Jump to content

சட்டநாதன் சிறுகதைகள்-ஈழத்து இலக்கிய ஆளுமைகள்-கட்டுரை-ஜிஃப்ரி ஹாஸன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சட்டநாதன் சிறுகதைகள்-ஈழத்து இலக்கிய ஆளுமைகள்-கட்டுரை-ஜிஃப்ரி ஹாஸன்

%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%

சட்டநாதன் சிறுகதைகள்: பணிய மறுப்பவர்களின் குரல்கள் 

ஈழத்தில் எழுபதுகளில் உருவான எழுத்தாளர் சட்டநாதன். ஈழ இலக்கியத்தில் முற்போக்கு இலக்கியத்தின் தீவிர அலை ஓரளவு தணிந்து தேசிய இனப்பிரச்சினை சார்ந்த பதட்டங்கள் இலக்கியத்தினுள் ஊடுருவத் தொடங்கிய காலகட்டத்தின் பிரதிநிதி அவர். முற்போக்கு இலக்கியத்தில் முன்னிறுத்தப்பட்ட மார்க்ஸிய சித்தாந்தக் கருத்துகள் அவரது கதைகளில் ஆங்காங்கே போகிற போக்கில் உதிர்க்கப்பட்டிருப்பதைக் காண முடியும். உதாரணமாக உறவுகள் கதையில் ”சதா முக்கோணக் காதல்கதைகளையே எழுதி வந்த அவள் இப்போதெல்லாம் மனிதன் பால் அதீத நேயம் பூண்டு வர்க்கநலன் பேணும் எழுத்தை வடிப்பதென்றால்..” 

என்ற வரிகளிலும், தரிசனம் கதையில் வேறுவழியின்றி பூர்ஷ்வா அரசாங்கம் என அரசாங்கத்தை திட்டுவது போன்றவை மூலமே முற்போக்கு குரல் இக்கதைகளுக்குள் ஒலிக்க விடப்படுகிறது. அந்த சித்தாந்தத்தின் மீதான ஆழ்ந்த பற்றுடன் கூடிய குரலை அவரது படைப்புகளுக்குள் கேட்கமுடிவதில்லை. அது அவரது கதைகளினுள் மைய அம்சமாகவோ, அல்லது குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அம்சமாகவோ திரட்சியுறாமல் பட்டும்படாமலும் காட்சி தந்துகொண்டிருக்கிறது.

அவர் வாசிக்கத் தொடங்கிய காலம் முற்போக்கு இலக்கியப் படைப்புகளும், விமர்சனங்களும் கொடிகட்டிப் பறந்த காலம். அதனால் அந்தப் பாதிப்பு இலக்கியத்தின் வழி அவருக்குள் ஊடுறுவியிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதுவே அவரது முழுமையான சித்தாந்தமாக மையம்கொள்வதில்லை.

அவரது காலம் தேசிய இனப்பிரச்சினை எழுச்சியடைந்த காலம். இலக்கியம் அதன் பிரதிநிதியாக மாறிய காலம். இதனால் சட்டநாதன் அதன் பிரதிநிதியாக மாறினார். ஆனால் முழுமையாக அவர் அந்தத் தளத்திலேயே இயங்கிக்கொண்டு போகவுமில்லை. மானுட உறவுகள், ஆண்-பெண் உறவுகளில் காணப்படும் அசமநிலை மற்றும் அதற்கெதிரான குரல், போரினுள் அகப்பட்டு மடியும் மானுடத் துயர் என பல நிலைகளில் வெளிப்படும் கதைகளை அவர் எழுதினார்.

ஒரு விதத்தில் சட்டநாதனின் கதைகள் மொத்தமும் மனித உறவுகளைக் கூர்ந்து நோக்க முனைபவைதான்.  அதிலும் குறிப்பாக, ஆண்-பெண் உறவு குறித்த விசாரணகளை நோக்கி நகர்பவை. இவரது தரிசனம் எனும் கதையில் வரும் பெண் அவரது காலகட்டத்தில் ஒரு புரட்சிகரமான குரல்தான். ஆனால் மிகை யதார்த்தம் கதையின் இயல்பான நகர்வுக்கு சற்று இடையூறாகத் தெரிகிறது. ஒரு பெண்ணின் வாழ்வும் அனுபவமும் ஆண்களின் (கணவனின்) உலகத்தோடு ஒப்பீடு செய்யப்பட்டு மட்டுமே தீர்மானிக்கும் மனநிலை உடையவராகத் தான் சட்டநாதன் இருக்கிறார். ஆண்களின் (கணவனின்) உலகத்தோடு இயைந்து செல்ல முடியாத பெண்களின் வாழ்க்கையை அவர் தன் கதைகளில் கூர்ந்து நோக்குமளவுக்கு ஆண்களுக்கு வெளியே உள்ள பெண்களின் பிரச்சினைகள், வாழ்வியல் அனுபவங்கள் மீது அவர் கவனம் எடுப்பதாக எனது வாசிப்பு எல்லைக்குள் தெரியவில்லை.

