Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆண்டுகளின் முன் வீகன் என்றால் என்னவென்று பலருக்கும் தெரியாது.ஆனால் இன்று எந்தக் கடைக்குப் போனாலும் வீகன் சாமான்கள் வீகன் உணவுகள் வீகன் பீச்சா ஏன் வீகன் ஐஸ்கிறீம் கூட விற்கிறார்கள்.

வீகன் என்றால் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் இறைச்சி வகை கொழுப்பு பால் என்று அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.வீகனுக்கும் சைவத்திற்கும் என்ன வித்தியாசமென்றால் பாலும் அதிலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணையும்.சைவம் எறத்தாள அரை வீகன்.

இந்த வீகனைப்பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னமே கேள்விப்பட்டிருந்தாலும் இதன் நம்பகத்தன்மையை சரியாக கணிக்க முடியவில்லை.ஆனாலும் கடந்த கோடை காலத்தில் ஒரு 6 மாதமாக வீகன் முறையை பின்பற்றும் ஒருவரை சந்தித்தேன்.அவரிடம் இது பற்றி பேசியதிலிருந்து கொஞ்சம் நம்பிக்கை வந்தது.அவருடைய சிறுநீரகம்(கிட்னி)கொஞ்சம் பழுதடைந்து கொண்டு போனதாகவும் பல வைத்தியங்கள் செய்தும் குணமடையவில்லை கடைசியில் வீகன் முறையைக் கேள்விப்பட்டு அந்த முறையை 6 மாதமாக பின்பற்றிய போது பெரிய மாற்றம் கண்டதாகவும் இரத்த பரிசோதனையின் பாரிய மாற்றம் கண்டதாகவும் சொன்னார்.

அத்தோடு Forks over knives(போக்ஸ் ஓவர் நைவ்) என்ற டொக்குமன்ரரியையும் பார்க்க சொன்னார்.அந்த டெக்குமனரரியைப் பார்த்த போது ரொம்பவும் அதிசயமாக இருந்தது.பல பிரச்சனை உள்ளவர்களும் இந்த முறையை பின்பற்றி நல்ல குணமடைகிறார்கள்.இந்த டொக்குமன்ரரி Net Felix (நெற் பிளக்ஸ் )உள்ளவர்கள் பார்க்கலாம் அல்லது அமெசான் யுரியூப் இவற்றில் 3 டொலர் கொடுத்து பார்க்கலாம்.உங்களுக்கு பிரச்சனையில்லாவிட்டாலும் வீட்டில் வயது போனவர்களுக்கோ உறவினர் அயலவருக்கோ சிலவேளை இந்த முறை உதவலாம்.

மனைவியையும் என்னையும் இதைப் பின்பற்றுமாறு மகள் பல நாட்களாகவே கரைச்சல் தந்து கொண்டிருக்கிறா.ஏதாவது பிரச்சனை என்று சொன்னால் என்ன பிரச்சனை என்று கேட்பதற்கு முதலே எப்ப இருந்து சொல்லிக் கொண்டுவாறன் இருவரும் செகிடு மாதிரி இருந்துட்டு இப்ப பிரச்சனை என்றவுடன் முறைப்பாடு செய்யுங்கோ இனி போய் குளிசையை வாங்கி போடுங்கோ கொஞ்ச நாளில் கிட்னியும் பழுதாகிப் போய்விடும் என்று பேச்சு நடக்கும்.எனக்கும் சிறிது காலமென்றாலும் இந்த முறையை கடைப் பிடிக்க வேண்டுமென்று விருப்பம் தான்.ஆனாலும் அடிக்கடி அங்கும் இங்கும் திரிவதால் சரியான முடிவெடுக்க முடியாமல் இருக்கிறது.

இதைப் பற்றி மேலும் தெரிந்தவர்கள் ஏன் நீங்கள் இதை பின்பற்றுபவராக கூட இருக்கலாம் தயங்காமல் கூடுதலான தகவல்களைத் தாருங்கள்.அத்துடன் மருத்துவத்துறையில் சம்பந்தப்பட்டிருக்கும் யூட் நெடுக்கு போன்றவர்கள் மேலதிகமான தகவல்களைத் தாருங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்திய தலைமுறையினரை விட... பல இளைய தலைமுறையினர், 
வேகன்  உணவுப் பழக்கத்தை பின் பற்றுகிறார்கள், என்பது...  மிக ஆச்சரியமாக உள்ளது. 
நல்லதொரு பதிவு ஈழப் பிரியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும்..இப்போது அதிகமாக....சைவ உணவுக்கு மாறிக்கொண்டு வருகின்றேன்!

இதற்கான காரணங்கள்...பல உள்ளன! முக்கியமான காரணங்கள்...சந்தைப் படுத்தலுக்காக வளர்க்கப் படும்...விலங்குகள்...மிகவும் ...அருவருக்கத் தக்க விதத்தில் ...கொலை செய்யப்படுகின்றன!

