Jump to content

கூட்டைவிட்டு வெளியே வா பெருங்காடு காத்திருக்கிறது: தனியொரு பெண்ணின் பயண அனுபவங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பயணங்கள் மூலம் பாடங்களை கற்கிறேன்படத்தின் காப்புரிமை பாகீரதி ரமேஷ்

பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் எட்டாவது கட்டுரை இது.

எப்படி உங்க வீட்ல உன்ன தனியா வெளியவிடறாங்கனு தொடங்கி உனக்கு பயமா இல்லையா? ஏதாவது தப்பா நடந்தா என்ன பண்ணுவ? கூட யாரையாவது கூட்டிட்டு போனா நல்லா இருக்குமே? கல்யாணம் பண்ணிட்டு புருஷனோட வெளிய சுத்த வேண்டியது தானே-னு ஏகப்பட்ட கேள்விகள்; இதுக்கெல்லாம் பதில் சொல்லி எனக்கு அலுத்து போயிடுச்சு.

இது எனக்கு மட்டுமல்ல தனியா பயணம் செய்யணும்னு நினைக்கிற அத்தனை பெண்களும் சந்திக்கின்ற கேள்விகள்தான் இவை என்று எனக்கு தெரியும்.

எல்லாத்துக்குமே ஒரு ஆரம்பம் வேணும். நான் முதல்முறையா வெளிய தனியா போனது தேனி, என் கூட வேல பாக்குற பொண்ணோட கல்யாணத்துக்கு. வீட்ல பொய் சொல்லிட்டுதான் போனேன்.

beingme

ஆரம்பத்துல ரொம்ப பயமாதான் இருந்துச்சு. நைட் நேரம் பஸ் ஏறுனதும் தூக்கம் வரல. முதல் முறை புதுசா ஒண்ணு செய்யும் போது எல்லாருக்கும் வர்ற அதே எண்ணங்கள் தான் எனக்கும் வந்தது.

ஆனா நாம பயப்படும் அளவுக்கு உலகம் அவ்ளோ மோசம் இல்ல. நான் கடந்த 3 வருஷமா வெளிநாடு, இந்தியானு பல இடங்கள் தனியா பயணம் பண்ணிட்டு இருக்கேன். இது வரைக்கும் நான் போன இடங்கள், சந்தித்த நபர்கள் என அத்தனை பேரும் நல்லவங்க தான்.

எப்பவுமே நாம் ஒரு குழுவோட போனா நம்ம யார் கூட பயணம் செய்றோமோ அவங்ககூட மட்டும்தான் இருப்போம், ஆனா தனியா பயணம் செஞ்சா நாம பாக்குற அத்தனை பேரும் நமக்கு தெரிஞ்சவங்க தான். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க அவங்க கிட்ட இருந்து நம்ம கத்துக்குறதுக்கு ஏதோ ஒண்ணு இருக்கும். நமக்கு இன்ஸ்பிரஷன் எங்க இருந்து வேணா வரும், ஒவ்வொரு இடமும் ஏதோ ஒண்ணு நமக்கு சொல்லி கொடுக்கும்.

beingme

உடலின் வலிமை மனதில்

இதுவரை இமய மலைக்கு மூன்று முறை ட்ரெக்கிங் போயிருக்கேன். முதல் முறை போகும் போது என்னால ஏறவே முடியல. முதல் கேம்ப் சைட்டுக்கு க கூட போய் சேருவேன்னு எனக்கு தோணல. அப்போ என் கூட இருந்த 'ட்ரெக்கிங் லீட்' என் கிட்ட, மனசு சொன்னா உடம்பு கேட்கும், உன் மனச திடப்படுத்திக்கோனு சொன்னாரு. அந்த ட்ரெக்கிங் மட்டும் இல்ல, என் வாழ்க்கைக்கே அது ஒரு பெரிய பாடமா தான் அமைஞ்சது.

