Jump to content

அக்காவும் நானும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆண்டு வேலை வெட்டி இல்லாமல் நினைத்த நேரம் நித்திரையால எழும்புறதும் முகநூல் தொலைபேசி உணவு எண்டு நின்மதியாய் இருந்த என்னை, வீட்டில சும்மா இருக்கிறாய், அதைச் செய், இதைச் செய், நீ சாமான் வாங்கப் போகவேண்டாம். நான் போறான். நீ தேவையில்லாமல் காசைச் செலவளிக்கிறாய், சும்மா தானே இருக்கிறாய் போன்ற மனிசனின் சுடு சொற்கள் கேட்டு ரோசம் வர, என்ன வேலை செய்வது என்று யோசித்துவிட்டு வேலை ஏதும் இருந்தால் கூறும்படி சில நண்பர்களிடம் சொன்னபோது குமரன் என்னும் என் நண்பன் அவனது வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு தபாற்கந்தோரில் வேலை இருப்பதாக அங்கு வேலை செய்யும் அக்கா சொன்னதாகவும், நீர் ஒருக்காப் போய் கேட்டுப் பாருமன் என்றும் சொன்னான். முன்ன பின்ன அங்கு வேலை செய்து பழக்கமில்லை. வேலை எப்பிடியோ தெரியாது என்று நான் யோசிக்க, உமக்கு எல்லாம் அது கடினமாக இருக்காது. முதலில போய்  கேழும். வேலை பழக்கி விடுவினம் தானே என்று சொல்ல, சரி வியாழக் கிழமை போய் கேட்பம் என எண்ணிக்கொண்டு சரி போய்ப் பாக்கிறன் என்றுவிட்டு போனை வைத்துவிட்டேன். 

அவன் கூறிய தபாற் கந்தோர் என் வீட்டில் இருந்து காரில் என்றால் பத்து நிமிடம் தான். எனவே நடந்து கூடப் போகலாம் என்று மனதில் எண்ணிக்கொண்டு வியாழன் காலை வடிவா வெளிக்கிட்டுக்கொண்டு போய் பார்த்தால் அங்கு எந்த அக்காவையும் காணவில்லை. ஒரு அண்ணா தான் வேலை செய்துகொண்டு இருந்தார். அக்காவின் பெயரைக் கூறி அவர் இல்லையா என்று கேட்டதுக்கு,  வியாழனில் தான் தான் வேலை செய்வதாகவும் மற்றைய நாட்களில் தான் அக்கா வேலை செய்வதாகவும் கூறினார். சரி என்று கூறிவிட்டு திரும்பி வரும்போது என்னடா இது முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்களே. இன்று அக்கா இல்லாமல் போய்விட்டாரே என மனம் எண்ணினாலும் சரி பார்ப்போம் என்று விட்டு இருந்துவிட்டேன்.

நான் நடத்தும் தமிழ்ப் பள்ளிக்கு அருகிலே ஒரு பெரிய கடை. அந்தக் கடையினுள்ளேதான் தபாற் கந்தோரும் இயங்குகிறது. எனது பள்ளியில் ஏதும் நிகழ்வுகள் அல்லது பயிற்சிகள், ஒன்றுகூடல்கள் என்பன நடக்கும்போதெல்லாம் அந்தக் கடையில் தான் நான் தண்ணீர், ஜூஸ் , பிஸ்கட் போன்றவற்றை வாங்குவது. அக்காவைத் தெரியாவிட்டாலும் கடையில் வேலை செய்பவர்கள் என்னுடன் நட்புடன் கதைப்பார்கள். அடுத்து வந்த சனிக்கிழமை தமிழ் பள்ளிக்குப் பொருட்கள் வாங்கப் போகும்போது பார்த்தால் அந்த அக்கா அங்கு நிற்பது தெரிய,  நான் அவரிடம் சென்று, என் நண்பன் குமரன் நீங்கள் வேலைக்கு ஆட்கள் தேடுவதாகக் கூறினான் என்றேன்.

ஓம் எனக்கு வேலைக்கு ஆட்கள் தேவை தான். உங்களுக்கு போஸ்ட் ஆபீஸ் வேலை தெரியுமோ என்றார். எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் சொல்லித் தந்தால் ஓரிரு வாரங்களில் பழகிவிடுவேன் என்றேன். புதிதாகப் பழக்குவது என்றால் அதுக்கு மூன்று மாதம் செல்லும். எனக்கு வேலை தெரிந்தவர்கள் தான் தேவை என்றார். அட இத்தனை நாட்கள் சும்மா வீட்டில் இருந்ததுக்கு பக்கத்துப் போஸ்ட் ஆபீசில் போய்ப் பழகியிருக்கலாமே என்று மனதில் எழுந்த ஆதங்கத்தை ஓரங்கட்டி வைத்துவிட்டு, சரி என்ர மனிசன் தானே வழமை போல் திட்டினால் திட்டீற்றுப் போகட்டும் என்று இருந்துவிட்டேன்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடிவிட்ட நிலையில் பள்ளிக்கூடத்துக்குத் தண்ணீர்ப் போத்தல் வாங்கக் கடைக்குப் போய் பணம் செலுத்த வரிசையில் நிக்க, இங்க நீங்கள் தானே வந்து வேலை கேட்டது. பே பண்ணீற்று ஒருக்கா வந்து கதைச்சிட்டுப் போறீங்களே என்று அக்கா கேட்க, குபீர் என மனதில் எழுந்த மகிழ்ச்சி சொல்ல முடியாதது. அக்காவிடம் போனால் நான் உங்களுக்கு வேலை பழக்கிறன். நீங்கள் எந்த நாட்கள் பிறீ என்றார் அக்கா.  நான் சனிக் கிழமையைத் தவிர எல்லா நாளும் பிறீ தான் என்று சொல்ல திங்கட் கிழமை வாங்கோ என்று சொல்லி அனுப்பினார் அக்கா. வீட்டுக்கு வந்த உடன மனிசனிட்டை விசயத்தைச் சொல்ல மனிசன்ர சந்தோசத்தைப் பாக்க வேணுமே. 

