Jump to content

iPhone க்கும் வந்த “Location Sharing” வசதி!


Recommended Posts

iPhone க்கும் வந்த “Location Sharing” வசதி!

 

Google_Map

Android திறன் பேசிகளில் மட்டுமே இருந்த, கூகுள் வழிகாட்டியின் (Google Map) அசத்தல் வசதியான “Location Sharing” தற்போது iPhone (iOS) க்கும் வந்து விட்டது.

இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பயன்படுத்தி வருகிறவன் என்கிற முறையில் இது சிறப்பான, அவசியமான வசதி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

 

இந்த வசதியின் மூலம் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை மற்றவர்களுக்கு “Live” ஆக தெரிவிக்க முடியும்.

நம் நெருங்கியவர்கள் எங்கே வந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை இந்த வசதியை வைத்து தெரிந்து கொள்வதன் மூலம் பதட்டத்தைத் தவிர்க்கலாம்.

இதில் உள்ள விவகாரமான பிரச்னை

யாரிடமும் “நான் அங்கே இருக்கேன் இங்கே இருக்கேன்” என்று கதை அடிக்க முடியாது.

அப்படியா! எங்க.. Location Share செய்” என்றால், மாட்டிக்கொள்வார்கள் ? .

மனைவியிடம் “நான் அலுவலகத்தில் இருக்கிறேன்” என்று புழுகி விட்டு, வேறு எங்காவது இருந்தால், “எங்க..! Location Share பண்ணுங்க!” என்றால், தொலைந்தது கதை ? .

மச்சி! ஐந்து நிமிடங்களில் வந்துடுவேன்” என்று கூறி சமாளிக்க முடியாது.

இதெல்லாம் நகைச்சுவைக்காக கூறி இருந்தாலும், இதனுடைய உண்மையான பயன் அபரிமிதமானது. நம்முடைய திட்டங்களை மிகச் சிறப்பாக செயல்படுத்தலாம்.

Live Share Duration

இதில் பகிரப்படும் கால அளவை நம் விருப்பம் போல மாற்றியமைக்கலாம். உதாரணத்துக்கு குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் முதல், 12 மணி நேரங்கள் –> ஒரு நாள், இரு நாட்கள், எப்போதுமே என்று தொடர முடியும், தேவைப்பட்டால் உடனே நீக்க முடியும்.

மின்னஞ்சலிலும் பகிரலாம், WhatsApp போன்ற செயலிகளிலும் பகிரலாம்.

நீங்கள் வருவதை 1 மணி நேரம் தேர்வு செய்து உங்கள் WhatsApp குழுவில் பகிர்ந்து விட்டால், அவர்கள் நீங்கள் எங்கே வந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்வார்கள்.

 

அடிக்கடி அழைத்து “எங்கே வந்து கொண்டு இருக்கிறாய்?” என்று உங்கள் கவனத்தை சிதறடிக்க மாட்டார்கள்.

இவ்வசதியை அனைவரும் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன்.

http://www.giriblog.com/2018/11/iphone-got-location-sharing-facility.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் நம்மாட்களுக்கு ஆப்பு அடிக்க வந்த மென்பொருள் ஆனாலும் கூகிள் கூறியது போல் அவ்வளவுக்கு துல்லியம் கிடையாது என்னுடைய தரவை பார்த்து நானே பயந்தது உண்டு  பின்ன என்னங்க என்னுடைய வதிவிடம் என்று ஐந்து வீடு தள்ளி இருக்கும் பாக்கி வீட்டை இடையிடையே காட்டி துளைக்குது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

இந்த வசதியின் மூலம் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை மற்றவர்களுக்கு “Live” ஆக தெரிவிக்க முடியும்.

நம் நெருங்கியவர்கள் எங்கே வந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை இந்த வசதியை வைத்து தெரிந்து கொள்வதன் மூலம் பதட்டத்தைத் தவிர்க்கலாம்.