சட்டநாதனின் அநேக கதைகளின் முற்பகுதி மனித உறவுகள், ஊடாட்டங்கள் பற்றியதாகத் தொடங்கி பின் யுத்தத்தில் முடிவுறுகின்றன. அதற்கு தளம்பல், நகர்வுபோன்ற கதைகள் நல்ல எடுத்துக்காட்டுகள். தளம்பல் கதையில் ஈழப்போரில் மலையகப் பரிமாணம் குறித்த சித்தரிப்புகள் வருகின்றன. சட்டநாதன் இக்கதையில் 83 July கலவரங்கள் எப்படி மலையகத் தமிழர்களையும் பாதித்தது என்பதை பதிவுசெய்கிறார். இக்கதையில் சிங்கள இனவாதிகளால் சதாசிவம் கொல்லப்பட்ட போது அவன் மனைவியான தமிழ்ப் பெண்ணான தவத்திற்கு பியசிறீ எனும் சிங்கள இளைஞனிடமிருந்து கிடைத்த ஆதரவு குறித்து கதைக்குள் விபரிக்கிறார். பியசிறி போன்றவர்கள் மூலம் சிங்கள மக்களின் மனச்சாட்சியைப் பதிவு செய்கிறார் சட்டநாதன்.

இக்கதையில் வரும் “அவன்“ எனும் மையப்பாத்திரம் அவளிடம் (தவம்) “பியசிறி உன்னைக் கெடுக்கவில்லையா? சிங்களவர்கள் பெண்களைக் கெடுப்பார்கள்” என்று சொல்லும் போது அவள் அடையும் தீவிரம் இந்தக் கதைக்கு முக்கியமான ஒன்று. இலங்கையின் சமூகங்களுக்கிடையிலான பரஸ்பரப் புரிந்துணர்வின்மையின் குறிகாட்டி இந்தக் கதை.

தளம்பல் எனும் இக்கதையில் தன் கணவன் சதாசிவம் இனக்கலவரத்தில் பலியாகிவிட்ட பின் கோயிலில் குழந்தையுடன் நிர்க்கதியுற்று, அங்கலாய்ப்பில் இருந்த “அவள்“, அவளைப் போல் வீட்டைவிட்டு வெளியேறி வந்து கோயிலில் தஞ்சம் புகுந்திருந்த இளைஞனான “அவன்“ உடன் கிளிநொச்சி போக முடிவு செய்கிறாள். “ஒரு ஆணின் நிழல் எப்போதும் பாதுகாப்பான ஒன்றுதான்” என அவள் நினைக்கிறாள். ஆண்களோடு முரண்படும் பெண்களே அதிகம் உள்ள சட்டநாதனின் படைப்புலகில் ஆணின் துணையை பாதுகாப்பாக கருதும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சட்டநாதனின் பெண்கள் தன்னொழுக்கம் மற்றும் கற்பை பெரிதும் பூஜிப்பவர்கள். இங்கு தவம் அவனுடன் தற்செயலாக சபலத்தால் உறவுகொண்டு வருந்துவதும் அவனை மனமுவந்து கணவனாக ஏற்றுக்கொள்வதும் தமிழர் பண்பாட்டின் வேர்கள் அவளில் ஊடுறுவியுள்ளதைக் காட்டுகிறார். சட்டநாதனின் அநேக பெண்கள் இப்படித் தமிழர் பண்பாட்டுக்கு மிகவும் விசுவாசமானவர்களாக இருக்கின்றனர்.

உறவுகள் கதையில் வரும் மையக் கதாபாத்திரமான பெண்ணும் இந்த வகையைச் சேர்ந்தவள்தான்.  ஒரு சிறு நம்பிக்கைக் கீற்றில் கூட முழுவாழ்வையும் வெளிச்சப்படுத்திக்கொள்ளவும், அர்த்தப்படுத்திக்கொள்ளவும் முனையும் ஒரு பெண்ணாக அவளை சட்டநாதன் சித்தரிக்கிறார்.

