Jump to content

அட்லாண்டிக்கை அச்சுறுத்திய கடல் தரை அழிவு... இதோ இந்தியாவில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களால் வெளியேற்றப்பட்ட கார்பன்கள் கடல் தரையில் பெருமாற்றத்தை நிகழ்த்தியுள்ளன. அந்த மாற்றங்கள் மகிழ்ச்சியளிப்பதாக இல்லை.

அட்லாண்டிக்கை அச்சுறுத்திய கடல் தரை அழிவு... இதோ இந்தியாவில்...

ல்லாயிரம் கோடி ஆண்டுகளில் பல வகை உயிரினங்கள் உலகில் வாழ்ந்து அழிந்துள்ளன. அவையனைத்தும் ஏதேனும் ஒருவகை காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு அதன் விளைவாக ஏற்பட்ட பேரிடர்களால்தான் அழிந்தன. அந்தக் காலநிலை மாற்றங்கள் இயற்கையாக நிகழ்ந்தவை. இன்றும் அப்படியொரு காலநிலை மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது. அது இயற்கையாக நிகழவில்லை. மனிதத் தூண்டுதல்களால் இயற்கை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் காலநிலை மாற்றத்தை நிகழ்த்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அது இயற்கையின் ஆதிக் குழந்தையான கடலையும் பாதித்துக்கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் கடல் தரை கரைதல்.

1960-களில் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகளால் இறந்த கடற்பறவைகளின் எண்ணிக்கை அவற்றின் மொத்த எண்ணிக்கையில் ஐந்து சதவிகிதம். தற்போது அதைவிட 12 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 40 வருடங்களில் உலகின் 60 சதவிகிதம் உயிரினங்கள் அழிந்துவிட்டன. அதற்குக் காரணம் மனித இனத்தின் அளவுக்கு அதிகமான ஆற்றல், நில, நீர் நுகர்வுகள். நீண்ட காலமாக இயற்கையை நாம் மிகச் சாதாரணமாக நினைத்துவிட்டோம். இனி அப்படியிருக்கக் கூடாது. வளிமண்டலத்தில் கலக்கும் கார்பனின் அளவு கடந்த ஏப்ரல் மாதம் 8,00,000 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாகிவிட்டது. அந்த அளவுக்கு நாம் கரிம வாயுவை வெளியேற்றிக் கொண்டிருக்கிறோம். 2050-ம் ஆண்டுக்குப் பிறகு இதுவே பத்து மடங்கு அதிகமாகலாமென்று சில ஆய்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. அதன் விளைவுகளைப் பல வழிகளில் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அதில் மற்றுமொரு விளைவுதான் கடலின் தரைப்பகுதி கரைந்துகொண்டிருப்பது.

காலநிலை மாற்றம் கடல் வரை மட்டுமல்ல அதன் தரை வரையும் பாய்ந்துவிட்டது. பூமியின் தட்பவெப்பநிலையை மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் பசுமை இல்ல வாயுக்களே அதற்கும் காரணம். ஆம், அவைதாம் கடல் தரையையும் கரைத்துக்கொண்டிருக்கிறது. புதிதாக நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவு கடந்த வாரம் வெளியானது. அதன் முடிவுகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. கடல் தரை கரைந்து கொண்டிருக்கிறது. அதுவும் சில பகுதிகளில் மிக வேகமாக...

 

கடல் தரை

``கடல், மனித இனம் வாழ்வதற்குத் தகுந்த சூழலை உருவாக்கிக் கொடுத்து நம்மை வாழ்வித்துக் கொண்டிருக்கும் ஓர் அளப்பறிய சக்தி. இன்று அந்த சக்தி தேய்ந்து சீரழிந்துகொண்டிருக்கிறது. நாம் அதை மேலும் அழித்துக்கொண்டிருக்கிறோம். அதுவே நாம் அதற்குச் செய்யும் நன்றிக்கடன்."