திங்கள் காலை எழுந்து வடிவா வெளிக்கிட்டு ஒன்பது மணிக்கு டாண்  என்று அங்க போய் நிண்டா அக்காவைக் காணவில்லை. தபாற்கந்தோர் இருட்டாய் இருக்கு. திடும் என்று ஒரு பதட்டம் மனதில் ஓட முன்னால் உள்ள கவுண்டரில் நின்றவனிடம் போய் போஸ்ட் ஒபிஸ் எத்தனை மணிக்குத் திறக்கும் என்று கேட்க, ஒன்பதுக்குத் திறக்க வேண்டும். ஆனால் அந்த மேடம் வர லேற் என்கிறான் அவன். என்னடா இது முதல் நாளே இப்பிடியாக் கிடக்கு என்று யோசித்தபடி நிக்க ஒரு ஐந்து நிமிடத்தின் பின் அக்கா ஓட்டமும் நடையுமாக  வாறா. சொறி சரியான ட்ராபிக் என்றபடி கதவைத் திறந்து அதில் என்னை இருக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்று தன்  அலுவலைப் பார்க்கிறா. அதற்குள் அங்கு வரிசையாக ஆட்கள். கதவைத் திறந்து இப்ப சனி வந்திடுவார். அதுக்குப் பிறகுதான் உங்களை உள்ளுக்குள் கூப்பிடலாம் என்று கூறிவிட்டுப் போகிறா. ஏழரைச் சனி, பொங்குசனி எல்லாம் முடிஞ்சு போட்டுதே. இப்ப எந்தச் சனியோ என்று நான் கண்டதையும் எண்ணிக்கொண்டு வேறுவழியின்றிக் காவலிருக்க அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்த சனி ஹாய் அக்கா, எப்படி இருக்கிறாய்? என்றபடி வந்து கை குலுக்கியவன் சிங்கின் மகன் சனி என்பதில் மனம் நின்மதியானது. ............

 

 

வரும்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ ...வா சிக்கும் ஆவலுடன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப் போஸ்ட் ஒவ்பீஸ் கதை முன்னமும் எங்கேயே கேட்ட ஞாபகம்.சரி மலிந்தா சந்தைக்கு வரும் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

உந்தப் போஸ்ட் ஒவ்பீஸ் கதை முன்னமும் எங்கேயே கேட்ட ஞாபகம்.சரி மலிந்தா சந்தைக்கு வரும் தானே.

அதேதான் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே :35_thinking:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அதேதான் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே :35_thinking:

எதோ லண்டனில் ஒரு போஸ்ட் ஒவ்விஸ்தான் இருக்கிற மாதிரி சொல்லுறிங்கள்...... அது வேற  இது வேற......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்த, கருத்தும் பதிந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

8 hours ago, ஈழப்பிரியன் said:

உந்தப் போஸ்ட் ஒவ்பீஸ் கதை முன்னமும் எங்கேயே கேட்ட ஞாபகம்.சரி மலிந்தா சந்தைக்கு வரும் தானே.

சந்தைக்கு இல்லை யாழுக்கு

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அதேதான் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே :35_thinking:

நான் எழுதுத முதல் ஆரப்பா கதை சொன்னது?????

45 minutes ago, suvy said:

எதோ லண்டனில் ஒரு போஸ்ட் ஒவ்விஸ்தான் இருக்கிற மாதிரி சொல்லுறிங்கள்...... அது வேற  இது வேற......!  tw_blush:

அதானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் முந்திக் கேட்ட மாதிரித்தான் இருக்கு!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

எனக்கும் முந்திக் கேட்ட மாதிரித்தான் இருக்கு!

அதானே என்ன கிருபன் எங்கேயோ கேட்ட குரல்

6 hours ago, suvy said:

எதோ லண்டனில் ஒரு போஸ்ட் ஒவ்விஸ்தான் இருக்கிற மாதிரி சொல்லுறிங்கள்...... அது வேற  இது வேற......!  tw_blush:

இல்ல இந்த போஸ்ட் ஆப்பிஸ் கண்பியூஸ் தான் பாஸ் எனக்கும் அடிக்கடி சுழலுதுதா அதான் கொஞ்சம் தலை சுத்துது  spointing-left-100-103.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிலாமதி said:

தொடருங்கோ ...வா சிக்கும் ஆவலுடன் 

தொடருமக்கா

 

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதானே என்ன கிருபன் எங்கேயோ கேட்ட குரல்

இல்ல இந்த போஸ்ட் ஆப்பிஸ் கண்பியூஸ் தான் பாஸ் எனக்கும் அடிக்கடி சுழலுதுதா அதான் கொஞ்சம் தலை சுத்துது  spointing-left-100-103.gif

 

13 hours ago, கிருபன் said:

எனக்கும் முந்திக் கேட்ட மாதிரித்தான் இருக்கு!

 

 

அட இதில ஒன்றிரண்டு வரி வருது மறந்திடேன் .

