Jump to content

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் உத்தியோக அறிவித்தல் இன்னும் கிடைக்கவில்லை.

Sri Lanka president sacks parliament after power struggle: minister

Nov 09, 2018 22:05 PM GMT+0530 | 0 Comment(s)

AFP - President Maithripala Sirisena sacked Sri Lanka's parliament Friday hours after his party announced he did not have a majority to get his prime minister nominee through the legislature, a minister said.

Sirisena signed an official notification dismissing the 225-member assembly with effect from midnight, clearing the way for a snap election nearly two years ahead of schedule, the minister said asking not to be named.

"The election is likely to be held in early January," the minister told AFP after the United People's Freedom Alliance (UPFA) said they were eight legislators short of a majority in the 225-member assembly that remains suspended.

https://economynext.com/Sri_Lanka_president_sacks_parliament_after_power_struggle__minister-3-12532.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக AFP கூறுகிறது

இலங்கைப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக AFP கூறுகிறது…

afp.png?zoom=0.9024999886751175&resize=6

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது !

பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

parlement.jpg

இந்நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.

ஜனாதிபதி சிறிசேன கையெழுத்திட்டுள்ள வர்த்தமானி பத்திரிகை தற்போது அரச அச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று 9-11-2018 நள்ளிரவு வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

http://www.virakesari.lk/article/44197

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறைவேற்று அதிகாரத்தின் பெறுபேறு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா தனது தரப்புக்கு போதியளவு ஆதரவு இல்லை என்றவுடன் அடுத்த முறையை தெரிவு செய்துள்ளார்.இனித்தான் ஒவ்வொரு கட்சிகளின் பலம் தெரியும்.

கூட்டணிக்காரர் இனித்தான் விடுதலைப் பாட்டுப் பாடப் போகிறார்கள்.மாவீரர் மாதமாகையால் சுடரேற்றவும் போட்டி போடுவார்கள்.

8 minutes ago, விசுகு said:

நிறைவேற்று அதிகாரத்தின் பெறுபேறு

 

அவர்கள் கொண்டுவந்த சட்டம் அவரகள் மேலேயே பாய்ந்து பார்க்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைத்த அரசியல் அலசல் கட்டுரை ஒன்று ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் இல்லை என்று சொல்லியதே. சிங்களத்தில் யாப்பை மாற்றி எழுதியுள்ளார்களா??

 

Parliament dissolved from midnight

2018-11-09 22:30

  

President Maithripala Sirisena has signed the proclamation to dissolve Parliament with effect from midnight today, co-Cabinet Spokesman State Minister keheliya Rambukwella told Daily Mirror.

 

http://www.dailymirror.lk/article/Parliament-dissolved-from-midnight-158179.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் சரியான தெரிவை மேற்கொள்வார்கள் -கோத்தபாய

மக்கள் சரியான தெரிவை மேற்கொள்வார்கள் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சற்று முன்னர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்

ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்ததை குறித்த செய்தி வெளியாகிக்கொண்டுள்ள நிலையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேசத்தின் தலைவிதியை தீர்மானிப்பவர்கள் மக்களே என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் இதயசுத்தியுடனான சக்தி எங்கள் நாட்டின் முக்கியமான தருணத்தில் ஸ்திரதன்மை மற்றும் முன்னேற்றகரமான எதிர்காலத்தை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் சரியான தெரிவை மேற்கொள்வார்கள் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்

http://www.virakesari.lk/article/44198

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது – LIVE UPDATE

11.00PM: இலங்கை நாடாளுமன்றம் / பொது தேர்தல் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி நடத்தப்படும் என்றும் இம்மாதம் 19 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

10.53PM: வர்த்தமானி அச்சிடப்பட்ட பின்னரே அடுத்த தேர்தலைப் பற்றி பேச முடியும் என லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

10.52PM: உச்ச நீதிமன்றத்தின் கருத்தினை கேட்காமல் பொதுத் தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையாளர் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

10.45PM: நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமையை கடுமையாக நிராகரிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கையால் மக்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயகம் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

10.43PM: அரசாங்க அச்சு திணைக்களத்தின் வளாகத்தில் பல அமைச்சர்கள்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோதமானது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பிரதமர் மஹிந்தவும் உறுதிப்படுத்தினார். வர்த்தமானி அறிவித்தல் நள்ளிரவு வெளியாகும்

நாடாளுமன்றத்தை இன்று நள்ளிரவுடன் கலைக்கும் ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று நள்ளிரவு வெளியிடவுள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சக திணைக்களதிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

http://athavannews.com/நாடாளுமன்றம்-கலைக்கப்ப-2/

 

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானியில் 6 மணிக்கே கைச்சாத்திட்டார் ஜனாதிபதி
Editorial / 2018 நவம்பர் 09 வெள்ளிக்கிழமை, பி.ப. 10:56Comments - 0Views - 31

image_872565180a.jpg

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதி விசேட வர்த்தமானியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டு, வர்த்தமானியை அச்சிடுவதற்காக அனுப்பி வைத்துள்ளார்.

