Jump to content

குடும்ப அமைப்பில்… பாரபட்சத்திற்கு உள்ளாகியுள்ள பெண்களின் தனிக் குடும்பங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குடும்ப அமைப்பில்… பாரபட்சத்திற்கு உள்ளாகியுள்ள பெண்களின் தனிக் குடும்பங்கள்!

Tuesday, November 13, 2018

-பிரியதர்ஷினி சிவராஜா-

jevva1

“வருடங்கள் பல உருண்டோடி விட்டன. ஆனால் கடந்து சென்ற விடயங்களைப் பற்றி நினைத்து என் நிகழ்கால வாழ்வின் நிம்மதியினை நான் இழக்க விரும்பவில்லை. வாழ்வை தனித்து கடப்பது என்பது வித்தியாசமான அனுபவமாக தான் இருக்கின்றது” என்று கூறும் அந்தப் பெண்ணுக்கு 41 வயது. கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட அவர் 16 வயதான மகளுடனும் வயோதிப பெற்றோருடனும் வசித்து வருகின்றார். அவரது வீட்டில் இரண்டு தையல் இயந்திரங்கள் இருக்கின்றன. ஆடைகள் தைப்பதற்காக வெட்டப்பட்ட துணித் துண்டுகள் வீட்டின் பிரதான அறையில் ஆங்காங்கே இறைந்து கிடக்கின்றன. குவிந்து கிடக்கும் தைக்கப்பட்ட ஆடைகளுக்கு பொத்தான்களை அவர் தைத்துக் கொண்டிருந்தார். தனிப் பெற்றோராக (Single Parent) தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக அவர் தையல் வேலையில் ஈடுபட்டு வருகின்றார். தனிப் பெற்றோர் என்ற வகிபாத்திரம் இந்த சமூகத்தில் எவ்வாறு உள்வாங்கப்படுகின்றது? தனிப் பெற்றோர் என்ற ரீதியில் சமூகத்தில் அவர்கள் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்க நேர்கின்றது?

“நாங்கள் காதல் திருமணம் புரிந்து கொண்டோம். எமக்குள் பல்வேறு காரணங்களினால் மனக்கசப்புகளும், கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டன. அவர் என்னுடன் வாழ முடியாது என்றார். அதற்கேற்ப பல காரணங்களைக் கூறி அவரது பெற்றோரையும், உறவினர்களையும் உதவிக்கு அழைத்து என்னை விவாகரத்து வரைக்கும் இணங்க வைத்தார். திருமணமான ஒருவருடத்திற்குள் நாம் பிரிந்துவிட்டோம்”.இவ்வாறு அந்தப் பெண் (பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை.) தனது கடந்த காலத்தை விபரித்தார்.
விவாகரத்தைப் பெற்றார் என்று ஒற்றை வார்த்தையில் சொன்னாலும் அதற்கு, ‘பெண்ணாக’ அவர் கொடுத்த விலை மிக அதிகம்.
“அவர் விவாகரத்து வழக்கில் என்னைப் பெரிதும் அலைக்கழித்தார். எனக்கு பைத்தியம். நான் குடும்பத்திற்கு சரிவராத பெண் என்று இல்லாத பொல்லாத காரணக்களை எல்லாம் கூறி என்னை அவமானப்படுத்தும் அளவுக்கு தூற்றினார். ஒரு வயதுப் பெண்பிள்ளையுடன் மனதில் வேதனைசுமந்து நான் விவாகரத்திற்கு ஒப்புதல் அளித்து விவாகரத்தை வழங்கினேன். தாபரிப்பு செலவாக மாதம் 2 ஆயிரம் ரூபா மட்டும் கிடைக்கிறது. அது ஒரு பிள்ளையை வளர்க்க போதுமானதல்ல. எனது முயற்சியில் எனது உழைப்பில் நான் வாழப்பழகினேன்.” என்று கூறும் அவர் தன் குடும்பம்கூட தன்னை அனுசரிக்கவில்லை என்ற கவலையையும் வெளியிட்டார்.

