Jump to content

சென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்

 உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 1000 கிலோ நாய்க்கறியை சென்னை எழும்பூர் ரயில் நிலைய பொலிஸார் இன்று பறிமுதல் செய்துள்ளனர். 

201811171415362559_1_dogmeat.jpg

 தெருவுக்குத்தெரு முளைத்துள்ள பிரியாணி கடைகளில் பயன்படுத்தப்படும் இறைச்சியின் தரம் பற்றி நம்மில் பலருக்கு அக்கறை இல்லை. கோழி பிரியாணியில் கோழிக்கறிக்கு பதிலாக காக்கை கறி சேர்க்கப்படுவதாக முன்னர் பரபரப்பாக செய்திகள் வெளியாகின.

பின்னர், ஆட்டு பிரியாணி என்ற பெயரில் வெளி மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் வரும் இறந்த ஆடுகளின் தரமற்ற இறைச்சி பயன்படுத்தப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதற்காக அனுப்பப்பட்ட பல் ஆயிரம் கிலோ அளவிலான பழுதடைந்த ஆட்டிறைச்சியை சென்னை எழும்பூர், சென்டிரல் ரயில் நிலையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கைப்பற்றி அவற்றை அழித்தனர்.

201811171415362559_one-tonne-of-Dog-meat

இந்நிலையில், சென்னையில் உள்ள உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 1000 கிலோ நாய்க்கறியை சென்னை எழும்பூர் ரயில் நிலைய பொலிஸார் இன்று பறிமுதல் செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகரில் இருந்து ஐஸ் பெட்டிகளில் வைத்து அனுப்பப்பட்ட குறித்த நாய்க்கறியை பெற்றுக்கொள்ளும் நபரின் முகவரியை கண்டுபிடித்துள்ள சென்னை நகர பொலிஸார் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர். 

குறித்த விசாரணையில் எந்தெந்த உணவகங்களில் ஆட்டிறைச்சி பிரியாணி என்ற பெயரில் நாய்க்கறி பரிமாறப்பட்டது என்னும் விபரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இன்று பறிமுதல் செய்யப்பட்ட நாய்க்கறியை புதைத்து அழிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.m

http://www.virakesari.lk/article/44667

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெயர் தான் வித்தியாசம் சட்டியில் போட்டா எல்லாமே சுவை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

பெயர் தான் வித்தியாசம் சட்டியில் போட்டா எல்லாமே சுவை தான்.

screenshot_20180612-17342664853492656509

காக்கா புரியாணி சாப்பிட்டா .. காக்கா குரல் வராம உன்னி கிருஷ்ணன் குரலா வரும் ?.. ஒரே டமாஸ்தான் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

பெயர் தான் வித்தியாசம் சட்டியில் போட்டா எல்லாமே சுவை தான்.

 

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

காக்கா புரியாணி சாப்பிட்டா .. காக்கா குரல் வராம உன்னி கிருஷ்ணன் குரலா வரும் ?.. ஒரே டமாஸ்தான் ?

Image may contain: text

 

Image may contain: 2 people, text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, meme and text

Image may contain: one or more people, people standing and outdoor

இனிமேல் சத்தியமா.... தமிழ்நாட்டில் பிரியாணி கடையில்,  பிரியாணி சாப்பிட மாட்டேன்டா. 
நான் இனிமேல் தமிழ்நாட்டில் இருக்கவே மாட்டேன்டா...

 

Image may contain: 2 people, text

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டுக்கறி சாப்பிட்டதினால் அடிச்சு கொல்லபட்ட  மனிதர்கள்  தேசத்தில் நாய்க்கறி சாப்பிட்டால் குற்றமல்ல.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்கறி ஏன் சாப்பிடக்கூடது?

சாப்பிட்டால் குற்றமா அல்லது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் இறைச்சியா?

சிலோனில் வாழ்ந்த காலங்களில் பன்றியை பார்த்ததும் ஓங்காளித்த எம்மவர்கள் பலர் புலம் பெயர்ந்தபின் அதை தேசிய உணவாக உண்கின்றார்கள். எனவே இது காலத்தின் கட்டாயம்.