 

கடலை நாம் கார்பன் தொட்டியென்று அழைக்கலாம். அந்த அளவுக்கு நாம் வெளியிடும் கார்பன்களைச் சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறது. வளிமண்டலத்தில் நாம் வெளியேற்றும் கார்பன்களில் பாதியைக் கடல்தான் கிரகித்துக்கொள்கிறது. கார்பன் தண்ணீரில் அமிலத் தன்மையை அடைகின்றது. பிறகு, கடலுக்குள் இறந்துபோன சிப்பி உயிரினங்களிலிருந்து கால்சியம் கார்பனேட்டோடு வினைபுரிகிறது. அதன்மூலம் கார்பன் மட்டுப்பட்டு பைகார்பனேட்டாகக் கடல் தரைக்குள் புதைந்துவிடுகிறது.

பல மில்லியன் வருடங்களாகத் தனக்குள் கார்பனைச் சேமித்து வைக்கக் கடல் இந்த முறையைத்தான் பின்பற்றுகின்றது. மனிதர்கள் புதைபடிம எரிபொருள்களை எரிக்கத் தொடங்கும்வரை. நாம் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கியபின் முன்பைவிட அதிகமாக இன்னும் அதிகமாக கார்பன்கள் வெளியேறி வளிமண்டலத்திலும் கடலிலும் கலக்கத் தொடங்கியது. நாசா ஆய்வின்படி தற்போது வெளியாகும் கார்பன்களில் சுமார் 48 சதவிகிதத்தைக் கடல் கிரகித்துக்கொண்டிருக்கிறது. அதன் திறனையும் மீறிய அளவு அதற்குள் செலுத்தப்படுகின்றது. 

 

 

கடல் அமிலமாகும் அளவு

Photo Courtesy: NOAA Fisheries

தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு நிறுவனம் நடத்திய ஓர் ஆய்வில் 18-ம் நூற்றாண்டு முதல் தற்போதுவரை கடலின் அமிலத்தன்மை உயர்ந்துள்ளனதன் வரைபடம்.

கார்பன் அளவு அதிகமாக ஆக கடல் அமிலத்தன்மை எய்திக்கொண்டே போகும். அப்போது கடல் தரையிலிருக்கும் கால்சியம் கார்பனேட்டுகள் விரைவாகக் கரைந்துகொண்டேயிருக்கும். கடல் தரையிலிருக்கும் கால்சியம் கார்பனேட் எவ்வளவு வேகமாகக் கரைந்து கொண்டிருக்கிறது என்பதைக் கண்டறிய அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் (Princeton University) சேர்ந்த ராபர்ட் கீ (Robert Key) என்பவர் ஓர் ஆய்வு மேற்கொண்டார். வளிமண்டலம் மற்றும் கடலியல் விஞ்ஞானியான அவர் கடல் நீரோட்டம், கடல் தரையில் கலந்திருக்கும் கால்சியம் கார்பனேட் அளவு மற்றும் கடல்நீரின் உப்பு அளவு, வெப்பநிலை போன்ற அலகுகளை வைத்துத் தன் ஆய்வை நடத்தினார். தொழிற்புரட்சிக்கு முன்பிருந்த கடலின் சூழலோடு இவர்தம் ஆய்வில் சேகரித்த தரவுகளை ஒப்பிட்டார். 