“விவாகரத்து பெற்று நான் ஒரு வயதுக் குழந்தையுடன் தனித்துவிடப்பட்டேன். யாரும் எனக்கு ஆதரவு வழங்கவில்லை. என் குடும்ப உறவினர்களும், இந்த சமூகமும் என்னைத்தான் குற்றவாளியாகப்பார்க்கிறது. ஆனால் அவருக்கு மிக இலகுவாக இன்னொரு திருமணம் செய்யமுடிந்ததுடன் இரண்டு பிள்ளைகளுக்கும் தந்தையானார்

தனிப் பெற்றோராக வாழ்வதற்கு ஒரு பெண் முடிவெடுத்தால் அவள் குடும்பத்தில் தாயின் வகிபாத்திரத்தையும், தந்தையின் வகிபாத்திரத்தினையும் வகிக்க வேண்டிய இரட்டை நிலைக்குள் தள்ளப்படுகிறாள். ஆனால் ஆணுக்கு அந்த பிரச்சினை இருப்பதில்லை. மனைவியை விட்டு பிரிந்தவருக்கோ, மனைவியை இழந்தவருக்கோ அடுத்த திருமணத்திற்கு ஒரு பெண் எப்போதும் தயார இருக்கிறாள் இந்த சமூகத்தில். அதேதான் இங்கும் நடந்தது.
“விவாகரத்து பெற்று நான் ஒரு வயதுக் குழந்தையுடன் தனித்துவிடப்பட்டேன். யாரும் எனக்கு ஆதரவு வழங்கவில்லை. என் குடும்ப உறவினர்களும், இந்த சமூகமும் என்னைத்தான் குற்றவாளியாகப்பார்க்கிறது. ஆனால் அவருக்கு மிக இலகுவாக இன்னொரு திருமணம் செய்யமுடிந்ததுடன் இரண்டு பிள்ளைகளுக்கும் தந்தையானார்.” என இந்த சமூகத்தின் பாரபட்சத்தை முன்வைக்கிறார் அவர்.
இவ்வாறு விவாகரத்துப் பெற்ற பெரும்பாலான பெண்கள் சமூகத்தின் சிறுமைப்படுத்தல்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இரட்டைச் சுமைகளுடனும் சமூகத்தின் வசைகளுடனும் விவாகரத்துப்பெற்ற ஒரு பெண் வாழவேண்டியிருப்பது பெரும் அநீதிதான். “எனது மகள் பூப்பெய்திய போது நான் அடைந்த மகிழ்வுக்கு அளவே இல்லை. ஆனால் வேதனையும் மகிழ்வும் கலந்த ஒரு வித உணர்வு எனக்கு அப்பொழுது ஏற்பட்டது. கணவனைப் பிரிந்து 16 வருடங்கள் கடந்து விட்டன. அவர் ஒருபோதும் எம்மை எட்டிப்பார்த்ததேயில்லை. ஆனால் சம்பிரதாயத்திற்கு தந்தையை அழைக்கவேண்டும் என எல்Nலூரும் வற்புறுத்தினர். எனது அம்மாகூட அப்படித்தான் கூறினார். ஆனால் நான் தடுமாற்றம் இல்லாத தீர்மானத்தை எடுத்தேன். குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி, மகளின் விழாவுக்கு தந்தை தேவையில்லை என்று பிடிவாதமாக நின்றேன். அவ்வாறு நடத்தி முடித்தேன்.” என்கிறார் மிகுந்த வைராக்கியத்துடன்.
ஆனாலும், விவாகரத்துப் பெற்ற இந்தப் பெண் தனது தாய் தந்தையருடன் வாழ தொடங்கியதிலிருந்து அவரின் உறவினர்களின் பல கேள்விகளுக்கு பதில் சொல்லவும், தன் வாழ்க்கை தொடர்பான அனுதாபப் பார்வைகளை எதிர்கொள்ளவும் நேரிட்டதாக கூறுகிறார். அதனால் “நான் வெளியில் எங்கும் தலைகாட்டுவதில்லை. உறவினர்கள் வீடுகளுக்கு செல்வதனை கூடிய மட்டும் தவிர்த்து வந்தேன். திருமண வீடுகளுக்கு தவிர்க்க முடியாமல் போக நேரும் போது எங்கேயாவது ஒரு மூலையில் அமர்ந்திருந்து விட்டு வந்து விடுவேன். என்னைப் பார்த்தவுடன் பல கேள்விகளைக் கேட்பார்கள். அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க நான் விரும்புவதில்லை. அவர்களது எல்லாக்கேள்விகளும் என்னை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதாகவே இருக்கும். அதனால் அவர்களை எதிர்கொள்வதனை நான் தவிர்த்து விடுவேன்.” என்கிறார் அவர்.ஆனாலும் இந்த குடும்ப கட்டமைப்பில், பிள்ளைகளின் பெயருக்கு கொடுக்கும் முதலெழுத்துபோல் அப்பாவுக்கு கொடுக்கும் உயர் அந்தஸ்தும், சடங்கு சம்பிரயதாயங்களில் கணவன், அப்பா என்று ஆண்களுக்கு கொடுக்கும் முன்னுரிமை பெண்களுக்கு இல்லை. எந்த விதத்திலும் குடும்பத்திற்கு அனுசரணை வழங்காத ஆணாக இருந்தாலும் கணவன், அப்பா என்ற அந்தஸ்து அவர்களை எத்தகைய ஒரு நிகழ்வாக இருந்தாலும் முன்னுரிமைகொடுத்து கௌரவிக்கிறது. அவர்கள் இல்லாத மனைவி, அம்மா என்ற பாத்திரங்கள் அந்தளவுக்கு கௌரவம்பெறுவதில்லை. அந்த பாத்திரங்கள் கௌரவம் பெறவேண்டுமென்hறல், பெயருக்கேனும் கணவன், அப்பா இருந்தாகவேண்டும். உண்மையில் அப்பா இல்லாது வளர்ந்த பிள்ளை அப்பாவை எதிர்பார்க்காவிடினும் இந்த சமூகம் அதை எதிர்பார்க்கிறது. கண்கள் பனிக்க அந்த தருணத்தை விபரித்தார்.