 

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதானே என்ன கிருபன் எங்கேயோ கேட்ட குரல்

இல்ல இந்த போஸ்ட் ஆப்பிஸ் கண்பியூஸ் தான் பாஸ் எனக்கும் அடிக்கடி சுழலுதுதா அதான் கொஞ்சம் தலை சுத்துது  spointing-left-100-103.gif

கதையைத் தொடர்ந்து வாசிச்சால் சுத்தாத்து ராசா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதேதான் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே :35_thinking:

14 hours ago, கிருபன் said:

எனக்கும் முந்திக் கேட்ட மாதிரித்தான் இருக்கு!

 

உதாலைதான் நான் இந்தப்பக்கம் தலையை காட்டவேயில்லை....freu.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கதையைத் தொடர்ந்து வாசிச்சால் சுத்தாத்து ராசா

ம் வரட்டும் வாசித்துத்தான் பார்ப்போமே 

 

49 minutes ago, குமாரசாமி said:

உதாலைதான் நான் இந்தப்பக்கம் தலையை காட்டவேயில்லை....freu.gif

எதுக்கும் எட்டிப்பார்ப்பதை தவிர்க்கவும் :grin: மண்டையில் கல் எறி விழும் சில வேளை நான்  இல்லை அக்காதான் எறியும் :104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம் வரட்டும் வாசித்துத்தான் பார்ப்போமே 

எதுக்கும் எட்டிப்பார்ப்பதை தவிர்க்கவும் :grin: மண்டையில் கல் எறி விழும் சில வேளை நான்  இல்லை அக்காதான் எறியும் :104_point_left:

 எதுக்கும் அஞ்சா நெஞ்சன் இந்த குமாரசாமி :cool:

funny images of indian police à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

 எதுக்கும் அஞ்சா நெஞ்சன் இந்த குமாரசாமி :cool:

funny images of indian police à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

ஐய பாடி ரொம்ப வீக்கு ஒரு ஓரமா போகவும் ப்பீளிஸ்:grin::):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

 எதுக்கும் அஞ்சா நெஞ்சன் இந்த குமாரசாமி :cool:

funny images of indian police à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

அதுக்கு கல்லை எறியவே தேவையில்லை. கையில தூக்கினாலே போயிடும் போல இருக்கு 

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஐய பாடி ரொம்ப வீக்கு ஒரு ஓரமா போகவும் ப்பீளிஸ்:grin::):)

?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதுக்கு கல்லை எறியவே தேவையில்லை. கையில தூக்கினாலே போயிடும் போல இருக்கு 

இதை அந்த மனுசன் காது பட சொல்ல வேண்டும் வருத்தப்படுவார் சிங்கன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனைப் பார்த்த உடனேயே அவன் பிரச்சனை காரன் இல்லை என்று என் மனம் சொல்ல அவனோடு இலகுவாகக் கதைக்க முடிந்தது.போஸ்ட் ஆபீஸ்  வேலை தெரியுமா என்று அவன் கேட்க, இரண்டு வாரத்தில் பிடித்துவிடுவேன் என்ற என்னை எடுப்பதா வேண்டாமா என்பதுபோல் அவனுக்கு ஒரு தயக்கம் முகத்தில் தெரிந்தது. அவன் இல்லை என்று சொன்னாலும் என்ற பயத்தில் ஒரு ஆண்டுக்கு முன்னர் கொஞ்சம் பழகினானான் என்று சொல்ல, நீ கவலைப்படாதே ஒரு வாரத்திலேயே நான் அவாவுக்குப் பழக்கிப்போடுவன் என்று அக்கா சொல்ல எனக்கே ஒரு நம்பிக்கை வந்தது.

அன்றே வேலை பழக ஆரம்பிச்சாச்சு. தபாற்கந்தோர் புதிது என்பதும் நல்ல வசதியாகக் கட்டி இருந்ததும் பார்க்க ஆசையாக இருக்க, எனக்கே ஒரு வாரத்தில் எப்பிடியும் பழக்க வேணும் என்ற வைராக்கியம் வந்து எட்டு மணித்தியாலங்கள் ஐந்து நாட்களும் பழகி அக்காவின் வாயால் பாராட்டும் வாங்கியாச்சு. நீங்கள் அடிப்படை விடயங்கள் எல்லாம் பழகிவிட்டியள். ஒரேயடியா யாராலும் பழக்க ஏலாது. நீங்கள் கெட்டிக்காரி. நான் கொஞ்ச சம் கொஞ்சமா உமக்குப் பழக்கிப் போடுவன் என்று சொன்ன அக்கா ஒரு பெரிய குண்டையும் தூக்கிப் போட்டா. இன்னும் இரண்டு வாரங்களில் நான் சிறிலங்கா போறன். நீங்கள் தனியாத்தான் செய்ய வேணும் எண்டதும் எனக்குத் தலை சுத்த வெளிக்கிட்டித்து. ஐயோ அக்கா என்ன சொல்லுறியள் என்று நான் கேட்க,சனியும் உங்களோட நிப்பான். அதனால பயம் இல்லை. என்று அக்கா கூறினாலும் முதலாளியோட எப்பிடி நிண்டு வேலை செய்யிறது .... அதிலும் வரும் இரண்டு கிழமையிலும் எவ்வளவு வேலை பழக்க முடியுதோ அவ்வளவும் பழகி முடிக்கவேணும் என்று மனதில் சபதம் எடுத்துக்கொண்டு ஓரளவுக்கு எல்லாம் பழகியாச்சு.

