Jump to content

பாயோடு ஒட்டியவர்கள் - மட்டக்களப்பு மக்களை பற்றி..


Recommended Posts

மட்டக்களப்பு மக்களை பற்றி சிலர் மக்கள் சொல்வது 'மட்டக்களப்பார் பாயோடு ஒட்ட வைத்து விடுவார்கள்" என்பது. அதாவது மந்திரத்தால ஆட்களை வசியம் செய்து (முக்கியமாக ஆண்களை) விடுவார்கள் என்பது.


உண்மையிலேயே அவர்கள் மந்திரத்தால் வசியம் செய்வார்களா என்பது பற்றிய ஒரு சுவாரசியமான பதிவு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உந்த வீடியோவை இன்னும் பார்க்கவில்லை...ஆனால் மட்டக்கிளப்பில் மாந்திரீகம் செய்பவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

நான் உந்த வீடியோவை இன்னும் பார்க்கவில்லை...ஆனால் மட்டக்கிளப்பில் மாந்திரீகம் செய்பவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை
 

மட்டக்களப்பும், யாழ்ப்பாணமும்... 
ஈழத்து  தமிழ் இனத்தின்... இரு கண்கள்.  அதனை...  பாதுகாக்கா  விட்டால்,
காக்கா.. வந்து, தலையில்... எச்சம்  போட்டு விடும்.

யாழ்ப்பாண  புருசன்....  அழுததை, நினைக்க... கொஞ்சம்  சங்கடமாக இருந்தது.
மிச்ச.. கருத்துக்களை, ரதியிடம் இருந்து.. எதிர் பார்க்கின்றோம்.

நான்,  இந்தக் காணொளியை... 7´வது  நிமிடம்  வரை பார்த்தேன்.
அந்த இரு பெண்களிலும்.. யாழ்ப்பாண தமிழும், மட்டக்களப்பு  தமிழும் கலந்து வருவது... அழகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நான் உந்த வீடியோவை இன்னும் பார்க்கவில்லை...ஆனால் மட்டக்கிளப்பில் மாந்திரீகம் செய்பவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை
 

அது உண்மை என்று நிரூபித்தால் டொக்டர் கோவூரின் சொத்துக்கள் உங்களுக்கே ! கோடிக்கணக்கில் இருக்குது முடியுமா உங்களால் ?

Link to comment
Share on other sites

தமிழ்த் தேசிய சிதைவுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்ட வீழ்ச்சிக்கும் காரணமாகும் யாழ் வேளாள பிற்போக்குச் சிந்தனையை வெளிக்காட்டும் பதிவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மந்திரமோ மண்ணாங்கட்டியோ அழகான பெண்கள் "இலவச இணைப்பாக அறிவும் இருந்தால் அதிஷ்டம்" என்றால் பாய் என்ன பைங்கிளியோடேயே ஒட்டிக் கிடைக்கலாம்.எத்தனையோ அழகான ஆண்கள் இன்றும்  தனி யாகத்தானே திரிகிறார்கள்.இதிலிருந்தே தெரியவில்லையா, அவர்களின் சிறந்த விருந்தோம்பலில்தான் விருந்தினர்கள் ஒட்டிக்கொள்கிறார்கள்.அதில் ஒரு பெண் சொன்னதுபோல் யாழ்பாணத்து பெண்கள் பேச்சு கொஞ்சம் ஓவர்தான் தாங்க முடியவில்லை.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎24‎/‎2018 at 12:19 AM, பெருமாள் said:

அது உண்மை என்று நிரூபித்தால் டொக்டர் கோவூரின் சொத்துக்கள் உங்களுக்கே ! கோடிக்கணக்கில் இருக்குது முடியுமா உங்களால் ?

பெருமாள்,நான் இன்னும் பேயைக் கண்ணால் காணவில்லை?....நாங்கள் நகரத்தில் இருந்தோம்...பக்கத்து வீட்டு ஆன்டியின் தம்பி அவர்களோடு இருப்பதில்லை...எப்பவாவது கிராமத்தில் இருந்து வருவார்...அவர் இரவு 12 மணிக்கு றோட்டால் கத்திக் கொண்டு செல்லும் சத்தம் கேட்கும்....அவர் மாந்திரிகம் செய்ப்பவர் என்றும்,பேயை விரட்டி செல்கிறார் என்றும் சொன்னார்கள்.

அதை விட ரோட்டில் டொபி கொட்டிக் கிடக்கும்...யாரையோ வசியம் பண்ண போட்டதை அந்த வீட்டுக்காரர் கொண்டு வந்து வீதியில் போட்டு இருப்பார்கள்... அவர்கள்,அவர்களுக்கு இடையே உள்ள போட்டி,பொறாமை,காதல் போன்ற காரணங்களால் வசியம் செய்தார்கள்...அவர்கள் வீட்டில் வசியம் செய்யப்படட ஏதாவது புதைத்து வைப்பது,காலடி மண்ணை எடுத்து ,தலை முடி போன்றவற்றை வைத்து வசியம் செய்வது என்பன நான் இருக்கும் காலத்தில் நடந்து கொண்டு தான் இருந்தது.

இந்த வீடியோவில் சொல்லப்படுகின்ற மாதிரி மட்டு மக்கள் அன்பானவர்கள்...அவர்கள் தங்கள் அன்பாலே யாழ் ஆண்களை வசியம் பண்ணி இருக்கலாம்...எத்தனையோ யாழ் ஆண்கள் மட்டுவில் வேலைக்கு வந்து அங்கு இன்னொரு திருமணம் செய்திருக்கிறார்கள்{தங்களுக்கு முதல் திருமணம் நடந்ததை மறைத்திருப்பார்கள் அல்லது தெரிந்தும் அந்த பெண்கள் கல்யாணம் கட்டி இருப்பார்கள்}....மட்டு பெண்கள் மட்டும் தான் அழகு என்று சொல்வது ரொம்ப ஓவர்?...நான் படித்த பள்ளியிலையேயே நிறைய யாழ்,மட்டு பிள்ளைகள் படித்தவர்கள்...அவர்களை யார்,யார் என வித்தியாசம் காண்பது கஷ்டம் அழகு விடயத்தில் ?

இது பற்றி நிறைய விடயங்கள் ரகுநாதன்,குசா அண்ணா போன்றோருக்கு தெரிந்திருக்கும்....ஆனால் யார் என்ன சொன்னாலும் மாந்திரிகம் அங்கு இருந்தது...இப்ப இருக்குதோ தெரியாது ?

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.