எல்லாருமே பயப்புடற ஒரு விஷயம், பொண்ணு தனியா தெரியாத ஊருக்கு போனா யாரவது ஏதாவது பண்ணிடுவாங்கனு தான். ஆனால் உண்மை அது இல்லை. உலகத்துல என்னென்னவோ நடக்குது தான், தனியா போனா நமக்கும் அப்படி ஆகிடும்னு இல்ல. தனியா ஒரு பொண்ணுவர்றாங்கனாலே சுத்தி இருக்க அத்தனை பேரும் அவங்கள பாதுகாக்க தான் முயற்சி பண்ணுவாங்க. ஆனா நாமும் ஒண்ணு புரிஞ்சிக்கணும், நமக்குஉதவி வேணும்னா கேட்கணும், கேட்டா தான் கிடைக்கும், உதவி கூட. இதுவும் எனக்கு பயணங்கள் தந்த பாடம்தான்.

இரண்டாவது முறை இமயமலைக்கு போகும் போது, டெல்லியில் இருந்து டெஹராடூனுக்கு போக வேண்டிய பிளைட் கேன்சல் ஆகிடுச்சு. நான் மறு நாள் காலை 6 மணிக்கு ஹரித்வாரில் இருந்தே ஆகணும், இல்லைன்னா ட்ரெக்கிங் போக முடியாம போய்டும். அதே பிளைட்ல போக வேண்டிய ஒருத்தர் அந்த நேரத்துல எப்படி போகலாம், எங்க பஸ் கிடைக்கும், பஸ்ல போனா ஹரித்வார் போய் சேர எவ்வளவு நேரம் ஆகும், எந்த நேரத்துல போனாலும் பயம் இல்லாம போகலாமானு சகலமும் சொன்னார். அந்த நாள் நான் ஹரித்வாருக்கு நடுநிசில தான் போய் சேர்ந்தேன் ஆனா அந்த நேரத்துலயும் அவ்வளவு பாதுகாப்பா தான் நான் உணர்ந்தேன்

இங்க ஒரு விஷயம் நாம் புரிஞ்சிக்கணும் எந்த இடத்துக்கு போனாலும் தைரியமா இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அதே சமயம் அசட்டு தைரியம் கூடாது. நம்ம உள்மனசு சொல்றது எப்பவுமே சரியாகதான் இருக்கும் இங்கே ஏதோ சரியில்லைனு நமக்குப்பட்டா உடனே துரிதமாகவும் சமயோஜிதமாகவும் செயல்படணும் இதுவும் பயணங்கள் எனக்கு சொல்லி தந்த பாடம்தான்.

உண்மை உரையாடுதல்

இது எல்லாம் இந்தியாவுக்கு மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் பொருந்தும் . என் பிறந்தநாளுக்கு வெளி நாட்டுக்கு போயிடுவேன். ஒரு முறை நியூஸிலாந்துக்கு போகும் போது சென்னை ஏர்போர்ட்லே என் மொபைல் உடைஞ்சிடுச்சு.15 நாள் ஃபோன், இன்டர்நெட்னு எதுவுமே இல்லாமதான் சுத்தினேன், மக்களை மட்டுமே நம்பி. இதுல உச்சக்கட்டமே நமக்கு முன்பின் பழக்கம் இல்லாதவங்க நம்ம பிறந்தநாளுக்கு, நம்ம எதிர்பார்க்காத விதமா வாழ்த்துறதுதான். புது இடங்களுக்கு பயணம் செய்யும்போது நாம மனசுல வெச்சுக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் நாம் தேவையில்லாமல் வீணான கவனத்தை ஈர்க்காமல், பதட்ட படாமல் இருக்க வேண்டும் என்பதுதான் அது.

புது மனிதர்களை சந்திக்கும் போது தான் நம்ம யாருன்னே நமக்கு தெரியும். மறுபடியும் பார்க்க மாட்டோம்னு நினைக்கிறவங்ககிட்டதான் நாம் அநியாயத்துக்கு உண்மையை பேசுவோம்.

beingme

ஆரம்பத்துல எங்க தங்கணும் எங்கெல்லாம் போகணும் எல்லாமே பிளான் பண்ணிட்டு தான் போவேன். ஆனா நாளடைவில் எதுவுமே ஏற்பாடுசெய்யாம போவது பழகிடுச்சு. பைய மட்டும் மாட்டிகிட்டு கிளம்பிடுவேன் எதுவா இருந்தாலும் அங்க போய் பார்த்துக்கலாம்னு.