ஆய்வு முடிவில் பல இடங்கள் மிக ஆபத்தான நிலையிலிருப்பது தெரியவந்தது. மனிதர்களால் வெளியேற்றப்பட்ட கார்பன்கள் கடல் தரையில் பெருமாற்றத்தை நிகழ்த்தியுள்ளது. அந்த மாற்றங்கள் மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. அதிகமாகப் பாதிக்கப்பட்ட பகுதி வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப் பகுதி. நாம் உருவாக்கிய கார்பன்கள் அங்கு கடல் தரையில் கலந்திருந்த 40 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட கால்சியம் கார்பனேட்டைக் கரைத்துவிட்டது. இந்தப் பிரச்னை எங்கோ இருக்கும் அட்லாண்டிக் கடலில்தான் என்று எண்ண வேண்டாம். இந்தியாவின் இந்தியப் பெருங்கடலிலும் இதன் பாதிப்புகள் தற்போது தொடங்கியுள்ளது. இதேபோல தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் போன்ற பகுதிகளிலும் அதிகளவில் கரைந்துகொண்டுள்ளது. இந்தப் பகுதிகளிலுள்ள வேகமான நீரோட்டம், உறிஞ்சப்படும் கார்பன்கள் கால்சியம் கார்பனேட்டைச் சீக்கிரமாகவே கரைக்க உதவுகிறது. அளவுக்கு அதிகமான கரிம வாயு வெளியேற்றத்தை நாம் செய்யச் செய்ய கடல் தரையிலுள்ள கால்சியம் கார்பனேட் கரைவதும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.

வட அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியிலுள்ள கடல்தரையில் 300 மீட்டர் ஆழம்வரை கால்சியம் கார்பனேட் மொத்தமும் கரைந்துவிட்டது. இந்த நிலை நீடித்தால் அதன் கடல்தரையில் கார்பன்களோடு வினைபுரிய கால்சியம் கார்பனேட்டே இருக்காது. அப்படி நடந்தால் கடல்நீரில் கலந்து அமிலத்தன்மையை அடையும் கார்பன்களைச் சமன்படுத்த எதுவுமில்லாமல் போகும். இதனால் கடலில் வாழும் உயிர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் பற்றிய தெளிவான ஆய்வுகளை இன்னும் தொடங்கவில்லை. ஆனால், கடலின் அமிலத்தன்மை அதிகரித்தால் அது உயிர்கள் வாழத்தகுதியற்றதாகக் கடலை மாற்றிவிட வாய்ப்புகள் அதிகம். அது கரைந்து ஆழம் அதிகமாவது கடலில் அதன் திறனுக்கும் அதிகமான கார்பன் சேர்ந்துகொண்டிருப்பதை நமக்கு உணர்த்துகிறது.

ஆழ்கல்

Photo Courtesy: Glenn Dunshea

``கார்பனேட் அதிகமிருந்த கடல்தரை கரையத் தொடங்கிவிட்டது. அது உலகின் மொத்த கடல் தரைக்கும் பரவச் சில பத்தாண்டுகள் அல்லது ஒன்றிரண்டு நூற்றாண்டுகளே போதுமானது. இது ஆழ்கடலின் நிலவியலையே மாற்றிவிடும். பூமியின் 60 சதவிகிதம் ஆழ்கடல்தான். அதன் சுற்றுச்சூழல் அழிந்துகொண்டிருக்கிறது. அதற்கு நாம்தான் காரணம். ஆம், ஆறாவது பேரழிவு தொடங்கிவிட்டது" என்கிறார் ராபர்ட் கீ.

பல மில்லியன் ஆண்டுகளாக நடந்துகொண்டிருந்த செயற்பாட்டை நாம் நிறுத்தப்போகிறோம். வருங்கால ஆய்வாளர்கள் இந்தப் பெருமாற்றத்துக்கும் அதனால் விளையப்போகும் பேரிடருக்கும் நம்மைத்தான் குற்றஞ்சாட்டப் போகிறார்கள். சில ஆய்வாளர்கள் இப்போதே நம் காலத்தை மானிடப் பேரழிவுக் காலமாக, அதாவது ஆறாவது திரள்நிலைப் பேரழிவாகச் சொல்லுகிறார்கள். பூமியை மனிதர்கள் சீரழித்துக்கொண்டுள்ளார்கள் என்பதை உணர்ந்த முதல் தலைமுறை நாம்தான். அதைச் சரிசெய்ய வேண்டிய தலைமுறையும் நாம்தான்!

 

https://www.vikatan.com/news/miscellaneous/141836-the-seafloor-dissolving-another-environmental-impact-due-to-human.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.