உதாரணமாக...பயனில்லாத...சேவல் குஞ்சுகள்...பிறந்த உடனேயே...அழிக்கப் படுகின்றன!

அதே போல...மாட்டுக் கன்றுகளில்....ஆணாகப் பிறப்பவை....கண் திறக்க முன்னரே...பார ஊர்திகளில்...ஏற்றப்பட்டு...வளர்ப்புப் பிராணிகளின்..உணவுக்காக அனுப்பப் படுகின்றன!

இந்த அவலங்களுக்காக...எனது பங்களிப்பு...இருக்ககூடாது என்பதற்காகவே....நான்...இவற்றை விலக்குகின்றேன்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சைவ உணவுக்கு எப்போதோ மாறி விட்டேன்.....எனக்கு நோயே கிடையாது....உஸ் ....கொஞ்சம் டயபடிஸ் உண்டு. இனி எனக்கு மரணமே இல்லை. (ஆத்மாவுக்கு ஏது மரணம்).  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைய ஆய்வில், பிரிட்டனில் 8ல் ஒருவர் வேகனாக உள்ளார். மிக வேகமாக இந்த உணவு முறை மாறி வருகிறது.

அதுசரி..... மரக்கறி உணவுக்கு, சைவம் என்ற மத பெயர் எவ்வாறு வந்தது? சிங்களவர்கள் கூட சைவகடே என்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

முந்திய தலைமுறையினரை விட... பல இளைய தலைமுறையினர், 
வேகன்  உணவுப் பழக்கத்தை பின் பற்றுகிறார்கள், என்பது...  மிக ஆச்சரியமாக உள்ளது. 
நல்லதொரு பதிவு ஈழப் பிரியன்.

சிறி இளம் தலைமுறையினரே பின்பற்றும் போது எம்மால் இன்னமும் முடியாமல் இருக்கிறதை நினைக்க மிகவும் வெட்கமாக இருக்கிறது.
கருத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

நானும்..இப்போது அதிகமாக....சைவ உணவுக்கு மாறிக்கொண்டு வருகின்றேன்!

இந்த அவலங்களுக்காக...எனது பங்களிப்பு...இருக்ககூடாது என்பதற்காகவே....நான்...இவற்றை விலக்குகின்றேன்!

 

சைவத்திற்கும் வீகன் முறைக்கும் சில வித்தியாசங்கள் உண்டென்கிறார்கள்.

சைவக்காரர் பிராமணர்கள் எம்மைவிட திடகாத்திரமாக இருக்கிறார்களா?இதைப்பற்றி கொஞ்சம் ஆராய வேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

நான் சைவ உணவுக்கு எப்போதோ மாறி விட்டேன்.....எனக்கு நோயே கிடையாது....உஸ் ....கொஞ்சம் டயபடிஸ் உண்டு. இனி எனக்கு மரணமே இல்லை. (ஆத்மாவுக்கு ஏது மரணம்).  tw_blush: 

சலரோகமென்பது இருதயநோயை விட மோசமானதென்கிறார்கள்.
எனக்கும் கடந்த 10 வருடங்களாக ஆறு ஆறுஒன்று என்று நிற்று வெருட்டிக் கொண்டே இருக்கிறது.ஒவ்வொரு தடவையும் டாக்ரரிடம் போகும் போது என்னப்பா குளிசை எடுக்கிறியா என்று என்னை குளிசைக்காரனாக மாற்றப் பார்க்கிறார்கள்.தேநீரில் சீனி போடுவதில்லை.கூடுதலாக இனிப்பு சாப்பாட்டை தவிர்த்துக் கொண்டு தான் வருகிறேன்.
சாப்பாட்டு முறையை மாற்றினால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.ஆனாலும் சாக்குக்குள் புல்லடைந்த மாதிரி அடைந்து பழகி அதிலிருந்து மீள முடியாமல் இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.

7 hours ago, Nathamuni said:

அண்மைய ஆய்வில், பிரிட்டனில் 8ல் ஒருவர் வேகனாக உள்ளார். மிக வேகமாக இந்த உணவு முறை மாறி வருகிறது.

அதுசரி..... மரக்கறி உணவுக்கு, சைவம் என்ற மத பெயர் எவ்வாறு வந்தது? சிங்களவர்கள் கூட சைவகடே என்பார்கள். 

நாதம் கம்பேக்கர் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என்றிருந்த கிளின்டன் வீகனாக மாறி இப்போது சுகமாகவே இருக்கிறார்.