உலகின் ஒரு மூலையில் மண்ணை அரைத்து உண்ணும் மக்கள் இருக்கும் போது இப்படியான செயல்கள் எல்லாம் தூசுக்கு சமன்.


உலகம் இனிமேலும் விவசாயிகளை உதாசீனம் செய்தால் எலியைக்கூட கண்ணால் பார்க்க மாட்டீர்கள்.

விவசாயிகளை அவமதித்ததின் விளைவுதான் இன்று உங்கள் சாப்பாட்டு கோப்பைகளில் நாய் இறைச்சி குரைக்கின்றது.

இது இப்படியே போனால் நாளை?????????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

நாய்க்கறி ஏன் சாப்பிடக்கூடது?

கப்பலில் வேலை செய்த காலங்களில் பிலிப்பைன்ஸ் நாட்டவர் வேலை செய்தனர்.ஆட்டிறைச்சி நாளன்று ஆடு சாப்பிடமாட்டார்கள்.கேட்டால் ஆட்டின் வாய் மணக்கிறதாம்.நாய் இறைச்சி தான் நல்ல இறைச்சி நீ ஒருக்கா தின்று ருசிப்பட்டால் விடவே மாட்டாய் என்பார்கள்.

எத்தனை நாடுகளில் பாம்பு இறைச்சியை உண்ணுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

 

46472546_199787807603769_495597586250465280_n.jpg?_nc_cat=103&_nc_ht=scontent-frx5-1.xx&oh=c702a1cd4fde10dac8c681b54e44e08f&oe=5C8379AE

அதுக்கு இருக்கிறதே... நாலு கால். வர்றவன் எல்லாரும், லெக் பீஸ்  கேட்டா.... எங்கை போறது.  :grin:

 

46383055_199655254283691_5119418729830023168_n.jpg?_nc_cat=110&_nc_ht=scontent-frx5-1.xx&oh=33d7db67209028433663fdb295bf9f32&oe=5C6A8591

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜஸ்தான் ஆடுகளுக்கு, வால் நீளமாம்.  லஞ்சம் சரியாக கொடுக்காததால்... ஆடு,  நாயாக மாறியதாக தகவல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது நாய்க்கறி இல்லையாம்...உண்மையில் ஆடுதானாம்...பொலிசுக்கு லஞ்சம் கொடுக்காததால் ஆடு நாயாகி விட்டதாம்? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/19/2018 at 3:06 AM, ஈழப்பிரியன் said:

கப்பலில் வேலை செய்த காலங்களில் பிலிப்பைன்ஸ் நாட்டவர் வேலை செய்தனர்.ஆட்டிறைச்சி நாளன்று ஆடு சாப்பிடமாட்டார்கள்.கேட்டால் ஆட்டின் வாய் மணக்கிறதாம்.நாய் இறைச்சி தான் நல்ல இறைச்சி நீ ஒருக்கா தின்று ருசிப்பட்டால் விடவே மாட்டாய் என்பார்கள்.

எத்தனை நாடுகளில் பாம்பு இறைச்சியை உண்ணுகிறார்கள்.

சிறு வயதிலிருந்து எதை சாப்பிட்டு வளர்ந்தமோ அந்த உணவு சாகும் வரைக்கும் சொர்க்கம். அது புலம்பெயர்ந்து எங்கு வாழ்ந்தாலும் சரி அல்லது பிறந்த மண்ணிலேயே வாழ்ந்தாலும் சரி......
எனக்கு தெரிந்த கொரிய மாணவர் குழாம் ஒன்று இருக்கின்றது. ஜேர்மனியில் தடை செய்யப்பட்டாலும் கொரியாவிலிருந்து நாய் இறைச்சியை ஏதோ ஒரு விதமாக வரவழைத்து அவர்களின் முக்கிய விழாக்களில் உண்டு மகிழ்வார்கள்.