கங்கை கரைல இருந்து சூரிய அஸ்தமனம் பார்த்த காட்சி எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு. இப்படி காடு,மலைனு மட்டும் இல்லாமல் ஒரு இடத்தோட உணவு, கலாசாரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளவும் பயணம் செய்வேன்.

பொன்னியின் செல்வன் காதல்

எனக்கு பொன்னியின் செல்வன் புத்தகத்து மேல அவ்வளவு பிரியம். அந்த புத்தகத்தை படிச்ச எல்லாருக்குமே காவிரி மேல காதல் வந்திருக்கும். சமீபத்துல காவிரி கரைபுரண்டு ஓடுனதை பார்த்தே ஆகணும்னு அவ்வளவு ஆசை. அதுவும் சரியா ஆடிப்பெருக்கு, காவிரி கரையில் இருந்துபொன்னியின் செல்வன் முதல் பாகம், முதல் 50 பக்கம் படிச்சி ஆகணும்னு புத்தகத்தோடு கிளம்பிட்டேன். திருச்சியில்காவிரி பாலத்துல இருந்து, அதிகாலை, காவிரி காற்று கமழ அந்த பக்கங்களை புரட்டினது அப்படிஒரு ஆனந்தம். இந்த மாதிரி நிறைய அனுபவங்கள் எனக்கு பயணங்கள் மூலமா கிடைச்சிருக்கு.

எப்படி உங்க வீட்ல உன்ன வெளிய விடறாங்கன்னு கேட்பவர்கள் கிட்ட நான் ஒன்னே ஒண்ணுதான் சொல்லுவேன் பெற்றோர்களை விட நம்மை வேறு யாரும் நல்லா புரிஞ்சிக்க மாட்டாங்க. நம்ம ஆசை நம்ம கனவு எல்லாத்துலயும் அவங்களுக்கு இருக்குற அக்கறையைவிட வேறு யாருக்கு இருந்திட முடியும். எனவே என்னோட பயணத்துக்கு எப்பவுமே அவங்க ஆதரவாதான் இருப்பாங்க.

பயணங்கள் மூலம் பாடங்களை கற்கிறேன்படத்தின் காப்புரிமை பாகீரதி ரமேஷ்

நாம் உலகத்தை எப்படி பார்க்கிறோமோ அது அப்படியாகத்தான் தெரியும். நம்ம எப்படி பார்க்கணும்னு நாம் தான்முடிவு எடுக்கணும்.

p06kkkv6.jpg
 
 
மாடலிங் கனவு - யாருக்கானது?

இப்படி பயணம் செய்றதுனால உனக்கு என்ன கிடைச்சிருக்குனும் பலர் கேட்பாங்க உண்மைய சொல்லணும்னா என் வாழ்க்கை எந்த விதத்துலயும் மாறல. அதே வீடு, அதே வேலை, அதே இடம், ஆனா இதையெல்லாம் நான் எதிர்கொள்ளும் விதம் தான் மாறி இருக்கு. என்னால் என்னுடைய தினசரி வேலைகளையும்அனுபவிச்சு செய்ய முடியும், என்னுடைய கூட்டை விட்டுவெளியே காடு, மலை, கிராமம்னு பறந்தாலும் சந்தோஷமா இருக்க முடியும். புதிய மனிதர்கள் புதிய உணவு, புதிய கலாசாரம்ன்னு நாம் பழகும்போது ஒவ்வொரு மனிதரையும் நேசிக்கும் பழக்கம் நமக்கு வரும். எல்லாத்துக்கும் மேல நாம சந்தோஷமா இருக்குறது நம்ம கைல தான் இருக்குன்னு என்னோட பயணங்கள் எனக்கு புரியவைச்சிருக்கு.

(தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பாகீரதி ரமேஷ் என்கிற பெண்ணின் பயண அனுபவங்களே இந்தக் கட்டுரை. பெண்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் குறித்து பேசப்படும் இந்த #beingme தொடர் பிபிசி தமிழ் செய்தியாளர் விஷ்ணுப்ரியா ராஜசேகரால் தயாரிக்கப்பட்டது.)

https://www.bbc.com/tamil/india-46001700

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட பெண் .......!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.