இந்த அதி விசேட வர்த்தமானியில், இன்று மாலை 6 மணிக்கே, ஜனாதிபதி கைச்சாத்திட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சராகவுள்ள ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் கீழ், அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தைக் இன்று மாலை கொண்டுவந்தவுடனேயே, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதி விசேட வர்த்தமானியில் கைச்சாத்திட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

  •  

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/நாடாளுமன்றத்தைக்-கலைப்பதற்கான-வர்த்தமானியில்-6-மணிக்கே-கைச்சாத்திட்டார்-ஜனாதிபதி/175-224975

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும்  பூனை மாதிரி இருந்த மைத்திரி...
இன்று காலை... எல்லாரையும்  மிரட்டும் படியாக துணிவு வந்தது எப்படி?

இந்தியாவின் செல்லப் பிள்ளை... ரணிலை,  மைத்திரி ஏமாற்றியதற்காக..  இந்தியாவுக்கு கோவம் வரப் போகுதே...

நல்லாட்சி அரசாங்கத்துக்கு... முட் டுக் கொடுத்த ஆட்கள்... தொகுதிப்  பக்கம் வந்தால்,
பனை மட்டையால் .. சாத்து  வாங்குவது உறுதி.  

 

 

Link to comment
Share on other sites

 
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கபட்டது.
.
 
இலங்கை அதிபர் சிறீசேன நாடாளு மன்றத்தைக் கூட்டும்படி ஓயாமல் நச்சரித்துக் கொண்டிருந்த மேற்குலகின் முகத்தில் திடீரென அறைந்துவிட்டார்.
 
சீனா முதல் வெற்றியைப் பெற்றுள்ளது
நாளை என்ன நடக்கும்?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றைக் கூட்டாமல் விட்டதால் குப்பைகள், கஞ்சல்கள் கூடிவிட்டது. தை மாதம் தேர்தலில் மகிந்த மாத்தயா எல்லாக் குப்பைகளையும் துடைத்தெறிந்துவிட்டு நவீன துட்ட காமினியாக பிரதமர் ஆசனத்தில் அமர்வார்.?

இந்த இரண்டு கிழமைகளில் கொடுக்கப்பட்ட பணப்பெட்டிகளின் பினாமிகள்தான் ஏமாந்தவர்கள். பெட்டி நிறையப் பணம் கிடைக்கும் என்று பல்லை இளித்தவர்கள் ஏமாந்த சோணகிரிகள்.?

கையுளைய உளைய அரசியல் ஆருடங்களும், அலசல்களும், எதிர்வுகூறல்களும் எழுதிய ஆய்வாளர்களுக்கு ஓய்வு கிடையாது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

 

இந்தியாவின் செல்லப் பிள்ளை... ரணிலை,  மைத்திரி ஏமாற்றியதற்காக..  இந்தியாவுக்கு கோவம் வரப் போகுதே...

 

 

இந்தியாவுக்கு என்ன தான் கோபம் வந்தாலும் மகிந்த விடயத்தில் எப்போதுமே அடக்கியே வாசிக்கும்.மகிந்தவின் இரத்தக்கறை படிந்த கைகள் தனியே இல்லை.அங்கே இந்தியாவின் கரங்களும் சேர்ந்தே இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஈழப்பிரியன் said:

வியாழேந்திரனின் வடை போச்சா!

கொழுத்த  வடையை  கவ்வி  இருக்கிறார்

3  நாட்;களுக்கு  மந்திரி

பல கோடி வருமதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

பல கோடி வருமதி

கைமாறி விட்டதா தெரியல்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக எல்லோருடைய முகத்திரையும் கிழிந்துள்ளது. எல்லாம் நன்மைக்கே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, poet said:
 
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கபட்டது.
 
இலங்கை அதிபர் சிறீசேன நாடாளு மன்றத்தைக் கூட்டும்படி ஓயாமல் நச்சரித்துக் கொண்டிருந்த மேற்குலகின் முகத்தில் திடீரென அறைந்துவிட்டார்.
 
சீனா முதல் வெற்றியைப் பெற்றுள்ளது
நாளை என்ன நடக்கும்?

சீனா வெற்றியை பெற்றதை... இந்தியாவால்... ஜீரணிக்க முடியாமல் இருக்கும்.
வழக்கம் போல்.. தனது  குள்ள நரி  வேலைகளை ஆரம்பித்தாலும்,
தனது  மூக்கிற்கு மேல்... வெள்ளம் வர விட்ட இந்தியா... மூக்கு  உடை பட்டதும், எமக்கு சந்தோசம்  தான்.