பெண்ணின் சோரம்போன வாழ்வும் வாழ்வை அவள் எதிர்கொள்ளும் விதமும் தளம்பல், உறவுகள், தரிசனம் கதைகளில் வெவ்வேறு தளங்களில் பதிவாகியுள்ளன.

சட்டநாதனின் தரிசனம் கதை எந்தப் புள்ளியிலாவது இணைய மறுக்கும் வெவ்வேறு மனப்போக்குகள் கொண்ட, விருப்புவெறுப்புகள் கொண்ட கணவன்-மனைவியின் அகவுலகச் சிடுக்குகளை மிக மேலோட்டமாகப் பேசும் கதை. மனைவியின் இரசனைகளைப் புரிந்துகொள்ள முடியாத கணவனுக்கு அவளது இரசனைகள் அசாதரணமானவையாகத் தோன்றுகின்றன. அவள் புத்தகங்களை நேசிப்பவளாக, அதிகம் வாசிப்புள்ளவளாக, நல்ல சினிமா பற்றிய தெளிவுள்ளவளாக சித்தரிக்கப்படுகிறாள். அப்போதைய சமூக சூழலில் ஒரு மத்தியதர குடும்பப் பின்னணிகொண்ட அவளுக்கு அப்படியான ஒரு ஆளுமை மிகையான சித்தரிப்பாகக்கூடத் தோன்றலாம். ஆனால் கணவன் பற்றிய சித்தரிப்புகள் அப்போதைய சமூக, பண்பாட்டுச் சூழலுக்கும் ஆண்களின் மனோநிலைக்கும் மிகவும் நெருக்கமான சித்தரிப்பாகவே தோன்றுகிறது. ஆயினும் இந்த தளம் ஒரு கதைக்கான கற்பனையான சூழலையும், மனிதர்களையும் உருவாக்கிக் கொள்வது போன்றே தென்படுகிறது. அது ஒரு யதார்த்தமான சூழலுக்குப் பொருந்தி வருவதாக இல்லை.

“பெரிய இவ… அவவின்ர ரசனையும்…மண்ணாங்கட்டியும்..” என மனைவியின் திரைப்படம் ஒன்று குறித்த இரசனைக் குறிப்பை வன்முறையாக எதிர்கொள்கிறான் கணவன். இது அவளுக்கு ஏற்படுத்தும் மனக்காயம் அவர்களின் வாழ்க்கையின் முடிவுக்கு அவர்களைக் கொண்டு வந்து சேர்க்க கூடியது. அது பணிய மறுக்கும் ஈகோ.

ஒரு தர்க்கரீதியற்ற கதை ஒழுங்கு இங்குள்ளது. கணவனால் புரிந்து கொள்ளப்படாத அவளை கணவனின் நண்பனான நகுலேஸ் அவளைப் புரிந்துகொண்டவளாக நடித்து அவளுடன் வாழ்ந்து பின் ஏமாற்றிச் செல்வது அனைத்தும் படைப்பாளியின் குரலிலேயே ஒலிக்கிறது. அது கதைக்குள் விரியும் ஒரு உபகதை. ஆக, இந்தக் கதைக்குள் ஒரு பெண் இருவேறுபட்ட ஆண்களோடு வாழந்தவள். ஒருவன் தன் கனவுகளுக்கும், இரசனைகளுக்கும் முற்றிலும் முரணானவன். மற்றையவன் அவளது கனவுகளுக்கும், இரசனைகளுக்கும் மிகவும் நெருக்கமானவன். எனினும் அது அவளை அடைவதற்காக அவன் போட்ட வேஷம் என்பதை அவள் அவனுடன் சேர்ந்து வாழும் போது கண்டுகொள்கிறாள். அவனைவிட்டும் பின் பிரிந்து சென்று ஆண்களின் உலகமே இப்படித்தான் என முடிவெடுத்து தன் பிள்ளையுடன் தனியாக வாழ முடிவுசெய்கிறாள். அவளுக்கு கிடைத்திருக்கும் ஆசிரிய உத்தியோகம் அவளுக்கான பொருளாதாராப் பாதுகாப்பை அளிக்கிறது.