எங்கு நான் போவதானாலும் வெள்ளணவே போய்விடுவேன். இப்போதும் அப்பிடித்தான். என் வீட்டிலிருந்து பத்து நிமிடக் கார் ஓட்டம். ஒன்பதுக்கு வேலை தொடங்கும். நான் போய் கதவு திறந்து அலாமை நிப்பாட்டிப்போட்டு அயன்சேவை  திறப்பதற்கான அழுத்தியை அழுத்திவிட்டு ஐந்து நிமிடம் காத்திருக்க அது திறக்கும். அதன்பின் ஸ்கிரீனை உயிர்ப்பித்து user name, pass word போட்டுத் திறந்து பணப்பெட்டி, முத்திரைகள்,  சில்லறைகள், சீல் எல்லாம் எடுத்து ஒழுங்கு செய்து போட்டு நிமிர்ந்தால் பென்ஷன் எடுக்க வாற கிழடுகள் கொஞ்சம் வரிசையில நிக்குதுகள். நல்ல காலம் சனி தூரஇருந்து வருவதால் இன்னும் வரவில்லை என்பதே பெரிய நின்மதியாக இருக்க, ஒரு அரை மணிநேரம் எந்த இடையூறும் இல்லாமல் தனியா வேலை செய்த பெருமிதம் என் மனதில். அடுத்தநிமிடமே என்ன அக்கா எல்லாம் ஓகேயா என்றபடி சனி அறையுள்  வர என்னை அறியாமலே ஒரு பதட்டம் வந்து சூழ்கிறது. என்றாலும் நான் அதை வெளியே காட்டாது அவன் பார்வை என் முதுகில் குத்த நின்று வேலை செய்கிறேன். அவனும் என்ன எண்ணினானோ" அக்கா நான் முன்னேயுள்ள கவுண்டரில் நிக்கிறேன். ஏதும் பிரச்சனை என்றால் கூப்பிடு என்று கூறிவிட்டுச் செல்ல எனக்கோ சரியான சந்தோசம்.

ஒரு சிறிய சூப்பர் மாக்கற்றுக்குள் இருக்கும் போஸ்ட் ஆபீஸ் என்றபடியால் அப்பப்ப ஆட்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். முதல் நாள் ஒரு பத்துத் தடவைகள் சனி சனி என்று கூப்பிட்டு, இரண்டாம் நாள்  ஏழு எட்டுத்தடவைகள் மாத்திரம் கூப்பிட்டு மூன்றாம் நாள் மூன்று தடவைகள் மாத்திரம் கூப்பிட்டு, வார இறுதியில் அவனை ஒரு தடவை கூடக் கூப்பிடாது திடமானபின் அடுத்து வந்த இரு வாரங்களும் நான் தனியாகவே வேலை செய்யுமளவு வந்திட்டன். மூன்று வாரங்கள் விடுமுறையில் சென்ற அக்கா திரும்பி வந்து கணக்குவழக்கெல்லாம் பார்த்து எந்தப் பிழையும் இல்லை கெட்டிக்காறி  என்று பாராட்டிய பாரராட்டில எனக்கு நானே தலையில கிரீடம் வைக்காத குறை.

அதுக்குப் பிறகு அக்கா  எனக்குத் தனியான  ஸ்டொக் யுனிட் எல்லாம் தயார்படுத்தி வெளியில உள்ள கவுண்டருக்கு என்னை அனுப்பியாச்சு. அக்கா உள்ள - கண்ணாடி அறையுக்குள்ள. நான் வெளியே திறந்த கவுண்டரில. ஆனாலும் தபால்களை, பொதிகளை வாங்குவது எனக்கு இலகுவாக இருக்க என் கவுண்டர் எனக்காகவே செய்ததுபோல் என் உயரத்துக்கும் பொருந்திப்போக,இனி பென்ஷன் எடுக்கும் வரையும் இது தான் என் வேலை என்று என் மனம் ஆசையாக நினைத்துக்கொண்டது.

அக்கா என்னைப்போல் உயரம் இல்லாவிட்டாலும் நல்ல முகலட்ஷணமாத்தான் இருப்பா. சாதாரணமாகக் கதைக்கும்போது  கூடக்  கொஞ்சிப்பேசுவதுபோல் இருக்கும். என்னிலும் மூன்று வயதுதான்  கூட. ஆனாலும் அவாவை பெயர் சொல்லிக் கூப்பிட என்னால் முடியவில்லை. அக்கா என்றே நானும் கூப்பிட்டுப் பழகிவிட்டுது. நான் வேலைக்குப் போன புதுசு என்பதால் நான் வேலை மட்டும் தான் செய்வன். அல்லது  சும்மா கடைக்குள் வந்து போகும் வாடிக்கையாளர்களை புதினம் பார்த்துக்கொண்டு இருப்பன்.எமது தபாற் கந்தோரில் காலையிலும் பூட்டும் நேரமும் தான் சனம் வரிசையில் நிற்கும். மற்றப்படி ஒன்று இரண்டு பேர்வந்து போய்க்கொண்டு இருப்பர்.  அக்கா என்னைக்கூப்பிட நான் உள்ள போய் மற்றக்கதிரையில் இருந்து ஒரு ஒன்றரை மாதத்தின் பின்தான் கதைக்க ஆரம்பித்தது.

அக்காவுடன் கதைத்தபின் தான் அவர் ஊர் குடும்ப விபரம் தெரியவந்தது. அவரின் இரண்டு பிள்ளைகளில் மூத்தவர் 24 வயது டென்டிஸ்ற்  என்றும் இரண்டாமவர் 22 வயது ஒப்ரோமெட்ரி என்றும் சொன்னபோது  இரண்டாவது வேலை என்ன என்று எனக்கு விளங்காமல் அது என்ன வேலை என்று கேட்டேன். அவ கிட்டத்தட்ட கண் டொக்டர் போல தான். நல்ல சம்பளம் நிவேதா. மூண்டே மூண்டு நாள் தான் வேலை. வருஷம் நாற்பத்தெட்டாயிரம் சம்பளம். இரண்டுபேரும் நல்லா உழைக்கினம். கலியாணம்கட்டி ஒவ்வொருத்தருக்கும் இரண்டு பிள்ளைகளும் நல்ல சிறப்பா இருக்கினம்  என்று கூற, இருபத்தி நாலாகியும் என் மகள் இன்னும் திருமணம் செய்ய மாட்டேன் என்கிறாளே என்னும் ஆதங்கம் மனதில் எழுந்தது.

