Jump to content

மைத்திரியின் குத்துக்கரணமும் கூட்டமைப்பின் முடிவும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியின் குத்துக்கரணமும் கூட்டமைப்பின் முடிவும்

புருஜோத்தமன் தங்கமயில் / 2018 நவம்பர் 07 புதன்கிழமை, மு.ப. 03:18

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், அப்போதைய பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை நோக்கி, மஹிந்த ராஜபக்‌ஷ அணியினர், “இடுப்பில் தைரியமற்றவர்” (ஆண்மையற்றவர்) எனும் அரசியல் நாகரிகமற்ற, இழிவார்த்தைகளை மேடை தோறும் பேசி வந்தனர்.   

சுமார் நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், அதே மாதிரியான நாகரிகமற்ற இழிவார்த்தைகளைப் பேசிக் கொண்டு, மஹிந்த ராஜபக்‌ஷ ஆதரவு மேடையில் ஏறியிருக்கிறார், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.  
நாட்டு மக்களின் ஆணைபெற்ற தலைவராக, மைத்திரிபால சிறிசேனவுக்குப் பாரிய பொறுப்புண்டு. 

வார்த்தைகளில் கண்ணியத்தைப் பேண வேண்டிய கடப்பாடும் உண்டு. ஆனால், அவரோ, ரணில் விக்கிரமசிங்கவையும் அவரது சகாக்களையும் நோக்கி ‘வண்ணாத்துப்பூச்சிகள்’ (ஓரினச்சேர்க்கையாளர்களை சிங்களத்தில் வண்ணத்துப்பூச்சிகள் என்று கேலி செய்வதுண்டு) என்று பேசியிருக்கின்றார்.   இதைக் கூறும் போது, சபையிலுள்ளவர்கள் சிரிப்பதற்கான கால அவகாசத்தை வழங்கித் தானும் சிரித்துக் கொள்கிறார்.   

சாதாரண ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து, பொதுவெளியில் பேசுவதற்கான அதிகாரம், யாருக்கும் இல்லாத போது, நாட்டின் முதற்குடிமகனாக இருப்பவர், இழிவார்த்தைகளின் வழி நின்று, அரசியலை வெற்றிகொள்ள நினைப்பது அநாகரிகமானது.  (நாடாளுமன்றத்துக்கு அருகில், திங்கட்கிழமை (05)மஹிந்த அணியினர் கூட்டிய ‘ஜன மஹிமய’ பேரணி மேடையிலேயே, மைத்திரிபால இவ்வாறாக நடந்து கொண்டார்.)   

தார்மீகத்தின் நாயகனாகவும் கண்ணியத்தின் காவலனாகவும் தன்னை மக்களிடம் முன்னிறுத்தி வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன, இன்றைக்கு வந்து சேர்ந்திருக்கின்ற இடமே அவரை யாரென்று சொல்லப்போதுமானது.   

அரசமைப்பு மீதான அச்சுறுத்தலுக்கும், நாட்டின் குழப்பங்களுக்கும் மூல காரணமாக ஜனாதிபதியே இருக்கின்றார். தான் இழைத்த தவறுகளை நியாயப்படுத்துவதற்காக,  மீண்டும் மீண்டும் அழுக்கைச் சேர்த்துக் கொண்டு செல்கிறார். அதை அவர், பெரும் வெற்றியாகவும் வெளிப்படுத்த முனைகிறார். இது, அவருக்கான பின்னடைவு மாத்திரமல்ல, ஒட்டு மொத்த நாட்டுக்குமான பின்னடைவு.  

அரசமைப்புக்கு முரணாக மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக்கிவிட்டு, பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நாடாளுமன்றத்தை ஒத்திவைத்திருப்பதனூடாக, மைத்திரிபால சிறிசேன பெரும் ஊழல் மோசடிக்கான வாய்ப்பைத் திறந்து விட்டிருக்கின்றார்.   

ஊழல் மோசடிகளுக்கு எதிராக எழுந்து வந்தவர், ஊழல் மோசடிகளின் வழியே, தன்னுடைய அரசியல் வெற்றியைப் பெற இப்போது நினைக்கிறார். அவரின் புதிய சகாக்கள், ‘குதிரை’ பேரங்களை நியாயப்படுத்துகிறார்கள்.   

குறிப்பாக, முன்னாள் இடதுசாரியும் இந்நாள் ராஜபக்‌ஷவின் விசுவாசியுமான வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கோடிகள் கொடுத்து வாங்குவது நியாயம் என்று, ஊடகங்களிடமே பேசுகிறார்.   