சைவசமயத்தவர்கள் சைவமாக சாப்பிட்டபடியால் சைவகடை என்ற பெயர் வந்திருக்கலாம்.
கருத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

நான் இறைச்சி வகை உணவுகளை அதிகமாக விரும்புவதில்லை, சாப்பிடுவதும் இல்லை. அனேகமாக மீன் உணவுகளும் மரக்கறியும் தான் சாப்பிடுவது. வாரத்தில் ஐந்து நாட்கள் ஒன்றில் மரக்கறி சலட் (கேல் இலை, அவகாடோ, டுனா மீன், தக்காளி, கரட் ...) அல்லது கின்வா எனும் உணவு. காலையில் மீன் துண்டு ஒன்று + முட்டை வெள்ளைக்கரு அல்லது ஓட்ஸ் (steel cut oats)

என்னவோ தெரியாது எனக்கு வீகன் முறையையும் ஆட்களையும் கண்ணிலும் காட்டுவதில்லை. ஆதிகால உணவு முறை என்று சொல்லி நிலத்தின் கீழ் வளரும் கிழங்குகளைக் கூட தவிர்க்க சொல்கின்றனர் (ஆதி கால மனிதனுக்கு விவசாயம் தெரியாது என்பதால் நிலத்தின் கீழ் வளரும் கிழங்குகள் தவிர்க்க வேண்டுமாம் - ஆனால் சமைத்து சாப்பிடுவதும் இல்லைதானே எனக் கேட்டால் அவர்கள் அதை ஏற்பதில்லை). மனிதன் மட்டும் தான் இன்னொரு விலங்கின் பாலை குடிக்கின்றனர் என்பதால் பால்வகைகளையும் தவிர்க்க வேண்டுமாம். இதுகளை கேட்கும் போது ஆரோ ஒருவர் என் கமக்கட்டுக்குள் கிச்சு கிச்சு மூட்டுவது போல் சிரிக்க தோன்றும்.

எதிர்காலத்தில்  சைவ உணவுகளை மட்டுமே உண்பது சாத்தியமில்லாமல் போய்விடும். உலக சனத்தொகை வளர்ச்சிக்கு ஈடாக பயிர்களை வளர்ப்பதும் பழ மரங்களின் உற்பத்தியை பெருக்குவதும் காய்கறிகளை பயிரிடுவதும் சாத்தியமில்லை. அவ்வாறு ஈடு செய்ய முற்பட்டால் காடுகள் எல்லாம் அழிக்கப்பட வேண்டி வரும். அல்லது அதிகமான விளைச்சலை தரும் இரசாயன உரவகைகளை பயன்படுத்த வேண்டி வரும். எனவே தான் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் முறையையும் மெல்ல மெல்ல அறிமுகப்படுத்த சொல்லி உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுக்கின்றது.

வீகன் உணவு முறைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் வர்த்தக நலன்கள் அடங்கி இருக்கு. அதை ஒரு வர்த்தகமாக ஆக்கி அதற்கான உணவு வகைகளை சந்தைப்படுத்துகின்றனர்.  அத்துடன் வீகன் உணவு முறை வருத்தங்களை இல்லாமாக்கும் என்பது எல்லாம் கப்சா வகைக்குள் அடங்கும். கீற்றோ டயட் டும் இன்னொரு கப்சா. இன்றைய உலகில் நான் உண்ணும் மரக்கறிகளிலில் இருக்கும் நச்சுப் பொருட்களின் கலப்பும் மரபணு மாற்றங்களும் (GMO - genetically modified organism) லும் இன்னும் இன்னும் புதிய புதிய வருத்தங்களை உருவாக்க வல்லன.

நன்றாக ஓரளவுக்கு ஆரோக்கியமாக வாழ்வது என்பது வெறும் உணவில் மட்டும் தங்கியில்லையே.. உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறை,ஓய்வு, உறக்கம், பாலுறவு, சக மனிசர்களிடம் காட்டும் அன்பும் பரிவும் என்று நிறைய இருக்கின்றனவே. மூன்று வேளை வேலை செய்து கொண்டு, மற்றவர்களை பார்த்து வாழ ஆசைப்பட்டுக் கொண்டு, சதா ஓடி ஓடி உழைத்துக் கொண்டு, எல்லார் மீதும் எரிச்சலும் வெறுப்பும் வளர்த்துக் கொண்டு வாழும் ஒரு தலைமுறைக்குள் நாம் ஊடாடிக் கொண்டு இருக்கின்றோம். இந்த வாழ்க்கை முறை கொண்டு வரும் வியாதிகள் தான் ஏராளம். கடந்த நான்கு நாட்களாக ஒரு நாளைக்கு 12 மணித்தியாலங்களுக்கு மேல் வேலை செய்து கொண்டு தான் இதை எழுதிக் கொண்டு இருக்கின்றேன்.

எம்  வாழ்க்கை முறை மாறாமல் எந்த உணவு முறையும் எம்மை வளப்படுத்தாது

டொட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

என்னவோ தெரியாது எனக்கு வீகன் முறையையும் ஆட்களையும் கண்ணிலும் காட்டுவதில்லை. ஆதிகால உணவு முறை என்று சொல்லி நிலத்தின் கீழ் வளரும் கிழங்குகளைக் கூட தவிர்க்க சொல்கின்றனர் (ஆதி கால மனிதனுக்கு விவசாயம் தெரியாது என்பதால் நிலத்தின் கீழ் வளரும் கிழங்குகள் தவிர்க்க வேண்டுமாம் - ஆனால் சமைத்து சாப்பிடுவதும் இல்லைதானே எனக் கேட்டால் அவர்கள் அதை ஏற்பதில்லை). மனிதன் மட்டும் தான் இன்னொரு விலங்கின் பாலை குடிக்கின்றனர் என்பதால் பால்வகைகளையும் தவிர்க்க வேண்டுமாம். இதுகளை கேட்கும் போது ஆரோ ஒருவர் என் கமக்கட்டுக்குள் கிச்சு கிச்சு மூட்டுவது போல் சிரிக்க தோன்றும்.

