Jump to content

தமிழர் அபிலாஷைகளையும் தீர்க்குமா ஜனநாயகத்துக்கான போராட்டம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அபிலாஷைகளையும் தீர்க்குமா ஜனநாயகத்துக்கான போராட்டம்?

Editorial / 2018 நவம்பர் 06 செவ்வாய்க்கிழமை, மு.ப. 03:25

image_a53766fdc8.jpg

- க. அகரன்

ஜனநாயகத்துக்கான போராட்டம், இலங்கையில் இன்று வலுப்பெற்றிருக்கும் நிலையில், இலங்கை தேசம், சர்வாதிகாரச் சிந்தனைகொண்டவர்களால் ஆளப்படுகிறதா என்கின்ற கேள்வி, பரவலாகவே அனைவரிடமும் எழுந்துள்ளது.

இறைமை என்கின்ற ஒற்றைச்சொல்லுக்குள், போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாகக் கூறிவந்த இலங்கை, இன்று சர்வதேசத்தின் கண்டனங்களுக்குள்ளாகும் போது, இறைமையிலும் மேலானது சர்வதேசத்தின் பார்வை என்பதை எண்ணத்தலைப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் இழுபறி நிலை, அரசமைப்பு முறைமையை மாத்திரமல்ல, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையையும் மீள் பரிசீலனைக்குட்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல.

நல்லாட்சி அரசாங்கம் என்ற தொனிப்பொருளில், தமிழ் மக்களின் வாக்குகளையும் மிக அதிகளவில் பெற்று ஆட்சிபீடமேறிய மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானம், சரியா பிழையா என்பதற்கப்பால், அரசமைப்பின் மொழியாக்கங்களால் ஏற்படும் கருத்தியல் மாற்றங்களையும் தெளிவாகச் சுட்டிநிற்கின்றது.

ஏனெனில், வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்த ஜனாதிபதி, இலங்கையில் சிங்கள மொழியிலான அரசமைப்பையே நடைமுறைப்படுத்துவதாகவும், ரணில் விக்கிரமசிங்க ஆங்கில மொழி மூலமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட அரசமைப்பையே வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்குக் காட்டியதுடன், அதில் உள்ளதையே அவர் கூறி வருகின்றார் என, செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், புதிதாகக் கொண்டுவரப்படவிருந்ததென தமிழ் அரசியல்வாதிகளால் சொல்லப்பட்ட அரசமைப்பில் ‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்ற சொற்பிரயோகமும் சர்ச்சை நிறைந்ததாக அமையும் என்பது தெளிவு.

பிரதமரை நியமிப்பது என்ற விடயத்தில், இலங்கையின் அரசமைப்பானது விவாதப் பொருளாகியுள்ளது. ஏனெனில், நிறைவேற்று ஜனாதிபதிக்கிருந்த பிரதமரை நீக்குதல் என்ற அதிகாரம், 19ஆவது திருத்தத்தில் மாற்றமடைந்துள்ளது. அவ்வாறெனில் இவ்விடயம் ஏன் சர்ச்சையைக் கிளப்பகின்றது என்பதே தற்போதைய கேள்வியாகவுள்ளது.

இந்நிலையில், தமிழ் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு என்ன என்பதும், அதனூடாக தமிழ் மக்களுக்காகச் சாதிக்கக் கூடிய விடயங்கள் எதுவாகின்றன என்ற விடயத்தையும் சீர்தூக்கிப் பார்க்கவேண்டிய தேவையுள்ளது. இறுதிக்கட்ட யுத்தம் நடத்தப்பட்ட விதம் குறித்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீது, பல்வேறான குற்றச்சாட்டுகள் காணப்படும் நிலையில், அவரை மீண்டும் பிரதமராகக் கொண்டுவருவதற்கு எவ்வாறு அனுமதிக்க முடியும் என, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளைத் தம்மை அடையாளப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்து வருகிறது.

