Jump to content

"போர்க்களமான கூட்டமைப்பின் கூட்டம்!! சம்பந்தன் – சிறீதரன் இடையில் கடும் கருத்து மோதல்…"


Recommended Posts

2882-820x320.jpg

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் (23-11-2018) நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு பிரதிநிதிகள் கூட்டமைப்பிற்குள் இருந்தபோது ஏற்பட்ட கடுமையான மோதலிற்கு பின்னர், இன்றைய சந்திப்பிலேயே மிகக்கடுமையான வார்த்தை மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த மோதலின் உச்சக்கட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்திய சி.சிறிதரன், அவர் பிழையாக நடப்பதாக குற்றம்சாட்டினார். நாடாளுமன்ற அமர்வுகள் மதிய போசணத்திற்காக ஒத்திவைக்கப்பட்ட பின்னர், மதிய போசணத்தை முடித்துக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஒன்று கூடினர். அவசர சந்திப்பிற்காக அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது, மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மைத்திரிபாலவின் நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்வது பற்றி இரா.சம்பந்தன் விளக்கமளித்தார்.

ஒக்ரோபர் 26ம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது சட்டவிரோதம், நாடாளுமன்றத்தில் இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னரும் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் தொடர்வது சட்டவிரோதம் என்று குறிப்பிட்டு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், அதற்கு மஹிந்தவிற்கு எதிராக வாக்களித்த 122 எம்.பிக்களும் கையொப்பமிட வேண்டுமென்றும் இரா.சம்பந்தன் கோரினார்.

அதற்கு “இந்த அரசாங்கத்தில் எமக்கு நம்பிக்கையில்லாத காரணத்தால் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் நாங்களும் ஆதரவாக வாக்களித்தோம்.“ என்ற சத்தியக் கடதாசியிலேயே கையொப்பமிட கோரப்பட்டது.

மேலோட்டமான சில விவாதங்கள், கருத்து முரண்பாடுகளின் பின்னர் எம்.பிக்கள் கையெழுத்திட சம்மதித்தனர். அப்போது திடீரென சிறீதரன் எம்.பி, தான் கையெழுத்திட மாட்டேன் என்றார். கையெழுத்திட வேண்டுமென இரா.சம்பந்தன் வற்புறுத்தினார். இரு தரப்பும் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க, சிறிது நேரத்தில் உக்கிரமான வார்த்தை மோதல் ஆரம்பித்தது.

மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பதற்கு நிபந்தனை விதித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கிறது என சிறீதரன் கேள்வியெழுப்பினார். இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளிற்கிடையிலான மோதலில் நாங்கள் ஒரு தரப்பாக இருக்க வேண்டிய அவசியமில்லையென்றார்.

ரணிலிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் கூட்டமைப்பு ஆதரிப்பதாக சமூக வலைத்தளங்களிலும், பொதுமக்களிடமும் பகிரப்படும் கருத்துக்களை சிறீதரன் சுட்டிக்காட்டினார்.

எனினும், இரா.சம்பந்தன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

“நீர் கையெழுத்திடாவிட்டால், மஹிந்த ராஜபக்சவிடம் காசு வாங்கிக் கொண்டுதான் கையெழுத்திட மறுத்ததாகத்தான் சனங்கள் கதைப்பார்கள்." ஏற்கனவே எங்களிடமிருந்து ஒருவர் போய்விட்டார். நீர் இரண்டாவது ஆளாகுவீர். தனியே உம்மை மட்டுமல்ல, கூட்டமைப்பையும் சேர்த்துத்தான் காசு வாங்கியதாக கதைப்பார்கள்.

"சனங்கள் மட்டுமல்ல, நானும் சொல்வேன் - நீர் மஹிந்தவிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் கையொப்பமிட மறுத்தீர் என.“ என இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

இரா.சம்பந்தனிடமிருந்து இப்படியொரு கருத்து வருமென யாரும் எதிர்பார்க்கவில்லை.

வழக்கமாக நிதானம் தவறாத இரா.சம்பந்தர் இன்று அப்படி கதைத்தது சிறிதரனை மேலும் சீண்டியிருக்க வேண்டும். சம்பந்தர் மீது அதிரடியாக குற்றச்சாட்டுக்களை சுமத்தினார் சிறிதரன்.

