Jump to content

தமிழ் சமுகம் உலகமயமாக்கலில் தோற்றுப்போகுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறையிலிருந்து புகையிரதம் காலை 5.30 மணிக்குப் புறப்பட்டது.
மேற்கு ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்த அந்த தமிழ் மகனும் பயணியாக
இருந்தார்.
புகையிரதம் மல்லாகம், இணுவில், யாழ்ப்பாணம்,சாவகச்சேரி என நிலையங்கள்
ஒவ்வொன்றாக கடந்து பயணித்துக் கொண்டிருந்தது.
மேற்கு ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்த அந்த தமிழ் மகனுக்கு பசிக்களைப்பு
. சிற்றுண்டி சாப்பிட்டு தேநீர் குடிக்கும் வேண்டும் போல ஓர் தவிப்பு .
ஆனால் சிற்றுண்டிகளை விற்க யாருமே ஏறியதாகத் தெரியவில்லை.
புகையிரதம் தரித்த நின்ற நிலையங்களில் 2 நிமிடமளவில் தான் நின்றது.
அந்த இடைவெளியில் இறங்கி ஏறித் தாகத்தை பசியைத் தீர்க்க அவருக்கு இடைவெளி
நேரம் காணாது.
புகையிரதம் வவுனியாவை வந்தடைந்து மதவாச்சியில் நின்றது.
உடனேயே வடை, தேநீர், கோப்பி, மாங்காய், அன்னாசி, றொட்டி ,சம்பல் என
சிற்றுண்டிகளை விற்கும் சிறுவியாபாரிகள் பல பெட்டிகள் ஊடாகவும்
ஏறினார்கள்.
மேற்கு ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்த அந்த தமிழ் மகனுக்கு மகா
சந்தோசம். தனக்குப் பிரியப்பட்ட சிற்றுண்டிகளை எல்லாம் வெகு ஆவலாக வாங்கி
பசியைப் போக்கிக் கொண்டார்.
பக்கத்திலிருந்து அரச பணியாளரான பயணியிடம் பேச்சுக் கொடுத்தார்.
” எங்கட தமிழ் பிரதேசங்களுக்குள்ளாலை ரெயின் வரும் போது சிற்றுண்டிகள்
விற்க யாருமே ஏறவில்லை.
ஆனால் சிங்களப் பரதேசங்களின் ஊடாக வரும் போது நிறையப் பேர் ஏறி தரமான
உணவுகளை மலிவாக விற்கின்றனர்.
எங்கட ஆக்கள் படுசோம்பேறிகள்.”
அதற்கு அந்த அரச உத்தியோகத்தர் ” எங்கட ஆக்களுடைய சோம்பேறித் தனத்தை
ஒப்புக் கொள்கிறேன்.
ஆனால் அது ரெயின் வியாபாரத்திற்கு முழுமையான காரணமல்ல.
யாழ்தேவி, இன்ரசிற்றி ஆகிய இரண்டு ரெயின்களில் மட்டும் தான் எங்கட ஆள்கள்
ஏறி சிற்றுண்டிகளை விற்கலாம்.
மெயில் ரெயின் நேர அட்டவணை பொருத்தமற்றது. அதே வேளை ஏசி இன்ரசிற்றியில்
யாருமே ஏறி பொருள்கள் விற்க முடியாது.
அரசாங்கம் காங்கேசன்துறையிலிருந்து வவுனியா வரை குறுந்தூர ரெயின் சேவைகளை
ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது நடத்தினால் தான் எம்மவரும் நாலு பொருள்களை
விற்று உழைக்கலாம்.
போர் முடிந்து 9 வருடங்களாகி விட்டது. தமிழர்களை பொருள்களை வாங்கிப்
பாவிக்கும் நுகர்வுக் கலாச்சாரத்தில் தானே வைத்திருக்கின்றனர்.
ஆனையிறவு உப்பளம், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை , ஒட்டுசுட்டான் ஓட்டுத்
தொழிற்சாலை, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை என்பவை மீளத் திறப்பதற்கு
உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
உற்பத்தி திறன்மிக்க மக்கள் கூட்டம் கட்டி எழுப்பப்படவில்லை.
எமது மக்களில் கணிசமானோருக்கு வெளிநாட்டுக் காசு வந்து அதை என்ன செய்வது
என்று தெரியாமல் பகட்டுக்கு செலவிழித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதில் ஆகக் கொடுமை என்னவென்றால் செத்த வீட்டுக்குச் செலவழித்துக்
காட்டும் பகட்டு தான்.
லட்வியா, ஹங்கேரி, லித்துவேனியா போன்ற நாடுகள் செங்கன் விசா வலயத்தில்
வந்து விட்டன.
அவை தமது நாட்டுப் பொருளாதாரத்தை உயர்த்த வெளிநாட்டு மாணவர்களுக்குப்
தமது நாட்டுப் பல்கலைக்கழகங்களில் அனுமதியைக் கொடுக்கின்றன.
அதனைப் பயன்படுத்தி எமது ஏஜென்சிகள் புலம்பெயர்வை தற்போதும் நடக்க வழி
செய்கின்றனர்.
ஐரோப்பியப் புலம் பெயர்வுக் கனவிலிருந்து எமது மேல் நடுத்தர, நடுத்தர