அன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கணவர் கேட்க அவரிடம் அக்கா பற்றிய விபரங்களை சொல்ல, அவர்களை தனக்குத் தெரியும் என்கிறார் என் கணவர். நாம் கடை நடத்தியபோது ஒரு அரைமைல் தள்ளி இருந்த கடை இவர்களது கடை என்றும், கடை நடத்த முடியாமல் வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டுப் போனவர்கள் இவர்கள் தான் என்றும் என் கணவர் கூற நீங்கள் வேறு யாரையோ சொல்லுறியள் போல என்று நான் மறுக்க, எங்கள் கடையில் வேலை செய்த ஒருவர் இவர்களுக்குச் சொந்தக்காரர் என்றும் அவர் இவர்களைப்பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறார் என்றும் கணவர் சொன்னபோது அதற்குமேல் மறு க்கவில்லை நான்.

வரும் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கம் 3

 

வேலை தொடங்கி மூன்று மாதங்கள் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. கெட்டிக்காரி கெட்டிக்காரி எண்ட  அக்காவின் வார்த்தை கேட்டு எனக்கே புளிச்சுப்போச்சு. ஒவ்வொருநாளும் வேலை முடிய காசுக்கணக்குப் பார்த்து ஸிஸ்டத்தில் கிளீயர்  செய்துவிட்டுப் போனால் அடுத்தநாள் காலையில் புதிதாகத் தொடங்கும் கணக்கு. அதில் பல பிரிவுகள் இருந்தாலும் முன்பக்க ஸ்கிரீன்  Front Office என்றும் ,மற்றையது Back Office என்றும் இருக்கும்.  எமக்கான வேலைகள் அனைத்தும்  முன்பக்க ஸ்கிரீனின் ஊடாகவே நடைபெறும். கணக்கு வழக்குப் பார்ப்பது, ஏதாவது தவறாகச் செய்தால் திருத்துவது இன்னும் பலவும்  Back Office  ஊடாகச் சென்றே செய்யமுடியும். எனக்கு அதை உடனே அக்கா சொல்லித்தரவில்லை. கொஞ்ச  நாட்கள் போகட்டும் என்று இழுத்தடிதத்துக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு வார முடிவிலும் எனக்கு முன்னால் நின்று Balancing செய்வதாகக்கூறி கடகட என்று எல்லாவற்றையும் அழுத்துவார். எனக்கோ சிதம்பரசக்கரத்தைப் பேய் பார்த்தது என்று கூறுவினமே அதுபோல் இருக்கும். ஆனால் என் கணக்கில் பணம்சரி என்று வருவதனால் நானும் எனக்குக் சொல்லித் தாருங்கள் என்று அக்காவைக் கரைச்சல்ப் படுத்துவதில்லை. மாதம் ஒருமுறை TP டிரேடிங் பீரியட் முழு பலன்ஸ் வரும். அதை நான் இல்லாவிட்டாலும் அக்காவே செய்து கொள்ளுவார். ஏனெனில் அது மாத முதல் வாரத்தில் வரும் புதன் கிழமையே வரும்.நானோ புதனில் வேலை செய்வதில்லை.

முதல் நாள் செவ்வாய் என் கணக்கு எல்லாம் பார்த்து எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறிய அக்கா புதன் கிழமை இரவு எனக்குப் போன் செய்து "சொறி நிவேதா உங்கள் கணக்கில் 199 பவுன்ஸ் சோட். நானுமோ எல்லாம் வடிவாத் தேடிப் பார்த்திட்டன். காசு சோட் தான்" என்றவுடன் எனக்கு நெஞ்சு பிசைய ஆரம்பிச்சிது. நேற்று எல்லாம் சரியாத்தானே அக்கா இருந்தது என்று நான் கேட்டதற்கு அது நீங்கள் ஏதும் பிழைகள் விட்டிருந்தால் உடனே காட்டாது. மாத முடிவிலதான் காட்டும். நீங்கள் மாறி ஆருக்கும் குடுத்திருப்பியள்
என்றார். ஐயோ அக்கா எனக்குவேலைக்கு வர பயமாக கிடக்கு என்றேன் நான். அதுக்கெல்லாம் பயந்து வேலையை விடுறதோ ?? நீங்கள் இனிக்க கவனமா இருங்கோ. கொஞ்சம் கொஞ்சமா கட்டுங்கோ என்றுவிட்டு வைத்துவிட, பக்கத்தில கேட்டுக்கொண்டு இருந்த மனிசன் நான் வேலையை விட்டாலும்  என்ற பயத்திலோ என்னவோ சிலவேளை நீ மாறிக் குடுத்திருப்பாய். எதுக்கும் நான் நாளை காசைத் தாறன். கொண்டுபோய் அக்காட்டைக் குடுத்திடு என்று சொல்ல, என்னடா திட்டப்போகிறார் என்று நினைக்க மனிசன் காசைத் தந்து விடுறாரே என்று ஆச்சரியப்பட்டபடி காசைக் கொண்டுபோய் அக்காட்டைக் குடுத்தன்.   