நான் எதை நோக்கி நகர விரும்புகிறேனோ அதற்கு மாறான கருத்துக்களை எழுதியுள்ளீர்கள்.நான் ஒரு இறைச்சிப்பிரியன்.இது தான் எனக்குள்ள பிரச்சனையே.
உங்கள் தெளிவான விளக்கத்துக்கு நன்றி.
பச்சையில் நீங்கள் கஞ்சத்தனம் பண்ணுவதால் பச்சை கூட போட முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்த்த சில பேர் கொஞ்ச நாள் வீகன் இருப்பினம்...பிறகு மச்சம்  சாப்பிடுவினம்...கொஞ்ச நாளில் திரும்ப வீகனுக்கு மாறனும் என்டுவினம்...ஆனால் மாறினதை நான் காணேல்ல?...உடம்பை குறைக்க தாங்கள் வீகன் என்று சொல்லி, தொடங்கி உடம்பை குறைத்தவுடன் கை விட்டு விடுவினம் 

நானும் வீகனுக்கு எதிர்ப்பு....எதையும் அளவோடு சாப்பிட்டால் பிரச்சினை இல்லை..நான் மாமிச உணவு என்று சாப்பிடுவது கோழியும்,கடல் உணவுகளும் எப்பாவது இருந்திட்டு ஆட்டு இறைச்சசி சாப்பிடுவது ...ஈழப்பிரியன் அண்ணா நீங்கள் மச்சம் சாப்பிட்டால்  அளவோடு சாப்பிடுங்கள்...அத்தோடு நிறைய மரக்கறிகளையும் சாப்பிடுங்கள் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரதி said:

நான் பார்த்த சில பேர் கொஞ்ச நாள் வீகன் இருப்பினம்...பிறகு மச்சம்  சாப்பிடுவினம்...கொஞ்ச நாளில் திரும்ப வீகனுக்கு மாறனும் என்டுவினம்...ஆனால் மாறினதை நான் காணேல்ல?...உடம்பை குறைக்க தாங்கள் வீகன் என்று சொல்லி, தொடங்கி உடம்பை குறைத்தவுடன் கை விட்டு விடுவினம் 

நானும் வீகனுக்கு எதிர்ப்பு....எதையும் அளவோடு சாப்பிட்டால் பிரச்சினை இல்லை..நான் மாமிச உணவு என்று சாப்பிடுவது கோழியும்,கடல் உணவுகளும் எப்பாவது இருந்திட்டு ஆட்டு இறைச்சசி சாப்பிடுவது ...ஈழப்பிரியன் அண்ணா நீங்கள் மச்சம் சாப்பிட்டால்  அளவோடு சாப்பிடுங்கள்...அத்தோடு நிறைய மரக்கறிகளையும் சாப்பிடுங்கள் 

 

 

இதுவரை வீகன் என்று இருந்த ஒருவரைத் தான் சந்தித்திருக்கிறேன்.அவர் சொன்னதை வைத்து சிறிது நம்பிக்கை பிறந்துள்ளது.எனக்கும் தொடங்குவது பிரச்சனை இல்லை தொடருமா? முடியுமா ?என்பதே பிரச்சனை.

ஒரு நேரமாவது சோறு சாப்பிட வேண்டும் போல இருக்கும்.அத்தோடு கூடவும் சாப்பிட்டு பழகிப் போய்விட்டது.நீங்கள் சொன்னது போல இப்போ கொஞ்சம் குறையவே சாப்பிடுகிறேன்.இன்னொரு கெட்ட பழக்கம் ஏதோ போட்டிக்கு சாப்பிடுவது போல கோப்பை காலியாக்குவது.சாப்பிடும் போது நினைத்துக் கொண்டு தொடங்குவேன்.இடையில் மறந்துவிடுவேன்.சீனாக்காரன் மாதிரி தடியால சாப்பிடுங்கோ என்று மனைவி சொல்லுவா.
உங்கள் கருத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கடை வீகன் வேறை.
எங்கடை சைவம் வேறை.
அர்த்தங்களை புரிந்து கொண்டவர்களுக்கு நன்கு தெரியும்..
சைவம் வியாபார நோக்கு கொண்டதல்ல என்பது யாவருக்கும் புரிய வேண்டும். 
வெள்ளைக்காரன் சொன்னால் எதுவும் சரி எண்ட கருத்துப்பாடு இங்கேயும் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இவங்கடை வீகன் வேறை.
எங்கடை சைவம் வேறை.