ஏன் ஆபிரிக்காவில் யானை இறைச்சியும் சாப்பிடுகின்றார்கள் தானே? அரேபியர்களுக்கு ஒட்டக இறைச்சி மிக மிக பிரபல்யமல்லோ? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

ராஜஸ்தான் ஆடுகளுக்கு, வால் நீளமாம்.  லஞ்சம் சரியாக கொடுக்காததால்... ஆடு,  நாயாக மாறியதாக தகவல்.

கழுதையைன்ரை இதையும் ஆட்டின்ரை அதையும் கலந்து படைச்சதுதான் உந்த மிருகமெண்டு கனபேர் கதைக்கிறாங்கள்.

மெய் எண்டுதான் நான் நினைக்கிறன்.......:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

ஏன் ஆபிரிக்காவில் யானை இறைச்சியும் சாப்பிடுகின்றார்கள் தானே? அரேபியர்களுக்கு ஒட்டக இறைச்சி மிக மிக பிரபல்யமல்லோ?

என்னமோ தெரியவில்லை மனிதன் இறந்தபின் இறந்த உடலை சாப்பிட வரும் சுறா ,நாய் ,நரி ,கழுகு போன்றவைகளை ஆரம்ப காலத்தில்  இருந்தே அவைகளை உணவாக்குவதில் பெரும்பான்மையோருக்கு வெறுப்புத்தான் நாய் இறச்ச்சியில் வெறுப்பு கூட வருவதுக்கு காரணம் விசர் நாய் வியாதியாக இருக்கலாம் . ஆனாலும் சூரியனிடம் இருந்து நேரடியாக சக்தி   பெறும்  முதலாம் படி நுகரிகள்   புல்லு ,இலை ,தாவரம்கள் பொன்றவற்றை உண்ணும் இரண்டாம்படி நுகரிகளை மனித இனம் விட்டு வைப்பதில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, பெருமாள் said:

என்னமோ தெரியவில்லை மனிதன் இறந்தபின் இறந்த உடலை சாப்பிட வரும் சுறா ,நாய் ,நரி ,கழுகு போன்றவைகளை ஆரம்ப காலத்தில்  இருந்தே அவைகளை உணவாக்குவதில் பெரும்பான்மையோருக்கு வெறுப்புத்தான் நாய் இறச்ச்சியில் வெறுப்பு கூட வருவதுக்கு காரணம் விசர் நாய் வியாதியாக இருக்கலாம் . ஆனாலும் சூரியனிடம் இருந்து நேரடியாக சக்தி   பெறும்  முதலாம் படி நுகரிகள்   புல்லு ,இலை ,தாவரம்கள் பொன்றவற்றை உண்ணும் இரண்டாம்படி நுகரிகளை மனித இனம் விட்டு வைப்பதில்லை .

 பாரம்பரியம் என்றால் உலகமே  போற்றிப்பாடும் அகோரிகள் வாழும் இந்தியாவுக்கு அருகில் தான் நாமும் பிறந்தோம்.....வளர்ந்தோம்.

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

சிறு வயதிலிருந்து எதை சாப்பிட்டு வளர்ந்தமோ அந்த உணவு சாகும் வரைக்கும் சொர்க்கம். அது புலம்பெயர்ந்து எங்கு வாழ்ந்தாலும் சரி அல்லது பிறந்த மண்ணிலேயே வாழ்ந்தாலும் சரி...

இது பிழையான வாதம் என எண்ணுகிறேன்.
சிறு வயதாக இருக்கும் போது மாடு கடவுள் மாதிரி.எமது நெருங்கிய உறவினர் வேதத்தில் சேர்ந்திருந்தனர்.அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்களே என்று ஆதங்கத்தில் அவர்களுடன் பழகப் பேச கஸ்டமாக இருந்தது.மாடு வளர்த்து சாணி எடுத்து தட்டி காயவைத்து சுட்டு திருநீறாக்கி நாங்களும் பாவித்து உறவினர்களுக்கும் கொடுப்போம்.ஒரு வயதில் எனக்கு கடவுள் தான் மாடு.