“என் பிள்ளை ஒருபோதும் தந்தையைப் பார்க்க வேண்டும் என்று கேட்டதில்லை. ஆனால் ஒரு தடவை மட்டும் பாடசாலை விழாவுக்கு தந்தை வந்திருந்தால் நன்றாக இருக்கும், அவளது நண்பிககளும் அவர்களது பெற்றோரும் தனது தந்தை பற்றி விசாரிப்பதாகவும் தான் பதில்சொல்ல முடியவில்லை என்றும் கவலைப்பட்டாள். அன்று நான் அவளை வெளியில் அழைத்து சென்று வேண்டியதெல்hலம் வாங்கிக்கொடுத்து ஐஸ்கிறீம் உட்பட, வாங்கிக் கொடுத்து தந்தை இல்லாத வாழ்க்கையை நாம் சந்தோசமாகவும் நம்பிக்கையுடனும் வாழ வேண்டும் என்பதை அவளுக்கு உணர்த்தினேன்” என்கிறார் மிகவும் தெளிவாக. ஆம் கணவனின்றி தனித்து வாழும் பெண்கள் தமது குழந்தைகளுக்காக தம்மை நெறிப்படுத்தி எழுந்து நிற்கிறார்கள். ஆனால் இந்த சமூகம் மீண்டும் மீண்டும் ‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்’ என அழுத்தி உரைத்துக்கொண்டேயிருக்கிறது. எந்த கொடுமையான கணவனையும் கட்டிமாரடிக்கவேண்டும் என பெண்ணைப் பணிக்கிறது.