சைவம் பால் தயிர் சீஸ் சாப்பிடுகிறார்கள்.வீகனில் மிருகங்களிலிருந்து எடுக்கப்படும் எதையும் தவிர்க்கிறார்கள்.முடிந்தால் மேலே இணைத்துள்ள காணெளியைப் பாருங்கள்.கருத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

சைவம் பால் தயிர் சீஸ் சாப்பிடுகிறார்கள்.வீகனில் மிருகங்களிலிருந்து எடுக்கப்படும் எதையும் தவிர்க்கிறார்கள்.முடிந்தால் மேலே இணைத்துள்ள காணெளியைப் பாருங்கள்.கருத்துக்கு நன்றி.

உங்களுடைய கருத்து கண்டறியாத வெஸ்டேண் மிருகவதை கும்பலுக்குள் அகப்பட்டமாதிரியே தெரிகின்றது. :grin:

வீடியோ பார்க்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. வீடியோவும் வேலைசெய்யவில்லை.


நான் பிறப்பால் சைவம். எல்லாவற்றையும் விட நானும் என் முந்திய சந்ததியும் சைவம்.....அத்துடன் மனதால் நான் என்றும் சைவம்.:cool:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

உங்களுடைய கருத்து கண்டறியாத வெஸ்டேண் மிருகவதை கும்பலுக்குள் அகப்பட்டமாதிரியே தெரிகின்றது. :grin:

வீடியோ பார்க்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. வீடியோவும் வேலைசெய்யவில்லை.


நான் பிறப்பால் சைவம். எல்லாவற்றையும் விட நானும் என் முந்திய சந்ததியும் சைவம்.....அத்துடன் மனதால் நான் என்றும் சைவம்.:cool:
 

மனசாலும் சைவம் என்டால் என்ன அர்த்தம் அண்ணா? 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரதி said:

மனசாலும் சைவம் என்டால் என்ன அர்த்தம் அண்ணா? 
 

கொலை , கொள்ளை ,  சூதுவாது ,  மற்றவர்களை பார்த்து எரிச்சல் படுறது , வட்டி வாங்கிறது .............இப்படி கனக்க சொல்லிக்கொண்டு போகலாம் தங்க்கச்சி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

à®à®±à¯à®à®©à®µà¯ நà®à®¨à¯à®¤à¯à®³à¯à®³à®¤à¯

வேகன் அரசியலும் அம்பலமான வதந்தியும்.. பொய்யானது நாய்கறி பிரச்சாரம்.. பின்னணி என்ன?

சென்னையில் கைப்பற்றப்பட்ட 2100 கிலோ இறைச்சி முழுக்க ஆட்டுக்கறிதான் என்று உறுதியாகி உள்ளது. இதற்கு எதிராக பரப்பப்பட்ட பல வதந்திகள் தற்போது பொய் என்று நிரூபணம் ஆகியுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட இறைச்சி ஆட்டு இறைச்சிதான் என்று சோதனை முடிவுகள் தெரிவிக்கிறது. இது நாய்கறி கிடையாது என்று உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெப்பநிலை மாறுபாடு காரணமாகவே இந்த கறி அழுகி உள்ளது. மற்றபடி இதில் எந்த தவறும் கிடையாது என்று சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் உறுதியாக தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த பிரச்சனையின் பின்புலத்திலும், நாய்கறி வதந்தியிலும் நிறைய அரசியல் இருப்பதாக தகவல்கள் வருகிறது. முக்கியமாக வேகனிசம் எனப்படும் புதிய கலாச்சாரமும் பின்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கைப்பற்றப்பட்டது நாய்க்கறி இல்லை.. ஆட்டுக்கறிதான்.. உறுதி செய்தது ஆய்வு முடிவு

Bildergebnis für vegan

வேகன் அரசியல்:  உலகம் முழுக்க வேகன் வாழ்வியல் முறை பெரிய அளவில் பரவி வருகிறது. இந்த வேகன் வாழ்வியலில் எந்த விதமான தவறும் கிடையாது. முழுக்க முழுக்க வெஜிடேரியன் உணவுகளை மட்டுமே உண்பதைதான் வேகன் வாழ்வியல் என்கிறார்கள். ஆனால், இந்த வேகன் வாழ்வியல் தற்போது பெரிய அரசியலாக, வியாபாரமாக மாறி இருக்கிறது. உலகம் முழுக்க வேகன் மார்கெட்டிற்கு பெரிய அளவில் கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதால், இதை பெரிதுபடுத்த பலர் வேலை செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே நடந்துள்ளது:  உலகம் முழுக்க இந்த வேகன் மார்க்கெட் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் இதில் என்ன பிரச்சனை என்றால் இது உலகின் மிகப்பெரிய உணவு சந்தையான அசைவ உணவு சந்தையை பெரிய அளவில் காலி செய்துள்ளது. வேகன் குறித்து வீடியோ, கருத்தரங்கு, கட்டுரைகள் என்று நிறைய எழுதி எழுதி பல கோடி மக்கள் நம்பி இருக்கும் அசைவ மார்க்கெட் படுத்தது. இதனால் பல நாடுகள் பெரிய இழப்பை சந்தித்தது. முக்கியமாக இந்தியாவின் அசைவ ஏற்றுமதியும் பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. அமெரிக்காவில் வேகனிசம் பெரிய சந்தையாகி உள்ளது.

