Jump to content

கிழக்கில் மாட்டு பண்ணை அமைக்கபடவில்லை! 2016 CTC நிதிசேர் நடையில் சேர்த்த பணம் எங்கே? - கனடாவில் வியாழேந்திரன் குற்றச்சாட்டு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் மாட்டு பண்ணை அமைக்கபடவில்லை! 2016 CTC நிதிசேர் நடையில் சேர்த்த பணம் எங்கே? - கனடாவில் வியாழேந்திரன் குற்றச்சாட்டு.

கனடாவில் இருக்கும் CTC (கனேடியத் தமிழர் பேரவை; Canadian Tamil Congress) அமைப்பின் அழைப்பின் பேரில் கனடா வந்தபின் இனிமேல் நான் எந்த நாட்டிற்கும் உதவி கேட்டு போகக்கூடாது என்று யோசித்தேன் ஏனெனில் கனடாவில் கிடைத்த அனுபவம். நேற்று மாலை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களுடன் ஓர் சந்திப்பு நிகழ்வு சங்கமம் மண்டபத்தில் (Sankkamam Party Hall Scarborough ont ,Oct 30, 2018) நடைபெற்றது. முகநூல் வாயிலாகவும், வானொலிகள் வாயிலாகவும் இந்த சந்திப்பு கடந்த 2 நாட்களாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் சந்திப்புக்கு மிகவும் குறைந்த மக்களே வந்திருந்தார்கள்.

முன்னணி அமைப்புகள் என்று கூறிக்கொள்ளும் அமைப்புக்கள் எதுவும் இந்த நிகழ்வை நடத்தவில்லை, ஆனால் முன்னனி அமைப்புகளின் முகத்திரை இங்கு கிழித்து தொங்கவிடப்பட்டது வந்தவர்களிடம் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 2016 இல் CTC (கனேடியத் தமிழர் பேரவை; Canadian Tamil Congress) அமைப்பினரால் கிழக்கில் மாட்டு பண்ணை அமைக்கவென நடந்த நிதிசேர் நடையில் சேகரிக்கப்பட்ட பணத்தில் (1.1 கோடி ரூபாக்கள் | $85,000.00) இதுவரை, 2 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், எந்தவிதமான பணமும் அங்கு சென்று சேரவில்லை.

மக்களின் அவசர வாழ்வாதார உதவிகள் என்று எமது மக்களிடம் சேர்த்த பணம் 2 வருடங்களாக இங்குள்ள அமைப்பே (CTC) வைத்திருக்கின்ற விடயம், போட்டுடைத்தார் கிழக்கின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள். கனடிய தமிழ் காங்கிரஸ் 2016 இல் மக்களின் அவசர வாழ்வாதாரத்துக்கென நிதிசேர் நடையில் சேர்த்த பணம் இதுவரை அந்த மக்களை எந்த வகையிலும் சென்று சேரவில்லை. 

அனுப்பி வைக்கப்படாமைக்கு ஆயிரம் காரணங்களை, கதைகளை சொல்லலாம். ஆனால் மக்களின் அவசர வாழ்வாதார பிரச்சனைகளை காரணமாக சொல்லி சேர்த்த பணம் கடந்த இரண்டு வருடங்களாக அனுப்பிவைக்கப்படாமை ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என பலரும் விசனமடைந்தனர். 2016 பின்பும் வேறு காரணங்களை சொல்லி மேலும் பல நிதிசேர் நிகழ்வுகளை இந்த CTC அமைப்பு நடத்தியுள்ளது. தாயக நோக்கிய உதவிநலத்திட்ட செயல்பாடுகளில் CTC அமைப்பின் இவ்வாறான தாமதப் போக்குகள் மக்கள் மத்தியில் அந்த அமைப்பின் மீதான நம்பகத்தன்மையை மேலும் குறைவடையச்ச்செய்யும் என்பது பலரதும் கருத்தாக அமைகிறது. 

தற்போது வியாழேந்திரன் கனடாவில் ஊடக சந்திப்புகளை நடாத்திவருகிறார். மட்டக்கள்ப்பில் வாழ்வாதார உதவிகள் பல கிராமங்களில் செய்யப்படவேண்டிய அவசியத்தையும் விளக்கிவருகிறார். கனேடியத் தமிழர் பேரவையிடமிருந்து மேற்படி குற்றச்ச்சாட்டுக்கான பதில் அல்லது விளக்கம் கிடைக்குமிடத்து அதை மக்களிடம் எடுத்துவருவோம் செய்தி குழுமம் தெரிவித்துக்கொள்கிறது . 

-301018-380-seithy%20(1).jpg

 

https://www.seithy.com/briefTopNews.php?newsID=211716&category=TopNews

 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.