வேண்டாம் சோலி....ஆளை விடப்பா....
நாளைக்கு நான் அங்கை இஞ்சை முக்கிய அலுவலாய் நிக்க.....அவையள் கண்டு பிடிக்க..... வலிய போய் வம்பிலை மாட்டிக்கப்படாது. tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்காணிக்கப்படுகிறோம் அதுதான் உண்மை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதையும் கணித ரீதியில் சொன்னால் இலகுவாய் புரியும்🤣
    • 52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது. 74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது.  🙂
    • ஆஹா.... "கொல்லைப்புறம்". 😂 சிரித்து வயிறு நோகுது.  
    • அங்கே என்ன நடந்தது? 1. "ரேடாரில் மாட்டாமல் தாழப் பறக்கும் நுட்பத்தை முதலில் பயன்படுத்தியது இஸ்ரேல்" என்று நான் எழுதினேன் (கவனியுங்கள்: அமெரிக்கா அல்ல, இஸ்ரேல்). 2. நீங்கள் வந்து "ஜப்பான் காரர் இதை பேர்ள் ஹாபரில் செய்து விட்டார்கள், சொம்பு, முட்டு, பொங்கல், அவியல்" என்று குதித்தீர்கள். ஆதாரம் கேட்டேன், மௌனமாகப் போய் விட்டீர்கள் (ஏனெனின், ஜப்பான் காரன் கூட தான் இதைச் செய்ததாக எங்கும் சொல்லி நான் அறியவில்லை). 3. பின்னர் நான் ரேடாரில் ஜப்பான் விமானங்கள் தெரிந்தமை, ஏன் அமெரிக்கா தவற விட்டது என்று வரலாற்று நூல்களில் இருந்த தகவல்களைச் சொன்னேன். 4. இன்னொரு உறவு, விமானங்கள் ரேடாரில் தெரிந்ததை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரப் பதிவை இணைத்தார் (கவனியுங்கள்: நீங்கள் எதுவும் இணைக்கவில்லை😎!) அதே ஆதாரத்தை , தாழப் பறந்து வந்து ஜப்பானியர் தாக்கியதன் ஆதாரமாக எனக்கு நீங்கள் சிவப்பெழுத்தில் கோடிட்டுக் காட்டியிருந்தீர்கள் (மீண்டும் கவனியுங்கள்: "ஆங்கிலம் ஒரு மொழியேயொழிய, அது அறிவல்ல!" - எங்கேயோ கேட்ட குரல்😎!) எனவே, இது வரை ஜப்பானியர் தாழப் பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினர் என்பதற்கு ஒரு ஆதாரமும் நீங்கள் தரவில்லை (இல்லாத ஆதாரத்தை எப்படித் தருவதாம்😂?).   இனி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்: நீங்கள் உட்பட யாழில் ஓரிருவரின் பிரச்சினை "மேற்கு எதிர்ப்பு" என்ற ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், அதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே உலகத்தை, சம்பவங்களைப் புரிந்து கொள்ளப் போதாது. அப்படி உணர்ச்சி மட்டும் வைத்து "நாசா சந்திரனுக்குப் போகவில்லை" என்று கூட வாதாடும் நிலை இருக்கிறது பாருங்கள்? அந்த முட்டாள் தனத்தைத் தான் நான் சவாலுக்குட் படுத்துகிறேன். இனியும், தவறாமல் செய்வேன் - நீங்கள் சொம்போடு குறுக்கே மறுக்கே ஓடினாலும், நான் நிறுத்தாமல் செய்வேன்! ஏன் இப்படி சவலுக்குட்படுத்துவது முக்கியம்? இந்த மேற்கு எதிர்ப்பு உணர்ச்சி மயப் பட்டு, பொய்த்தகவல்களை உங்கள் போன்றோர் பரப்புவதால் மேற்கிற்கு ஒரு கீறலும் விழாது. ஆனால், எங்கள் தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக புலத் தமிழ் சமுதாயத்தில், இதனால் ஒரு முட்டாள் பரம்பரை உருவாகி வரும் ஆபத்து இருக்கிறது. எனவே, உங்கள் போன்றோரை அடிக்கடி இப்படிச் சவாலுக்குட்படுத்துதல் அவசியம். உங்களுக்கு முடிந்தால், இந்த சவால்களை ஆதாரங்களை இணைத்து எதிர் கொள்ளலாம். இல்லையேல் சொம்போடு நின்று விடலாம், இரண்டும் எனக்கு சௌகரியமே!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.