Jump to content

தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த அவுஸ்திரேலியா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த அவுஸ்திரேலியா

இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 04 ஓட்டத்தினால் இந்தியாவை வீழ்த்தி தொடரின் முதல் வெற்றியை பதவி செய்தது.

aus1.jpg

பிரிஸ்போனில் ஆரம்பமான இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு அவுஸ்திரேலிய அணியை பணித்தார்.

அதன்படி அவுஸ்திரேலிய அணி ஆடுகளம் நுழைந்து அதிரடியாக துடுப்பெடுத்தாடி வரும் போது 16.1 ஓவரில் 153 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சற்று நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னர் மழை விட்டதும் ஆட்டம் ஆரம்பிக்க போட்டி 17 ஓவராக மட்டுப்படுத்தப்பட்டது.

இறுதியாக அவுஸ்திரேலிய அணி 17 ஓவர்களின் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை குவித்தது. 

அவுஸ்திரேலிய அணி சார்பாக மெக்ஸ்வெல் 24 பந்துகளில் 4 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 46 ஓட்டங்களையும், மார்க் ஸ்டாய்னிஸ் 19 பந்துகளில் 3 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் உள்ளடங்கலாக 33 ஓட்டங்களையும் கிறிஸ் லெய்ன் 24 பந்துகளில் 3 நான்கு ஓட்டம் அடங்கலாக 37 ஓட்டத்தையும் அதிகப்படியாக பெற்றுக் கொண்டனர்.

aus2.jpg

பந்து வீச்சில் இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களையும், பும்ரா மற்றும் கலீல் அஹமட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

அவுஸ்திரேலியா 158 ஓட்டங்களை எடுத்தாலும் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 17 ஓவரில் 174 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

aus3.jpg

174 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவரில் 7 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 4 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

அணி சார்பாக தவான் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 42 பந்துகளில் 10 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் உள்ளடங்கலாக 76 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 13 பந்துகளில் 4 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக 30 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர். 

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக அடம் ஷாம்பா, மார்கஸ் ஸ்ட்னினிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், ஜேசன் பெரண்டோப், பில்லி ஸ்டான்லேக், அண்ரீவ் டை, ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

 

 

http://www.virakesari.lk/article/44938

Link to comment
Share on other sites


 

ஆஸ்திரேலியா அணியுடனான முதல் டி20 போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

 
இந்தியா அணி பதிலடி கொடுக்குமா? நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதல்
 
மெல்போர்ன்:

3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரில் பிரிஸ்பேனில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 ரன்னில் தோற்று 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.
 


இதனால் நாளை நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தோற்றால் தொடரை இழந்துவிடும். முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாகவே ஆடினார்கள். மழை விதியால் பாதிப்பு ஏற்பட்டது. இதை சரி செய்யும் வகையில் இந்திய வீரர்கள் நாளை முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

நாளைய போட்டிக்கான அணியில் விராட்கோலி மாற்றம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குணால் பாண்ட்யா ரன்களை வாரி கொடுத்தார். இதேபோல கலீல் அகமதுவும் ரன்களை விட்டுக்கொடுத்தார். இதனால் இருவரில் ஒருவர் கழற்றிவிடப்பட்டு யசுவேந்திர சஹாலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கருதப்படுகிறது. பேட்டிங் வரிசையில் பெரும்பாலும் மாற்றம் இருக்காது.

ஆஸ்திரேலிய அணி நாளைய ஆட்டத்திலும் இந்தியாவை வீழ்த்தி 20 தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் மேக்ஸ்வெல், கிறிஸ்லின், கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோரும், பந்துவீச்சில் ஆடம் ஜம்பா, ஸ்டோனிஸ ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். ஸ்டோனிஸ் ஆல்ரவுண்டர் வரிசையில் ஜொலிக்கிறார்.

நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.20 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ், சோனி டென் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

https://www.maalaimalar.com/News/Sports/2018/11/22121526/1214279/india-vs-australia-2nd-t20-match-on-tomorrow.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.