Jump to content

1000 நாளில் 81 ஆணவ படுகொலைகள்.. என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

à®à®¤à¯à®¤à®©à¯ மரணமà¯

சங்கர், இளவரசன், நந்தீஷ்.. 1000 நாளில் 81 ஆணவ படுகொலைகள்.. என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?

தமிழ்நாட்டில் கடந்த ஆயிரம் நாட்களில் மட்டும் மொத்தம் 81 ஆணவ படுகொலைகள் நடைபெற்று இருக்கிறது.

உத்தர பிரதேசம், பீகாரில் நடக்கும் மதக்கலவரங்கள் தமிழர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். அந்த மாநிலங்கள் எல்லாம் இன்னும் முன்னேறவில்லை என்று கூட தமிழகத்தை சேர்ந்தவர்கள் மார்தட்டிக் கொள்ள முடியும்.

ஆனால் தமிழகம் வேறு ஒரு விஷயத்தில் அந்த மாநிலங்களை எல்லாம் விட பின்தங்கி இருக்கிறது. தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களில் மற்ற எந்த மாநிலத்திலும் நடக்காத அளவிற்கு ஆணவக்கொலைகள் நடந்து இருக்கிறது.

தமிழà®à®¤à¯à®¤à¯ பà¯à®°à®¿à®¯ à®à®³à®µà®¿à®²à¯ à®à®²à¯à®à¯à®à®¿à®¯à®¤à¯

கடந்த 1000 நாட்களில் தமிழகத்தில் மொத்தம் 81 ஆணவ படுகொலைகள் நடந்துள்ளது. அதாவது 12 நாட்களுக்கு ஒரு ஆணவ கொலை என்று வீதத்தில் தமிழகத்தில் வேகமாக ஆணவ கொலைகள் அரங்கேற்றப்படுகிறது. இதில் பல கொலைகள் மீது வழக்குகள் பதியப்படுவதே இல்லை.

உடுமலைபேட்டை சங்கர் கொலை, தருமபுரி இளவரசன் கொலை, திருச்செங்கோடு கோகுலராஜ் கொலை, கடைசியாக நடந்த ஓசூர் நந்தீஷ் -சுவாதி படுகொலை என்று சில படுகொலைகள் மட்டுமே தமிழகம் முழுக்க தெரிந்து இருக்கிறது. இந்த கொலைகள் இல்லாமல் பல ஆணவ கொலைகள் மக்களுக்கும், ஊடகங்களுக்கு தெரியாமல் நடந்துள்ளது, வழக்குகள் மட்டும் பதியப்பட்டுள்ளது.

யார௠à®à®¤à®¿à®à®®à¯

இந்த கொலையில் அதிகம் பாதிக்கப்படுவது தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். இதுவரை கொல்லப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். மீதம் உள்ள 10 சதவிகிதம் பேர் ஜாதி மாற்ற திருமணம் காரணமாக கொலை செய்யப்பட்ட இடைநிலை ஜாதியை சேர்ந்தவர்கள். அதேபோல் இதில் கணவனை இழந்த 95 சதவிகித பெண்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

ஆனால் இதில் பரிதாபமான விஷயம் என்னவென்றால் உச்ச நீதிமன்றம் எல்லா மாநில அரசுகளையும் ஆணவ கொலை குறித்து விவரங்களை அளிக்கும்படி கூறியது. ஆனால் தமிழக அரசு அதுகுறித்து ஆவணத்தை இதுவரை அளிக்கவில்லை. அதாவது மொத்தம் 22 மாநிலங்கள் ஆணவ கொலைகள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு அப்படி எந்த ஆவணத்தையும் தாக்கல் செய்யவில்லை.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/shocking-81-honor-killings-last-1000-days-tamil-nadu-334613.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.