இவ்வாறான நெருக்கடியான நிலையை, நாட்டு மக்கள் ஒவ்வொருவரும், அறம் சார்ந்து எதிர்கொள்ள வேண்டிய கடப்பாடு ஏற்படுகின்றது. ஏனெனில், மக்களின் இறைமை கேள்விக்கு உள்ளாக்கப்படும் சந்தர்ப்பத்தில் அதனை, மீட்கப் போராடுவது அடிப்படையானது.  

ராஜபக்‌ஷக்களின் ஏதேச்சதிகாரம், ஒட்டுமொத்த நாட்டையும் நெருக்கடிக்குள் தள்ளியபோதுதான், ஆட்சி மாற்றத்துக்கான பெரும் ஆணையை 2015இல் மக்கள் வழங்கினார்கள். அதுதான், ஜனநாயக இடைவெளியைக் குறிப்பிட்டளவு திறந்தும் விட்டது.   

ராஜபக்‌ஷக்களிடம் ஆட்சியதிகாரம் மீண்டும் செல்வதற்கான சூழல் ஏற்பட்டவுடனேயே, அவர்கள் தங்களது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார்கள். அநுராதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) பேசிய கோட்டாபய ராஜபக்‌ஷ, “நல்லாட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர், தனிப்பணியகம் உள்ளிட்ட முன்னோக்கிய விடயங்களை இல்லாமல் செய்வோம்” என்று சூளுரைக்கின்றார்.  

இன்னொரு பக்கம், நாமல் ராஜபக்‌ஷ, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை, ‘குதிரை’ப் பேரத்துக்காகப் பயன்படுத்த முனைகிறார்.   

பஷில் ராஜபக்‌ஷவோ, ஊடக முதலாளிகள், பிரதானிகள், முன்னாள் ஆசிரியர்களை முகவர்களாகக் கொண்டு, பேரம் பேசல்களில் ஈடுபடுகிறார். ஆசை வார்த்தைகளின் வழி தொடங்கும் ‘குதிரை’ பேரம், அச்சுறுத்தல் விடுக்கும் கட்டம் வரை நகர்வதாகக் கூறப்படுகின்றது. இந்தப் பேரங்களில் முகவர்களாகத் தமிழ்த் தேசியம் பேசிய ஊடகக்காரர்களும் இருப்பதுதான் வேதனையானது.  

இவ்வாறான அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில்தான், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஆதரவளிப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருக்கின்றது.   

இந்த அறிவிப்பு தொடர்பில், தமிழ்த் தேசிய அரசியல் களத்தில், கூட்டமைப்புக்கு மாற்றான தரப்புகளாகத் தங்களை முன்னிறுத்தும் தரப்புகள், பெரும் விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றன. எந்தவிதமான வாக்குறுதிகளையும் வாங்கிக்கொள்ளாது, ரணிலைக் காப்பாற்றும் முயற்சியாகவே கூட்டமைப்பின் ஆதரவைக்  கொள்ள முடியும் என்றும் குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.  

அடிப்படையில், அரசமைப்புக்கு முரணான நடவடிக்கையொன்றை, நியாயத்தின் பக்கம் நின்று எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு, கூட்டமைப்புக்கு உண்டு. அநீதியின் கட்டமொன்று அரங்கேற்றப்பட்டு, அதற்கு அங்கிகாரம் கோரும் சித்து விளையாட்டே, தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.   

அப்படியான கட்டத்தில், அநீதிக்கு அங்கிகாரம் பெற்றுக் கொடுக்கும் வேலையை, எந்தவொரு காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது. தமக்கான நீதியையும் நியாயத்தையும் தொடர்ச்சியாகக் கோரும் தரப்பாக, நீதியின் பக்கத்தில் நின்றாக வேண்டிய தார்மீகம், கூட்டமைப்புக்கு உண்டு.   

இந்தத் தருணத்தில் எழுத்துமூல வாக்குறுதிகளை வாங்க வேண்டும் என்று வலியுறுத்துவது அபத்தமானது. தற்போது, நிகழ்ந்திருப்பது தேர்தலொன்றுக்குப் பின்னரான ஆட்சி மாற்றமல்ல; ஆட்சியதிகாரத்தைக் குறுக்கு வழியில் கைப்பற்றும் சதிமுயற்சியேயாகும்.   