அதுக்குப் பிறகு ஒரு மாதம் கணக்கு எல்லாம் மைனஸ் இல்லாமலிருக்க, வேலை செய்யும்போது மிக அவதானமாக வேலை செய்ய ஆரம்பிச்சன். ஒருநாள் கணக்கு முடிக்கும்போது 89 பவுண்ஸ் அதிகமாக இருக்க, அக்கா எதோ பிழை விட்டிட்டன் போல. இவ்வளவு காசு எப்பிடிக் கூட வரும் என்று கேட்க, ஒருநாள் கூட வந்தால் அடுத்தநாள் கணக்கு சரியாய்  இருக்கும் நிவேதா. நீங்கள் கவலைப் படாமல் போங்கோ என்று அக்கா கூற, வீட்டுக்குப் போனாலும் எப்பிடி அவ்வளவு காசு ஓவராய் இருக்கு?? ஆரின் பணத்தைத் தவறாகக் குடுத்தேன் என்று இரவு எவ்வளவுதான் யோசித்தும் விளங்கவே இல்லை. அடுத்தநாள் காலை அக்காவிடம் "எப்பிடி அக்கா  இவ்வளவு காசைச் சனம் வாங்காமல் போனது" என்று கேட்க நீங்கள் சிலவேளை காசைப் பிழை யாய் எண்ணி இருப்பீர்கள். இன்று கனக்குப் பாருங்கோ சரியாக இருக்கும் என்றதும் மேலும் மனத்தைக் குழப்பாமல் வேலை செய்ய, வேலை முடிவில் பணமும் சரியாக இருக்க என்னடா இது நான் தான் காசைப் பிழையாக எண்ணி வைத்துவிட்டேனோ என்ற குழப்பம் வந்தாலும், அடுத்து சனி ஞாயிறு வந்ததால் அதை மறந்து வீட்டுக்கு வந்தாச்சு. அடுத்த வார முடிவிலும் கணக்கு ஓகே. மாத முடிவில் பார்த்தால் மீண்டும் 125 பவுன்ஸ் காசு லொஸ்ற்.

எனக்கு இந்த வேலை வேண்டாம் அக்கா. நீங்கள் வேறு யாரையும் பாருங்கள் என்று நான் கூற, எவ்வளவு கஷ்டப்பட்டு நான் உங்களை பழக்கி வச்சிருக்கிறன். நீங்கள் துணிவான  பெண் என்று பார்த்தால் இப்பிடி வேலையை விடப்போறன் எண்டுறியள் என்று உசுப்பேற்ற, வேறு வழியின்றி சரி இன்னும் கொஞ்ச நாட்கள் பார்ப்பம் என்று மனத்தைத் திடப்படுத்தியபடி வீட்டுக்கு வந்து மனிசனிடம் சொல்ல, மனிசன் இம்முறை பணம் தந்து உடனே கட்டு என்று கூறாமல் உன் சம்பளத்தில் ஒவ்வொரு வாரமும் தருவதாகக் கூறிக் கொஞ்சம்கொஞ்சமாக கட்டு என்று சொல்ல, நானும் அக்காவிடம் அப்பிடியே சொன்னன். அக்காவும் பரவாயில்லை நிவேதா நான் கொப்பியில எழுதி வைக்கிறன். கொஞ்சம் கொஞ்சமாக கட்டி முடியுங்கோ என்றுகூற வேலையும் தொடர்ந்தது. இடையில் இரு இருப்பது பவுன்ஸ், அறுபது பவுன்ஸ் என்று மைனஸ் வர அதுவும் என் கணக்கில் ஏற என் மனமோ வேலையை விடுவதா இல்லையா என்று ஊசலாடியபடி தொடர்ந்தது.

சனங்கள் வந்தால் ஒன்றாகக் காலையில் வருவார்கள், மதியம் உணவு நேரம் வருவார்கள், பள்ளி விட்டதும் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வருவார்கள், மாலையில் ஐந்து தொடக்கம் ஐந்தரை வரை வரிசையில் நிண்டு உயிரை வாங்குவார்கள். இடையில் அக்கா உள் அறையில் யூ டுயூப்பில் பாட்டுக் கேட்டுக்கொண்டு இருப்பா, பிள்ளைகள், தங்கைகளுடன் போனில் கதைத்துக்கொண்டிருப்பா, அல்லது என்னை உள்ளே கூப்பிட்டு வைத்து கணவர் செய்யும் வேலை பற்றி பிள்ளைகள் செய்யும் வேலைப்பற்றி முன்னர் சொன்னதை மறந்து அல்லது எனக்கு நினைவில் இருக்காது என்று எண்ணி மாற்றிச் சொல்லிப் புழுகிக்கொண்டு இருப்பா. நான் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தலை ஆட்டியபடி இருப்பன். ஆனாலும் உள்ள ஒரு குரல் கேட்கும் "என்ன நீ இயல்புக்கு மீறி நல்ல பிள்ளைபோல் எல்லாத்தையும் கேட்டுத் தலையாட்டுறியே. எதிர்க்கேள்வி கேளன்" என்று . ஆனாலும் நான் சிரித்தபடி தலையாட்டிக்கொண்டே இருப்பன். ஏனெண்டால் வேலைத்தளத்தில் முதலாளி நிற்பதில்லை. அக்காவைத் தவிரக் கேள்வி கேட்க வேறை யாருமில்லை. கன  தூரம் கார் ஓடத் தேவையில்லை. இப்பிடியான வசதிகளால் அக்காவை சகிச்சுக் போகப் பழகினாலும்  சில நேரம் நிவேதா இங்க வாங்கோ, இந்தப் பாட்டைக் கேளுங்கோ, எப்பிடி இருக்கு என்று சொல்லுங்கோ என்பா. முதல் நாள் எனக்குப் பாட்டைக்  கேட்ட உடனே அக்கா பாடினது தான் என்று விளங்கினாலும் விளங்காததுபோல் "ஆரக்கா பாடினது. சுருதி சேர்ந்து பாடினால் நல்லாய் இருக்கும்" என்றன். நேர எல்லாரும் நல்லாய் இருக்கு என்று சொன்னவை. நான் தான் பாடினது. உங்களுக்கு ரெக்கோட் பண்ணினதில கேட்டதால அப்பிடி இருக்கு என்றா. எங்க பாடினாலும் பாட்டு சுருதியோட பாடினால் நல்லாத்தானிருக்கும் என்று சொல்ல நினைத்தும் சொல்லவில்லை.  