இதற்குமப்பால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல மில்லியன் ரூபாய் பேரம் பேசப்படுவதாகவும், இரு தரப்புகளுமே தமது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக, பிரதிநிதிகளை வளைத்துப்போடும் உபாயங்களைக் கையாண்டு வரும் நிலையும் உள்ளதாக, வெளிப்படையாகவே நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் அரசியல்வாதிகளும், இந்தச் சலுகை அரசியலுக்குள் சிக்குண்டு, சிலர் சின்னாபின்னமாகியும் சிலர் தக்கெனப் பிழைத்தும் காணப்படும் நிலை இதுவரையும் காணப்படும் நிலையில், 14ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இச்சூழல், தற்போதைய அரசியல் நிலைமை, தமிழ் மக்களுக்கு எவ்வாறான நன்மையைக் கொண்டு வரப்போகின்றது என்பது தொடர்பில் ஆராயப்படவேண்டும். நல்லாட்சி என்ற அரசாங்கத்தை நிறுவியதில் பெரும் பங்காற்றிய தமிழ் அரசியல்வாதிகள், அதனூடாகச் சாதித்தவை எவையும் இல்லாத நிலையிலேயே, அரசியல் குழப்பம் ஒன்று உருவாகியுள்ளது.

தமிழ் மக்களின் ஆதரவுடன் நாடாளுமன்றம் சென்ற பிரதிநிதிகள், இன்று தீர்மானிக்கும் சக்தியாக மிளிர்கின்ற போதிலும் கூட, தமிழ் மக்கள் மத்தியில் அவர்களுக்குள்ள எதிர்ப்பு அல்லது விமர்சனம், தற்காலச் சூழலில் அதிகரித்துள்ளது எனலாம். அது, கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், மக்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும் கூட, கூட்டமைப்பு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகவோ அல்லது தமது உரித்து, கருத்துச் சொல்லக்கூடிய உரிமை தமக்குள்ளது என்ற எண்ணப்பாட்டின் வெளிப்பாடேயாகும். இது, கூட்டமைப்பின் சரிவை ஒரு தளத்துக்கு மேல் கொண்டு சென்றுள்ளது எனலாம்.

வடக்கில் வேக வேகமாக ஆரம்பிக்கப்பட்ட புதிய அணிகள், கூட்டமைப்பின் பலத்தைச் சிதைக்கும் வண்ணம் இருக்கும் என்ற தோற்றப்பாடு காணப்பட்ட நிலையில், அரசியல் தளம்பல் நிலையானது, கூட்டமைப்பின் நிலைபேறு தன்மையை மீண்டும் நிலைநிறுத்தியிருக்கின்றது என்றே கருதவேண்டியுள்ளது.

யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் எதனையும் சாதிக்கமுடியாத நிலையில், 2015இல் இருந்து, தடவிக்கொடுக்கும் அரசியல் நிலைப்பாடே, மத்தியில் காணப்பட்டது.

இந் நிலையில் கூட்டமைப்பு மீதான பார்வை தமிழ் மக்களால் அதிகம் வைக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேசத்திடம் தமிழர்களின் நிலை தொடர்பாக எடுத்தியம்புவதற்கான காலச் சூழலும் இதுவே என்பது மறுப்பதற்கில்லை. ஜனாதிபதியும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எவ்வாறு வெளிநாட்டு இராஜதந்திரிகைளை இச்சந்தர்ப்பத்தில் அழைத்துப் பேசி வருகின்றனரோ, அதேபோன்றதான செயற்பாட்டை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் செயற்படுத்த வேண்டும். பலரும் இதைத் தெரிவித்தும் வருகின்றனர்.

ஏனெனில், கடந்த 3 ஆண்டுகளாக நல்லாட்சி அரசாங்கம் செய்தவற்றையும் தமிழர்களின் கோரிக்கைகளையும் பட்டியலிட்டுத் தெளிவுபடுத்தவேண்டிய தேவை உள்ள நிலையில், வெறுமனே “மஹிந்த வரவே கூடாது என்பதற்காக வாக்களிக்கப் போகின்றோம்” என்பதானது, எதனையும் செய்யாத ரணிலை மறைமுகமாக ஆதரிப்பதான தோற்றப்பாடாகவே உள்ளது.