“நான் சற்று பொறுமையுடன் அனுசரித்து வாழ்ந்திருக்கலாம் என்றும் என்னைச் சுற்றி உள்ளவர்கள் எப்பொழுதும் கூறிக்கொண்டிருக்கின்றனர். என்னால் அதனை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. அது எப்படி எல்லா தவறுகளுக்கும் நான் காரணமாக இருக்க முடியும்?” அந்தப் பெண்ணின் கேள்வியில் ஆத்திரம் வெளிப்பட்டது. “குடும்பம் என்றாலே அதில் எத்தனை பொறுப்புகள், கடமைகள் இருக்கின்றன என்று எல்லோருக்கும் தெரியும். நான் ஒரு தனிப் பெற்றோராக என் பிள்ளையின் முழுப் பொறுப்பையும் ஏற்றிருக்கின்றேன். அவளுக்கான கல்வி வசதி முதல் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி வருகின்றேன். அதுமட்டுமல்லாமல், வீட்டு வாடகை, பெற்றோருக்கான மருத்துவ செலவுகள், உணவு, பராமரிப்பு செலவுகள், வீட்டு மின் கட்டணம், நீர்க்கட்டணம் என்று அனைத்திற்கும் நான் தான் பொறுப்பு. ஆனால் இவ்வளவு சவால்களையும் நான் தனித்து நின்று எதிர்கொள்கின்றேன் என்பது எவ்வளவு கடினமான வேலை என்பது பற்றி யாரும் சிந்திப்பதில்லை. எனக்கு யாரும் ஆதரவாகவும், அனுசரணையாகவும் இருப்பதுமில்லை. ஆனால் என்மீது அவதூறு கூறுவதற்கு மட்டும் எல்லோரும் வரிசையாக வந்துநிற்கிறார்கள். இதனால், என் மகளும் எங்கள் உறவினர்களிடம் இருந்து சற்று விலகியே இருக்கின்றாள்.” என்கிறார் சலிப்புடனும் கவலையுடனும்.“தந்தை பற்றியும், அவரின் பிரிவால் நான் பட்ட துயரங்களையும் என் மகள் நன்கு அறிவாள். ஆனாலும் எங்கள் திருமணப் புகைப்படம் ஒன்றை தனது அறையில் மாட்டி வைத்திருக்கின்றாள். ஒரு தந்தை எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக அதை அவள் அங்கு வைத்திருக்கிறாள் போலும். ஏனெனில் அவர் என்னைப் பிரிந்தது நியாயமற்றது என அவள் அடிக்கடி கூறிக்கொள்வாள்.”
இதனால்தான் பல பெண்கள் விவாகரத்து பெறாமலே தனித்து வாழ்ந்துவருகின்றனர். சமூகத்திற்காகவும் தங்கள் பிள்ளைகளுக்காகவும் என அதற்கு காரணம் கூறுகின்றனர்.

அது எப்படி எல்லா தவறுகளுக்கும் நான் காரணமாக இருக்க முடியும்?”

இவருக்கு வயது 36. ஓன்பது வயதேயான மகனுடன் வாழ்ந்துவரும் இவர் பிரபல நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணிபுரிகிறார். “பெற்றோரால் பேசிச் செய்யப்பட்ட திருமணம் நடந்தது. காலப்போக்கில் கணவரின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவும், சில கருத்து முரண்பாடுகள் காரணமாகவும் கணவரைப் பிரிந்து வாழ முடிவு எடுத்தேன். சட்டப்படி பிரிவது மகனை பாதிக்கும் என்ற அச்சத்தில் சட்டப்படி விவாகரத்து பெறாமலே தனித்து வாழ்கிறேன்” என்கிறார்.
“எனது மகன் வார இறுதி நாட்களில் தந்தையிடம் சென்று வருவார். வார நாட்களில் என்னிடம் தான் இருப்பார். பாடசாலை முதல் கல்வி சம்பந்தமான அனைத்து வேலைகளையும் நான் தான் செய்கின்றேன்;.” என்று கூறும் அந்தப் பெண் தனது பெற்றோருடனும் திருமணம் செய்யாத தங்கையுடனும் வசித்து வருகின்றார்.

