Jump to content

ஆதிதிராவிடர் (விடுதி) சிறைச்சாலை!


Recommended Posts

ஆதிதிராவிடர் (விடுதி) சிறைச்சாலை!

யாழன் ஆதி

தலித் மக்களின் விடுதலை என்பது அவர்களின் சமூக, அரசியல் சூழலில் மட்டுமல்ல; அது அவர்களின் பொருளாதார வளர்ச்சியிலும் அடங்கியிருக்கிறது. தலித்துகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி கல்வி மட்டும்தான். ஆனால், சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் போலவே, இங்கு நிலவும் கல்வி முறையிலான ஏற்றத் தாழ்வுகளில் அவர்களுக்கு கிடைத்திருப்பது தரமற்ற கல்விதான். சத்தான உணவினைப் போல, உயர்தர கல்வியும் அவர்களுக்கு எட்டுவதில்லை. இந்தப் பின்னணியோடுதான், தலித் மாணவர்கள் தங்கிப் பயில்கின்ற ‘ஆதிதிராவிடர் நல மாணவ/மாணவியர் விடுதிகள்' எதிர்கொள்ளப்பட வேண்டும். இந்த விடுதிகள்தான் எதிர்கால தலித்துகளின் வாழ்நிலையைத் தீர்மானிக்கின்ற இடங்களாக இருக்கின்றன. இவற்றை ஒழுங்காகவும், அதற்குரிய வசதிகளோடும் பராமரிக்க வேண்டும் என்ற அக்கறை - ஆளுகின்றவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதிகமாக இருக்க வேண்டும்.

அதைவிட, தலித் இயக்கங்களுக்கும், அதன் செயல் வீரர்களுக்கும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாளைய தலித் சமூகம் தலை நிமிரும்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள், அவ்விடுதியின் காப்பாளரால், அவருடைய மாடுகளை மேய்க்க வைக்கப் பயன்படுத்தப்படுகின்றனர் என்றும், பிற வீட்டுவேலைகள் செய்ய வைக்கப்படுகின்றனர் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டிருந்தது. இதையறிந்த ‘சமூக செயல்பாட்டு இயக்க'த்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசூர் ராஜ், மாணவர்களிடம் விசாரித்தார். வாலாஜாபாத் விடுதி மட்டுமின்றி, மாவட்டத்திலுள்ள பிற விடுதிகளின் நிலை என்ன என்பதை அறிய வேண்டும் என்பதற்காக உண்மை அறியும் குழு ஒன்றை உருவாக்கி, விடுதிகள் ஆய்வு செய்யப்பட்டன. பத்து விடுதிகளில் ஆய்வு செய்த உண்மை அறியும் குழுவினர், தங்கள் கண்டுபிடிப்புகளையும் அரசுக்கான பரிந்துரைகளையும் அளித்துள்ளனர்.

பெரும்பாலான விடுதிகளில் மாணவர்கள் படிப்பதற்கான எந்த சூழலும் இல்லை. உயரமான சுவர்களில் தொங்கும் மங்கிய வெளிச்சம் தரும் குண்டு விளக்குகள்தான் எரிகின்றன. ஆறு மணிக்கு மேல் விடுதியில் சமையல் செய்பவரோ, விடுதிக் காப்பாளரோ, மாணவர்களுடன் விடுதியில் தங்குவதில்லை. வார விடுமுறை நாட்களில் மாணவர்கள் வலுக்கட்டாயமாக வீடுகளுக்கு விரட்டப்படுகின்றனர். திங்கட்கிழமை நேராகப் பள்ளிக்கு வந்துவிடுவதால், அன்றைய காலை உணவு அவர்களுக்கு விடுதியில் தரப்படுவதில்லை. காலை வேளைகளில் அவர்களைப் படிக்க வைப்பதற்கு யாருமே விடுதிகளில் இல்லை. அது மட்டுமல்ல, ஒவ்வொரு விடுதியிலும் அய்ம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்யப்படுகின்றனர். ஆனால், விடுதியில் தங்குவது அதிகபட்சம் இருபது மாணவர்கள்தான்.

மாணவர்களின் கழிப்பிடங்கள் தூய்மை யாகப் பராமரிக்கப்படுவதில்லை. நல்ல சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுவதில்லை. சமையல் திறந்தவெளியில்தான் செய்யப்படுகிறது. சுகாதாரமின்மையே அதிகமாக நிலவுகிறது. விடுதி என்பது தண்டனையாகத்தான் இருக்கிறது. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால், அவர்கள் சொல்லும் பதில் விடுதிகளைவிட மோசமானது. "தமிழ் நாடு முழுக்க இதுதான் நிலை; என்ன செய்யச் சொல்றீங்க'' என்று நம்மையே திருப்பிக் கேட்கிறார்கள். படிக்கப்போன இடத்தில் பாழாய்ப் போகிறார்கள் தலித் சிறுவர்கள். போட்டிகள் நிறைந்த உலகத்தில் முறையான உலக அறிவும், புத்தக அறிவும் இல்லை எனில், மீண்டும் அவர்கள் மூதாதையரின் தொழில்களைச் செய்யவே நேரிடும். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து, ஆதிதிராவிடர் மாணவ/மாணவியர் விடுதிகளை சீர் செய்ய முன்வர வேண்டும்.

விடுதிகளின் அவலநிலை குறித்து, உண்மை அறியும் குழுவினர், தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசியை சந்தித்தனர். அறிக்கையை சமர்ப்பித்து, தங்கள் பரிந்துரைகளையும் எடுத்துக் கூறினர். ஒரு விடுதிக்கு ஒரு காப்பாளர் என்று வேலையில்லா பட்டதாரி இளைஞர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு காப்பாளருக்கான பயிற்சி தரப்பட வேண்டும். காப்பாளர் விடுதியிலேயே தங்கி, மாணவர்கள் படிப்பு நேரத்தில், அவர்களுடன் இருக்க வேண்டும். நூலகமும், கணிப்பொறியும் விடுதிகளில் வேண்டும். மாணவர்களுக்குத் தரப்படும் உணவிற்கான தொகை ரூ. 10லிருந்து உயர்த்தப்பட வேண்டும். விடுதியின் நடவடிக்கைகளை கவனிக்க - அந்தப் பகுதிகளிலுள்ள தொண்டு நிறுவனங்களையும், சமூக ஆர்வலர்களையும், கண்காணிக்கும் குழுவாக அங்கீகரிக்க வேண்டும்.

http://www.keetru.com/dalithmurasu/mar07/yalan_1.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.