வர்க்கக் குடும்பங்களில் பல விடுபடவில்லை.
இந்தப் புலம் பெயர்வுக் கனவு பல விடயங்களில் நிறையவே தாக்கத்தைச் செலுத்துகிறது.
பல்கலைக்கழக அனுமதிக்கு 3 தடவைகள் விடாமல் பரீட்சை எழுதிச் சென்ற ஓர்
சமூகம் இன்று முதல் தரம் பரீட்சை எழுதுவதிலேயே ஆர்வம் குறைந்த நிலைக்கு
வந்து விட்டது.
உயர் கல்வியைத் தொடர்வதில் முழுமையான விருப்பம் உள்ள இளைஞர் தொகை
குறைந்து செல்கிறது.
உள்ளுரிலும் கூலி வேலைக்கு ஆள் பிடிப்பதிலும் பெரும் பஞ்சம்.
வேலைக்கு ஆள்களை பிடிப்பதை நம்பி தோட்டம் மட்டுமல்ல பல வேலைகளும் செய்ய முடியாது.
வேலை இல்லை இல்லை கஸ்டம் என்று கூறுவார்கள் ஆனால் வேலைக்கு ஆள்களைக்
கேட்டால் பிடிக்க முடியாத நிலை.
வட மாகாணத்தில் பெருந்தெருக்கள் யாவும் காப்பெற் வீதிகளாகப் போடப்பட்டன.
வீதி நிர்மாணப் பணிகளை தென்பகுதி பெரும் கம்பனிகளே எடுத்திருந்தன.
அதனால் அவர்கள் சிங்களத் தொழிலாளரையே வேலைக்குக் கொண்டு வந்து நிர்மாணப்
பணிகளை முடித்திருந்தனர்.
எமது பிரதேச ஆள்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கவில்லை எனக் கூப்பாடு போட்டனர்.
ஆனால் எம்மவரை நம்பி பெரிய நிர்மாணப் பணிகளை முடிக்க இயலாது.
இன்று தேங்காய் மட்டைகளை ( பொச்சுமட்டை) வாங்கி அதனைக் கழுவி துண்டுகளாக
வெட்டிப் பவுடராக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலைச் சிங்கள
முதலாளிகள் செய்கின்றனர்.
எமது தமிழ் பிரதேசங்களில் வந்து தொழிற்சாலை அமைத்து உற்பத்திகளைச் செய்கின்றனர்.
இந்த நவீன தொழில் தேடல்கள் எமது தமிழ் முயற்சியாளரிடமில்லை.
பணத்தை முதலிட்டால் பெரும் தொகையான இலாபம் கிடைக்க வேண்டும். எடுத்த
எடுப்பிலேயே பெரும் இலாபம் உழைக்க வேண்டுமென்ற அவா எம்மவரது தொழில்
முயற்சியாண்மைக்குத் தடையாக உள்ளது.
ரெயினில் வடை விற்கும் ஓர் சிங்கள சிறுவியாபாரிக்கு 500 ரூபா நாளாந்த
இலாபம் வாழ்க்கையை நடத்தப் போதுமானது.
வயலில் நெல் விளைவித்து வீட்டில் அரிசி கையிருப்பு வைத்திருப்பார்கள்.
ஈரப்பலாக்காய், கங்குல் கீரை, குளத்து மீன், மரவள்ளிக் கிழங்கு,
ஊர்க்கோழி முட்டை என அவர்களது உணவு தமது முயற்சியால் செலவின்றிப் போய்
விடும்.
ரெயினில் வரும் 500 ரூபா அவர்களுக்கு நாளாந்த கைச்செலவுகளுக்குப் போதுமானது.
அவர்களது வாழ்க்கையில் தேவைகள் குறைவானது. முயற்சிகள் உயர்வானது. அதனால்
அவர்களால் நிறைவாக வாழ முடிகிறது.
சுற்றுலா புறப்பட்டால் தமது ஊரிலுள்ள பஸ் ஒன்றை பிடிப்பார்கள். அதற்குரிய
டீசல் செலவுகளைத் தமக்குள் பங்கிட்டுக் கொள்ளுவார்கள்.
காஸ் அடுப்பு, காஸ் சிலிண்டர், அரிசி, கருவாடு , பருப்பு, தேங்காய் எனத்
தமது உற்பத்திப் பொருள்களை தம்முடனேயே எடுத்து வந்து சமைத்து சாப்பிட்டு
மிகவும் சந்தோசமாகப் பொழுதைக் கழிப்பார்கள்.
வாழ்க்கையை மிகவும் இலகுவாகவும் மகிழ்வாகவும் வாழத் தெரிந்தவர்கள்.
ஆனால் எம்மினிய தமிழ் மக்களோ சாத்திரங்கள், சம்பிரதாயங்கள்,
பழந்தோப்புகளால் சிக்கலாக்கி தாமும் நன்றாக வாழாமல் அடுத்தவனையும் வாழ
விடாமல் தடுத்து விடுவதில் இன்பம் காண்பார்கள்.
எமது வாழ்க்கையின் நடைமுறைகள் தொடர்பாக மீள் உருவாக்கத்தைச் செய்யாது
விட்டால் இதே போக்கில் போனால் உலகமயமாக்கலில் தோற்றுப்போன ஒரு சமூகமாகத்
தான் வரலாறு தனது ஏடுகளில் எம்மை எழுதிக் கொள்ளும்.

வேதநாயகம் தபேந்திரன்

நன்றி. எதிரொலி 07.11.2018 புதன்கிழமை

 

 

பி.கு: தலைப்பு இல்லாத பதிவாக இருந்ததால் கிருபன் தலைப்பை மட்டும் இட்டார். ஆக்கத்திற்கான முழு உரிமமும் வேதநாயகம் தபேந்திரன் அவர்களுக்கானது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.