Bildergebnis für vegan

பிரச்சாரம் செய்தனர்:  அதேபோல்தான் தமிழகத்தில், நாய்கறி என்று சின்ன வதந்தி வந்தவுடன், பலர் இந்த வேகன் பிரச்சாரத்தை கையில் எடுத்தனர். அசைவ உணவுகளே இப்படித்தான், அதில் சுத்தம் இல்லை, பாதுகாப்பு இல்லை என்று தொடர் பிரச்சாரங்கள் செய்யப்பட்டது. இதனால் சென்னையின் அடையாளமாக இருந்த பல பிரியாணி கடைகள், அசைவ ஹோட்டல்கள் ஒரே வாரத்தில் பெரிய பாதிப்பை சந்தித்தது.

ஏன் இது தவறு:  சைவ உணவு சாப்பிடுவதிலும், அதை வேகன் என்று பிரச்சாரம் செய்வதிலும் எந்த தவறும் கிடையாது, ஆனால் அசைவ உணவை பற்றி போலியான பிரச்சாரம் செய்யும் பழக்கம்தான் மிகவும் ஆபத்தானது. முக்கியமாக இந்தியாவில் பிரியாணியின் அடையாளமாக சென்னை திகழ்கிறது. இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல் பல ஆயிரக்கணக்கான இந்துக்கள் இந்த வியாபாரத்தை நம்பித்தான் சென்னையில் இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரம் இந்த தவறான வதந்தியால் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.

அச்சத்தை உண்டாக்கியது:  இந்த பொய் பிரச்சாரமும், வதந்தியும் பெரிய அச்சத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியது. இது இறைச்சி விற்பனையிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த நாய்கறி வதந்தி முழுக்க முழுக்க பொய், அது ஆட்டுக்கறிதான் என்று மருத்துவ பரிசோதனையில் உறுதியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் இறைச்சி விற்பனை இயல்பு நிலைக்கு திரும்ப வரும் என்று நம்பலாம்!

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/vegan-politics-dog-meat-rumor-finally-the-truth-has-came-out-334797.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேகன் உணவு முறைக்கும், இந்த வீடியோ இல் சொல்லப்போடும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கும்  தொடர்பு உள்ளது.

இந்த விஞ்ஞான ஆராய்ச்சி உண்மையானது.

ஆனால், எனது தனிப்பட்வழங்க கூடிய ட பார்வையில், உணவு என்பதே முதல் மருந்தாகும். அதனால், அசைவமும் உண்ணப்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அதை தாரக கூடிய பால், cheese, buttermilk போன்றவற்றால் மாற்றீடு செய்யப்பட வேண்டும்.

மேலும், எந்த உணவு பழக்கத்வீடியோ வில் தையும் திடீரென்று மாற்றுவது, கைவிடுவதோ அல்லது மாற்றீடு செய்வதோ உடல் நலத்திற்கு உகந்தது அல்ல.

இந்த வீடியோ வில் சொல்லப்ப்டும் பாக்டீரியா பற்றி ஏற்கனவே சொல்லியுளேன். இந்த பாக்டீரியா, வாயில் இருந்து இயற்றகை அழைப்பிற்கு பதிலளிக்கும் வாசல்கள் வரை ஒவ்வொரு தனி நபரிடற்கும் தனித்துவமானது. ஓரே வீட்டில் வசிக்கும் பலரில் ஒருவரிற்கு   ஓர் குறிப்பிட்ட உணவு ஒவ்வாமைக்கு இந்த பாக்டீரியாயாவும் ஓர் காரணம். அது மட்டுமல்ல, இந்த பாக்டீரியாவின் health, உங்கள் உளநலத்தை பாதிக்கக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. இதை பற்றி இன்னும் விரிவாக நீங்கள் இணையத்தில் தேடிப்பாருங்கள்.

அதனால், எந்த உணவு முறையை புதிதாக அல்லது மாற்றுவதாயின், படிப்படியாக செய்யுங்கள்.

 

 

 

 

Link to comment
Share on other sites

இயற்கையாகவே மனிதரில் சமிபாட்டுத்துகுதியால் தாவர உணவுகளைக் கொழுப்பாக மாற்றும் தன்மை கிடையாது. ஏனைய விலங்குகள் போலவே மனிதர்களுக்கும் இயற்கையாகவே இரைப்பையில் சுரக்கப்படும் அமிலங்கள் விலங்கு உணவைச் சமிப்பாடடையத்தக்கவாறே இயற்கையால் பல்லாயிரம் வருட கூர்ப்பிசை மாற்றங்கங்களுக்கூடாக அமைக்கப்பட்டுள்ளது. ஆடு மாடு போன்ற விலங்குகள் வேறோரு கூர்ப்பிசைவுக்கேற்றவாறு புல்லையும் இலைகளையும் புரதமாகவும் கொழுப்பாகவும் மாற்றம் செய்யக் கூடியவாறு இயற்கை அமைத்துள்ளது. இயற்கைக்கு எதிராக நாம் மாற வேண்டுமானால் எமது இயற்கையான உடல் அமைப்பு பரிமாணம் அடைய இன்னும் பல நூறு ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.