ஆக, இக்கதை மூலம் சட்டநாதன் எதை சொல்ல வருகிறார்? சமூகத்தில் பெண்களின் பிரச்சினைகள் ஆண்களால் மட்டுமே உருவாக்கப்படுகிறதா? பெண்கள் தொழில் புரிவதன் மூலமே அவர்களது வாழ்வு சுதந்திரமானதாக இருக்குமா? இது ஒருவகையில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆண்களின் வருமான உழைப்பு சார்ந்து தங்கி வாழ்வதன் நிலைமைகள் காரணமாகத் தோற்றம் பெறுபவை எனும் புரிதலை நோக்கி வாசகனைக் கொண்டு செல்கிறது.

000000000000000000000000000000000

நகரமயமாதல், உலகமயமாக்கத்தின் விளைவாக மனித உறவுகளில் ஏற்பட்ட நேரடி மாற்றங்கள் அதன் விளைவாக தனிமனிதர்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், தடுமாற்றங்கள் போன்றன இக்காலப் பகுதியின் எழுத்தாளர்களைப் பாதித்த நிகழ்வுகளாக வடிவங்கொண்டன. இக்காலப் பகுதியில் எழுதிய ஈழத்து எழுத்தாளர்களின் பலரது கதைகளில் ஒத்த இயல்புடைய மனிதர்களைக் காணலாம். எடுத்துக்காட்டாக குப்பிளான் ஐ. சண்முகத்தின் “எல்லைகள்”அ.யேசுராசாவின் “ஒரு இதயம் வறுமைகொண்டிருக்கிறது”, வை. அஹ்மத்தின் “உப்புக்கரித்தது” எம்.எல்.எம். மன்சூரின் “முரண்பாடுகள்” போன்ற கதைகள் பொதுவான மனிதர்களாலும் உணர்வுகளாலும் ஆன கதைகள்.

வறுமையில் உழலும் ஏழைகள், தொழிலாளர்கள் தான் சட்டநாதனின் படைப்புலக மக்கள். பல்வேறு வழிகளிலும் சுரண்டப்பட்டு, கைவிடப்பட்ட தொழிலாளர்களை நினைவூட்டும் படைப்பாளியாக அவர் தன்னை முன்னிறுத்த முனைந்தார். அதனால்தான் அவரது எல்லாக் கதைகளிலும் கதாபாத்திரங்களை வறியவர்களாக ஏதோ ஒருவிதத்தில் சுரண்டப்பட்டவர்களாக இன்னொருவரின் பொருளாதாரத்தில் தங்கி வாழ்பவராக காட்டுகிறார். ஒருவகையில் அதனை ஈழத்து முற்போக்கு இலக்கியம் அவர் மீது ஏற்படுத்திய தாக்கத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்.

இவரது உலா கதை நகரமயமாக்கலுக்கும் கிராமிய வாழ்க்கைக்குமிடையிலான முரண்களைப் பேசுகிறது. சிறிக்கும் மதுவுக்குமிடையிலான உரையாடலில் இந்த இருவகை உறவும் முரணும் வருகிறது. “நான் வேட்டிதான் கட்டுவன்“ என சிறி சொல்ல,

“முளைச்சு மூணு இழைவிடல்ல வேட்டியே வேணும்..கழிசன்தான் போட வேணும்“என தயா சொல்கிறான். ஆடை கலாசார மாற்றத்திற்குள்ளாகும் விதம் சித்தரிக்கப்படும் புள்ளி இதுதான். திருவிழாவில் மது “எனக்கு துவக்கு வேணும்“என்கிறான். இது புதிய தலைமுறையினரின் மனநிலையில் உலகமயமாக்கம் ஏற்படுத்திய ஆழ்ந்த தாக்கத்திலிருந்து எழுந்து வரும் குரலாகவே தெரிகிறது. சமூகம் மாறத் தொடங்கும் ஒரு காலகட்டத்தின் பதிவாக இதனை பார்க்கலாம்.