“வீட்டில் எனது தாயார் தான் மகனை பாடசாலைக்கு அனுப்பி எடுப்பார். எனது வேலைப்பளு காரணமாக சில வேளைகளில் மகனை சரிவர கவனிக்க முடியாத நிலை ஏற்படும். வேலை முடிந்து நான் வீடு செல்லும் போது அவன் நித்திரைகொள்வான். மனதுக்கு வேதனையாகவும் இருக்கும். ஆனால் என்ன செய்வது? தொழிலை விட்டு விட்டு முழு நேரம் அவனைக் கவனித்து கொள்ள விரும்பினாலும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக அவ்வாறு ஒரு போதும் செய்ய முடியாது” என்று குறிப்பிட்ட அந்தப் பெண் கலங்கிய மனதுடன் மேலும் சில விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். “அப்பா தன்னுடன் இல்லை என்ற ஒரு ஏக்கம் மகனுக்கு இருக்கின்றது. வார இறுதி நாட்களில் அப்பாவுடன் இருந்து விட்டு வரும் போது ஒரு மாற்றத்தினை அவனிடம் நான் அவதானிக்கின்றேன். அவனது பாடசாலை ஆசிரியர்களிடமும், அப்பா தன்னுடன் இல்லை என்றும் தன்னை எவரும் கவனிப்பதில்லை என்றும், தன் மீது அன்பு செலுத்த யாரும் இல்லை என்றும் கூறியிருக்கின்றான். இதனால் பிள்ளையை கவனிப்பதில்லை என்று ஆசிரியர்களின் கடும் கண்டனத்தினை நான் எதிர்கொள்ள நேரிட்டது.” என்று கூறும் இந்தப்பெண் இரட்டைச்சுமையால் திணறிப்போகிறாள். “வீட்டை நிர்வகிக்கும் முழுப் பொறுப்பையும் நிறைவேற்ற வேண்டும். அத்துடன் மகனின் கல்வி செயற்பாடுகள் குறித்தும் அக்கறை செலுத்த வேண்டும். அதற்காக நான் பெரிதும் உழைக்கின்றேன். ஆனால் நான் பிள்ளை பற்றிய அக்கறையின்றி செயற்படுவதாக எனது மகனின் பாடசாலை அதிபர் உட்பட வகுப்பாசிரியர் மற்றும் இதர பாட ஆசிரியர்களும் குற்றம் என் மீது குற்றம் சுமத்துகின்றனர்.” என்று வேதனையுறும் இந்தப்பெண்ணுக்கு தனது மகனைப் பார்த்துக்கொள்வதற்கு முழுநேரத்தையும் ஒதுக்கமுடியவில்லை என்ற குறை உள்ளது. இந்தனை பிரச்சினைகளுடனும் தனது வாழ்க்கையை நடத்தும் இவருக்கு மேலதிகமாக வேறு ஒரு பிரச்சினையும் உள்ளதாக கூறுகிறார்.

“கணவனைப் பிரிந்து வாழ்வதால் பாலியல் ரீதியாக என்னை இலகுவில் அணுகலாம் என பலரும் நினைக்கின்றனர். இதனால் சில ஆண்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். சிலர் அவதூறு பேசுகின்றனர். அவசரத்திற்கு எந்த ஆணிடமும் எந்த உதவியையும் கேட்கமுடியாதுள்ளது” என்கிறார் மனம் நொந்தவராக. திருமணமான பெண்கள் தனித்து வாழ முடிவெடுத்தாலும் அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் எந்தவொரு பொருளாதார பாதுகாப்போ, வாழ்வதற்கான பாதுகாப்போ அற்ற நிலையில் வாழும் நிலைதான் மூன்றர் உலக நாடுகளில் உள்ளது.

இவ்வாறு தனித்து வாழும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆண்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. பெண் தனித்து வாழமுடியாத ஒரு உயிரியாக சமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் இன்று பெண்கள்தான் அதிகளவில் தனித்து வாழ்பவர்களாக அதனால் ஏற்படும் பல்வேறு சவால்களையும் எதிர்கொள்பவர்களாக வாழ்கின்றனர்.

 