 

வரும்   

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தில் லண்டன் தபாற்கந்தோர் பற்றித் தெரிந்தவர்கள் யாரும் இல்லையோ ?? நான் எழுதுவதில் ஏதும் விளங்கவில்லை என்றால் இதை மேற்கொண்டு எழுதுவதில் பயனில்லை என எண்ணுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 4

இப்பிடியே அக்காவின் பொய், புளுகு, பாட்டு எல்லாம் கேட்டு அலுத்துப்போன ஒரு செவ்வாய்க்கிழமை வேலை முடிய என் கணக்கை முடித்து பலன்ஸிங் செய்ய என் கணக்கில் 580 பவுன்ஸ் ஓவர் காட்டுது. எனக்குப் பயத்தில என்ன செய்யிறது எண்டு விளங்கேல்லை. மைனஸ் எண்டால் நான் பிழை விட்டுட்டன் என்று சொல்லலாம். இது அதிகமாக காசு இருக்கு எண்டால் ..... ஐயோ அக்கா என்னக்கா இவ்வளவு காசு அதிகமா இருக்கு. என்ன என்று பாருங்கள் என்றேன். நீங்கள் பயப்பிட வேண்டாம் நிவேதா. மைனஸ் எண்டால் தான் பயம். இது நான் தான் முத்திரை எதையோ உங்களுக்கு மாறி போட்டுட்டன் போல இருக்கு. அதுதான் உங்களுக்கு இவ்வளவு காசு கூட இருக்கு என்று காட்டுது. நான் எதுக்கும் என் எக்கவுண்டுக்கு மாற்றுகிறன். கவலைப் படாதேங்கோ என்றுவிட்டு அன்றைய கணக்கை நேர்படுத்தித்தர,  என்னிடம் தந்திருக்கும் முத்திரைகள் எல்லாம் சரியாக இருப்பதாகத்தானே  அக்கா காட்டுது. பிறகு எப்படி நீங்கள் போட்டதைக் காட்டவில்லை என்றேன் நான். அது சிலவேளை  சிஸ்டம் காட்டாது. உங்களுக்கு என்ன. இப்ப எல்லாம் ஓகே தானே என்று கூற நானும் பேசாமல் போய்விட்டேன்.

ஒவ்வொரு வாரமும் ஒரு தமிழ் தம்பி தன் வங்கிக் கணக்கில் காசு போட வருவார். அன்றைக்குப் பார்த்து என்னிடம் வரவேண்டியவர் அடுத்தவரை விட்டுவிட்டு அக்காவின் கவுண்டர் பக்கம் போக எனக்கு என்னடா இது இந்தப் பொடியன் ஏன் என்னைத் தவிர்க்கிறார் என்று எண்ணியபடியே மற்ற வாடிக்கையாளர்களைப்  பார்த்துவிட்டு நிற்க, அக்கா என்னை தன் அறைக்கு வரும்படி கூப்பிட, நானும் கதைவைத் திறந்து உள்ளே செல்கிறேன். அந்தத் தமிழ்ப் பெடியன் அக்காவின் கவுண்டரில் நிக்கிறான். நான் அவனைப் பார்த்து சிரித்தபடி என்னக்கா என்கிறேன்.

"என்ன நிவேதா இப்பிடிப் பெரிய பிழை விட்டிருக்கிறியள். இவர் காசு போடத் தர நீங்கள் அவற்றை அக்கவுண்டில் இருந்து காசை எடுத்திருக்கிறியள்"  என்று கோபமாகக் கேட்க்கிறார். கஸ்டமர்களுக்கு முன் அது யாராய் இருந்தாலும் பண்பாகக் கதைக்க வேண்டும் என்பது பொதுவிதி. ஆனால் அக்கா சின்னப் பிள்ளையை வெருட்டுமாப்போல் என்னைக் கேட்டவுடன் எனக்கு சுரீர் என்று கோபம் வந்தாலும் நான் பிழை விட்டதாகக் கூறியபடியால் "எப்ப அக்கா" என்றேன். போன கிழமை என்றதும் எனக்கு நினைவு வந்துவிட்டது. "ஓமக்கா இவர் போன செவ்வாய் 290 பவுண்ட்ஸ் டிப்போசிட் செய்தவர். ஓ... எனக்கு இப்ப விலங்கிவிட்டுது. அந்த ஓவர் வந்த 580 பவுண்ட்ஸ் இவர் காசாகத்தான் இருக்கும். உங்களிடம் தானே அக்கா அந்தக் காசு இருக்கு. குடுங்கோ" என்றேன்.
அக்காவின் முகம் ஓடிக் கறுக்க "இவாவின் அக்கவுண்டில் அண்டைக்கு எதோ கூடக் கிடைத்ததுதான். எதுக்கும் நாங்கள் காமராவைச் சுத்திப் பார்த்துவிட்டுத்தான் தருவோம் என்றா". பொடியும் ஓமென்று தலையாட்ட, "அக்கா சனி ஆபீஸ் இல் தான் இருக்கிறான். நான் காமராவைச் செக் செய்துவிட்டு வருகிறேன்" என்றுவிட்டு அக்காவின் பதிலை எதிர்பார்க்காது முதலாளி சணி இருக்கும் அறைக்குள் நுழைந்து அவனிடம் நான் பிழைவிட்டுவிட்டேன் என்று விடயத்தைக் கூறினேன். பெடியனிடம் றிசீற்ரை  வாங்கி அதில் நேரத்தைப்  பார்த்துவிட்டு காமராவைப் பார்க்க டிப்போசிட் மேலேயும் விட்ரோ கீழேயும் இருக்க, நான் மாறி அழுத்திவிட்டிருந்தேன். அதனால்த்தான் எனது கணக்கில் 580 அதிகமாக வந்திருந்தது. நாம் காமராவைப் பார்த்தவுடன் அக்காவும் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்து கண்டுபிடிச்சாச்சோ என்றா ஆங்கிலத்தில்.