எனினும், கூட்டமைப்பினர் தமது நிலைப்பாட்டைத் வெளிப்படுத்துவதில் ஏற்படுத்தி வந்த தாமதமே, பல்வேறு ஊகங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தக் காரணமாகியிருந்தது.

இதற்கு மத்தியில், கனடாவுக்குச் சென்றுவந்த வியாழேந்திரனைக் கூட்டமைப்பினர் கண்டுபிடிக்க முன்னரே, பிரதியமைச்சர் பதவியைப் பெற்றிருந்தார்.

அதன் பிரதிபலிப்பாக, மைத்திரி, மஹிந்த மீதான கொதிநிலை, கூட்டமைப்புக்குள் இன்னும் குறையாத நிலையிலேயே, வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வில் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, துரதிர்ஷ்டவசமாக, தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி ஆனவர். எங்களுடைய கட்சியைக் கூறுபோடுவதற்கு இன்று முனைந்திருக்கிறார். இது, அவருடைய இறுதிக்கான ஆரம்பம். அவருக்குப் பகிரங்கமாக நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன். எங்களுடைய உப்பைத் தின்று வந்து, எங்களுடைய கட்சியில் இருந்து ஒருவரைத் திருடி, அரை அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து இருக்கின்ற அந்த மோசமான செயலை செய்த ஜனாதிபதி, உங்களுக்கு எப்படி நாங்கள் ஆதரவு கொடுக்கப் போகிறோம்? எங்களுடைய மக்களைக் கூறு போடுவதற்கா உங்களை நாங்கள் கொண்டுவந்தோம். தேர்தலிலேயே தோற்றிருந்தால், ஆறடி நிலத்தில் போயிருப்பேன் என்று சொன்னீர்களே? ஆறடி நிலத்துக்குள் போகாமல் உங்களைக் காப்பாற்றியது நாங்கள் அல்லவா? இன்று, எங்களைப் பிரித்துப் போடுவதற்காகச் சூழ்ச்சி செய்கின்ற கபடமான ஜனாதிபதியாக மாறி இருக்கிறீர்கள். இது உங்கள் அழிவுக்கான ஆரம்பம்” என தெரிவித்தார். (ஜனாதிபதியை, ஒருமையிலேயே எம்.ஏ. சுமந்திரன் விளித்தார் என்று செய்திகள் வெளியாகின்ற போதிலும், அரசியல் நாகரிகம் கருதி, அவரது கருத்துகளில் அது மாற்றப்பட்டிருக்கிறது)

இது இவ்வாறிருக்க, தற்போது பெரும்பான்மையைக் கொண்டிருக்காதவர் என்று கருதப்படுகின்ற மஹிந்த ராஜபக்‌ஷ, இன்னொரு தேர்தல் நடத்தப்பட்டால் வெற்றிபெறுவார் அல்லது தனித்து ஆட்சியமைப்பார் என்ற பார்வை காணப்படும் நிலையில், அதன் காரணமாக, ஐ.தே.கவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், கட்சி தாவி, 14ஆம் திகதிக்குள், பெரும்பான்மையை மஹிந்த பெறக்கூடிய வாய்ப்புள்ளது.

இந்நிலையில், ஜனநாயகத்தை நிறுவுவதாகத் தெரிவித்து, ரணிலுக்கு ஆதரவாகவும் மஹிந்தவுக்கான எதிர்ப்பாகவும் மேற்கொள்ளப்படும் அரசியல் நகர்வுகளால், தமிழர்களுக்கான அபிலாஷைகளைத் தமிழ்த் தலைமைகள் எந்தளவுக்கு முன்நகர்த்தப்போகின்றன என்பது, பெரும் வினாவை எழுப்பியுள்ளது.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழர்-அபிலாஷைகளையும்-தீர்க்குமா-ஜனநாயகத்துக்கான-போராட்டம்/91-224764

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.