http://www.oodaru.com/?p=11646

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • By KELUM BANDARA   Colombo, April 18 (Daily Mirror) - Sri Lanka is still at a loss to thwart the efforts by a city council in Canada to construct what it called a Tamil genocide monument, and to counter the allegations by the Canadian politicians, an informed source said . Brampton city council in Canada has approved the final design for the Tamil Genocide Memorial, a monument the city promised three years ago, according to foreign media. The media said it is a 4.8-metre tall stainless steel monument built in Chinguacousy Park in the Bramalea area to commemorate the lives lost in the Sri Lankan civil war — what many people in the Tamil community call a genocide. Canada's Parliament unanimously voted to recognize May 18 as Tamil Genocide Remembrance Day in 2022. A well placed diplomatic source said that Sri Lanka remains on high alert as Canadian leaders may make genocide allegations next month when the country marks the war victory. Last year, Canadian Prime Minister Justin Trudeau’s genocide accusations sparked a diplomatic dispute between the two nations. Sri Lanka responded with protests by summoning the Canadian envoy. A well-placed diplomatic source informed Daily Mirror yesterday that the Sri Lankan government is keen to ascertain whether such allegations will be repeated this time, despite previous protests by Sri Lanka. “Canadian leaders have a history of making such allegations, even though the Canadian federal government has concluded that the events in Sri Lanka during the war do not amount to genocide,” the official said. However, the official said Sri Lanka had been unable to thwart the efforts by the Brampton city council to construct the monument. The Canadian Federal government which rejected genocide allegations, however, has no jurisdiction over the city council making it difficult for Sri Lanka to stop the move. SL on alert on possible genocide allegations by Canada - Top Story | Daily Mirror
    • இதுக்கு மேலை விளங்கப் படுத்த எனக்குத் தெரியாது ராசா..... 🤣
    • மாதவன். யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் தொடக்கம் பண்ணை வரையான பகுதியை தூய்மையான சுற்றுலா வலையமாக்கும்  கலந்துரையாடல் யாழிலுள் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் போது கோடீஸ்வரன் றுசாங்கன் கருத்து தெரிவிக்கையில்; யாழ்ப்பாண மாநகரத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஏற்கனவே பல திட்டங்கள் வகுக்கப்பட்ட நிலையில் தற்போது அவை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதன் முன்னேற்பாடாக உள்ளூர் சுற்றுலா ஊக்குவிப்பாளர்களுடன் இணைந்து மாநகரத்தின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கும் வினை திறனாக செயல்படுத்துவதற்குமான கலந்துரையாடலாக பார்க்கிறேன். நாட்டின்  சுற்றுலா துறையை மேம்படுத்தும் தேவைப்பாடு அதிகரித்துள்ள நிலையில் யாழ். மாநகரமும் அத்தகைய செயல்பாட்டை முன்னெடுத்து வருகிறது. கடந்த 30ஆம் திகதி பூஜ்ஜிய கழிவு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும்  யாழ். ஆரோக்கிய பவனி இடம்பெற்றது. யாழ்ப்பாண மாநகரத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பொது நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை தூய்மையாக்கும் சுற்றுலா அபிவிருத்தியில் ஈடுபடுத்தி அதன் மூலம் மாநகரத்தின் இயங்கு நிலை செலவினங்களை பெறும் முயற்சி தயாரிக்கப்பட்டு வருகிறது . ஆகவே யாழ்ப்பாண மாநகரத்தை தூய்மை ஆரோக்கியமான சுற்றுலா நகராக நகர் உருவாக்குவதற்கு யாழ். மாநகரசபை தனது முழுமையான பங்களிப்பை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் கவிதா சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கோடீஸ்வரன் றுசாங்கன்  மற்றும் தனியார் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (ச) யாழ். நகரின் சுற்றுலாத்துறை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்.! (newuthayan.com)
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:56 AM   7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14  வாரங்களில் கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம்  718,315 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்  தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 82,531 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சி வேகம் சீராக இருப்பதை காட்டுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு நாளாந்த சுற்றுலா பயணிகளின் வருகை 3000 ஆக குறைந்து இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாத்தில் 5,502 ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 168,539 ற்கும் 182,724 ற்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் வருகையை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய நாளாந்தம் சராசரியாக 5,617 முதல் 6,090 வரை சுற்றுலாப் பயணிகள் வருகை தரவேண்டும். தற்போதைய வருகையின் வேகம் இலங்கை மாதத்திற்கான வருகை இலக்கின் கீழ் எல்லையை எட்டக்கூடும் என்பதைக் காட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தால் கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம்  பதிவு செய்யப்பட்ட 105,498 சுற்றுலா பயணிகளின் வருகையை நாடு விஞ்சும்.  2018 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணகளின் வருகையை நாடு  அடைய மேம்பட்ட வேகம் தேவை. ஏப்ரல் மாத்தில் 17 சதவீதமான சுற்றுலா பயணிகள்  இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். 11 சதவீதமான சுற்றுலா பயணிகள்  பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) தளர்த்தியுள்ளமையினால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. 10 சதவீதமான சுற்றுலா பயணிகள்  ரஷ்காவிலிருந்து  வருகை தந்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தரவரிசையில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளன. 14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.