Jump to content

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: சிம்பாப்வே அணி வெற்றி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: சிம்பாப்வே அணி வெற்றி

சிம்பாப்வே கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

அங்கு சென்றுள்ள சிம்பாப்வே அணி, பங்களாதேஷ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது.

இந்நிலையில் முதலாவதாக இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடர் நடைபெற்றது. இதில் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று பங்களாதேஷ் அணி, தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது.

இதன் முதலாவது டெஸ்ட் போட்டி, கடந்த் 3ஆம் திகதி சில்ஹெட் மைதானத்தில் ஆரம்பமானது. இப்போட்டியின் முடிவினை தற்போது பார்க்கலாம்….

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய சிம்பாப்வே அணி, சீன் வில்லியம்ஸ் மற்றும் மசகட்சா ஆகியோரின் அரைசதத்தின் துணையுடன் 282 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக சீன் வில்லியம்ஸ் 88 ஓட்டங்களையும், மசகட்சா 52 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் தஜ்சுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளையும், இஸ்முல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து பதிலுக்கு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி, 143 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக, அரிபுல் ஹக் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் சிகான்டர் ரஸா, டென்டாய் சடாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், கெய்ல் ஜார்வீஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

இதனையடுத்து, 139 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய சிம்பாப்வே அணி, 181 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதற்கமைய பங்களாதேஷ் அணிக்கு 321 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக மசகட்சா 48 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் தஜ்சுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளையும், மெயிடி ஹசன் 3 விக்கெட்டுகளையும், இஸ்முல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

321 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி, 169 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதற்கமைய சிம்பாப்வே அணி, 151 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது, பங்களாதேஷ் அணி சார்பில், இம்ரூள் கெய்ஸ் 43 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் பிரெண்டன் மவுடா 4 விக்கெட்டுகளையும், சிகன்டர் ரஸா 3 விக்கெட்டுகளையும், வெலிங்டன் மசகட்சா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக சிம்பாப்வே அணி சார்பில், பிரகாசித்த சீன் வில்லியம்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

சிம்பாப்வே அணி, ஐந்து வருடங்களுக்கு பிறகு பெற்றுக் கொண்ட முதல் டெஸ்ட் வெற்றி இதுவாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டு மண்ணில் பெற்றுக்கொண்ட மூன்றாவது வெற்றியாகவும் இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 11ஆம் திகதி டாக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 

http://athavannews.com/பங்களாதேஷ்-அணிக்கெதிரான/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.