உலகமயமாக்கலின் தாக்கங்களால் இங்கு மனித வாழ்வு இழந்து நிற்கும் தருணங்களை தனிமனிதர்களின் அனுபவத் தொகுப்புகளுக்கூடாக பேசும் கதை நகர்வு. முதலாளித்துவம் கிராம மக்களின் இயற்கையோடு இணைந்த வாழ்வை எப்படிச் சிதைத்திருக்கிறது என்பதை நகர்வு கிளர்த்திவிடுகிறது. “நகர்வு”கதையில் வரும் மனிதர்கள் இயற்கையோடு விவசாயத்தோடு கலந்து வாழ்பவர்கள். நகர்வு கதையில் “தாய்வாய்க்கால் பக்கம் முளை கொள்ளும் புற்தளிரைக் கிள்ளுவது, தலை காட்டும் புகையிலைக் கணுவை உடைப்பது, அடி எருப்பரப்புவது, இலை ஒடித்து தறைசாறுவது“ என ஐயாவின் வாழ்க்கை விவசாயத்துடன் இணைந்திருந்ததைச் சொல்கிறார்.

அம்மாவைப் பற்றிச் சொல்லும் போது “கத்தரிச் செடிகளில் ஆமை வண்டு பார்த்து இலை ஒடிப்பாள், சந்துப் புழுப்பார்த்து கொழுந்தெடுப்பாள், தக்காளி, மிளகாய் நட்டிருந்தால் பூச்சிகொல்லிவிசிறுவாள்“ என விபரிக்கிறார் இன்றைய தலைமுறையினர் இழந்துவிட்ட அருமையான வாழ்வியல் தருணங்கள் அவை.

இவரது “உலா“, “வித்தியாசமானவர்கள்“ போன்ற கதைகள் சட்டநாதனை ஒரு சிறுகதை எழுத்தாளனாக நம்மை ஏற்றுக்கொள்ள வைக்கும் படைப்புகளாக உள்ளன. கதைமொழியும், சம்பவமும் ஒரு சிறுகதைக்கான முழுமையைக் கொண்டிருக்கின்றன. 70-80 கள் வரையான ஒரு பத்தாண்டுகால ஈழச்சிறுகதைகளில் சிறந்த சிறுகதைகள் என்றொரு பட்டியலைப் போட்டால் சட்டநாதனின் “உலா“ கதையை அந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.

சில கதைகள் போர் அரசியல் பற்றி மிக மேலோட்டமாகப் பேசிச் செல்பவை. “அவர்களது துயரம்”  கதை போர் பற்றிப் பேசும் இந்தவகைக் கதைகளுள் ஒன்றுதான்.

சிலகதைகள் ஒரு மைய சம்பவத்தைச் சுற்றி சுழலாமல் அல்லது ஒரு மையக்கதையை மையக் கதாபாத்திரத்தைக் கொண்டு நகராமல் கதையில் வரும் கதாபாத்திரங்களின் தனிப்பட்ட வாழ்வை விபரிப்பதன் மூலம் அந்த விபரணைகளின் சேர்க்கையை “கதை“யாக மாற்றுகிறார். ஈழத்தமிழ் இலக்கியத்தில் அப்போது இப்படியான கதைகூறல் முறை பற்றிய வாதங்கள் எழுந்திருக்கவில்லை. எனவே இது ஒரு தற்செயலான போக்குத்தான். அவர் திட்டமிட்டு உருவாக்கிக் கொண்ட ஒரு போக்கல்ல. அவர் வாசகனுக்கு ஒரு பொதுவான கதையைச் சொல்லாமல் கதாபாத்திரங்களின் கதையைச் செல்வதன் மூலம் ஒரு படைப்பை வாசகனுக்கு அளிக்க முயன்றார். நகர்வு கதையில் மையக்கதாபாத்திரம், அவனது அப்பா, அம்மா, ஐயா, வத்சலா போன்றவர்களின் தனி வாழ்வின் தொகுப்பே இக்கதையாக திரட்சிபெற்றுள்ளது.

இவரது எல்லாக் கதைக்குள்ளும் ஒரு அரசியல் இருக்கிறது. தோமஸ் மன் சொன்னதைப் போல் “நவீன மனிதனின் தலைவிதி அரசியல் மொழியினாலேயே எழுதப்படுகிறது“ பெண்ணிய அரசியல், உலகமயமாக்கல் எனும் அரசியல், போர் அரசியல் என மனித வாழ்வின் அக புற பகக்கங்கள் அனைத்திலும் ஊடுருவிப் படர்ந்துள்ள அரசியல் அவர் கதைகளை நிறைத்துள்ளன. அத்தகையதொரு சமூகத்திற்குள்ளிருந்து எழுதப் புறப்பட்ட எந்தப் படைப்பாளிக்கும் அது தவிர்க்க முடியாதது.

ஜிஃப்ரி ஹாஸன்-இலங்கை

 

http://www.naduweb.net/?p=7470

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.