இதுவே காலங்கள் போய் வெளிநாடு வெளிக்கிட்டு கப்பலில் போனபின் மாட்டிறைச்சி ஆரம்பத்தில் அருவருத்தாலும் போகப்போகப் பழகிவிட்டது.கிழமையில் ஒருநாள் மாட்டு குடலில் சூப். கிரெக்கர்கள் செய்தால் சொல்லவா வேண்டும்.நாள் போக அதுவும் பழகிவிட்டது.கப்பலால் வந்தும் கொம்பனித்தெருவில் மலேகாரர் பச்சா என்ற பெயரில் அதே சூப் அந்த மாதிரி செய்வார்கள்.அமெரிக்கா வந்த புதிதில் என்னோடு இருந்த நண்பன் மாட்டு வாலில் சூப் செய்வான் அதையும் குடித்தது தான்.

ஆனபடியால் சிறுவயதில் அப்படி இருந்தேன் வாழ்நாள் பூராவும் இப்படியே தான் இருப்பேன் என்று எப்படி அடித்து சொல்வது.

கனதூரம் வேண்டாம் விடுதலைப் போராளிகளாக இருந்தர்களை கேட்டுப் பாருங்கள்.சாப்பாட்டுக்காக எவ்வளவு கஸ்டப்பட்டு என்னவெல்லாம் சாப்பிட்டிருப்பார்கள்.காலச் சக்கரத்தில் எல்லாம் தொலைத்துவிட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

கழுதையைன்ரை இதையும் ஆட்டின்ரை அதையும் கலந்து படைச்சதுதான் உந்த மிருகமெண்டு கனபேர் கதைக்கிறாங்கள்.

மெய் எண்டுதான் நான் நினைக்கிறன்.......:grin:

கழுதையைன்ரை அதையும் ஆட்டின்ரை இதையும் கலந்து படைச்சதுதான் உந்த மிருகமெண்டு கனபேர் கதைக்கிறாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

இது பிழையான வாதம் என எண்ணுகிறேன்.
சிறு வயதாக இருக்கும் போது மாடு கடவுள் மாதிரி.எமது நெருங்கிய உறவினர் வேதத்தில் சேர்ந்திருந்தனர்.அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்களே என்று ஆதங்கத்தில் அவர்களுடன் பழகப் பேச கஸ்டமாக இருந்தது.மாடு வளர்த்து சாணி எடுத்து தட்டி காயவைத்து சுட்டு திருநீறாக்கி நாங்களும் பாவித்து உறவினர்களுக்கும் கொடுப்போம்.ஒரு வயதில் எனக்கு கடவுள் தான் மாடு.

இதுவே காலங்கள் போய் வெளிநாடு வெளிக்கிட்டு கப்பலில் போனபின் மாட்டிறைச்சி ஆரம்பத்தில் அருவருத்தாலும் போகப்போகப் பழகிவிட்டது.கிழமையில் ஒருநாள் மாட்டு குடலில் சூப். கிரெக்கர்கள் செய்தால் சொல்லவா வேண்டும்.நாள் போக அதுவும் பழகிவிட்டது.கப்பலால் வந்தும் கொம்பனித்தெருவில் மலேகாரர் பச்சா என்ற பெயரில் அதே சூப் அந்த மாதிரி செய்வார்கள்.அமெரிக்கா வந்த புதிதில் என்னோடு இருந்த நண்பன் மாட்டு வாலில் சூப் செய்வான் அதையும் குடித்தது தான்.

ஆனபடியால் சிறுவயதில் அப்படி இருந்தேன் வாழ்நாள் பூராவும் இப்படியே தான் இருப்பேன் என்று எப்படி அடித்து சொல்வது.

கனதூரம் வேண்டாம் விடுதலைப் போராளிகளாக இருந்தர்களை கேட்டுப் பாருங்கள்.சாப்பாட்டுக்காக எவ்வளவு கஸ்டப்பட்டு என்னவெல்லாம் சாப்பிட்டிருப்பார்கள்.காலச் சக்கரத்தில் எல்லாம் தொலைத்துவிட்டோம்.

நீங்கள் சொன்னது கட்டாயத்தின் நியதி.
நான் சொன்னது வாழ்க்கையின் நியதி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் சிக்கியது நாய்க்கறி அல்ல !