சம்பந்தரும் பதிலுக்கு குற்றம்சாட்ட, கடுமையான மோதலாகியது.

மோதலின் உச்சக்கட்டத்தில்- “நீங்கள் செய்வதெல்லாம் பிழைதானே. யாழ் போதனா வைத்தியசாலை சிற்றூழியர் நியமனத்தில் என்ன செய்தீர்கள்? வடக்கில் எத்தனை பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள், நீங்கள் சுகாதார அமைச்சரை பிடித்து உங்கள் மாவட்ட ஆட்களை நியமித்துள்ளீர்கள். இது சரியா சொல்லுங்கள்“ என சிறீதரன் கிடுக்குப்பிடி பிடித்தார்.

அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. வரவு செலவு திட்டங்களிற்கு ஆதரவளிப்பது தொடக்கம், அரசியலமைப்பு உருவாக்க பணிகளிற்காக வழங்கப்படும் நிபந்தனையற்ற ஆதரவு, அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களையெல்லாம் கடும்தொனியில் குறிப்பிட்டார் சிறீதரன்.

சம்பந்தரிற்கு ஆதரவாக எம்.ஏ.சுமந்திரனும் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். “சர்வதேசமும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் ஒற்றுமையை குழப்பக்கூடாது“ என கூட்டமைப்பு தலைமையால் கூறப்பட்டது.

“சர்வதேச சமூகம் எமக்காக நிற்பதாக கூறுகிறீர்கள். சரி, இப்போது நாம் கையொப்பமிடுவதால் எமக்கு தீர்வை பெற்றுத்தருவார்கள் என இரண்டு நாடாவது வாக்குறுதியளித்ததா?“ என சிறீதரன் கேள்வியெழுப்பினார்.

“அரசியலமைப்பு பணிகள் தொடர்பாக நாங்கள் சில விமர்சனங்களை வைத்தபோது, எங்களை முட்டாள்கள் என்பதை போல ஒருமுறை கூறியிருந்தீர்கள். அதற்கு நாம் ஊடகவயலாளர் சந்திப்பு வைத்து பதிலளித்தோமா?. அரசியலமைப்பின் ஒற்றையாட்சிதன்மை குறித்து நாம் பேசியபோது, சுமந்திரன் எமக்கு சமஷ்டியை பற்றி தெரியாதென்றார். நாம் பகிரங்கமாக பதில் சொன்னோமா?. ஒற்றுமைக்காகத்தான் நாம் பொறுமையாக இருந்தோம்“ என்றார் சிறீதரன்.

இடையிடையே மாவை சேனாதிராசா குறுக்கிட்ட போது, மாவை சேனாதிராசாவை கடும் தொனியில் பேசி, அடக்கினார் சிறீதரன்.

சிறீதரன் குற்றம்சாட்டியபோது, வாய்திறவாமல் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்த சுமந்திரன், பின்னர் மெதுவாக “இங்கே பாருங்கள் சிறி… இது ரணிலை ஆதரிப்பதில்லை நாங்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்யும் சத்தியக்கடதாசிதான்“ என நீண்ட விளக்கமளித்து, சமரசப்படுத்தினார்.

இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னரும் மஹிந்த ராஜபக்ச பதவி விலகவில்லை. ஒருமுறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பார்ப்போமே என்றும் கூறினார்.

பின்னர், பல எம்.பிக்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.

பின்னர், “ஒற்றுமையென்று ஐயா சொல்கிறார். அதனால் கையொப்பமிடுகிறேன். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக கை உயர்த்த மாட்டேன்“ என கூறி, அந்த சத்தியக் கடதாசியில் சிறீதரன் கையொப்பமிட்டார்.

http://nakarvu.com/2018/11/25/போர்க்களமான-கூட்டமைப்பி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

சர்வதேச சமூகம் எமக்காக நிற்பதாக கூறுகிறீர்கள். சரி, இப்போது நாம் கையொப்பமிடுவதால் எமக்கு தீர்வை பெற்றுத்தருவார்கள் என இரண்டு நாடாவது வாக்குறுதியளித்ததா?“ என சிறீதரன் கேள்வியெழுப்பினார்.

சிறிதரன் நீண்ட தூக்கத்தின் பின் எழுந்திருக்கிறார்.