தமிழ் ஈழத் தேசியத் தலைவர்... திரு வே.பிரபாகரன்  அவர்கள்...
எத்தனையோ முறை... இந்தியா எங்களது நட்பு நாடு என்று கூறியும்..
அதனை காதில் வாங்காத, இந்தியாவுக்கு.... நல்லாய் வேணும்.
எமது... ஈழப்  போராட்டதை, இந்தியா...  நசுக்காமல் இருந்திருந்தால்,
இந்த அவமானம், இந்தியாவுக்கு... நேர்ந்திருக்காது மட்டுமல்ல....
அதன்... பாதுகாப்பையும்... புலிகள் உறுதிப்  படுத்தி இருப்பார்கள்.

இப்போ... நாங்கள், நடப்பதை.... வேடிக்கை மட்டும் பார்ப்போம்.    ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

கைமாறி விட்டதா தெரியல்லையே?

இல்லையா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

வியாழேந்திரனின் வடை போச்சா!

 

8 minutes ago, விசுகு said:

கொழுத்த  வடையை  கவ்வி  இருக்கிறார்

3  நாட்;களுக்கு  மந்திரி

பல கோடி வருமதி

 

6 minutes ago, ஈழப்பிரியன் said:

கைமாறி விட்டதா தெரியல்லையே?

வியாழேந்திரன் பாவம்.  அவசரப் பட்டு விட்டார்.  
கூட்டமைப்பினரை போலல்லாது... தனது மக்களை நேசிப்பவர். அதற்காக தனியே... போராடியும் உள்ளார். 

அமைச்சர்  அலுவலகமே... கொடுக்கப் படாமல், சிங்களவரின்... வாய் மொழியை, நம்பி...   அமைச்சரானவர்.
அவருக்கு... கோடிகளில், பணம் கொடுத்திருப்பார்கள் என்று,, நான் நம்பவில்லை.
அவரது கடைசி பேட்டிகளில், முன்பிருந்த உற்சாகம் இல்லை.. என்பதால்,
அவரே.. தன்னை நொந்து கொண்டு இருப்பார் என நினைக்கின்றேன்..  

Link to comment
Share on other sites

வியாழேந்திரன் இன்று வெள்ளிக்கிழமை வரை பொறுத்திருந்திருக்கலாம். கள்ள வியாழன் கழுத்தை அறுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கும்மான் பாவம், இனியும் தேசியப்பட்டியல் உதவாது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

கும்மான் பாவம், இனியும் தேசியப்பட்டியல் உதவாது...

எதுக்கும் ரதி வந்தாதால் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, trinco said:

வியாழேந்திரன் இன்று வெள்ளிக்கிழமை வரை பொறுத்திருந்திருக்கலாம். கள்ள வியாழன் கழுத்தை அறுக்கும்.

Bildergebnis für à®à®©à®¿à®ªà¯  பà¯à®¯à®°à¯à®à¯à®à®¿

அட... சாத்திரமும், உண்மை என்பதை..  இப்போது அறிந்து கொண்டோம். :grin:
அன்பான நாட்டு மக்களே.... எந்த முடிவையும், இனி... வியாழக்கிழமை, எடுக்காதீர்கள்.

நாளைக்கு... சனி.   டெல்லிப் பக்கம் உள்ள...  மேல் மூலையிலிருந்து   வாறான்.
வீட்டை  விட்டு, வெளியில் வராமல்...  தொலைக்காட்சி,  கம்புயூட்டர், செல் போனை மட்டும்.... 
குனிந்த தலை நிமிராமல்...  பார்த்துக் கொண்டு இருக்கவும். ?

- ஜோதிட சிந்தாமணி தமிழ் சிறி. -

Link to comment
Share on other sites

எல்லாம் நன்மைக்கே.தமிழரின் உறுதுணைஇல்லாமையால் சிங்கள தேசத்தின் பாராளுமன்றமே இழுத்து மூடப்பட்டுள்ளது. தமிழன் இல்லாமல் ஆட்சியே இல்லை.ஆனால் அந்த ஆட்சியில்தமிழனுக்கு என்று எதுவுமே இல்லை. ஆமா மக்கா போன எம் மக்காள் திரும்பி வாரார்களோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் வெல்ல முடியாது என்று ரணிலின் ஐ.தே.மு. காரர்களுக்குத் தெரியும் என்பதால் முடிந்தவரை உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையகம் என்று இழுக்கப்பார்ப்பார்கள்.

ஆனாலும் அடாத்தாக ஆட்சியைக் கைப்பற்ற முயலும் மகிந்த கூட்டணியை சிங்களவர்கள் அதிகளவு விரும்பாத பட்சத்தில் சஜித் பிரேமதாஸாவை தலைவராக்கினால் தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளின் ஆதரவோடு ஐ.தே.மு. ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.