பல வகையான தவரங்களிலிருந்தும் கொழுப்பையும் புரதங்களையும் நாம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் மனிதனுக்குத் தேவையான எல்லாவிதமான புரத அமில மூலக் கூறுகளையும் தாவர உணவினால் வழங்குவது கடினம். இந்தியாவில் சைவ உணவை உண்பவர்கள் பசுப்பால் நெய் பொன்றவற்றால் இந்த விலங்குணவை ஓரளவு பெற்றுக் கொள்கின்றனர். 

இன்று நாம் உட்கொள்ளும் இறைச்சி மீன் வகைகள் எமது தேவைக்கு மிதமிஞ்சியது. இவற்றை ஓரளவு குறைத்து அதனைத் தாவரப் புரதத்தாலும் தாவரக் கொமுப்பாலும் சமப்படுத்துவதே சிறந்த ஆரோக்கியத்தைத் தரும்.

அதிகரித்துவரும் சனத்தொகையாலும் குறுகிவரும் விலங்கு கடல் வளங்களாலும் நாம் தாவர உணவுகளைப் பெரிதும் நாடவேண்டிய தேவை உள்ளது. எமது உடலுக்குத் தேவையான விலங்குப் புரதத்தைப் பூர்த்திசெய்யப் புதிய வழிகளைத் தேட வேண்டும். உதாரணமாக ஆடு மாடு போன்ற விலங்குகளை விட வெட்டுக்கிளி போன்ற உயிரினங்கள் மிகக் குறைந்த அளவான தாவரங்களை உட்கொண்டு அதிகமான புரத்திதினை உற்பத்தி செய்யக் கூடியன. எதிர்காலத்தில் இவ்வாறான உணவுகளைத் தேடி உண்ணப் பழகுவது பயனுள்ளதாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவனை நான் சந்தித்திருக்கின்றேன், நிழலியை நான் இதுவரை சந்திக்கவில்லை. அதனால்  நிழலிக்கு குத்த முடியுது. இணையவனுக்கு குத்த முடியவில்லை. ஒருவேளை இணையவனுடன் சேர்ந்து நான் தேநீர் அருந்திய விசுவாசமோ என்னமோ தொல்லை பண்ணுது இந்தப் பச்சை......!  ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kadancha said:

அதனால், எந்த உணவு முறையை புதிதாக அல்லது மாற்றுவதாயின், படிப்படியாக செய்யுங்கள்.

கடன்சா உங்கள் விபரமான தகவல்களுக்கு மிக்க நன்றி.

எனக்கு 5 6 வருடங்களாக மூட்டுவலி உள்ளது.எனது மகளொருத்தி மருத்துவதுறையுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த வீகன் முறை முயற்சி செய்யுங்கள் என்று நீண்ட காலமாகவே சொல்லிக் கொண்டு வருகிறார்.கடந்த மூன்று வருடங்கள் பிள்ளைகள் திருமணம் பேரப்பிள்ளைகள் என்று அவர்களிடம் மாறி மாறி திரிவதால் போற இடங்களில் எனக்காக ஒரு சமையல் சாப்பாடு என்று பல பிரச்சனை அத்துடன் மாமிசம் இருந்தால் ஒரு கறியுடனே சாப்பிடலாம் வாய்க்கு ருசியும் தானே.இதுகளை எண்ணி தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறேன்.

இதைப்பற்றி கூடுதலான தகவல்கள் எடுப்போம் என்று தான் இங்கு பதிந்தேன்.

இப்போதும் மதில்மேல்பூனை மாதிரி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, இணையவன் said:

இயற்கையாகவே மனிதரில் சமிபாட்டுத்துகுதியால் தாவர உணவுகளைக் கொழுப்பாக மாற்றும் தன்மை கிடையாது. ஏனைய விலங்குகள் போலவே மனிதர்களுக்கும் இயற்கையாகவே இரைப்பையில் சுரக்கப்படும் அமிலங்கள் விலங்கு உணவைச் சமிப்பாடடையத்தக்கவாறே இயற்கையால் பல்லாயிரம் வருட கூர்ப்பிசை மாற்றங்கங்களுக்கூடாக அமைக்கப்பட்டுள்ளது. ஆடு மாடு போன்ற விலங்குகள் வேறோரு கூர்ப்பிசைவுக்கேற்றவாறு புல்லையும் இலைகளையும் புரதமாகவும் கொழுப்பாகவும் மாற்றம் செய்யக் கூடியவாறு இயற்கை அமைத்துள்ளது. இயற்கைக்கு எதிராக நாம் மாற வேண்டுமானால் எமது இயற்கையான உடல் அமைப்பு பரிமாணம் 