நானும் உடனே "ஓமக்கா நான் தான் தவறுதலாக விட்ரோ அமத்திவிடடேன்" என்றேன். உடனே "அந்த ஓவர் வந்த பணம் எங்கே" ?என்று சணி  கேட்டான். உடனே நான் "அக்காதான் எல்லா ஓவரையும் தனக்கு மாற்றி எடுத்துவிட்டா" என்றேன். ஒரு அரை நிமிடம் யாரும் பேசாத அமைதி. அக்கா என்ன சாட்டைக் கூறலாம் என்று யோசித்துவிட்டு "நான் முத்திரைகளை மாறி நிவேதாவுக்கு மாற்றியதாக எண்ணி அதை மாற்றினேன்" என்று குரலில் தொய்வோடு கூற, நானோ கொடுப்புக்குள் வந்த சிரிப்பை அடக்கியபடி வெளியே வந்து அந்தப் பெடியனுக்கு மீண்டும் 580 பவுண்ட்ஸ்களை டிப்போசிட் செய்து றிசீற்ரையும் கொடுத்துவிட்டு மனதுள் மகிழ்வு பொங்க மிகுதி வேலைகளைத் தொடர்ந்தேன்.

 

வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யாழ் இணையத்தில் லண்டன் தபாற்கந்தோர் பற்றித் தெரிந்தவர்கள் யாரும் இல்லையோ ?? நான் எழுதுவதில் ஏதும் விளங்கவில்லை என்றால் இதை மேற்கொண்டு எழுதுவதில் பயனில்லை என எண்ணுகிறேன்

 ரீச்சர்! எனக்கு சிலோன் தபால் கந்தோர் தெரியும். ஜேர்மன் தபால் கந்தோர் தெரியும். ஆனால் லண்டன் தபால் கந்தோர் தெரியவே தெரியாது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 ரீச்சர்! எனக்கு சிலோன் தபால் கந்தோர் தெரியும். ஜேர்மன் தபால் கந்தோர் தெரியும். ஆனால் லண்டன் தபால் கந்தோர் தெரியவே தெரியாது ?

பார்....அல்லது தவறணை எண்டால்....கண்டு பிடிக்கிறது சுலபம்!

கள்ளுக் கொட்டில் எண்டால்....ஆரிட்டையும் கேட்டுத்தான் ....தேடித் பிடிக்க வேண்டும்!?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யாழ் இணையத்தில் லண்டன் தபாற்கந்தோர் பற்றித் தெரிந்தவர்கள் யாரும் இல்லையோ ?? நான் எழுதுவதில் ஏதும் விளங்கவில்லை என்றால் இதை மேற்கொண்டு எழுதுவதில் பயனில்லை என எண்ணுகிறேன்

அக்காச்சி, எங்களுக்கு என்ன பென்சன் எடுக்கிற வயசா?

தபாற்கந்தோருக்கு போறம் முத்திரையை ஒட்டுறம் காட்டை தடவுறம் அவ்வளவுதான், அதுவும் ஆடிக்கொருக்கால் அமாவாசைக்கொருக்கால்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

அக்காவும் நீங்களும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

 ரீச்சர்! எனக்கு சிலோன் தபால் கந்தோர் தெரியும். ஜேர்மன் தபால் கந்தோர் தெரியும். ஆனால் லண்டன் தபால் கந்தோர் தெரியவே தெரியாது ?

சரி சரி அதுக்காகக் கண்ணைக் கசக்க வேண்டாம் ?

17 hours ago, புங்கையூரன் said:

பார்....அல்லது தவறணை எண்டால்....கண்டு பிடிக்கிறது சுலபம்!

கள்ளுக் கொட்டில் எண்டால்....ஆரிட்டையும் கேட்டுத்தான் ....தேடித் பிடிக்க வேண்டும்!?

??

11 hours ago, MEERA said:

அக்காச்சி, எங்களுக்கு என்ன பென்சன் எடுக்கிற வயசா?

தபாற்கந்தோருக்கு போறம் முத்திரையை ஒட்டுறம் காட்டை தடவுறம் அவ்வளவுதான், அதுவும் ஆடிக்கொருக்கால் அமாவாசைக்கொருக்கால்....

நீங்கள் யாருக்கும் பார்சல் - பரிசு அனுப்புவதில்லையா ????

10 hours ago, suvy said:

Image associée

அக்காவும் நீங்களும்.....!  tw_blush:

என் ஆசை உங்களுக்குத்தான் அண்ணா விளங்கியிருக்கு ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அக்கா எதோ பிரச்சினைக்குள்  உங்களை தள்ளி விடப்பார்க்கிறா..நல்ல  வேளை தப்பித்துவந்துவிடீர்கள்

 அனுபவ கதை பலருக்குப்பயன் படும் தொடருங்கோ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.