-
Tell a friend
-
Topics
-
9
By புரட்சிகர தமிழ்தேசியன்
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By விளங்க நினைப்பவன் · Posted
இலங்கையையும் சேர்த்து பாரதிய ஜனதா கட்சி அகன்ற இந்து இந்தியா அமைத்து பின்பு தமிழீழத்திற்கு பிரிந்து செல்லும் உரிமை கொடுப்பார்கள் என்று சில இலங்கையர் நம்புகிறார்கள் 😂 -
By விளங்க நினைப்பவன் · Posted
ஒருவர் உண்ணாமல் இருந்து கோரிக்கை வைத்தால் ஒரு அரசு நிறைவேற்றுமா? இந்த அம்மாவை யாரோ தவறாக வழிகாட்டியுள்ளார்கள். -
அடி புடியும் தோல்வியில்.....அகிம்சையும் தோல்வியில்.......இனி??????
-
பல வருடங்களுக்கு முன் இலங்கை முஸ்லீம் சமையல்காரர் ஒருவரை அமுக்கி விட்டோம்.ஜேர்மனியில் நடந்த எக்ஸ்போவின் மூலம் சிறிலங்கன் சமையல் விற்பன்னராக நாட்டுக்குள் நுழைந்து வேர் பதித்து விட்டவர்.😁 அவரை சிறிலங்கன் முறைப்படி சமையல்கள் செய்து தருமாறு கேட்டுக்கொண்டதிற்கிணங்க விதம் விதமாக சமைத்து தந்தார். எல்லாம் பிரமாதமாகவே இருந்தது.கிழங்கு ரொட்டி,கொத்துரொட்டி,வட்டலப்பம் என ஒரே அசத்தல். உண்மையில் கெட்டிக்காரன். ஆனால் சுண்டல் விடயத்தில் சறுக்கி விட்டார்.அவர் சொன்ன காரணம் அங்கத்தையான் உப்பும் உறைப்பும் புளியும் வித்தியாசமானது. மற்றது காலநிலை. ஐரோப்பாவில் இருக்கும் பிட்சா நூடில்ஸ் சுவைகள் சிறிலங்காவில் ஒரு காலமும் வரமாட்டாது எனவும் சொன்னார். அதில் ஓரளவிற்கு உண்மை இருக்கின்றது. எனவே ஊருக்கு ஊர் சோறு கூட வித்தியாசம். 😁
-
அம்மா! சென்ற இரு வருடங்களுக்கு முதல் பாக்கியம் அக்காவும் இறைவனடி சேர்ந்து விட்டார். அதில் கொடுமை என்னவென்றால் அவவுக்கு இவ்வளவு பிள்ளைகள் இருந்தும் சொத்துக்கள் இருந்தும் கடைசியில் அனாதை போலவே வாழ்ந்தார். அவ வாழ்ந்த வாழ்க்கை உங்களுக்கு தெரியாதல்ல. பிள்ளைகளுக்காக தனது சுக போகங்களை தியாகம்செய்து பிள்ளைகளை படிக்க வைத்தார். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் நல்ல நிலையில் தான் இன்றும் வாழ்கின்றார்கள். ஆனால் பாக்கியம் அக்காவை பெற்ற பிள்ளைகள் யாருமே கவனிக்கவில்லை.பிள்ளைகளுக்குள் அவர் பாக்கட்டும் இவர் பாக்கட்டும் என்ற மனப்பாங்கும்....அவர் என்னை விட நல்லாய் இருக்கிறார் இவர் என்னைவிட நல்லாய் இருக்கிறார் என்ற மனப்பாங்கும் ஒரு பெற்றதாயை நடுத்தெருவில் விட்டு விட்டதம்மா. கொள்ளி வைக்கக்கூட ஆக்கள் இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரர் கொள்ளி வைத்ததாக கேள்விப்பட்டேன் அம்மா.ஆனால் பாக்கியம் அக்கா பெற்ற பிள்ளைகள் பணத்தின் மூலம் எதையும் சாதிக்கலாம் என நினைத்து விட்டார்கள். கொள்ளி வைத்தவருக்கு ஒரு லட்சம் ரூபா கொடுத்தார்களாம். இங்கே பாசத்திற்கு முதல் பணம் தான் முக்கியமாய் போய் விட்டதம்மா. இப்போது பாக்கியம் அக்காவின்ரை பெயரில் மணிமண்டபமும் பஸ் தரிப்பு நிலையமும் பிள்ளைகள் கட்டி குடுத்திருக்கினம். பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழாவும் பாக்கியம் அக்காவின்ரை பெயரிலை தான் செய்யினமாம். அது மட்டுமில்லாமல் பள்ளிக்கூடத்துக்கு குழாக்கிணறு அடிக்க அரைவாசி பணம் குடுத்து விட்டு உபயம் அமரர் பாக்கியம் என எழுத்தும் படியும் வற்புறுத்தினார்களாம்.வலக்கை குடுக்கிறது இடக்கைக்கு தெரியக்கூடாது என்பார்கள். ஆனால் ஒரு கையுமே கொடுக்காமல் புகழ் மட்டும் தேடுகின்றார்கள் அம்மா. அம்மா ! வட்டி கனகசபை மாமா இஞ்சை ஜேர்மனியிலை தான் இருக்கிறார். அவர் இப்ப எப்பிடி இருக்கிறார் தெரியுமே?
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.