அதிகரித்துவரும் சனத்தொகையாலும் குறுகிவரும் விலங்கு கடல் வளங்களாலும் நாம் தாவர உணவுகளைப் பெரிதும் நாடவேண்டிய தேவை உள்ளது. எமது உடலுக்குத் தேவையான விலங்குப் புரதத்தைப் பூர்த்திசெய்யப் புதிய வழிகளைத் தேட வேண்டும். உதாரணமாக ஆடு மாடு போன்ற விலங்குகளை விட வெட்டுக்கிளி போன்ற உயிரினங்கள் மிகக் குறைந்த அளவான தாவரங்களை உட்கொண்டு அதிகமான புரத்திதினை உற்பத்தி செய்யக் கூடியன. எதிர்காலத்தில் இவ்வாறான உணவுகளைத் தேடி உண்ணப் பழகுவது பயனுள்ளதாக இருக்கும். 

இணையவன் வீகனைப் பற்றி நிறையவே அறிந்து வைத்துள்ளீர்கள்.

எனது உண்மையான இலக்கு இந்த முறையை பின்பற்றும் யாருடனாவது நேரடியாக தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதே.
இதை வியாபாரம் என்கிறார்கள் விஞ்ஞானம் என்கிறார்கள் ஒருசில கட்டுரைகள் வியாபாரம் மாதிரி தெரியும்.
நான் முற்றிலும் எதிர்பார்ப்பது விஞ்ஞான ரீதியானதே.
உங்கள் தகவல்களுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

இணையவனை நான் சந்தித்திருக்கின்றேன், நிழலியை நான் இதுவரை சந்திக்கவில்லை. அதனால்  நிழலிக்கு குத்த முடியுது. இணையவனுக்கு குத்த முடியவில்லை. ஒருவேளை இணையவனுடன் சேர்ந்து நான் தேநீர் அருந்திய விசுவாசமோ என்னமோ தொல்லை பண்ணுது இந்தப் பச்சை......!  ☺️

சுவி தேவையான நேரத்தில் பச்சை இல்லாமல் போகும் போது மிகவும் எரிச்சலாக இருக்கும்.
பசிக்கும் போது பாக்கெற்றில் பணமில்லாமல் சாப்பாட்டுக் கடை முன் நின்றால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்.
புது வருடத்துடன் பச்சையை கொஞ்சம் கூட்டச் சொல்லி எல்லோரும் சேர்ந்து கேட்டுப் பார்க்கலாம்.

தமிழ்சிறி செய்வது போல் காலையில் எழும்பிய உடனேயே அம்பிடுற 5 பேருக்கு விறுவிறென்று குத்திப் போட்டு பேசாமல் இருந்துடனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

கடன்சா உங்கள் விபரமான தகவல்களுக்கு மிக்க நன்றி.

எனக்கு 5 6 வருடங்களாக மூட்டுவலி உள்ளது.எனது மகளொருத்தி மருத்துவதுறையுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த வீகன் முறை முயற்சி செய்யுங்கள் என்று நீண்ட காலமாகவே சொல்லிக் கொண்டு வருகிறார்.கடந்த மூன்று வருடங்கள் பிள்ளைகள் திருமணம் பேரப்பிள்ளைகள் என்று அவர்களிடம் மாறி மாறி திரிவதால் போற இடங்களில் எனக்காக ஒரு சமையல் சாப்பாடு என்று பல பிரச்சனை அத்துடன் மாமிசம் இருந்தால் ஒரு கறியுடனே சாப்பிடலாம் வாய்க்கு ருசியும் தானே.இதுகளை எண்ணி தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறேன்.

இதைப்பற்றி கூடுதலான தகவல்கள் எடுப்போம் என்று தான் இங்கு பதிந்தேன்.

இப்போதும் மதில்மேல்பூனை மாதிரி தான். 

சடுதியனா மாற்றம் இருக்கும் சமநிலையைக் குழப்புவதோடு, புதிய சிக்கல்களை தோற்றுவிப்பதற்கும் அல்லது இருக்கும் பிரச்சனைகளை மேலும் சிக்கலக்குவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளது.  

ஆயினும், நீங்கள் இயல்பாகவே புலால், மாமிச  உணவை விரும்புவராயின், அது சிலவேளைகளில் உங்கள் மரபணு கூட காரணமாக  அமைவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளது.   

https://www.fromthegrapevine.com/health/diet-dna-vegetarian-gene-study

மேலே உள்ள ஆய்வு பரந்துபட்ட அங்கீகாரம் பெற்றதல்ல என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

இத ஆய்வின் படி, தாவர அடிப்படையிலான  உணவுப் பழக்கத்தை கொண்ட பெற்றோரின் பிள்ளை தாவர அடிப்படையிலான உணவையே  விரும்புமவதற்கு அதிக  சாத்தியக்கூறுகள் உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.