சென்னை எழும்பூர் வந்த ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டது நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறி தான் என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

201811221356010072_experts-confirmed-sei

சென்னையில் உள்ள உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 2000 கிலோ இறைச்சியை சென்னை எழும்பூர் ரயில் நிலைய பொலிஸார் கடந்த 17 ஆம் திகதி பறிமுதல் செய்தனர். 

கைப்பற்றப்பட்ட இறைச்சியில் வால் நீளமாக இருந்ததால் அது நாய் இறைச்சியாக இருக்கலாம் என்ற புகார் எழுந்தது. எனவே, சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் இறைச்சியை கைப்பற்றியதுடன், இறைச்சியின் மாதிரியை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த இறைச்சியை அனுப்பிய நபர் யார்?, சென்னையில் அவற்றை பெற வேண்டிய தரகர் யார்? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். நாய்க்கறி பீதி காரணமாக பிரியாணி கடைகளில் விற்பனையும் சரிந்தது. 

இந்நிலையில் சென்னை கால்நடை வைத்தியக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு தற்போது வெளியாகி உள்ளது. 

கால்நடை வைத்தியக் கல்லூரி பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆய்வில்,  கைப்பற்றப்பட்ட இறைச்சி நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறி என உறுதி ஆனது. அது சிறிய வகை ஆடு எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்மூலம், இறைச்சி பிரியர்களிடையே கடந்த சில தினங்களாக ஏற்பட்ட அச்ச உணர்வு நீங்கியது

 

http://www.virakesari.lk/article/44989

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் இறைச்சி சர்ச்சையால் மக்கள் பீதி – அறிக்கை கேட்கும் நீதிபதி!

54622-720x450.jpg

சென்னை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டு இறைச்சியை நாய் இறைச்சி என்று வதந்தி பரப்பியதால் சர்ச்ரச ஏற்பட்டிருந்த நிலையில், இறைச்சி அழிக்கப்பட்டு விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஜோத்பூரிலிருந்து மன்னார்குடி செல்லும் விரைவு ரயில் கடந்த 17ஆம் திகதி சென்னை எழும்பூர் நிலையத்தை வந்தடைந்தது. ரயிலில் அழுகிய இறைச்சி கொண்டுவரப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புதுறைக்க இரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்ற உணவு பாதுகாப்புத்துறையினர், பொதிகளில்  சோதனை மேற்கொண்டனர். அதில் 5 இற்கும் மேற்பட்ட பெட்டிகளில் 2000கிலோ இறைச்சியிருப்பது கண்டுபிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட இறைச்சியின் வால் நீளமாக இருந்நதால் அது நாய்க்கறியாக இருக்குமென்ற சந்தேகம் ஏற்பட்டது.

மேலும், குறித்த சில பொதிகளை பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின் கால்நடைமருத்துவ கல்லூரிகளில் நடைபெற்ற ஆய்வில் கைப்பற்றப்பட்டது, ஆட்டு இறைச்சியே என்பது தெரியவந்துள்ளது.

ராஜஸ்தானிலிருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட இறைச்சியின் ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட கோரி, இந்திய காவல் நடைகளுக்கன மக்கள் அமைப்புசார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை அதிகாரிகள் வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளதுது.

இந்த வழக்கு விசாரணையின்போது அரசதரப்பு சட்டத்தரணி பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை ஆய்வுக்காக கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், அது ஆட்டிறைச்சி என்று தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் அதனை ஆழமான இடத்தில் புதைத்து அழித்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் புதைக்கப்பட்ட இறைச்சி எந்த விதியின் கீழ் புதைக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் சென்னை மாநகராட்சியையும் பிரதிநிதியாக சேர்த்து வழக்கு விசாரனை டிசம்பர் மாதம் 6ஆம் திகதி ஒத்திவைத்தனர்.

dog-1-428x285.jpg

1542892395-8128-428x285.jpg

013827_dog2-428x285.jpg

dogmeategmore2-1542784600-428x285.jpg

 

 

http://athavannews.com/சென்னையில்-இறைச்சி-சர்ச்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா இப்ப வாலைப் பார்த்ததும் நம்பீட்டம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.