Jump to content

இனிமையான சங்கீதப் பாடல்கள்.


Recommended Posts

  • Replies 250
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாயும் ஒளி

பாயு மொளி நீ யெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா......
வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வரிம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே......!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆசை முகம் மறந்து போச்சே -இதை

 

கண்ணில் தெரியுதொரு தோற்றம் –
அதில் கண்ண னழகு முழிதில்லை;
நண்ணு முகவடிவு கானில் –
அந்த நல்ல மலர்ச்சிரிப்பை காணோம்.
ஒய்வு மொழிதலுமில் லாமல் –
அவன் உறவை நினைத்திருக்கு முள்ளம்;
வாயு முரைப்பதுண்டு கண்டாய் -
அந்த மாயன் புகழினை யெப்போதும் .
கண்கள் புரிந்துவிட்ட பாவம் – உயிர்க் கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினத்திலிது போலே- ஒரு பேதையை முன்பு கண்டதுண்டோ?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பக வல்லி நின்

 

 

கற்பக வல்லி நின்

பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
கற்பக வல்லி நின்
பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
தேவி கற்பக வல்லி நின்
பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
தேவி கற்பக வல்லி நின்
பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர்
சிங்காரக் கோயில் கொண்ட
சிற்பம் நிறைந்த உயர்
சிங்காரக் கோயில் கொண்ட
சிற்பம் நிறைந்த உயர்
சிங்காரக் கோயில் கொண்ட
கற்பக வல்லி நின்

பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
பதிவேற்றம் : Gopi79000
நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்

நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்
நான் இந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ
நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்
நான் இந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ
ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள
ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள
ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா
கற்பக வல்லி நின்

பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
எல்லோர்க்கும் இன்பங்கள்

எழிலாய் இரங்கி என்றும்
எல்லோர்க்கும் இன்பங்கள்
எழிலாய் இரங்கி என்றும்
நல்லாக்கி வைத்திடும் நாயகியே
நல்லாக்கி வைத்திடும் நாயகியே
நித்ய கல்யாணியே
கல்யாணியே கபாலி காதல் புரியும்
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமா உன்னை நம்பினேன் அம்மா
உல்லாசியே உமா உன்னை நம்பினேன் அம்மா
கற்பக வல்லி நின்

பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே
பாகேஸ்ரீ தாயே பார்வதியே
பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த
லோகேஸ்வரி நீயே உலகில் நீ துணையம்மா
லோகேஸ்வரி நீயே உலகில் நீ துணையம்மா
கற்பக வல்லி நின்

பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்

அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்
கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே நின்னிடம்
அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்
கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே நின்னிடம்
தஞ்சம் என அடைந்தேன்
தஞ்சம் என அடைந்தேன்
தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா
கற்பக வல்லி நின்

பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.