனையாகக் கொண்டிருக்கினம்.

இந்த நடுவில் உள்ளவை தான்.. அங்க உள்ளவைக்கும்.. வெளிநாட்டு ஆசை காட்டிறது.

ஒன்று.. ஊரில உழைக்க முடியாதது.. இங்க உழைச்சுக் கிழிக்கும் என்றில்லை. வேணும் என்றால்.. அரசாங்கக் காசில இருக்கும். அதுக்கும்.. உருப்படியான விசாக் கிடைக்கனுமே..!! 

ஆகவே உந்த.. 20 வயசில்.. கல்யாணம் கட்டின பெரிய மனுசன்.. லண்டன் போற தொழிலை சைட் பிஸ்னஸா வைச்சுக் கொண்டு.. ஊரில ஒரு நல்ல பிஸ்னஸ் தொடங்கிறது நல்லம். குடும்பத்துக்கு குட்டிகளுக்கு உதவும். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/30/2018 at 11:03 PM, குமாரசாமி said:

இப்பவெல்லாம் இஞ்சை இருக்கிற ஆக்களை விட ஊரிலை இருக்கிறவைதான் அந்தமாதிரி பந்தா படமெல்லாம் போடீனம்......உதாரணத்துக்கு இரண்டு படம் போடவா? :grin:

இதெல்லாம் சும்மா ஜீஜிபி இன்னும் பல இருக்கு தேடவும் கு. சாமியார் அண்ண

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த பெடியனுக்கு தங்கட மகளை கட்டி வைத்த பெற்றோரை நடு ரோட்டில் நிக்க வைத்து செருப்பால அடிக்கோணும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.