மக்கள் ஆணையைப்பெற்ற கட்சியாகவும் நாடாளுமன்ற ஜனநாயகங்களைக் காக்க வேண்டிய எதிர்க்கட்சியாகவும் கூட்டமைப்பு தற்போது எடுத்துள்ள முடிவு சரியானது.   

அதுவும், இரு தரப்புக்குள் இடையில், சமரச முயற்சிகளை ஏற்படுத்தி, பிரச்சினைகளைச் சரிசெய்வதற்கான கால அவகாசத்தை வழங்கிய பின்னரே, தமது தீர்மானத்துக்கு வந்திருக்கிறார்கள்.   

‘குதிரை’ பேரத்தின் வழி, ராஜபக்‌ஷக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்னும் இன்னும் வாங்கிக் கொள்ளலாம். நாடாளுமன்றம் 14ஆம் திகதி கூடும் போது, பெரும்பான்மையை நிரூபிக்கவும் செய்யலாம். 

ஆனால், அநீதியான நடைமுறையொன்றுக்கு எதிராக, ஜனநாயகக் கடமையைக் கூட்டமைப்பு வெளிப்படுத்தியிருக்கின்றது என்கிற விடயம் பதிவு செய்யப்படும். அது, பிழையான நடவடிக்கைகளுக்குக் கூட்டமைப்பு இணங்கவில்லை என்கிற வரலாற்றை, தென்னிலங்கையின் முகத்திலும் அறைந்து சொல்லும்.  

இன்னும் சிலர், மஹிந்த ராஜபக்‌ஷ அதிகாரத்துக்கு வருவதையே விரும்புகின்றனர். அவர்கள் முன்வைக்கும் வாதம், ராஜபக்‌ஷக்களே ‘வெட்டொன்று துண்டு இரண்டு’ என்று, உறுதியான தீர்மானங்களை எடுக்கக் கூடியவர்கள். அவர்களின் தீர்மானங்களை, தென்னிலங்கையின் கடும்போக்காளர்களும் கூட, எதிர்க்கமாட்டார்கள். அப்படியான கட்டத்தில், ராஜபக்‌ஷக்கள் அதிகாரத்தில் அமர்ந்தால், தீர்வைப்பெற்றுக்கொள்வது இலகுவானது என்கின்றனர்.   

2005இல் ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்‌ஷ, 2009 பேர் வெற்றிக்குப் பின்னர், தனிக்காட்டு ராஜாவாக நின்றார். அவர், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கும் வரையிலான காலம் என்பது, பெரியது.   
அப்போது, அவர், தமிழ் மக்களை எவ்வாறு நடத்தினார் என்பதுவும், அவரது சகோதரர்கள் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை குறித்து, எவ்வாறான அணுகுமுறையை வெளிப்படுத்தினார்கள் என்பதுவும் எல்லோருக்கும் தெரியும். அப்படியான கட்டத்தில், ராஜபக்‌ஷக்களிடம் இருந்து, தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கையை, எவ்வாறு வைத்துக்கொள்வது என்று தெரியவில்லை. 

இன்னொரு பக்கம், ராஜபக்ஷக்கள் அதிகாரத்துக்கு வரும் பட்சத்தில் சர்வதேச அழுத்தம் இலங்கை மீது அதிகரிக்கும் என்கிற விடயம் முன்வைக்கப்படுகின்றது.  அது, உண்மையே. 

நாடாளுமன்றத்தில் யார் வென்றாலும் தோற்றாலும், இனி வரப்போகும் அரசாங்கம் எந்தவொரு தீர்க்கமான முடிவுகளையும் எடுக்கும் வல்லமையற்றதாகவே இருக்கும். அது சில மாதங்களுக்கே தொடரும் வாய்ப்புகளும் உண்டு.  

 நாடு மீண்டும் தொடர் தேர்தல்களின் காலத்துக்குள் பிரவேசிக்கின்றது. அப்படியான கட்டத்தில், மைத்திரி, மஹிந்த,  ரணில் எவரோடு வேண்டுமானாலும் பேரம் பேசல்களுக்கோ, எழுத்துமூல ஒப்பந்தமொன்றுக்கோ செல்வது தேவையற்ற ஒன்று. அதைக் கூட்டமைப்பு செய்யவில்லை என்பது, எதிர்கால வெற்றிக்குமான முதலீடாகவே கொள்ள வேண்டும்.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மைத்திரியின்-குத்துக்கரணமும்-கூட்டமைப்பின்-முடிவும்/91-224788

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.