Jump to content

அயோத்தியில் திரண்ட ஆயிரக்கணக்கான இந்துக்கள் - விஸ்வரூபம் எடுக்கும் ராமர் கோயில் விவகாரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Ram templeபடத்தின் காப்புரிமை BBC / JITENDRA TRIPATHI

'ஜெய் ஸ்ரீராம்' மற்றும் 'ராமர் கோயில் கட்டப்படும் ' ஆகிய முழக்கங்களால் அயோத்தி நகரம் இன்று நிரம்பி வழிகிறது.

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து துறவிகள் மற்றும் வலதுசாரி செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இந்துக்கள் திரண்டுள்ளனர்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று, கர சேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவடைய இன்னும் சுமார் இரண்டு வாரங்களே உள்ளன. இந்நிலையில், விஷ்வ இந்து பரிஷத் ஏற்பாடு செய்துள்ள மாநாடு இன்று அயோத்தியில் நடக்கிறது.

ராமர்படத்தின் காப்புரிமை Hindustan Times Image caption 'அயோத்திக்கு புறப்படுங்கள்' எனப் பொருள்படும் 'சலோ அயோத்தியா' என்று எழுதப்பட்ட கொடியுடன் இந்து அமைப்பு ஒன்றின் உறுப்பினர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட 1992 டிசம்பர் 6ஆம் தேதி கர சேவகர்கள் கூடிய பிறகு, அங்கு அதிக அளவில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூடும் நிகழ்வாக 'தர்ம சபா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாநாடு பார்க்கப்படுகிறது.

`

இன்று காலை 7 மணி முதலே இந்து அமைப்பினர் அங்கு கூடத் தொடங்கிவிட்டதாக அயோத்தியில் இருந்து பிபிசி செய்தியாளர் நிரஞ்சன் கூறுகிறார்.

அயோத்தி நகர தெருக்களும், அயோத்தியை நோக்கிச் செல்லும் சாலைகள் மற்றும் ரயில் நிலையங்கள் மிகுந்த கூட்ட நெரிசலுடன் காணப்படுகின்றன.

அயோத்தியில் உத்தவ் தாக்ரே மற்றும் அவரது குடும்பத்தினர்படத்தின் காப்புரிமை Hindustan Times

அயோத்தியில் உள்ள உள்ளூர் செய்தியாளர்கள் அளித்த தகவல்களின்படி, விஷ்வ இந்து பரிஷத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம்.

இதனிடையே, நரேந்திர மோதி அரசால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படாவிட்டால், பாரதிய ஜனதா கட்சியால் மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது என பாஜகவின் கூட்டணிக் காட்சிகளில் ஒன்றான சிவசேனையின் தலைவர் உத்தவ் தாக்ரே கூறியுள்ளார்.

"தேர்தல் வரும் சமயங்களில் ராமர்கோயில் கட்டுவது குறித்து பேசுகிறார்கள். ஆனால், அதன்பின் யாரும் கண்டுகொள்வதில்லை. ஆண்டுகள் கடக்கின்றன. தலைமுறைகள் மாறுகின்றன. ராமர் கோயில் மட்டும் கட்டப்படவில்லை, " என்று அயோத்தியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அயோத்தில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான இந்துக்கள்படத்தின் காப்புரிமை SANJAY KANOJIA Image caption அயோத்தில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான இந்துக்கள்

ராமர் கோயில் கட்ட அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திய தாக்ரே, ராமர் கோயில் கட்ட சட்டம் கொண்டுவந்தால், சிவசேனை அதை ஆதரிக்கும் என்று கூறினார்.

அயோத்தி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுவர்களில் ராமர் போருக்கு செல்வது போல போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அயோத்தியில் உள்ள முஸ்லிம்களுக்கு இடையே இந்தக் கூட்டத்தினால் ஒரு விதமான அச்சம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

டுவிட்டர் இவரது பதிவு @ANI: I've not appeared in SC b/w Jan-Nov'18. When matter came up in October, CJI said this is not priority. So, does PM have courage to make statement against judiciary. This only shows PM wants to rake this up for purposes of election, for making political capital out of it  K Sibalபுகைப்பட காப்புரிமை @ANI @ANI <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @ANI: I've not appeared in SC b/w Jan-Nov'18. When matter came up in October, CJI said this is not priority. So, does PM have courage to make statement against judiciary. This only shows PM wants to rake this up for purposes of election, for making political capital out of it K Sibal " src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/ANI/status/1066640864502530049~/tamil/india-46335136" width="465" height="548"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @ANI</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@ANI</span> </span> </figure>

"பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர், கோயில் கட்ட வேண்டும் என்று கூடிய மிகப் பெரிய கூட்டம் இதுதான். அவர்கள் பொதுமக்களையும் அவர்களது உணர்ச்சிகளையும் தூண்டுகின்றனர்," என முஸ்லிம் சமூக தலைவர் அஹமத் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோதி இந்த விவகாரத்தை தேர்தலுக்காக மட்டுமே பயன்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார்.

https://www.bbc.com/tamil/india-46335136

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.