இதுவே ரொம்ப பாராட்ட வேண்டியது.இருந்தும் அவரை வெளியே போட்டுவிடுவோம் என்று சொல்லி வெருட்டி வைத்துவிட்டார்கள் போல தெரிகிறது.

Link to comment
Share on other sites

1 hour ago, போல் said:

மோதலின் உச்சக்கட்டத்தில்- “நீங்கள் செய்வதெல்லாம் பிழைதானே. யாழ் போதனா வைத்தியசாலை சிற்றூழியர் நியமனத்தில் என்ன செய்தீர்கள்? வடக்கில் எத்தனை பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள், நீங்கள் சுகாதார அமைச்சரை பிடித்து உங்கள் மாவட்ட ஆட்களை நியமித்துள்ளீர்கள். இது சரியா சொல்லுங்கள்“ என சிறீதரன் கிடுக்குப்பிடி பிடித்தார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுக்கு இந்த வைத்தியசாலை சிற்றூழியர் நியமனங்கள் எப்படி நடைபெற்றது என்ற விபரம் தெரியாமல் பிரதேச வாதம் பேசுகின்றார் ,திருகோணமலையை சார்ந்த 50 இளைஞர்களுக்கு ஒரே தடவையில் பல் வேறு வைத்தியசாலைகளில் ஆகஸ்ட் மாதம் நியமனம் வழங்கப்பட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

மோதலின் உச்சக்கட்டத்தில்- “நீங்கள் செய்வதெல்லாம் பிழைதானே. யாழ் போதனா வைத்தியசாலை சிற்றூழியர் நியமனத்தில் என்ன செய்தீர்கள்? வடக்கில் எத்தனை பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள், நீங்கள் சுகாதார அமைச்சரை பிடித்து உங்கள் மாவட்ட ஆட்களை நியமித்துள்ளீர்கள். இது சரியா சொல்லுங்கள்“ன சிறீதரன் கிடுக்குப்பிடி பிடித்தார்.

அடபாவிகளா இதுவேறை நடக்குதா?

ஐயா தூங்கிக் கொண்டிருக்கிற மாதிரி எந்நேரமும் இருந்து கொண்டு உள்ளுக்குள்ளால் அலுவல் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார்.

Link to comment
Share on other sites

35 minutes ago, Gari said:

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுக்கு இந்த வைத்தியசாலை சிற்றூழியர் நியமனங்கள் எப்படி நடைபெற்றது என்ற விபரம் தெரியாமல் பிரதேச வாதம் பேசுகின்றார் ,திருகோணமலையை சார்ந்த 50 இளைஞர்களுக்கு ஒரே தடவையில் பல் வேறு வைத்தியசாலைகளில் ஆகஸ்ட் மாதம் நியமனம் வழங்கப்பட்டது. 

சம்பந்தர் ஐயாவும் தனது வாக்கு வங்கியை பாதுகாக்க வேண்டும்  தானே.

Link to comment
Share on other sites

19 hours ago, ஈழப்பிரியன் said:

அடபாவிகளா இதுவேறை நடக்குதா?

ஐயா தூங்கிக் கொண்டிருக்கிற மாதிரி எந்நேரமும் இருந்து கொண்டு உள்ளுக்குள்ளால் அலுவல் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார். 

ஐயா நீண்டகாலமாக இந்த வேலையைத்தானே கனகச்சிதமா செய்து வருகிறார். அதாவது தமிழர் உரிமையை அடமானம் வைச்சு சில்லறை வேளைகளைச் செய்வது தானே சம்பந்தனின் ஒரே ஒரு அரசியல் சாதனை.

21 hours ago, போல் said:

“நீர் கையெழுத்திடாவிட்டால், மஹிந்த ராஜபக்சவிடம் காசு வாங்கிக் கொண்டுதான் கையெழுத்திட மறுத்ததாகத்தான் சனங்கள் கதைப்பார்கள்."

21 hours ago, போல் said:

"சனங்கள் மட்டுமல்ல, நானும் சொல்வேன் - நீர் மஹிந்தவிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் கையொப்பமிட மறுத்தீர் என.“ என இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

சம்பந்தர் ஐயாட தராதரம் இவ்வளவு கீழானதா இருக்குமென்டு நான் ஒருநாளும் நினைச்சதே இல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.